Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 78

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 78

அத்தியாயம் – 78
இவரிடம் தன் மிரட்டல் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்த மியோ எப்படியோ ஆராஷியின் எண்ணை அன்று பெற்று அவனுக்கு ஃபோன் செய்து ஏதேதோ பேசி அவனை கஷ்டப்படுத்தி அவனை மன உலைச்சலுக்கு ஆளாக்கிவிட்டு வைத்து விட்டார். அதையே யோசித்தபடி இருந்தவனுக்கு மன அழுத்தமே அதிகம் ஆகியது.
ஆனால் அதை யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் இருந்து விட்டான்.
அன்றைய தினம் அவனுக்கு ஒரு டெத் திரட்டும் வந்து இருந்தது. அதை பார்த்த ஆராஷிக்கு ஏதோ போல் ஆகிவிட அவன் தனது ரூமிற்குள் சென்றுவிட்டான்.
அப்போது தான் ரியோட்டோவை பார்க்க வந்தாள் மேதா. அன்றைய தினம் சாதாரண காட்டன் சுடிதார் அணிந்து வந்து இருந்தாள் எப்போதும் மாஸ்க் அணிந்தபடியே இருப்பதால் அவளை ரியோட்டோ அவளது வீட்டில் பார்த்ததோடு சரி அவனை தவிர வேறு யார்க்கும் அவளது முழு முகமும் தெரியாமல் போனது.
தன்னால் மியோ செய்த இந்த அவமான நிலையை தாங்கவே முடியாது என்று எண்ணிய ஆராஷி அன்று ரியோட்டோவின் அறையில் அவனிடம் ஏதோ பேச வந்தான் ஆனால் அவன் அங்கு இல்லாமல் இருக்க அங்கேயே தலையை பிடித்து அமர்ந்த ஆராஷிக்கு மனதில் பெரும் குழப்பம் கவலை வலி ஏமாற்றம் என்ற அனைத்தும் ஒருசேர தாக்க மியோ அவனை பேசிய பேச்சும் அவனது மனதை பாதிக்க இனி நான் இருப்பதில் அர்த்தம் இல்லை என உணர்ந்தவன் தற்கொலை ஒன்றே முடிவு என முடிவெடுத்து அங்கிருந்த கத்தியை எடுத்து நொடியும் தாமதிக்காமல் அவனது கையை கட் செய்து கொண்டான்.
ஆராஷி சூசைட் பண்ணிக்க முயற்சி செய்ய அப்போது ரியோவ பார்க்க மேதா வந்தாள். அவ மாஸ்க் போட்டு இருப்பதால் ரெகுலராக அவ வர்றதால செக்யூரிட்டி அவளை உள்ளே விட்டார். அன்னைக்குனு ரியோவும் மேனேஜர்கிட்ட அன்னைக்கு நடந்த டெத் த்ரட் சம்பவம் பத்தி மீட் நடத்தி பேசிட்டு இருந்தான். அந்நேரம் அவ ரியோட்டோ ரூம்க்கு வந்து கதவை லேசாக தட்டிவிட்டு தள்ள அங்கே கையை அறுத்துக்கிட்டு மயங்கி விழுந்து இருந்த ஆராஷியை தான் பார்த்தாள்.
அவளுக்கு அவனை அப்படி இரத்தவெள்ளத்தில் பார்த்ததும் பதட்டம் வர “சார் சார்” என்று பதறியவளுக்கு வார்த்தையே வரவில்லை ஓடிச்சென்று அவனை தட்டி எழுப்ப முயன்றவள் அவனது கையில் அதிகமாக இரத்தம் வெளியேறுவதை கண்டு உடனே அவளது காட்டன் ஷாலை எடுத்து அங்கிருந்த குழாயில் நனைத்து அவனது கையில் கட்டு போட்டவள் அவன் மயக்கத்தில் இருக்க..
“ஹெல்ப்..ஹெல்ப்..எமர்ஜென்சி ஹெல்ப்” என்று அலறினாள்.
அவளது அலறல் கேட்டு ரியோட்டோவும் மற்றவர்களும் ஓடிவர அங்கு அழுதபடியே அவனை தட்டி எழுப்பி கொண்டு இருந்தாள் மேதா. அன்றைய தினம் மெடிக்கல் கேம்பில் யாரும் வேறு இல்லை.
“ஆரா” என்று அலறியபடி வந்தவன் மேனேஜரை பார்த்து 
“கால் தி ஆம்புலன்ஸ்” என்று கத்திவிட்டு 
“என்ன ஆச்சு கிட்” என்று கேட்க. 
“நா..நான் உங்கள பார்க்க உங்க..ரூ..ரூம்க்கு உள்ள வந்தேன் அ..அப்போ இவரு..கை..கையெல்லாம் ரத்தம்..ம..மயங்கி இருந்தாரு” என்று அழுதபடி அவள் கூற ரியோட்டோவிற்கு புரிந்து போனது அவன் தற்கொலைக்கு முயன்றுள்ளான் என்று.
உடனடியாக அவனை தூக்கியபடி வெளியே ஓடிவர அவனுடனே வந்தாள் மேதாவும்.
