Skip to content
Home » இல்வாழ்க்கை-5

இல்வாழ்க்கை-5

        திருக்குறள் 

                                                       அதிகாரம்-5 

                     அறத்துபால் -இல்லறவியல்

இல்வாழ்க்கை

குறள் 41:

இல்வாழ்வான் என்பான் இயல்புடை ய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை

விளக்கம்:

மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றறோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

குறள் 42:

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை

விளக்கம்:

மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்துபோனவர் என்பவர்க்கும் உதவுபவன். 

குறள் 43:

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தா றோம்பல் தலை

விளக்கம்:

வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம். 

குறள் 44:

பழியஞ்சிப் பாத்தூண் உடை த்தாயின் வாழ்க்கை

வழியெ ஞ்சல் எஞ்ஞான்றும் இல

விளக்கம்:

பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

குறள் 45:

அன்பும் அறனும் உடை த்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

விளக்கம்:

மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே பயனும் அதுவே.

குறள் 46:

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ தெவன்.

விளக்கம்:

மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான்.

குறள் 47:

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை

விளக்கம்:

கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடியவாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.

குறள் 48:

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

விளக்கம்:

மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை தவம் செய்வாரை விட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

குறள் 49:

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

விளக்கம்:

அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

குறள் 50:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

விளக்கம்:

மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *