திருக்குறள்
அதிகாரம்-5
அறத்துபால் -இல்லறவியல்
இல்வாழ்க்கை
குறள் 41:
இல்வாழ்வான் என்பான் இயல்புடை ய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
விளக்கம்:
மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றறோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.
குறள் 42:
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
விளக்கம்:
மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்துபோனவர் என்பவர்க்கும் உதவுபவன்.
குறள் 43:
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை
விளக்கம்:
வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.
குறள் 44:
பழியஞ்சிப் பாத்தூண் உடை த்தாயின் வாழ்க்கை
வழியெ ஞ்சல் எஞ்ஞான்றும் இல
விளக்கம்:
பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
குறள் 45:
அன்பும் அறனும் உடை த்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
விளக்கம்:
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே பயனும் அதுவே.
குறள் 46:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்.
விளக்கம்:
மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான்.
குறள் 47:
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
விளக்கம்:
கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடியவாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.
குறள் 48:
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
விளக்கம்:
மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை தவம் செய்வாரை விட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
குறள் 49:
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
விளக்கம்:
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
குறள் 50:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
விளக்கம்:
மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.