Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 77

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 77

அத்தியாயம் – 77

“இன்டியன் ஃபுட் நான் டேஸ்ட் பண்ணியே ஆகனும்” என்று ஆராஷியிடமிருந்து உணவை பறிக்க போக அதை தன் கையில் எடுத்து பின்னே மறைத்தவன்.

“நான் பேயா அலைஞ்சாலும் பரவாயில்லை… ஆல்ரெடி நீங்க டேஸ்ட் பண்ணதே ரெண்டு நாள் வொர்க் அவுட் பண்ணனும் போங்க” என்று கோவமாய் கூற
அவனை முறைத்து பார்த்து வைக்க அவனது பார்வை ஆராஷிக்கு சிரிப்பையே கொடுக்க இருந்தாலும் முகத்தை கோவம்போல வைத்துக்கொண்டு இருந்தான்.

“உனக்குலாம் லவ்வே செட் ஆகாதுடா நான் சாபம் விடுறேன்” என்று அவனை சபித்துவிட்டு சென்றான்.
அதை கேட்டு சிரித்தவன்
“போங்க போங்க போய் ப்ராக்டிஸ் செய்ங்க” என்றான்.

திரும்பியவன் “முடியாது போடா” என்றுவிட்டு சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு சென்று விட்டான்.
அவன் சென்றதும் அந்த உணவை எடுத்து போட சென்றவனுக்கு ரியோட்டோ ருசித்து உண்டது நியாபகம் வந்தது.
அதும் ‘அவளது கையாலேயே சமைத்தது என்று வேறு சொன்னானே என்று யோசித்தவனுக்கு தன் கையில் அடிப்பட்டதை பார்த்தவளுக்கு எவ்வளவு அழுகை என்று அவளது அழுத கண்களை மட்டும் தானே பார்த்த நியாபகம் வந்தது ஆனால் முகத்தை காணவில்லையே அவள் எப்படி இருப்பாள்.
அழகா இருப்பாளா? அவளோட கண்கள் அழுது இருந்தாகூட அவ்ளோ அழகா இருந்துச்சே அப்போ அவளும் அழகா தானே இருப்பா? அவளை எங்கே பார்த்தேன்? நியாபகமே வரலையே? ஒருவேளை எனக்கு மட்டும் அப்படி தோணுதோ? அவளோட காஸ்ட்யூம் அழகா இருந்தது ஆனா பாவம் என் இரத்தம் அவ டிரஸ்ல பட்டு ஸ்பாயில் ஆகிடுச்சு இது என்ன டிரடிஷனல் டிரஸ்ஸா இருக்கும் இது என்ன ஃபுட் இப்படி இருக்கே இதுக்கு பேர் என்ன?’ என்று பலவாறு எண்ணியவன் அந்த உணவை எடுத்து சுவைத்து பார்த்தவனுக்கு அதன் சுவை மிகவும் பிடித்து போக தனது டையட்டை யோசிக்காமல் அனைத்தையும் அவனே உண்டுவிட்டான்.
இதை தூரத்தில் கதவின் மறைவில் இருந்து பார்த்த ரியோட்டோவிற்கு ஒருபுறம் ஆச்சர்யமாகவும் இருந்தது மற்றொரு புறம் சந்தோஷமாகவும் இருந்தது.
அங்கு அவளுக்கோ தனது ஜிம்மியோடு கொஞ்சியபடி இருந்தவளிடம் பேச வந்தான் அவளது தோழன் ஷர்மா.
அவளது முகத்தை பார்த்த ஷர்மா
“என்ன பேபி முகமெல்லாம் நம்ம ஊர்ல கோவில் திருவிழாக்கு லைட் போட்ட மாதிரி ஒரே பிரகாசமா இருக்கு என்ன விஷயம்?” என்று கேட்க ஏனோ அவனிடம் அவளால் எதையும் மறைக்க முடியாது எல்லாவற்றையும் அவள் கூறிவிட
ஆச்சர்யமாக பார்த்தான் அவளை.
“முதல் முறையா ஒரு பொண்ணு ஒரு பையன இவ்ளோ லவ் பண்ணுவாளானு கேள்வி படுறேன் பேபி. உன் லவ் உனக்கு கிடைக்க என் வாழ்த்துக்கள்டா” என்றவன் அவளை கட்டிக்கொண்டான்.
அவனிடம் இப்போதைக்கு இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் அவன் ஆளான பிறகு தான் மட்டுமே இதை அவனிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று அவள் கேட்டுக்கொண்டதால் அவனும் அவளுக்கு வாக்களித்தான். எப்போது எந்த உதவி வேண்டுமானாலும் தன்னிடம் தயங்காமல் கேட்க வேண்டும் என.
(அன்று கொடுத்த வாக்குதான் இன்று அவனே அவனுக்கு வைத்துக்கொண்ட ஆப்பாக அவளுக்காக அவன் வேலை பார்த்துக்கொண்டு இருக்கின்றானே)
அவன் அவளது கண்களை பார்த்துக்கொண்டே அவள்மேல் அவனது அந்த ஜாக்கெட்டை போர்த்துவிட்டது அவளுக்கு நினைக்க நினைக்க முகமெல்லாம் சிவந்துபோனது.
அவனது அன்றைய ஜாக்கெட்டோடு இன்று அவன் போர்த்திய ஜாக்கெட்டையும் வைக்கப்போனவளுக்கு இதை வாஷ் செய்து கொடுத்து அவனை பார்க்க நினைக்கலாம் என்று எண்ணியபடி அதனை அணைத்தபடி உறங்கிபோனாள்.

மறுநாள் டையட்டிஷியன் இருவரையும் சோதனை செய்ய அதிர்ந்து போனார் ஆராஷி மற்றும் ரியோட்டோவின் எடையை எண்ணி.
அவனை பார்த்து அவர் முறைக்க அவனோ சாதாரணமாக இருந்தான்.

“என்ன ஆரா இது இவ்வளவு வெயிட் இன்கிரீஸ் ஆகி இருக்கு? நான் கொடுத்த டையட்டை ஃபாலோ பன்றீங்களா? இல்லையா?” என்று அவர் கேட்க.
“எல்லாம் ஃபாலோ பன்றோம் சர்” என்று கூற “இந்த வெயிட் இருக்ககூடாது ஆராஷி அண்ட் ரியோட்டோ இன்னைக்கு நீங்க எக்ஸ்ட்ரா புஷ்அப்ஸ் எடுங்க அண்ட் ரன்னிங் ட்டூ” என்று கோவமாக கூறிவிட்டு அவர் சென்றுவிட இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“ஆமா நான்தான் அந்த இன்டியன் ஃபுட் சாப்பிட்டேன் சோ வெயிட் ஏறுச்சு அதும் கொஞ்சம்தான் சாப்பிட்டேன் ஆனா உன்னோட வெயிட் ஏன் ஏறுச்சு ஆரா” என்று அவனை ஒரு மாதிரி பார்த்து கேட்க தன் திருட்டு முழியை முழித்தான் அவன்.
இதுவரை யாரையும் தன்னிடம் அனுகாதவன் ரியோட்டோவை அனுமதித்தான் அதும் அவனது சோகமுகம் கண்டு அவனே சென்று சமாதானம் பேசினான் இப்போது இருவரும் இணைந்து நெருங்கிய உறவாய் ஆகினர்.
அவனை அவ்வபோது வந்து பார்த்து செல்லும் தந்தையை விட அவனுடனே இருக்கும் ரியோட்டோவையும் அவனது நடனத்தையும் மிகவும் பிடித்து போனதே காரணம்.

ரியோட்டோவை ஆராஷியின் தந்தை தத்து எடுக்கவும் ஆராஷிதான் காரணம்.
சரத்ஶ்ரீ சர் அவனுக்காக ஒருவர் உறவாய் அவனோடு இருந்தால்தான் அவன் பழைய நிலையை அடைவான் என்று சொல்லித்தான் ரியோட்டோவை தத்து எடுக்க சொன்னது. ரியோட்டோவிற்கு மேலோட்டமாக ஆராஷியின் நிலையை சொல்லித்தான் அவனை சகோதரனாக தத்து எடுக்க சம்மதம் பெற்றார் ஆராஷியின் தந்தை.
முதலில் ஏதோவென எண்ணிய ரியோட்டோ ஆராஷியை நோட்டமிட அவனது இயல்பான குணம் அவனுக்கு புரிந்தது அதனாலேயே அவன் அவனது கவனத்தை தன்புறம் திருப்ப ஏதேதோ செய்து இப்போது கொஞ்சம்
அவனோடு ஒன்ற ஆரம்பித்துவிட்டான்.
அதனாலேயே அவனை வம்பு வளர்த்தான் ரியோட்டோ.
அவனை ஓரக்கண்ணால் பார்த்தவன்
நா நான் அந்த ஃபுட்ட கொட்டிட்டேனே நீங்கதான் சாப்பிட்டு வெயிட் ஏறுனீங்க நான் சாப்பிடாமலே வெயிட் ஏறி இருக்கேன்” என்று அவனை பாராமல் குழந்தை போல முகத்தை வைத்தபடி கூற ரியோட்டோ சத்தமாக சிரித்துவிட்டான்.

“நான் இன்டியன் கதையில ஒரு சாமிய பத்தி படிச்சேன் அவரு பேரு கிருஷ்ணாவாம் ரொம்ப குறும்புக்கார சாமியாம் எல்லாம் செஞ்சுட்டு ஒன்னுமே தெரியாதமாதிரி மூஞ்சிய வெச்சுப்பாராம். நீயும் அப்படித்தான் பன்ற கள்ள கண்ணா”என்று அவன் சொல்லி சிரிக்க அவனுக்கு வெட்கத்தில் முகம் சிவந்துவிட்டது.

சட்டென சுதாரித்தவன் “நான் ஒன்னும் அப்படி இல்ல நான் கள்ளனும் இல்ல கள்ளப்பார்வையும் பார்க்கல நான் போய் சிட் அப்ஸ் பன்றேன் பேசாம போய் உங்க ஜாக்கிங்க முடிங்க” என்றுவிட்டு அவன் விட்டால் போதுமென ஜிம்மை நோக்கி சென்றவன். கதவை அடைத்துவிட்டு உஃப் என்று ஊதினான்.

‘இந்த அண்ணா இருக்காரே நம்மல ஈஸியா கண்டுபிடிச்சுடுறாரு அவ்ளோ மோசமாவா இருக்கு நம்ம எக்ஸ்பிரஷன்ஸ்” என்று விட்டு இனிமே ஜாக்கிரதையா இருக்கனும் எதை பற்றியும் யோசிக்க கூடாது முக்கியமாக பெண்களை பற்றி அதும் அவளை பற்றி என்று தனக்குதானே பூட்டிக்கொண்டவன் தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தான்.
நாட்கள் இப்படியே நகர ஆராஷியிடம் அவளால் நெருங்க முடியவில்லை ஆனால் ரியோட்டோவோடு நெருங்கி இருந்தாள்.
அவனும் அவளுக்கு ஜாப்பனீஸ் சொல்லி கொடுத்து அவனை பற்றியும் கூறி இருந்தார் மேலோட்டமாக.
ஆனால் அவர்களது பேச்சில் ஆராஷியை பற்றித்தான் அதிகம் கேட்பாள் அவள் அவளது உள்ளம் உணர்ந்தவன் அவனுக்கு இப்படி ஒரு பெண்ணின் உறவு தேவை என்பதை உணர்ந்தவன் அவளுக்கு அவனை பற்றியும் கூறுவான் அவனுக்கு பிடித்தது பிடிக்காதது என்று.
தினமும் அன்று இருவரும் என்னவெல்லாம் செய்தார்கள் என்று பேசிக்கொள்வர் அங்கிருந்த பார்க்கில் அமர்ந்து.
மேதா வாய்விட்டு சொல்லாவிடினும் அவளது செய்கைகளே அவளது காதலை ரியோட்டோவிற்கு உணர்த்தி விட்டது ஆனாலும் அவளே சொல்லட்டும் என்று அவன் அமைதியாக இருந்தான்.
ஆராஷியிடமும் மீரா என்னும் மேதாவை பற்றி கூற ஒன்றிரண்டு முறை அவனை பேசவிடாமல் தடுக்க அமைதியாக இருந்தான் ரியோட்டோ ஆனால் மீண்டும் அவனே வந்து கேட்க அவர்களது அன்றாட நிகழ்வுகளை கூறுவான் ரியோட்டோ.
அடிக்கடி அவள் ஆராஷிக்கு சொல்ல சொல்லி சொல்வது
“அவரோட கோல்ல அவர் குறியா இருக்கனும் எப்பவுமே அவரை யாராவது ஒருத்தர் வாட்ச் பண்ணிட்டு இருக்காங்கனு நினைச்சுட்டு ப்ராக்டிஸ் பண்ண சொல்லுங்க” என்று அவள் கூறுவதை அடிக்கடி ஆராவிடம் சொல்வான். அவனது வழிநடத்தலால் அவளும் வேகமாகவே ஜாப்பனீஸ் கற்று தனது படிப்பிலும் கெட்டியானாள்.
நாட்கள் நல்லபடிதான் நகர்ந்தது சரத்ஶ்ரீ சர் திரும்ப ஜப்பான் வந்து செல்லும் வரை.

ஏனெனில் இந்த முறை அவரை பார்த்து பேச வேண்டும் என வந்து நின்றவர் மியோவாச்சே.

சரத்ஶ்ரீயை போனில் பேசி அவரை சந்திக்க அழைக்க அப்படி என்னதான் பேச்ப்போகிறார் என்று பார்க்க அவரும் இரகசியமாக ஆராஷியின் தந்தையையும் அழைத்து சென்றார். மறைவான இடத்தில் அவரையும் நிறுத்தி தன் பாடிகார்ட்ஸ்ஸுடன் மியோவை சந்திக்க அவரது தோரணையை கண்டு சற்று மிரண்டுதான் போனார் மியோ ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அவரிடம் தைரியமாக பேச அவர் பேசியதை ரெக்கார்ட் செய்த சரத்ஶ்ரீ அதையே ஆதாரமாக வைத்து அவரையே மிரட்டினார்.
இதை மறைக்காமல் தன் மகளிடமும் சொல்லி வைத்து இருந்தார்.
அவர் செய்த தவறு அதுதான் அவரை அப்போதே போலீஸில் பிடித்து கொடுத்து இருந்தால் இன்று இவ்வளவு பிரச்சனை வந்து இருக்காதே?
இனிமேல் ஆராஷியை தொந்தரவு செய்தால் தயங்காமல் காவல் கம்பி எண்ண வேண்டி வரும் தன்னையும் மிரட்டியதாக புகார் செய்தால் அவ்வளவுதான் அவரது வாழ்க்கையோடு அவரது செல்ல மகனின் வாழ்க்கையும் முடிந்துவிடும் என்று மிரட்டி அனுப்பி விட்டார்.

2 thoughts on “வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 77”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *