அத்தியாயம்-19
மாலையும் கழுத்துமாய் குருவாயூர் கோவிலில் விஐபி இடத்தில் ஆராவமுதன் நின்றிருக்க, பக்கத்தில் சுரபி மிதமான அலங்காரத்தோடு மணக்கோலத்தில் இருந்தாள்.
“இங்கயும் கூட்டம் வந்துட்டா என்னடி பண்ணுவ?” என்று பல்லவி கோவிலில் அங்கும் இங்கும் திருடன் போல விழித்தார்.
“ஏன்மா நீ வேற. தமிழ்நாட்ல என்றால் இந்நேரம் கோவில் முன்ன மீடியாவா வழியும்னு தான் இவர் இங்க மேரேஜ் வஞ்சிருக்கார். அதெல்லாம் வரமாட்டாங்க” என்றாலும், “ரொம்ப நேரமிருந்தா நியூஸ் லீக் ஆகும். யாராவது போட்டோ எடுத்து சோஷியல் மீடியாவுல அப்டேட் பண்ணினா அவ்ளோ தான். கொஞ்சம் குயிக்கா கிளம்பணும் அமுதா” என்றாள்.
“உனக்கிருக்கற அதே தாட்ஸ் தான் எனக்கும்.” என்றவன் மாமியார் பல்லவியை கண்டு, “சுரபி நீ வந்ததோடு இல்லாம அத்தையையும் எப்படி கூட்டிட்டு வந்த? ரியலி… பெரியவங்க இருப்பது ஹாப்பியா இருக்கு.” என்றான்.
மருமகனும் மகளும் பேச ஆரம்பிக்கவும், பல்லவி தனியாக சிதம்பரம் இருக்கும் பக்கம் சென்றார்.
சுரபியோ “அப்பா நிச்சயம் தேர்தலுக்கு பிறகும் நம்ம கல்யாணத்தை நடத்த விடமாட்டாரோனு டவுட் இருக்கு அமுதா. அதோட நாம கல்யாணத்தை தள்ளி போட முடியாது.
அம்மாவிடம் விஷயத்தை சொல்லலை. ஆனாலும் அம்மாவுக்கு நான் உன்னை கல்யாணம் செய்தாலே போதும். அது இப்படி கமுக்கமா இருந்தாலுமே சந்தோஷப்படுவாங்க.
ஆக்சுவலி அப்பாவிடமும் கட்சி ஆட்கள் மீடியாவிடம் நான் இந்த திடீர் கல்யாணத்தை தெரிவிப்பேன். ஆனா அம்மாவிடம் கல்யாணம் பண்ணிட்டு வந்து சொன்னா, என் மனசாட்சி குத்தி கிழிக்கும். அதான் கல்யாணம் செய்யும் போது ஆசிர்வாதம் வாங்க நீங்களும் வாங்கன்னு மிட்நைட்டுல தூங்கிட்டு இருந்தவங்களை எழுப்பி விஷயத்தை சொல்லி கூட்டிட்டு வந்துட்டேன். இந்நேரம் அப்பா எழுந்து அம்மாவை தேடுவாங்க. அதோட என்னையும் தேடலாம். அங்க திவாகருக்கு வேலை இழுத்து வச்சிருப்பார்.
சிசிடிவி மூலமா நானும் அம்மாவும் கிளம்பறதை பார்த்திருப்பார்.
ஆனா இங்க வருவேன்னு நினைச்சி கூட பார்க்க மாட்டார்.” என்று கூற, ஆராவமுதனோ “உனக்காவது வீட்லயிருந்து ஒரு ஆள் துணைக்கு வந்தாச்சு. உங்க அப்பாவும் தேடுவார். எங்கப்பா எல்லாம் என்னை தேடுவதுக்கு வாய்ப்பேயில்லை.
ஏதோ பீச்ஹவுஸ், கெஸ்ட்அவுஸ், எங்கயாவது ஒரு வீட்ல ஜாலியா இருப்பேன்னு நினைச்சிட்டு எங்கப்பா கோட்டைக்கு கிளம்புவார்.” என்று சலித்து பேசினான்.