அதற்குள் ஆம்புலன்ஸ் வர அதில் அவனை ஏற்றியவன் அவனும் ஏற அப்போது தான் மேதாவை பார்த்தான் அவள் துடிப்பதை கண்டு அவளையும் தன்னுடன் வருமாறு சொன்னவன் அவளை ஏற சொல்ல அவசரமாக ஏறியவள் அவன் அருகில் அமர்ந்து கைகளை தன்னுடன் எடுத்து வைத்துக்கொண்டாள்.. மயக்கத்திலும் அவளது கையை பற்றிக்கொண்டான் ஆராஷி..
அவனது கையில் சுற்றியிருந்த ஈரத்துணியை எடுத்ததும் இரத்தம் பீறிட்டு வர மீண்டும் அந்த துணியையே வைத்து சுற்றினர்..
அவளது கண்களில் இருந்து நீர் அருவியாய் கொட்ட ரெடியாக அழாமல் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டாள்..
மேனேஜரிடம் அப்பாவிற்கு தகவல் சொல்லும்படி கூறியவன் கிளம்பினான்..
அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்
ஆம்புலன்ஸில் இருந்து இறங்கும்போதும் அவளது கையை பிடித்தபடி இருந்தவனை பார்த்தவர்கள் அவளையும் உடன் இறங்கும்படி சொல்லிவிட்டு அவனை தூக்கினர்..
அவனது பிடி தளர்ந்து போனது உடல் சில்லிட துவங்கி இருந்தது அவளுக்கு பயம் கண்களை கட்டியது.
இருப்பினும் அவனோடு இறங்கினாள் எமர்ஜென்சி வார்டினுள் நுழைய அனுமதி இல்லாததால் அவனிடமிருந்து கையை பிரித்து உள்ளே கொண்டு செல்ல அனுமதித்தவள் அதுவரை அமைதியாக இருந்தவள் ஓவென அழ ஆரம்பித்துவிட்டாள். ரியோட்டோவிற்கும் அழுகைதான் தன் தம்பி இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டானே என.. 
உள்ளே எடுத்து செல்லப்பட்ட ஆராஷிக்கு முதலுதவி துவங்கியது.. அவனது பல்ஸ் ரேட் மிகவும் பலவீனமாக இருந்தது..
உடலும் சில்லிடத்துவங்கி இருந்தது.. இரத்தப்போக்கு அதிகம் ஆகி இருந்ததால் உடனே இரத்தம் வேறு ஏற்ற வேண்டி இருந்தது.. அவனது கையில் இருந்த துணியை பிரித்து எடுக்க இரத்தம் அதிகமாய் வெளியேற முதலுதவி செய்து கட்டு போட்டனர்.. 
இதயத்துடிப்பு குறையத்துவங்க சட்டென முதலுதவி செய்து அவனது பல்ஸ் ரேட்டை நார்மல் செய்தனர்.
அப்போது தான் டாக்டர் அவன் உடம்பு ட்ரீட்மெண்ட்க்கு ஒத்துழைக்கவில்லை என அவர்களை பேச சொல்ல ஆராஷியின் தந்தை மேதாவை அவனிடம் பேச வைத்தார். 
அவனது அம்மா அவனுக்கு சொல்லும் வார்த்தைகளை அவர் சொல்ல சொல்லி கூற அவளோ அதிர்ந்தாள் ஏனெனில் அவளும் இத்தனை நாள் அவனுக்கு அதைதானே சொல்லும்படி கூறி இருந்தாள்.
ஆனாலும் இப்போது அவன் பிழைக்க வேண்டியது அவசியம் என உணர்ந்தவள் அவர் சொன்னது போலவே பேச அவரது உடல் தானாக மருந்துக்கு ஒத்துழைக்க துவங்கியது. 
அவனும் நலம்பெற்று வீடு திரும்பினான்.
அன்றைய தினம் அவளை பார்த்தவன் தான் அப்போதும் முகத்தை பார்க்கவில்லை அவளது கண்களில் அவனுக்கான பயத்தை உணர்ந்தவன் அவளுக்காக வாழவேண்டும் என்று திரும்பி வந்தான். ஆனால் அவளோ அவனை பார்க்காமலே ரியோவின் மூலம் மட்டுமே அவனுக்கு அவள் தைரியத்தை கொடுத்தபடி இருந்தாள். அவனும் அவளை பார்க்க முயலவில்லை தன் உழைப்பில்  ஏதாவது சாதித்த பின் தான் அவளை சந்தித்து பேச வேண்டும் என்று எண்ணம் வைத்து தீவிரமாக அவன் பயிற்சி செய்தான்.
 
ஐந்து மாதம் கழித்து இன்னும் ஒரு வாரத்தில் ஆராஷியின் டெபுயூட் இருந்தது.
மேதாவும் தனது வேலைகளை செய்தபடி இருந்தாள். அவளது தோழனின் ஃபேமிலி ஏதோ ஒரு உறவினர் இறப்புக்கு இந்தியா செல்ல வேண்டிய கட்டாயம் அதனால் அவளுக்கு ஆயிரம் பத்திரம் கூறிவிட்டு சென்றான் அவன்.
அப்போது அவனை அவனது சித்தியிடமிருந்து காத்து தனது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பவர் சரத்ஶ்ரீ என அறிந்தவன் அவருக்கு ஃபோன் செய்து அவரை பார்க்க வேண்டும் என்று கேட்க உடனே அப்பாயிண்மெண்ட் வழங்கப்பட்டது.
அவர் தமிழர் என்று அறிந்து அவரை சென்று பார்த்தவன் அவரது காலை தொட்டு வணங்கினான்.
அவருக்கு அவனது இந்த செயல் மிகவும் பிடித்துவிட்டது.
அவரது பேச்சில் அவளது மகளை பற்றி கூறி இருந்தார்.
அவள்தான் அவனது வேலைகளையெல்லாம் சரிபார்த்து தனக்கு உதவியாக இருப்பதாக கூறவும் அவன் அவளுக்கும் சேர்த்து அவரிடம் நன்றி தெரிவித்தவன் தன்னை நம்பியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தான்.
அப்போது அவர் அவன் வளர்ந்து பெரிய ஆளாக ஆனபிறகு தன்னுடன் சேர்ந்து இந்தியாவில் தொழில் துவங்கவேண்டும் இதுவே தனது ஆசை என்று அவர் கூற அதற்கு உடனே சம்மதம் தெரிவித்து மேனேஜரிடம் வெற்று பத்திரம் வாங்கி அதில் அவனே எழுதி கையொப்பம் இட்டு கொடுத்தான். 
அவருடன் உணவு உண்டவன் அவரிடம் விடைப்பெற்று சென்றான் அதன்பின் அடிக்கடி அவரிடம் பிஸினஸ் பற்றியும் தன் பாடல்கள் பற்றியும் பேச்சு என்று அவர்களுக்குள் நல்ல நட்பு வளர்ந்து இருந்தது.
இதோ அன்றைய தினம் அவனது சோலோ சாங்க் வித் ரியோட்டோ உடனான டான்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு விட்டது. ஒருவாரம் கழித்து கருத்துகணிப்பு நடக்கும் அவனது டெபுயூட் எப்படி என்று.
அன்று ரியோட்டோவை சந்தித்த மேதாவிற்கு ரொம்ப சந்தோஷம் ஆராஷியின் ஆல்பம் சாங் அவ்வளவு அழகாக இருந்தது.
அதைப்பற்றி அவனிடம் பேசி சிலாகித்து கொண்டு இருந்தாள்.
இப்படியே நாட்கள் செல்ல ஆராஷியும் ரியோட்டோவும் முதல் ஆல்பத்திலேயே ஸ்கோர் செய்து இருந்தனர்.
ஆராஷிக்கு ஊக்கம் கொடுத்து மேலும் மேலும் முன்னேற வைத்தான் ரியோட்டோ அதற்கு சரத்ஶ்ரீயின் வழி காட்டுதலும் நன்றாகவே வேலை செய்தது.
இப்போது ஆராஷி பெரிய ஆளாக வளர்நது விட்டான் அதனால் அந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் அவர்களுக்கு ஒரு வீடு வாங்கி செட்டில் ஆகி இருந்தனர். அவ்வளவு தூரம் சென்று அவளால் பார்க்க முடியாததால் அவளும் ரியோட்டோவும் வாரத்தில் ஒருநாள் சந்தித்து கொள்வதாக இருந்தது.
அவளது ஆறுமாத கோர்ஸ்ஸும் முடிந்து அவளுக்கு வேலையும் கிடைத்துவிட்டது. அதனால் அவளும் ஆராஷியை திரையில் பார்ப்பது மட்டுமே நேரில் அவள் பார்க்க முயற்சி செய்யவே இல்லை.
அவனும்தான். 
இதுவரை தன்னை தன் சித்தி தொல்லை செய்யாததற்கு காரணம் சரத்ஶ்ரீ சர் தான் என்று அறிந்தவன் அவருக்கு நன்றிகடன் பட்டவனாகவே தன்னை நினைத்தான்.
இப்போதும் அவனது ஸ்பான்சர் சரத்ஶ்ரீ தான்.
நீண்ட நெடிய இரண்டு மாதங்கள் கழித்து அவளை பார்த்த ரியோட்டோ ஆராஷியின் வேலை பற்றியும் அவனுக்கு பாஸ்ட் க்ரோயிங் ஆக்டர் அவார்டும் சிறந்து பாடகர்க்கான அவார்ட்டும் கிடைக்க போவதையும் சொன்னான் அன்று போல் இன்றும் அவனை அதே நேசத்தோடு பேசும்
அவளையே பார்த்தவன் “ஏன் பேபி நீ ஆராவ ரொம்ப லவ் பன்றனு புரியுது ஆனா அது அவனுக்கு தெரியவந்து அவன் ஏத்துக்கலைனா என்ன செய்வ?” என்று கேட்க அதுவரை அழகாய் சிரித்தமுகமாய் இருந்தவளுக்கு சிரிப்பு காணாமல் போனது.

1 thought on “வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 78”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *