காரிருளில் தன்னந்தனியே கதைப்பேசும் காதல்நிலவே !
கண்ணெதிரே வராமல் மேகத்தினுள் குழந்தையாய்…
நீ தவழ்ந்து ஒளிந்து கண்ணாம்பூச்சி காட்டுகின்றாய்…
மின்மினிப் பூச்சியாய் என் நெஞ்சம்
உன்னில் ஒளிப் பெற்றே பிரகாசமாகின்றதடி
பனிப்பொழியும் பால்நிலவே பிரபஞ்ச பேரழகே !
பன்மொழியில் கதைத்திடவே ஆசையடி நிறைமதியே !
பசலை நோயில் மெலிந்து தேய்பவளே…
கற்கண்டு நட்சத்திரம் உண்ணாமல் வாடுவது ஏனோ ?!
தனியே தன்னந்தனியே தாரகை திங்களே !
தலைவனை தேடியே தவிக்கின்றாயோ…
களங்கமில்லா மேனிக் கொண்ட நிறைமதியே
மாதத்தில் ஒரு நாள் வீட்டுக்கு தூரமோ ?!
தங்கநிலவாய் ஜொலிக்கின்றாய் நீரில்
உன்னை அள்ளி பருகும் ஆடவன் யாரோ …
கவிஞனுக்கும் காதலுக்கும் நீயொரு காட்சி நிலா
எனக்கு மட்டும் தோள்கொடுக்கும் நட்பிலா .
— பிரவீணா தங்கராஜ் .
*நிலவோடு காதல் 100* என்ற தலைப்பிற்குகீழே தொகுக்கப்பட்ட கவிதைகள். உதய நிலவுக்கூடம் பதிப்பகம் வெளியீடு.