Skip to content
Home » மனதில் விழுந்த விதையே-4

மனதில் விழுந்த விதையே-4

அத்தியாயம்-4

    “அப்பவே டவுட்டா இருந்தது டா. இந்த பொண்ணு ஒருமுறை கூட கண் முழிக்காம தூங்குதேனு.” என்று அம்ரிஷ் கோபமானான்.

   தமிழோ “எனக்கென்னவோ உயிரோட இருக்கறானு தான் தோணுது அம்ரிஷ். மூச்சு விடறா பாரு. அதுவுமில்லாம மயக்கமா இருப்பதா அந்த பொண்ணுங்க சொன்னாங்களே” என்று இராணுவ வீரனாக முதலில் உயிர் உள்ளதா இல்லையா என உடல் அசைவு மொழியால் உணர்ந்து தெரிவித்தான்.

  “சாகலை..  ஆனா ஏன்டா அந்த பொண்ணுங்க தூக்கிட்டு இருக்காங்க. ஒருவேளை விஷம் குடிச்சி நேரமாகி சாவாளா? கொடைக்கானல்ல போற வழியில் தள்ளி விட பிளானா? அதனால தான் மயக்கமா இருப்பாளா?

   தமிழ்… எனக்கென்னவோ இதை தெளிவுப்படுத்திட்டு அந்த பொண்ணுங்களை கார்ல ஏத்தலாம்.

  ஏற்கனவே எனக்கு மானம் போச்சு. இதுல கொலை பழி மாதிரி ஏதாவது நடந்தா. என்னால வேதாந்த் பாதிக்கப்படக்கூடாது. இது அவன் கார்” என்று அம்ரிஷ் விளக்கினான்.

   தமிழோ “புரியுது டா.” என்று நண்பர்களையும் அந்த மூன்று பெண்களையும் கண்டு இடுப்பில் கைவைத்தான்.

   வேதாந்த் அருகே வந்து சாவி கேட்க சாக்ஷியும் தந்தாள். ஆனால் தமிழோ “ஒரு நிமிஷம்” என்று தடுத்தான்.

   மென்பனி, சாக்ஷி, சஹானா மூவரும் என்ன என விழியாலே தமிழிடம் வினா தொடுத்தனர்.

    “இந்த பொண்ணு யாரு? ஏன் தூங்கிட்டே இருக்கா? சாரி மயக்கத்துல இருக்கா” என்று கேட்டான்.

   அவன் கேட்ட விதமே மென்பனிக்கு உதறியது.

   சஹானா சொல்லவே தேவையில்லை.
    
   சாக்ஷி தான் “என்ன சார் பிரச்சனை. அவ எங்க பிரெண்ட். தூங்கிட்டிருக்காளோ மயக்கத்துல இருக்காளோ. கண்விழிச்சதும் சொல்லறோம் அவ்ளோ தான்” என்று முகத்தில் அறைவது போல கூறினாள்.

    “ஓ… ஓஹோ… தூங்கறாங்களா? ஆதேஷ் அந்த வாட்டர்பாட்டிலை அந்த பொண்ணு மூச்சில ஊத்து” என்று கட்டளையிட, இம்முறை சாக்ஷியும் திகைத்தாள்.

   தமிழ் எப்பொழுதும் விளையாடுபவன் அல்ல. சற்று சீரியஸானவன். அதனால் எது செய்தாலும் காரணமின்றி கூறமாட்டான். அதனால் ஆதேஷ் அவன் கூறியதை நடைமுறைப்படுத்த பாட்டிலை எடுக்க, “ப்ளிஸ் ப்ளிஸ் அவ தூங்கறா.. எழுப்பாதிங்க” என்று மென்பனி கெஞ்ச துவங்கினாள்.

   “வேதாந்த்.. நீ டாக்டர் தானே. அந்த பொண்ணு பல்ஸ் டவுனாகுதானு அகைன் செக் பண்ணு. எனக்கென்னவோ இந்த பொண்ணு உயிரை கொடைக்கானல்ல போட்டு தள்ள தான் இவங்க கூட்டிட்டு போறதா டவுட்டா இருக்கு” என்று உரைத்தான்.

   “ஹலோ… அவயெங்க பெஸ்ட் பிரெண்ட். உங்க கற்பனைக்கு எங்க நட்பை தப்பா பேசாதிங்க. அவ மயக்கமா இருக்கா. இதோ இந்த கர்ச்சீப்ல இருக்கற மயக்க மருந்தை சுவாசிச்சிருக்கா. எழுந்ததும் அவளே பேசுவா கேளுங்க” என்று உண்மையை உரைத்தவள், பேண்டிலிருந்த கர்ச்சீப்பை தமிழ் முன் நீட்ட முயன்றாள்.
 
   அவள் வெளியில் எடுத்தப்பொழுதே மூக்கை மூடினார்கள்.

  உடனடியாக அதனை கீழே இறக்கினாள்.

   “ப்ளிஸ் அவ வீட்ல பெரிய பிரச்சனை சாகறேன் அதுயிதுனு பிணாத்தினா. அவ வீட்லயே விட்டிருந்தா அவளோட சித்தி அவளை ஒரு கிழவனுக்கு இரண்டாதாரமா கட்டி தர ரெடியா இருக்காங்க.

    எங்களிடம் புலம்பினா… பெஸ்ட் பிரெண்ட் என்ன செய்யறதுனு தெரியலை. அதனால அவ வீட்டுக்கு போய் மயக்கமருந்து கொடுத்து கூட்டிட்டு வந்துட்டோம். எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல கண் விழிச்சி அவளே எங்களுக்கு தேங்க் பண்ணுவா. நாங்க அவளுக்கு நல்லது தான் பண்ணறோம்.” என்று விளக்கவும் ஆண்கள் குழு ஒருவரை ஒருவர் மாற்றி பார்த்தனர்.

   அதில் நம்பலாமா? வேண்டாமா? என்ற யோசனை ஓடியது.

    டீக்கடையில் வேறு  கூட்டம் சேரவும், மூன்று பெண்கள் வெளியே நிற்கவும் அம்ரிஷின் தனிமை இதனால் பாதிக்குமோயென தமிழோ “ஓகே ஏறுங்க. ஆனா அந்த பொண்ணு கண் முழிக்கறவரை நீங்க எங்களோட கஸ்டடி. வேதாந்த் என்னாச்சு” என்றதும் “பல்ஸ் டவுன் ஆகலை டா. நீங்க பேசறப்பவே செக் பண்ணிட்டேன். மயக்கத்துல தான் இருக்கணும்” என்று மருத்துவனாய் விவரித்தான்.

     வேதாந்தை ரெஸ்ட் எடுக்க கூறிவிட்டு தமிழ் வண்டியை செலுத்தினான்.

       மிருதுளாவால் தங்கள் தற்போது மாட்டிக் கொண்டோமென பெண்கள் வருந்தியபடி இருந்தார்கள்.
   யார் என்ன என்று அறியாதவரிடம் அடங்கி தான் போனார்கள்.

   சட்டென காவல் அதிகாரி யாரிடமாவது கூறி தங்களை மாட்டிவிட்டால்? அதன் பின் போலீஸ் ஆதார் கார்டு, டிரைவிங், லைசன்ஸ் என்று கேட்டு அதில் உள்ள அலைப்பேசி எண்ணிற்கு அழைப்பார்கள்.

   என்ன தான் சாக்ஷி சொந்த வீட்டில் பணத்தை திருடி வந்தாலும், மென்பனி அவளது அண்ணன் காரை ஆட்டயைப்போட்டாலும், சஹானா வீட்டில் கூறிவிட்டு வந்தாலுமே, மிருதுளாவை பற்றி தகவல் கேட்டால் இங்கே வந்தது கூற வேண்டும்.

   மிருதுளாவின் சித்திக்கு செய்தி சென்றிடும். பிறகு இந்த கடத்தல் டிராமாவே வேஸ்ட். அதனால் மௌனமாக அமர்ந்து மிருதுளா விழிகள் திறக்க காத்திருந்தனர்.

   தமிழோ அங்கும் இங்கும் வண்டியை திருப்ப, “டேய்… பார்த்து டா… கன்னை பிடிச்ச கையில காரை கொடுத்துட்டு ரோட்ல வண்டியை தாருமாறா ஓட்டற.” என்று ஆதேஷ் தான் வாயை கிண்டினான்.

தமிழோ “டேய் காஷ்மீர் பார்டர்ல பனிச்சரிவுல வண்டியை ஓட்டறவன் நான். என்னிடமே இந்த வளைவு நெளிவுல ஒழுங்கா ஓட்ட சொல்லற” என்று நக்கலாய் கேட்டான். 
   வேதாந்த் வேறு பக்கத்தில் இருக்க, “அடேய்… நீ தான் வண்டியை சரியா ஓட்டாம இந்த பொண்ணுக்களோட வண்டியை இடிச்சி இப்ப பிரச்சனையை இழுத்துவிட்டது. மூடிட்டு வா” என்று நாகரிகமாய் கூறினான்.

   சஹானா சிரிக்க ஆதேஷோ அவமானமாய் தலைகுனிந்தான்.

    வேதாந்த் சாக்ஷியிடமிருந்து வாங்கிய ஸ்பிரேவை ஆராய்ந்தான்.

   “ஸ்பிரே அடிச்சி எவ்ளோ மணி நேரமாகுது.” என்று கேட்கவும், அவள் நேரத்தை கூறினாள்

   இம்முறை காரை இடித்ததற்கு வருந்துவதை விட பெண்களை நக்கல் தெறிக்கும் விலோசனத்தை ஏற்றி ஆதேஷ் கவனித்தான்.

     “ஆமா… உங்க பெரெல்லாம் வரிசையா சொல்லுங்க? கார்ல மயக்கமான பொண்ணை ஏத்தியிருக்கிங்க, ரொம்ப பேசறிங்க. நாங்க வேற டிராப் பண்ணறோம். தீவிரவாதியா இருந்துட்டா…  ஸ்டேஞ்சரை பத்தி தெரிந்துக்கறோம். சொல்லுங்க சொல்லுங்க.. உங்க பெயர் என்ன? என்ன படிச்சிருக்கிங்க? எங்கயிருக்கிங்க? உங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆச்சா?” என்று கேட்டதும் வேதாந்த் மென்னகை புரிந்தான்.

    அம்ரிஷோ, எதற்கும் கேட்டுக்கொள்வது நல்லதென ஆர்வமாய் பதில் சொல்வதை கேட்க திரும்பினான்.

    வேறு வழியில்லை… இதே முன்பென்றால் எகத்தாளமான விடையை தந்திருப்பாள்.

  இன்று அடங்க வேண்டிய கட்டாயம்.
 
   “ஹலோ… சொல்லுங்க… டைம் பாஸாகணும். அதோட நாங்க எங்களை அறிமுகப்படுத்திக்கிட்டோமே?” என்று தமிழ் கூறினான்.
 
   “என்னது? எப்ப அறிமுகம் செய்திங்க?” என்று சஹானா கண் உருட்டினாள்.

   “ஏங்க… தமிழ், அம்ரிஷ், வேதாந்த், ஆதேஷ் என்று பெயர் சொல்லி தானே பேசிக்கிட்டோம்.
   இதுல டாக்டர் ஆர்மினு சொன்னோமே?” என்று வேதாந்த் விவரித்தான்.

   சாக்ஷியும் மென்பனியும் ஒருவருக்கொருவர் பார்த்து சொல்லலாமென முடிவெடுத்தார்கள்.

   “ஏதோ நாலு ஆண் பெயர்கள் இருக்கு. இரண்டு கடமைக்குரிய தொழில்கள். யார் பெயர் என்னனு எப்படி தெரியும்? ஒருமுறை நீங்களா அறிமுகப்படுத்துங்க” என்று உரைத்திடவும், காரோட்டிய தமிழ் தான் பேசினான்.

   “நான் தமிழ்ங்க.. பேசறதை சொல்லலை… பெயரே தமிழ். நான் தான் ஆர்மி மேன். அண்ட் ஒன் மேன். எனக்கு நண்பர்களை தவிர யாருமில்லை. எனக்கு விடுமுறை கொடுத்திருக்காங்க. இந்த மாதம் அதை என் நண்பர்களோட கொண்டாட போறேன். யாதும் ஊரே யாவரும் கேளீர். எங்க எனக்கான பணியை மேலிடம் தர்றாங்களோ அது என் ஏரியா.
  
   இவன் வேதாந்த் நியூராலஜி டாக்டர். கேகேநகர்ல தனியா க்ளினிக் இருக்கு. அப்பா அம்மாவோட செல்ல மகன். இரண்டாவது மகன்.

    ஆதேஷ் ஆர்செரி. வண்டி தான் தாறுமாறா ஓட்டுவான் இந்த குறிப்பார்த்து வில்விடறதுல கேடி. சின்னதுல மாங்கா மரத்துல அடிக்க ஆரம்பிச்சவன். அந்த டேலண்டை அப்படியே படிபடியா பெரிதாக்கி இப்ப ஆர்செரி ஸ்போர்ட் க்ளப் நடத்தறான். அப்பா அம்மா இல்லை, அண்ணா அண்ணி தான். அவங்களும் தனியா வீடெடுத்து போயிட்டாங்க. அதனால எப்பவும் எங்களோட வந்தா வாய் ஜாஸ்தி.

   இவன் அம்ரிஷ். சினிமா ஸ்டாரா, “டேய்” என்று வேதாந்த் குரல் கொடுக்க, “இருடா… மறைக்க வேண்டாம். சினிமால அசிஸ்டண்ட் டேரக்டர். வீட்டுக்கு ஒரே பையன். அப்பா அம்மா சித்தப்பா சித்தி இருக்காங்க. என்னடா… ஓகேவா?” என்று தமிழ் கேட்க அம்ரிஷோ முகத்தை மறைத்த மாஸ்கை எடுக்காமல் வண்டியை கவனமா ஓட்டு.’ என்று செய்கையில் உரைத்தான்.

   இப்ப உங்க முறை சொல்லுங்க” என்று வேதாந்த் கேட்டதும் சாக்ஷியும் மென்பனியும் செருமினார்கள்.

    “நான் சாக்ஷி… டான்ஸர். பரதம் வெஸ்டர்ன் இரண்டும் வரும். அப்பா அம்மா நான் மட்டும் தான்.

  இவ சஹானா மியூசிக் டீச்சர். பெயருக்கு ஏற்றது போல நல்லா பாடுவா, அப்பா அம்மா அப்பறம் அக்காவை கல்யாணம் பண்ணி அமெரிக்கால கொடுத்திட்டாங்க.

   மயக்கத்துல இருக்கறவ மிருதுளா, அவளுக்குனு நிறைய டேலண்ட் இருக்கு. நல்லா வீணை வாசிப்பா. சஹானா போலவே பாடுவா. என்னை போல ஆடுவா. ஆனா எதுவும் தொழிலா ஆத்மார்த்தமா எதுவும் இல்லை.
   
   அவளுக்கு அவங்க வீட்ல சித்தி தொல்லை. எந்த வேலைக்கும் போக விடமாட்டாங்க. காலேஜ் படிக்க விட்டதே எங்களோட நட்பு கூட்டணியால தான். மத்தபடி வீட்டோட இருக்கா. அந்த தாழ்வுமனப்பான்மை இருக்கு. எத்தனை தடவை சொன்னாலும் புலம்பலை விடமாட்டா.
  
   இவ மென்பனி நாவல் ரைட்டர். இதுவரை ஆறு நாவல் முடிச்சிருக்கா. அதுல மூன்று புக்பேர்ல கூட புக்கா வந்துச்சு.
     ரீசண்டா குமுதம்ல கூட சீதையும்-கண்ணகியும் அப்படின்னு ஒரு கட்டுரை எழுதி வெளிவந்தது. வாசித்தது உண்டா?” என்று ஆண்களை ஏறிட்டாள்.
  
   மென்பனி ரைட்டர் என்றதுமே தமிழுக்கு ‘அச்சோ… அம்ரிஷை அசிஸ்டெண்ட் டேரக்டர் என்று சொல்லிட்டேன். ஏதாவது பேச ஆரம்பிப்பாளோ? பேசினா பிரச்சனை வந்துடுமா? ரிலேட்டடா தொழில் இருந்தா தப்பாச்சே. ஏற்கனவே இந்த பொண்ணுங்களுக்கு ஓவரா தான் தைரியம் தாண்டவமாடுது.

  இதுல அம்ரிஷ் சினி ஸ்டார் என்று தெரிந்தால் என்ன நடக்கும்?’ என்று பயந்தான்.

   இந்த கூட்டத்தில் தமிழ் தான் எடுத்தோம் கவிழ்த்தோம் என பேசவோ செயல் புரியவோ மாட்டான்.

   எதிலும் நிதானம் காணப்படும். இப்ப தமிழே சொதப்பியதாக தோன்றியது.

   வேதாந்தோ ‘சமாளிப்போம்’ என்று இமை மூடி பதில் தந்தான்.

   அம்ரிஷோ மென்பனி ரைட்டர் என்றதும் தன்னிடம் அதிகம் பேசுவதாக நாடினாலென்று அவளை ஏறிட, “சீ… எனக்கு இந்த கதை சொல்லறது வராது. ஒன்லி எழுதறது என்னோட மனநிம்மதிக்காக தான்.’ என்று பெண்ணவள் அவனுக்கு பதில் தந்தாள்.

   அதே நேரம் மிருதுளா அசையவும் அம்ரிஷ் அவள் புறம் திரும்பினாள்.

  -தொடரும்.

2 thoughts on “மனதில் விழுந்த விதையே-4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *