💟26
இருவரின் வெட்கம் கலந்த சிரிப்பில் பவானி சந்தோஷத்துடன் ராஜனை பார்த்தார். அதே சமயம் வெளியில் இருந்து ஜீவனந்தமும் சகுந்தலாவும் வந்து கொண்டிருந்தார்கள்.
”வாங்க ஜீவா…”என்று ராஜனும் ”வாங்க அண்ணி” என பவானியும் அழைக்க,
”வாங்க அம்மா வாங்கப்பா, என்ன திடீருனு சொல்லாமா கொள்ளாம சகு” என்று லத்திகா வரவேற்றாள்.
”ஏய் பேர் சொல்லி” என ப்ரஜன் அவளை முறைத்து ”வாங்க மாமா வாங்க அத்தை உட்காருங்க” என்றான்.
”நீங்க போனில் லத்திகா எங்க போனாளோ என பேசிக்கிட்டு இருந்திங்க அதான் என்ன ஆச்சோ என்று உடனே ஓடி வந்தோம்” என பிருத்வியிடம் சொல்லி விட்டு ”எங்கடம்மா போன” என்று லத்திகாவிடம் கேட்டார்.
”அப்பா அது…” என தயங்கி ப்ரஜன் புறம் திரும்பி, ‘நீ சொல்லேன்” என அவனை பார்க்க,
”நான் என்ன சொல்ல… எனக்கு மட்டும்…” என அவளிடம் மறுத்தான்.
”லத்திகா எங்க போய் இருந்த?” என பவானி அதட்டலாய் கேட்டிட
”அது அது வந்து அத்தை ஹாஸ்பிடல் போனேன்” என்றாள்.
”என்னாச்சு மறுபடியும் பிவேர்ரா?” என பதற,
”அது நான் கன்சீவ்வா இருக்கேன்னு டவுட் வந்துச்சு அத்தை. அதான் எதுக்கோ ஹாஸ்பிடலில் தெளிவா கேட்டு வந்து சொல்லலாம்னு போனேன்”
எல்லோரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள என்ன சொன்னாங்க என்ற கேள்வியாய் லத்திகாவை பார்த்தனர்.
”அப்படி தான் என்று சொன்னாங்க” என்று சொன்னதும் எல்லோரும் சந்தோஷத்தில் மிதந்தனர்.
நான் போய் என் கையால ஸ்வீட் செய்யறேன்” என பவானி நகர சகுந்தலாவும் ”இருங்க அண்ணி நானும் வர்றேன்” என சமையல் அறையில் செல்ல, எல்லோருக்கும் ஸ்வீட் மிக்சர் என செய்து தட்டில் கொஞ்ச நேரத்தில் எடுத்து வந்து நீட்டினார்கள்.
வீடே சந்தோஷத்தில் மிதந்து இருக்க, பிருத்வியும் லத்திகாவும் தங்களுக்குள் மெல்லிய குரலில்,
”ப்ரஜன் நீ ரிசர்ச் போக போறே என்று சொன்னா இவங்க எல்லோரும் ரொம்ப பீல் பண்ணுவாங்க இப்ப என்ன டா பண்றது…” என்றாள் வாட்டமாய்.
”என்னது டாவா..?” என்றான்.
”ஹ்ம்ம்” என அவள் சோகத்துடன் சற்றே கண்களை சிமிட்ட அதை பார்த்தவன் அவளை விட்டு தான் எப்படி பிரிவேன் என நினைத்து,
”கஷ்டம் தான்”
”அப்ப எப்படி சொல்லுவது…”
”எதை..?”
”டேய் என்ன நீ உளற…” என அவனை பார்க்க அவன் அவளை விழுங்கும் பாணியில் பார்த்ததும்
”அடப்பாவி இவளோ நேரம் நான் பேசியதை கேட்டியா இல்லையா?”
”ஹலோ அதெல்லாம் கேட்டேன். அப்பா அம்மாகிட்ட நானே சொல்றேன் இல்லை என்றால் அவங்களுக்கு உன்மேல கோவம் தான் வரும்”
”ப்ரஜன் பயமா இருக்கு? நான் ஏதாவது தவறான முடிவு எடுக்கலையே”
”ஹ்ம்ம் இல்லை. ஆனா நான் மறந்து சராசரி வாழ்க்கைக்குள் போக இருந்தேன். இப்ப…” என முறைக்க,
”என்னடா இன்னும் என்ன லத்திகாவை முறைக்கற?” என்றார் பவானி.
”அது அம்மா என் ஆசைக்கு நோ சொல்றா..”
”என்ன டா இப்பவே என்ன குழந்தை வேணும் சொல்றியா அவ அதுக்கு மாத்தி சொல்றாளா?” என்று ஆர்வமாய் கேட்டார்கள்.
”இல்லை…அவ என்னை ஜாபுக்கு போககூடாது அவ கூடவேயிருன்னு சொல்றா எனக்கு அவ ஆர்டர் போடறது சுத்தமா பிடிக்கலை”
”என்னமா இது அவன் ஜாப் போகட்டும் இனி அவன் லைப் அவனே பார்க்கட்டுமே அப்ப தான் பொறுப்பும் வரும்” என ராஜன் முடித்தார்.
ஜீவனந்தமும் சகுந்தலாவும் ராஜன் சொல்வதே சரியென நினைக்க லத்திகா விழித்து முழிப்பதை பார்த்து
”பார்த்தியா எனக்குன்னு பொறுப்பு இருக்கு, என் லைப் நானே பார்த்துப்பேன். சோ நான் ரிசர்ச் போக இனியும் தடை சொல்லாதே” என முடிக்க எல்லோரும் அதிரிச்சியோடு அவனை பார்த்தார்கள்.
ராஜன் சுதாரித்து
”என்ன டா என்னை வைச்சி என்னையே மடக்க திட்டமா? நான் தான் முதலிலே சொல்லி இருக்கேனே திரும்ப என்ன”
”அது அன்றோடு முடியலை என்று அர்த்தம் ப்பா” என்று படிவத்தை நீட்டினான்.
அதை பார்த்த ராஜன் ”கொஞ்ச கூட உனக்கு மனச்சாட்சி இல்லையா? வாயும் வயிறுமா இருக்கறவள விட்டுட்டு எப்படி காட்டுக்கு போக முடிவு செய்த” என்றார்.
”அவளை பார்த்துக்க தான் நீங்க எல்லோரும் இருக்கிங்களே அப்பறம் என்ன” என்றான் ப்ரஜன்.
இருவரின் வாக்கு வாதத்தில் ஜீவானந்தம் சகுந்தலா தலையிட முடியாமல் திணற, பவானிக்கோ யார் பக்கம் பேச என தவிக்க, இது எல்லாம் தன்னால் என்று லத்திகா கவலைப்பட்டாள். ப்ரஜன் தன்னையே மடக்கி கேள்வி எழுப்ப என்ன செய்வது என்று எல்லோரும் சற்று நேரம் யோசித்தனர்.
ராஜன் எண்ணங்களின் கூற்றுக்கு செல்ல துவங்கினார்.
ஏற்கெனவே தனது சொத்து தர மறுத்தும் பிடிவாதத்துடன் இருந்தவன், மனைவி குழந்தை என வந்தால் இது போல் சிந்திக்க மாட்டான் என நினைத்தால், அவன் அதே பிடிவாதத்துடன் இருப்பதை கண்டதும் மனதை கல்லாக்கி கொண்டு,
”எவ்ளோ நாள்..?” என்றார்.
”1 இயர் போட்டு இருக்காங்க”
”அப்ப குழந்தை பிறந்த பிறகு தான் வருவ?” என்றார் கோவத்துடன்.
”அ… அது…அதுக்கு முன்னாடியே வர ட்ரை பண்றேன்” என்றான்.
”ட்ரை…” என சலித்தவர் ”எப்படியோ உன் இஷ்டம். வளர்ந்தா அப்பா பேச்சை கேட்க கூடாது என்று முடிவு எடுத்த பிறகு என்ன செய்ய, அதுவும் லத்திகா இந்த நிலைமையில் இருக்கும் பொழுதும் இப்படி முடிவெடுக்கறனா, என்னவோ பண்ணு ” என்றே முடித்தார்.
வேறும் பார்வையாளர்களாக இருந்த லத்திகா பெற்றோருக்கு சற்று கவலை இருக்கவே செய்தது. இருந்தும் தந்தை சொல் பேச்சை கேட்காதா பிருத்வி தன்னிடம் எப்படியும் மனம் மாற செய்வான் என எண்ணி அவனிடம் எடுத்து சொல்ல தயங்கி அமைதியாக இருந்தனர்.
பவானியோ ”ஏன் டா… இப்படி எல்லோர் மனசை கஷ்டப்படுத்தற?” என்று தழுதழுத்தார்.
”ம்மா உனக்கு வேற தனியா புரிய வைக்க முடியாது. நான் போன் பேசிட்டு வர்றேன் என கழண்டுக் கொண்டான். போகும் போது லத்திகா தேவை இல்லாம ஏதாவது பேசி குழப்பத்தை ஏற்படுத்தாத…. புரியுதா” என்றான் ஆணையிடுவது போல், அதில் அவளுக்கு நீ உன்னால் என சொல்லாதே என்பதே பொதிந்து இருந்தது.
தலையை மட்டும் சரி என ஆட்டி முடித்தாள்.
பவானி இனி இவன் போவது உறுதி என்று தெரிந்ததும் கவலையானார். லத்திகா கருவுற்று இருப்பது மிக சந்தோசமாக இருந்தாலும் இவனின் பிடிவாதம் அவர்களை சற்றே இன்னலை தந்தது.
இரு தினம் கழித்து செல்வதாக சொன்னான் அவனுக்கு தேவையான எல்லாம் அவனே லிஸ்ட் போட்டு வாங்கி வந்தான். லத்திகா அதிகம் அலைச்சல் படக்கூடாது என, இருந்த இரு தினமும் அவளுக்கு பழச்சாறை வேளை வேளைக்கு கொடுத்தான்.
எப்படியும் இன்று கிளம்ப தயாராயிற்று. அவனின் உடைமையில் ஏதேனும் விட்டுவிட்டதா என ஆராய அவள் அவனுக்கு கொடுத்த லைட்டர் இருந்தன, அதுவும் மூன்று அவள் அதை எடுத்து பார்த்து விட்டு இவன் இதை உபயோகப்படுத்தவே இல்லையா என யோசித்தாள்.
அப்பொழுது தான் அவனை மணம் முடித்த பிறகு அவன் புகைப்பது அவள் பார்த்தது போல கூட தெரியலை. அவள் யோசித்து கொண்டு இருக்கும் போதே,
”ராட்ஷசி என்னடி பண்ற என்று” அவள் முன் நிற்க, அவளோ
”நீங்க இதை..”. என அவன் முன் லைட்டரை நீட்ட,
”ப்ச் அது பையர்காக எடுத்து வைத்தேன் எப்படியும் இருட்டில் நெருப்பை பற்ற வைப்பேன் அப்ப இதை தான் முதலில் எடுப்பேன் இது என் கூடவே இருக்கும். உன் நினைவை சுமந்து…” என நெற்றியில் முட்டி முடிக்க, அவன் நெஞ்சில் தலையை சாய்த்தாள்.
”ப்ரஜன் உனக்கு என்னை அவளோ பிடிக்குமா? நிஜமா நீ ஸ்மோக் பண்றதை விட்டுட்டியா?” என்றாள்.
”ஏய்… ராட்ஷசி என்னை நம்பலையா நீ?”
”நம்பறேன்…. டா” என தேம்பி அழுதவள் அவனை விட்டு விலகாமல் இருக்க,
”என்ன நீ… ரொம்ப போல்டா எனக்காக யோசிச்சு பேசறவ என்று பார்த்தா இப்படி அழுவுற… நீ அழுதா சகிக்கலை… இதுக்கு சிடுமூஞ்சினு என்னை சொல்லி நீ முறைக்கற அழகு தான் சூப்பர்…” என்றான் கேலியாக.
”ப்ரஜன் நான் உன்னை சிடு… ”
”ம் சொல்லு ஏன் பாதியில விட்டுட்ட…”
” உன்னை அப்படி கூப்பிட்டும் … அப்பறம் எப்படி உனக்கு என் மேல காதல் வந்துச்சு?”
”நான் கூட தான் உன்னை ராட்ஷசி என்று கூப்பிடுறேன்” என்றதும் அவள் முறைக்க, ”என் செல்ல ராட்ஷசி…டி நீ…”
”போ எல்லாம் இப்ப சொல்லு கிளம்பும் போது” என்றதற்கு சிரித்தவன் அவளிடம் ஒரு டைரி நீட்டினான்.
”இந்தா ….”
”எனக்கு டைரி எழுதற பழக்கம் எல்லாம் இல்லை டா எதுக்கு இது” என்று திருப்பி பார்த்தாள்.
”ஏய் லூசு நான் இங்கிருந்து போன பிறகு என்கிட்ட என்ன பேசணுமோ அதெயெல்லம் இதுல எழுது நான் வந்து இதை படிச்சுகறேன்… அதே மாதிரி இதுல நான் உனக்கு எழுதுவேன். எப்பவும் நான் உன்கூட இருப்பேன். உனக்கு நம்ம ஆபிஸ்ல ப்ரோமோஷன் தந்து இருக்கேன். நீ தான் இனி அங்க md எல்லாம், என் சார்பா நீ தான் கவனிக்கணும் ஏதாவது டவுட் வந்தா அப்பாகிட்ட கேளு”
”என்ன அமைதியா இருக்க லத்திகா” என்றான்.
”ம் நீ குழந்தை பிறந்த பிறகு தான் வருவியா அப்ப வளைகாப்புக்கு வர மாட்டியா ?” என்றாள்.
”நான் வரணுமா?”
”நீ தான புவனா அக்கா வளைகாப்புல சொன்ன… கை நிறைய வளையல், கன்னம் இரண்டும் சந்தானம், அப்படி பார்க்கும் போது தாய்மை அழகா இருக்குனு, அப்படி உன் ராட்ஷசி இருப்பதை பார்க்க நீ வரணும்ல” அமைதியாக இம்முறை இருந்தவன் அதற்குள் அகிலா கதவை தட்டி
”ஐயா நீங்க சொன்ன வண்டி வந்துடுச்சாம் அம்மா சொல்ல சொன்னாங்க” என கூறி சென்றாள்.
”சொல்லு ப்ரஜன் நீ அதுக்குள்ள வந்துடுவல” என்று அவனை பார்க்க அவனோ அவளை அணைத்து இதழில் அழுத்த முத்தமிட்டு விலகி கீழே சென்றான்.
அவளுக்கு தெரியும் அவன் செல்வது நாட்கள் வரையரைக் கூடியது அல்ல என்று இருந்தும் கேட்டாள்.
கீழே எல்லோரிடமும் விடை பெற்றிட அவள் அழுத கண்களை துடைத்த வண்ணம் இறங்கி வந்தாள்.
”பாரு வாயும் வயிறுமா இருக்கற பிள்ளையை விட்டு, எப்படி கிளம்பி நிற்கறான் எல்லாம் கல்நெஞ்சக்காரன்…” என்று ராஜன் சொல்லி முடிக்க பவானி-ராஜனின் கால்களில் சேர்ந்தே ஆசிர்வாதம் வாங்கினான். அதே போல ஜீவானந்தம்-சகுந்தலா தம்பதியினரிடமும் ஆசிர்வாதம் வாங்கினான்.
லத்திகாவிடம் திரும்பி ”வருவேன் நீ எதிர்பார்த்த நாளுக்கு உன் முன்ன வந்து நிற்பேன் ஓகே வா” என்றான். கண்களை அவளிடம் கலக்க விட்டு ஏதோ மந்திரம் போல அவளும் தலையை ஆட்டினாள்.
வேகமாக அவ்விடம் விட்டு வெளியேறி காரில் அமர்ந்து சென்று விட்டான். எங்கே இன்னும் அங்கே இருந்தால் தானே அவளிடம் இருந்து போக மறுத்துவிடுவோமோ என அஞ்சி சென்றான்.
💕💕💕💕💕💕💕💕👌👌👌👌
🧡🧡🧡🧡
🌟🌟🌟🌟🌟