பல்லவியோ குருக்களிடம் கல்யாணத்திற்கு தேவையானது வேறு ஏதேனும் உண்டா என்று கேட்டு அறிந்திட சென்றிருந்தார்.
சிதம்பரமும் குருக்களிடம் கத்தை கத்தையாக பணத்தை தந்து முதல் ஜோடியாக ஆராவமுதன்-சுரபி திருமணத்தை முடிக்க ஏற்பாட்டை தயார்நிலையில் வைத்திருந்தான்.
அடிக்கடி இலக்கியன் அழைக்கவும், போனை எடுக்காமல், “தம்பி அப்பா தான் காலையிலிருந்து மூன்றாவது முறை போன் போடறார்.” என்று காட்ட, “அங்கிள் பொறுமையா பேசிக்கலாம்” என்று கூறினான்.
சுரபி அவள் போனை அணைத்து வைத்திருந்தாள். பல்லவியோ போனை வீட்டிலேயே வைத்து விட்டு வந்திருந்தார்.
அதிக நேரமெடுக்காமல் விஐபி பகுதியில் ஆராவமுதன்-சுரபி கல்யாணம் செய்ய வந்தார்கள்.
குருக்கள் தமிழகத்தை சார்ந்த அரசியல்வாதி என்ற வரையில் அறிந்து மந்திரம் கூற, பொன் தாலி கட்டவா?’ என்றது போல கண்களால் ஆராவமுதன் கேட்க, அழகான முறுவலிட்டு தாலி கட்டு என்பதாக கழாத்தை காட்டினாள். மிக எளிமையாக நடைப்பெற்ற திருமணத்தில், சிதம்பரமே இருவரையும் மணக்கோலத்தில் புகைப்படத்தை எடுத்தார். கூடுதலாக பதிவு திருமணமும் முடித்து கொண்டார்கள்.
பல்லவியோடு சோர்ந்து சில புகைப்படம். மணமக்கள் மட்டும் சில புகைப்படம் என்று அழகாய் எடுத்து நடந்தார்கள்.
“தம்பி.. இங்க நில்லுங்க” என்று சிதம்பரம் நிறுத்த, “கால் சுடுது. நிழலில் எடுக்கலாமே” என்று கடிந்தாள் சுரபி.
“இல்லைங்க… பிக்சர் ஒவ்வொன்றிலும் பேக்ரவுண்ட்ல குருவாயூர் போட்டோ பளிச்சினு தெரியணும் தம்பி சொல்லிருக்காப்ல.. அப்ப தான் உங்க போட்டோவை பார்த்து அந்த கேரளா பையன் வயிறு எரியணும்னு சொன்னார்.” என்று கூற, சுரபி கணவன் ஆராவமுதனை முறைத்தாள்.
“பின்ன… என் எதிர்ல உனக்கு கிஃப்ட் தருவானா அந்த உன்னி.
அவன் ஊர்ல உன்னை கல்யாணம் செய்து, நான் யார்னு காட்ட தான் இங்க வந்தது. இல்லைன்னா திருப்பதி போயிருக்க மாட்டேன். தமிழ்நாட்ல இல்லாத கோவிலா? சென்னையில் இல்லாத கோவிலா?” என்று சிலிர்த்து பேசினான். பல்லவி சிதம்பரத்திற்கு பின் நடக்க தம்பதிகள் நடை தானாக மெதுவானது.
சுரபியோ “என்னை சந்தித்து கிஃப்ட் தந்தவனுக்கு ரிப்பீட்டா? அது சரி அப்ப எங்கப்பாவுக்கு என்ன வச்சியிருக்க?” என்று பொன் தாலி மின்ன கேட்டாள்.
“மாமனாருக்கும் உண்டு. என்னை உட்கார வச்சிட்டு உன்னியை பார்க்க ஓடினார்.
அவனோட பேசினார்ல…. வச்சி செய்வேன்.” என்று ஜம்பமாய் உரைத்தான்.
“ஓ ஓஹோ.. அப்ப எனக்கு என்ன தண்டனை?” என்று சுரபி கேட்க?, “உனக்கு மிட்நைட்ல தண்டனை தரலாம்னு முடிவுப் பண்ணிருக்கேன்.” என்று கண்சிமிட்ட, “சீ.. முதல்ல காரில் ஏறுங்க,” என்றாள்.
யாரேனும் பார்த்திடுவார்களோ என்ற பயம். அதோடு மீடியாவை சந்திக்க வேண்டும் என்ற எரிச்சல்.
எப்படியும் கட்சி ஆட்கள், மீடியா, செய்தியாட்கள் என்று வரிசைக்கட்டி வந்து இம்சை செய்ய தயாராக இருக்க, அனைத்துக்கும் பதில் தர வேண்டும் என்ற மலைப்பு சுரபிக்கு அதிகமிருந்தது.
இதில் தந்தை வேறு. எப்படியும் அவரிடம் இனி சுமூகமாக பேசுவது சரிவராது.
உன்னிகிருஷ்ணாவை மணப்பது நல்லதென்று தன்னிடமே எப்படி உரைப்பார்?
இதே கவலையில் தான் ஆராவமுதன் காரில், அவன் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டாள்.
பல்லவியோ தான் இருக்கும் பொழுதே மகள் ஆராவமுதன் தோளை தேடி சாய்ந்ததில் மகிழ்ந்தார்.
கணவர் நட்ராஜனை எப்படியும் சமாளித்திடலாமென்று மிதப்பாய் இருந்தார்.
சிதம்பரமோ போட்டோஸ் எடுத்தவையை காட்ட, “நைஸ் அங்கிள். நல்லா எடுத்திருக்கிங்க.” என்றவன், “இந்த பிக்சரை சோஷியல் மீடியாவில் பதிவிடலாம்.” என்றவன் நகம் கடித்தபடி, வந்தான்.
“என்னிடம் பர்மிஷன் கேட்காம நீங்களா சோஷியல் மீடியாவில் அப்டேட் பண்ண திங்க் பண்ணற? சென்னை போய் சேரும் வரை எதையும் அப்டேட் பண்ணாத அமுதா” என்றாள்.
“ஏய்.. இப்ப போட்டா தான் அது வெடிக்கற பூகம்பம் தெரியும். மீடியா ஆளாளுக்கு கேள்வி எழுப்பி நியூஸா போடுவாங்க. நாம கார்ல போய் சேருவதற்குள் என்ன பேசலாம் என்ன பேசக்கூடாதுனு க்ளியரா ஒரு முறை பேச ட்ரையல் எடுக்கலாம். சிதம்பரம் அங்கிள் நீங்க போடுங்க” என்றான்.
சிதம்பரமோ சுரபியை காண, அவளோ ஆராவமுதன் காணாத போது, இமை மூடி திறந்து, பதிவிட சமிக்ஜை செய்தாள்.
சிதம்பரம் அடுத்த வினாடி பதிவிட்டிருந்தார்.
“வரவர நீ நான் சொல்லறதை கேட்க மாட்டேங்கற அமுதா.” என்று பொய்யாக கோபம் கொள்ள, “சில நேரம் புருஷன் சொல்வதை கேட்கலாம்” என்று ஆராவமுதன் கணவனாய் பேச, பல்லவியோ ‘சுரபி தம்பி சொல்வதையே கேட்டுக்கோ” என்று அறிவுரை வழங்கினார்.
சுரபியோ ‘இந்த அம்மாவே போதும். புருஷன் அரசன் அதுயிதுனு அமுதனை ஏத்தி விடுவாங்க.’ என்று எண்ணினாள்.
ஆராவமுதனோ ஜன்னல் புறம் திரும்பி, ஆழ்ந்த யோசனைக்குள் சென்றான்.
ஆராவமுதன் சொன்னது போலவே அவர்கள் திருமடம் தீயாய் பரவியது.
‘தமிழகத்தில் எதிரெதிர் கட்சிகள் இணைந்தது.’
‘முதல்வர் மகன் ஆராவமுதனும், எதிர்கட்சி தலைவரின் மகள் சுரபியும் திருமணம் செய்து கொண்டார்கள்.’
குரூவாயூரப்பன் கோவில் சந்நிதியில் திடீர் திருமணம்.’ என்று பிளாஸ் நியூஸ் சென்றது.
அதற்குப்பின் செய்தி வாசிக்கும் பெண்மணியோ, “ஆராவமுதன் சுரபி இவ்விருவரும் நிலசரிவில் சந்தித்த நாள்முதல் தங்கள் பழைய காதலை துளிர்விட்டு வளர்த்து, அரசியலில் இருவரும் எதிரெதிர் அணி என்பதால் அவரவர் தந்தைக்கு தெரியாமல் பதிவு திருமணத்தோடு குருவாயூர் கோவிலில் மாலை மாற்றி தாலி அணிவித்ததாக சோஷியல் பக்கத்திவ் பகிர்ந்துள்ளார்.
இதில் ஜனநாயக விடியல் கட்சியின் இளைஞர் அணி தலைவி சுரபி மட்டும் அவரது அன்னையின் அருகே இருப்பதால் வீட்டின் அனுமதியோடு வந்துள்ளதை காணலாம்.
தமிழகத்தின் முதல்வர் இலக்கியன் அரசியலை மனதில் வைத்து ஆராவமுதனின் திருமணத்தை அங்கீகரிக்க மாட்டாரென இந்த திடீர் திருமணம் நடைப்பெற்றதாக பரவலாக அறியப்படுகின்றது.
சோஷியல் மீடியாவின் திரும்பும் பக்கமெல்லாம் வாழ்த்து மழை குவிந்த போதிலும், எதிரெதிர் கட்சியாட்கள் மனமொத்திய தம்பதியராக வாழ்வது சாத்தியமற்றது என்றும் ஆராவமுதனை ஆராதித்த பெண்கள் கூட்டம் எதிர்மறையான கருத்துக்களை பதிவிடுகின்றனர்.
இதுக்குறித்து விரிவான செய்திகள் அடுத்து ஒரு மணி நேரத்தில் ஒளிப்பரப்பப்படும்.’ என்று திரும்பும் பக்கமெல்லாம் செய்தி சேனலில் செய்திகள் வெளிவந்தது.
இதில் இருவரது சிறுவயது புகைப்படம் போட்டு, இலக்கியன் நட்ராஜ் நண்பர்களாக இருந்த காலத்தில் ஆராவமுதனும் சுரபியும் காதலித்ததாகவும், பின்னர் அரசியலால் பிரிந்து சென்றதாக கூறினார்கள்.
சுரபி மற்றும் ஆராவமுதனின் புகைப்படங்கள் நொடிக்கு ஒருமுறை தொலைக்காட்சியில் போட்டு காட்ட, “விட்டா நம்ம கதை வச்சி படம் எடுத்துடுவாங்க போல. அந்த வயசுல நான் உன்னை காதலிக்கவேயில்லை. என்னவோ அப்பவே நானும் உருகிஉருகி காதலிச்சதா சேர்ந்து நின்ற போட்டோவை காட்டறாங்க. ஆமா.. இது எப்ப எடுத்த போட்டோ?” என்று ஆராவமுதன் கேட்டான்.
“கட்சி பிரிவதற்கு முன்ன, கட்சி பிரமுகர் ஒருத்தரோட கல்யாணத்துக்கு போனப்ப எடுத்த போட்டோ” என்று சுரபி கூற ஆராவமுதனோ ‘இதல்லாம் நினைவு வச்சி கலக்குற சுரபி” என்றான் அமுதன்.
பல்லவியோ, “உங்கப்பாவோட தற்போதைய நிலவரம் என்னனு தெரிந்தா நல்லாயிருக்கும். நெஞ்செல்லாம் பக்குன்னு இருக்கு” என்றார்.
“நீ வேற ஏன்மா” என்றவள் “பசிக்கு அமுதா” என்றாள்.
“இப்படி பசிக்குன்னு நடுவழியில சொல்வனு முதல்லயே வாங்கிட்டேன்.,” என்றவன் துணையான சுரபிக்கும், மாமியார் பல்லவிக்கும், சிதரம்பரம் அங்கிள் வாங்கி வைத்தவையை வழங்கிவிட கூறினான்
அவனுமே சாப்பிட துவங்க, “இப்ப நேரா எங்கப்போறோம் தம்பி? வீட்டுக்கா?” என்றார் சிதம்பரம்.
“அட முதல்ல நட்ராஜ் மாமாவை பார்க்கணும். என் சுரபிக்கு அவ அப்பாவோட ஆசி கிடைக்க வேண்டாமா” என்று நக்கலாய் பேசினான். ஆனால் பல்லவிக்கும் அவன் மகளை தன்னோடு அழைத்து வந்து பேச வைக்க முயல்வதாக எண்ணிக்கொண்டார்.
சுரபியோ வாழ்க்கை என்ற ஓட்டத்தில் அடுத்த நிமிடம் எப்படி அமையுமென காத்திருந்தாள்.
ஆனால் திடுக்கிடும் விதமாக அனைத்தையும் மாற்றிவிடும் அளவிற்கு செய்தி சேனலில் காட்டு தீ போல மற்றொரு செய்தியும் பரவியது.
சோஷியல் மீடியாவில் ஆராவமுனின் கணக்கில் நோட்டிக்பிகேஷன் வந்தவண்ணமிருக்க, சிதம்பரமோ, “தம்பி தம்பி… இங்கப் பாருங்க” என்று அலறியபடி கூப்பிட்டார்.
என்ன அங்கிள்?” என்று அசட்டையாக திரும்ப, அங்கே தீவிர அவசர சிகிச்சை பிரிவில் ஆராவமுதனின் தந்தை மற்றும் தமிழக முதல்வர் இலக்கியன் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர பிரிவில் இருப்பதாக செய்தியை கண்டு சுரபி பக்கம் திரும்பினாள்.
அவளுக்குமே இலக்கியன் உடல்நிலை பற்றிய செய்தியில் ஆடிப்போனாள்.
-பிரவீணா தங்கராஜ்
Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍 oru vela endha hospital admit ellam naadagama erukumo ellam plan dhan nu nenaikiren parpom 🧐
Ithuvum drama ah va illa illakiyan avar unmai ah vae than hospital la admit aagi irukaru ah
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 19)
அச்சச்சோ…! இந்த அமுதனோட அப்பா இலக்கியனுக்கு என்னாச்சுன்னு தெரியலையே.?அவரு அமுதன் சுரபி கல்யாணத்துக்கு முழு மனசோட
சம்மதிச்சாரு தானே..? தவிர, வார்த்தைக்கு வார்த்தை சுரபியை மருமகளே மருமகளேன்னு வாயார கூப்பிட்டார் தானே..? இந்த சுரபியோட அப்பா தான் அமுதனை கட்டிக்க முதல்லயிருந்தே தடை விதிச்சிட்டிருந்தாரு… அப்புறம் ஏன் இப்படி…?
ஒருவேளை, அமுதன் சுரபி திருமண நியூஸோட வீரியத்தை குறைக்க, இதுவொரு அதிரடி ஆக்சனா இருக்குமோ…?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Yaaru yenna plan panraangane theriyamaatuthu
Super😍 illakiyan drama amuthan plan pola iruku
It’s interesting 👌
இது மூலமாக அமுதன் cm ஆக்குறதுக்கு plan பண்றாங்க
This us also amuthan plan. Very bad amuthan. Intresting
Going good and interesting 💥💯🤩💥 ithuvum amuthan plan ah
அமுதன்….உன் பிளான் workout aguthu pola…
ena achi ilakkiyanuku unmaiya udambu sari illam poiducha illa arasiyal vasithike vara thedir udambu sari illama poratha apo intha mari nadakanumnu rendu perum munnadiye plan panni tha intha mrg nadathi irukana amuthan intha situationla surabi ethum pana mudiyathe
Interesting plot
Super super super super super super super super super super super super super super super super super super super very very interesting