Skip to content
Home » Hello Miss எதிர்கட்சி-20

Hello Miss எதிர்கட்சி-20

அத்தியாயம்-20

      ஆராவமுதன் காரை நிறுத்த கூற, “தம்பி நடு ரோட்டுலயா? அப்பா ஹாஸ்பிடல்ல இருக்கார் இப்ப போய்…” என்று சிதம்பரம் தலையை சொறிந்தான்.

   கோபத்தை அடக்கியவனாக “அய்யோ அங்கிள்… முதல்ல நிறுத்துங்க. எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணணும்” என்றதும் டிரைவர் ஆராவமுதன் நிறுத்த கூறியதும் நிறுத்திவிட்டார்.

  ஆராவமுதன் வேகமாய் இறங்கி ‘ஷிட் ஷிட் ஷிட்’ என்று கோபமாய் முனங்கி காரை காலால் உதைத்தான்.

   சுரபி மணக்கோலத்தில் ஆராவமுதனை அழைக்கும் விதமாக கார் கதவை திறந்து, அவனிடம் பேசுவதற்காக இறங்க முயன்றாள்.

  பல்லவியோ, “இறங்காதடி… யாராவது உன்னை பார்த்தா கூட்டம் கூடிடும். அப்பறம் துணைக்கு பாதுகாப்புக்கு கூட துப்பாக்கி வச்சிட்டு இருக்கற கமெண்டோ இல்லை.” என்று பதட்டமாய் உரைத்தார்.

  சுரபி தலையில் அடித்து, “ஏம்மா… இப்படி அரசியல்ல ஞானசூன்யமா இருக்க? நீ எதிர்கட்சி தலைவரோட பொண்டாட்டி. அட்லீஸ்ட் பேஸிக் நாலேட்ஜாவது தெரிந்து வச்சிக்கோ.

   அரசியல்வாதிக்கு எல்லாம் கமெண்டோ இருக்கறாங்கன்னு யார் சொன்னா? நீ எப்பம்மா பார்த்த?

உயிருக்கு பாதுகாப்பு இல்லாத  அமைச்சர்கள் என்று, அரசாங்கத்துக்கு தெரிந்து,  சம்மந்தப்பட்ட ஆட்கள் பாதுகாப்புக்கு மென்ஷன் பண்ணி எழுதி கொடுத்தா மட்டும் தான், இந்த கமெண்டோ எல்லாம் பாதுகாப்புக்கு நியமிப்பாங்க.
  அப்ப தான் கமெண்டோ நம்ம கூடவே நாய் மாதிரி வருவாங்க. சும்மா அரசியல்வாதி என்றாலே முன்ன நாலு காரு, பின்ன நாலு காருனு, படத்துல பார்த்து தப்பா நினைக்காத. இதுல கமெண்டோ கையில் துப்பாக்கி வச்சிட்டு பாதுகாப்பு தருவாங்கன்னு பேசறியே. ஆராவமுதனோட அப்பா, அதாவது தமிழக முதல்வருக்கே, உயிருக்கு ஆபத்து இல்லை என்பதால் பாதுகாப்பு ஆட்கள் இல்லை. இதுல நீ எனக்கு ஆட்கள் வருவாங்கன்னு உள்ள உட்காருனு சேலையை பிடிச்சி தடுக்கற.” என்று ஆராவமுதன் இறங்கி குழப்பத்தில் தவிக்க உடனடியாக வெளியே விடாமல் அன்னை சேலையை பிடித்து தடுக்க, கோபத்தோடு கத்தினாள்.

“என்னை ஏன்டி கத்தற? உன் கூட எப்பவும் பாதுகாப்புக்கு அந்த நிவாஸ் சில ஆட்கள் வைப்பானே அதை வச்சி சொன்னேன். எனக்கென்ன கமெண்டோ பத்தி தெரியும். நான் தான் சொன்னேன்ல… அரசியலை பத்தி எனக்கு ஆன்னா ஆவன்னா கூட தெரியாதுன்னு. மாப்பிள்ளையை உள்ள வர சொல்லுடி” என்றார்.

சுரபியோ ‘எனக்கு தெரியக்கூடாதுன்னு தான் அவன் தனியா போய் சிதம்பரத்தோட கத்தி முனங்கிட்டு இருக்கான். இதுல இலக்கியன் அங்கிள் எங்க கல்யாணத்தால, ஹாஸ்பிடல்ல இருக்கும் போது, அவனை உள்ளவர சொன்னா வருவானா?.’ என்று மனதோடு புலம்பினாள்.

“ஆமா… உன் கூட எப்பவும் பாதுக்காப்புக்கு இருக்கற ஆட்கள் யாரு?” என்று அதிமுக்கிய கேள்வியை கேட்டதும், இருந்த கடுப்பில், “அதுவா சாதாரணமா அமைச்சர்கள், மக்களில் சிலர் அடிச்சி பிடிச்சி நெருங்கிடாம இருக்க அவங்க பெர்சனலுக்கு வச்சிக்கற ஜிம்பாய்ஸ். அதாவது பவுன்சர் மாதிரி‌. யாராவது கிட்ட வந்து அவதூறு பரப்பினாலோ, இல்லை வேற விதமா அடிக்க வந்தாலோ நெருங்க விடமாட்டாங்க. இவங்களிடம் துப்பாக்கி எல்லாம் இருக்காது. முன்னாடி வந்து நெருங்க விடாம தடுப்பாங்க. ஓவரா ஏதாவது செய்தா புல்லுக்கட்டா தூக்கிட்டு போய் அப்புறப்படுத்துவாங்க. துப்பாக்கி எல்லாம் மிட்டாய் மாதிரி தூக்கி கொடுக்க மாட்டாங்க.” என்றாள். ஆராவமுதன் சூழ்நிலையை எவ்வாறு கொண்டு செல்வானோ என்ற பதட்டத்தில் அன்னையிடம் தான் கொட்டினாள்‌.

  பல்லவியோ “இந்த நிவாஸ் உன்னை பாதுகாப்பா வச்சிக்க எத்தனை பேரை நியமிச்சான். அவன் எல்லாம் ரொம்ப நல்லவனா தான் தெரிந்தான்” என்று புலம்ப, “அம்மா… அமுதன் வர்றப்ப நிவாஸை பத்தி பேசாத. ஆராவமுதனுக்கு உன்னிகிருஷ்ணாவையும் பிடிக்காது. நிவாஸையும் பிடிக்காது. ஏன் என்னை எவன் ஆசையா காதலிக்கறேன்னு நின்று ரசித்தா, எவனையும்‌ பிடிக்காது. அதுவும் இப்ப கல்யாணம் பண்ணிட்டான். கொஞ்சம் பேச்சை குறைம்மா.” என்று பொறுத்து பார்த்து காரை விட்டு இறங்கினாள்.

  “நடுரோட்ல என்ன பண்ணற அமுதா? முதலமைச்சர் மகன் நடுரோட்டுல திருமண கோலத்தில் இருந்தார்னு எவனாவது வீடியோ எடுத்து வைரல் பண்ணவா? எதுனாலும் கார் உள்ளவந்து பேசு.” என்றவள் அவன் புகைத்த சிகரெட்டை பிடுங்கி தூரயெறிந்தாள்.

  ”அம்மா இருக்கும் போது இந்த பழக்கத்தை வச்சிக்காத.” என்று கட்டளையிட்டாள்.

  ஆராவமுதனோ, சுரபியிடம் எதுவும் பேசாமல் காரில் ஏற முன்னே நடந்தான்.

   சுரபி சிதம்பரத்தை பார்க்க, ‘எனக்கு எதுவும் தெரியலம்மா. கோபமா இருக்கார்’ என்பது போல நின்றார்.

‘இனி நான் பார்த்துக்கறேன்’ என்பதாக நடந்து சென்று காரில் ஏறியதும் ஆராவமுதனும் ஏறிக்கொண்டான்.

  பத்து நிமிடம் மௌனமாக கழிய, “என்னை கல்யாணம் செய்ததும் அங்கிள் ஹாஸ்பிடல் போற நிலைமை வந்துட்டார்னு, என் மேல கோபமா?” என்று கேட்டாள்.

  “இல்லை” என்றான் அமுதன்.
 
  வாய் தான் இல்லை என்றது ஆனால் ஏனோ உள்ளுக்குள் கோபம் கனகனத்தது.

   அவன் தவிப்பை புரிந்துக்கொண்டவளாக “நேரா ஹாஸ்பிடலுக்கு போலாம்” என்று ஆதுரமாய் கையை பிணைத்தாள்.

   ஆராவமுதன் சுரபியை ஏறிட்டு தலையை மட்டும் ஆட்டினான்.

  காரில் பெருத்த அமைதி நிலவ, ஏனைய நிமிடங்கள், வெறுமையாக கழிந்தாலும் வெகு வேகமாய் கார் சீறிப்பாய்ந்தது.

  குருவாயூரிலிருந்து சென்னைக்கு வர, 12 மணி நேர பயணம், நடுவில் எங்கும் கார் நிற்கவில்லை. காலையில் வயிற்றுக்கு சிறிது கொரித்தார்கள். ஆனால் மதிய உணவை கூட தவிர்த்துவிட்டு, எங்கும் நிறுத்தாமல், சென்னையை வந்தடைய இரவு ஏழுமணியானது.

என்ன தான் காலையில் ஆறு, ஆறரை மணிக்கு கிளம்பி சென்னை வர முயன்றாலும் முழுதாய் 12 மணி நேரத்தை தாண்டியே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள்.

   இடைப்பட்ட நேரத்தில் ஆராவமுதன் போனை எடுத்து தந்தையின் உடல்நிலையை மருத்துவரிடம் கேட்டு தெரிந்துக்கொண்டான்.

     அந்த பனிமலர் மருத்துவமனையில் இலக்கியனுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரோ ‘முதலமைச்சருக்கு முதல் முறை ஹார்ட்அட்டாக் வந்ததாக உரைத்தார். தற்போது ஐசியூவில் இருப்பதை தெரிவித்தார்.

     புகழ்ப்பெற்ற தனியார் மருத்துவமனை என்பதால் கூட்டம் சற்று குறைந்திருந்தது. ஆனாலும் கட்சி தொண்டர்களின் தலைகள் ஆங்காங்கே தென்பட்டது.

  கூடுதலாக மீடியாக்காரர்கள் அப்பகுதியில் புதிதாக குடிவந்தவர்கள் போல காத்திருந்தார்கள். அவர்கள் நொடிக்கொரு முறை டிவியில் அமைச்சரின் உடல்நிலையை பற்றி அறிவிக்க திரண்டிருந்தனர்.
 
  “இவனுங்க வேற. பாத்ரூம், பெட்ரூம் வரை எங்க போனாலும் வந்துடறாங்க” என்று பல்லை கடித்தபடி பேசவும், சுரபி அவன் தோளை தீண்டினாள்.

   “இங்க பாரு… நீ ஹாஸ்பிடலுக்கு வரவேண்டாம். சிதம்பரம் அங்கிள் சுரபியை பார்த்துக்கோங்க. இங்க அப்பாவோட விசுவாசிகள் யாராவது கோபமாயிருந்து இவளிடம் ஏதாவது பாய்ந்துடப்போறாங்க. அதோட மீடியா வேற இருக்கு” என்றான்.

  “நான் தமிழக முதல்வரை பார்க்க வரலை. உங்கப்பாவா… எனக்கு மாமனார் என்ற உரிமையில் பார்க்க வர்றேனே” என்றாள்.

  ஆராவமுதனோ, “இந்த பேச்சுக்கு எதிர்பேச்சு எல்லாம் மேடையில மட்டும் வச்சிக்கோ. சில காரணத்தால் வேண்டாம்னா கேட்டுக்கோ. அங்க இருக்கற தொண்டர்கள் எப்பவும் அப்பாவோட அடிதடிக்கு உபயோகப்படுத்தற அரசியல் தொண்டர்கள். அவங்க ஏதாவது இன்னிக்கே, உன்னிடம் வம்பு அளந்தா என்னால சகிக்க முடியாது.
  ஏற்கனவே அப்பா ஹாஸ்பிடல்ல இருக்கார். இதுல மீடியால ஏதாவது கேட்டு நீ ஒரு பதில் நான் ஒரு பதில்னு சொல்லி குழப்ப வேண்டாம்‌. எதுனாலும் சேர்ந்து பேசி வச்சி மீடியா முன்ன பேசுவோம்.” என்றதற்கு சுரபி அவனை மார்க்கமாய் காண, “நான் உன்னை அடக்க பார்க்கலைம்மா.
சிட்டுவேஷனை புரிந்துப்பன்னு நினைக்கறேன். அத்தை… பத்திரமா இங்கேயே இருங்க. இவளையும் பார்த்துக்கோங்க.” என்று கெஞ்சாத குறையாக காரை திறந்து இறங்கினான்.

  காருக்குள் இருப்பவர்கள் யாரென, வெளியே இருப்பவர்கள் கண்ணுக்கு புலப்படாததால் இவ்வளவு நேரம் ஆராவமுதன் சுரபியை கவனிக்கவில்லை. ஆராவமுதன் இறங்கி, இரண்டு எட்டு நடந்ததும் தான் மற்றவர்கள் திரும்பினார்கள்.

  அதற்குள் கார் கதவு மூடப்பட்டதால் சுரபி இருந்ததை யாரும் கவனிக்கவில்லை. காரும் பார்க்கிங் பக்கம் சென்றதால் யாரும் காரில் இல்லையென்று முடிவுக்கட்டினார்கள்.

   மீடியா ஆட்கள் படை போல சூழ, யாரிடமும் நின்று நிதானமாக பேசாமல் புயலை போல கடந்தான். ‘இவன் கட்சில இல்லை என்பதால் மீடியாவை சட்டுனு புறம் தள்ளிடறான். இதே நான் கடந்து போனா அவமிதிக்கறானு நியூஸ் போட்டுடுவாங்க’ என்று சுரபி அமைதிக்காத்தாள்.

  கட்சி ஆட்களோ “தம்பி நீங்க இப்படி பண்ணியது தப்பு தம்பி.’
  ‘உங்களிடம் நாங்க இதை எதிர்பார்க்கலை.’
  ‘நம்ம தமிழகத்தோட ஆணிவேரையே படுக்க வச்சிட்டிங்க.’
  ‘போயும் போயும் எதிர்கட்சில இருக்கற அந்த மேனா மினிக்கியையா கல்யாணம் செய்விங்க” என்று வெவ்வேறு குரல்கள் வர, கடைசியாக கேட்ட வார்த்தை கேட்டு நின்றவன், அவ்வார்த்தை பேசியவனை கண்டு அருகே சென்று, பளாரென அறைந்தான் ஆராவமுதன்.

அவனோ மதுப்ரியையனாக இருந்ததால் ஆராவமுதனின் ஒரடிக்கு  சரிந்தான்.

  “தம்பி தம்பி..” என்று சிதம்பரம் சுரபியை பல்லவி பொறுப்பில் விட்டுவிட்டு எங்கிருந்தோ பதறி அவசரமாய், வேகமாய் வந்தார். “என்ன அங்கிள் பேசறான்? குடிச்சா என்னவேன்னா பேசுவானா? தொலைச்சிடுவேன்” என்று ஆள்காட்டி விரலால், அரசியல் கட்சி தொண்டர்களை பார்த்து, பத்திரமென கூறி ”அவனவனுக்கு பெர்சனலே இருக்கக்கூடாதா? ஓரளவு தான். பெர்சனலை ரொம்ப நோண்டினா அவ்ளோ தான்” என்று கர்ஜித்து தந்தையை தேடி ஓடினான்.

அவன் அறைந்தது பேசியது எல்லாமே வேகத்தில் சேர்த்தியே. சிதம்பரமோ ‘ஏன்யா பேசவிட்டு வேடிக்கை பார்க்கறிங்க.’ என்று முனங்கி சென்றார்.

   முதலமைச்சர் இலக்கியன் இருப்பதால் தனி அறை சலுகையாக ஒதுக்கப்பட்டிருந்தது. சொல்லப்போனால் தனி ப்ளோரே ஒதுக்கப்பட்டது.

  ஆராவமுதன் சென்றதும் கூடவே பனிமலர் மருத்துவமனையின் டீன் அங்கே வந்தார்.

ஐசியூ வார்டுக்கு முன் நிற்க, ஐசியூ பகுதிக்குள் செல்வதற்காக தனியுடையில் செல்ல, செவிலி உடையை எடுத்து நீட்ட
அணிந்தான்.

  ஏற்கனவே அதெல்லாம் எடுத்து வைத்திருந்ததால் ஆராவமுதன் வரவும், அந்த உடையை அணிந்தான். தலையில் தொப்பி போல போட்டுக்கொண்டு, கையுறையும் அணிந்து கதவை திறந்தான்.

  பனிமலர் மருத்துவமனையின் டீன், செல்வகுமார் டாக்டரும் கூடவே வந்தார். “அரை மணி நேரத்துக்கு முன்ன கண் விழித்தார். நீங்க ஏதாவது பேசறதா இருந்தா பேசுங்க. பட் குயிக்கா.” என்றதும், “நீங்க போங்க நான் பார்த்துக்கறேன் சிதம்பரம் அங்கிள் நீங்களும் வெளியே இருங்க” என்று டாக்டரையும் சிதம்பரத்தையும் அனுப்பி வைத்தான்.‌

அவர்கள் சென்றதும், கதவை மூடி திரைசீலையை போட்டுவிட்டு தந்தை அருகே வந்தான்.

   “என்னடா சுரபியை மேரேஜ் பண்ணிட்டியா? வாழ்த்துகள் அமுதா” என்று இலக்கியனின் துள்ளல் குரல் வந்தது. அதற்கு நேர்மாறாக “மேரேஜ் பண்ணியாச்சு.” என்று சுரத்தையின்றி பதில் தந்தான் அரசியல் நாயகன் ஆராவமுதன்.

  இலக்கியனோ ‘கதவு மூடி தானே இருக்கு எழுந்து உட்காரவா?” என்று கண்ணை திறவாமலேயே கேட்டார்‌.

  “ம்ம்ம்” என்றவன் தந்தையை காண, இலக்கியனோ, “என்னடா ஜாலியா காதலிச்ச பொண்ணை கல்யாணம் செய்துட்டேன்னு, குதிச்சிட்டு வருவன்னு பார்த்தா சோகத்தோட நிற்கற” என்று கன்னம், தாடை பற்றியபடி கேட்டார். ஆம் ஆராவமுதனின் திட்டத்தில் ஒன்றே, இலக்கியனின் இந்த நாடகம்.

ஆராவமுதனோ “ஜாலியா தான் வந்தேன்… கல்யாணம் முடிந்து கார்ல ஏறும் வரை. எல்லா தந்திரத்தையும் தவிடு பொடியாக்கிட்டா சுரபி.” என்று கத்த, ”பச் மெதுவாடா.. வெளியே சத்தம் கேட்கப்போகுது. என்னாச்சு?” என்றார்.

  “உங்க செல்ல மருமக என்னிடம் ஏமாறலை. அவளிடம் நான் தான் ஏமாந்து நிற்கறேன்.” என்று நெஞ்சு விம்ம கூறினான்.

  ”ஏன்.. என்னாச்சு? படிப்பு முடித்து வந்ததும் அரசியலில் சேருறியானு கேட்டேன். எதிர்கட்சி தலைவர் நட்ராஜ் பொண்ணை சுட்டிக்காட்டி, ‘இவ சுரபியா?’ என்று கேட்ட, ஆமான்னு சொன்னதும், அவ எனக்கு எதிரா பேசின மொத்த மாநாட்டு வீடியோவையும், மொத்தமா வாங்கி வச்சி டிவில போட்டு போட்டு பார்த்த.

   ‘என்னிடம் லவ் சொன்ன சுரபியா? நம்ம வீட்டுக்கு அடிக்கடி வந்த சுரபியானு கேட்ட’

நான் கூட என் தலைமையில் நட்ராஜ் மகளுக்கு பெயர் வச்ச அதே சுரபி தான்டானு விளக்கினேன். அப்பயும் எல்லாத்தையும் கேட்டுட்டு தேர்தல் பக்கம் வராம, எனக்கு சுரபி வேண்டும்னு கேட்டு நின்ற.

  நம்ம ஆளுங்கட்சி, அவ எதிர்கட்சி ஒத்துவராதுன்னு படிச்சி படிச்சி சொன்னேன். நீ தான் எனக்கு இவளை அடக்கறதுல தான் வேண்டும். இவளை ஏமாத்தி பழைய காதலை ஆயுதமா கையில எடுத்து, என்னிடம் மசிய வைக்கிறேன்னு சவாலிட்ட.
 
   நம்ம சொந்த ஊர்ல மாநாட்டில் பேச போறதை தெரிந்துக்கொண்டு, ஊருக்கே போன.
  அங்க, சுரபியை, காதலிக்க வைக்கணும்னு கதை சொன்னவன், நிலசரிவுல இரண்டு பேரும் உதவி செய்திங்க.
   சரி நடுவுல நிலசரிவுல யானையெல்லாம் காப்பாத்தின வீடியோவை பார்த்தேன்.
  நீயும் அவளும் நல்ல நண்பர்களா பேசி புரிந்துக்கொண்டு, நீ சொல்லி சென்னை வந்துட்டா. நீ அங்க உதவி செய்து மக்களிடம் வரவேற்பை பெற்று, குறுகிய இடைவெளியில் பேமஸ் ஆனது மட்டுமில்லை. அவளையும் கைக்குள் கொண்டு வந்துட்ட.

  இன்னும் என்னடா? எதுக்கு இந்த அவசர நாடகம்?” என்று மூச்சு விடாமல் பேசி கேட்டார்.
   ஆராவமுதனோ, “அய்யோ அப்பா… நான் எப்படி சொல்லறது?” என்று அங்கிருந்த மெத்தையை குத்தினான்.

  ஆராவமுதன் திட்டத்தை அழகாக தான் வகுத்தான். ஆனால் சுரபி திட்டத்திற்கு முன் தன்னுடையது ஒன்றுமில்லாமல் போனதாக துவண்டான்.

‘எதிர்கட்சி.. சகுனி… எனக்கே சதி பண்ணிட்டியேடி.’ என்று இவ்வளவு நேரம் மனதோடு பொறுமிக்கொண்டு இருந்தவன் அவளை விட்டு வந்ததும் வெடித்தான்.

-தொடரும்.


😆😆😆 நம்ம ஹீரோ நாலு அடி பாய்ந்தா நம்ம நாயகி நாப்பது அடி பாயணும். இதான் மெயின். எப்பவும் நம்ம கதையில் ஹீரோவுக்கு ஈகுவளா தான் ஹீரோயின் இருக்கணுமே தவிர, ஹீரோவுக்கு எந்த விதத்திலும் குறைச்சலா இருக்கவே கூடாது. இது என் நாயகன் நாயகிக்காக சொல்ல மாட்டேன். எப்பவும் பெண்கள் அந்தளவு ஈகுவளா இருக்கணும் என்பது என் எண்ணம்.

இந்த ஹீரோ அடிக்க அடிக்க அழுது துவண்டு கண்ணீர் விட்டு, செருப்பு மாதிரி என் நாயகியை என்னைக்கும் நான் யூஸ் பண்ண மாட்டேன். 

அதே போல கவர்ச்சிக்கும் காமத்துக்கும் போதை உண்டாக்கும் வஸ்து போலவும் என் நாயகியை எழுதவும் மாட்டேன். கதைகள் கற்பனைகள் என்றாலும் நிதர்சனத்தோட சரியான அளவை தரணும்னு நினைப்பேன்.‌

எனக்கு தெரிந்து நிறைய பேர் போல்டான நாயகின்னா குடிப்பது, அடிக்கறது திமிரா பேசறது, நாயகனுக்கு கட்டளையிட்டு பணிய வைப்பது என்பது கிடையவே கிடையாது.

ஆட்டிடியூட்…. தைரியம், புத்திசாலித்தனம், பிரச்சனை வர்றப்ப சிந்தித்து தெளிவா முடிவெடுப்பது. எந்த சூழ்நிலையிலும் முட்டாளா இல்லாம நடப்பது. இது தான் அதோட சொல்லும் செயலும் ஒன்னா இருக்கணும்.

எனிவே….. கதை இன்னும் எத்தனை அத்தியாயம் வரும்னு தெரியலை. மினிமம் 5 யோசித்து வைத்திருக்கோன். எழுத எழுத அதிகமாகலாம். இல்லைன்னா குறைவாகலாம்.

—–

தளத்தில் கமெண்ட்ஸ் எனக்கு திருப்தி அளிக்குது. ஆனா முகநூலில் ரொம்ப ஆதரவு குறைவா இருக்கற மாதிரி பீல்.
எங்க இவ கதையை படிச்சி கமெண்ட்ஸ் போட்டா இவ கதைக்கு கூட்டம் வந்துடும்னு நினைச்சி தவிர்ப்பது தெரியுது.
இருக்கட்டும்…. அரசியல் களம் வைத்து எழுதுவது புதிதல்ல. ஏற்கனவே பகடை நெகட்டிவ் ஷேட் கதை. இந்த எழுத்தரசியலும் புதிதில்லை.
கடவுள் எனக்குன்னு தர்றதை யாராலும் தடுக்க முடியாது என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் இருக்கு.
நான் பெரிய பக்தி மான் கிடையாது. ஆனா நம்பிக்கை வைப்பேன். ஏன்னா விடாமுயற்சி செய்து ஒவ்வொரு கதைக்கும் நான் என் உழைப்பை போடுறேன். தகவல் சேகரிக்கறேன். அரசியல் கதை களம்னு கண்டதும் கிறுக்கிட்டு போகலை.
ஏன் ரீடர்ஸுக்கு என் கதைக்கு முகநூலில் ஆதரவு குறைவுன்னு சொல்லுங்க. தெரிந்துக்கறேன்.

அப்பறம் வாசிக்கற அன்பான ரீடர்ஸ் ரிஜிஸ்டர் செய்து வாசிக்கவும். பெரும்பாலான இலங்கை வாசகர்கள் முகநூல் குழுவில் இருக்கிங்க. ஆனா எல்லாம் சைலண்டா இருக்கிங்க. ரெஜிஸ்டர் பண்ணாம கதை மட்டும் வாசிக்கறதா? ஏன் என்ன காரணம்? இலங்கை எழுத்தாளருக்கு மட்டும் ஆதரவா? என்னுடையது கதைகளை வேறு தளத்தில் பிடிஎப் கேட்கும் வாசகர்கள் பெரும்பாலும் இலங்கை வாசகர்கள். எனக்கு இதற்கு என்ன சொல்லறது தெரியலை. ஏன் இந்த பார்ஷியாலிட்டி. தளத்தில் இலவசமாக இருந்தும் பிடிஎப் கேட்டு படிக்கறிங்க. இது ஒட்டுமொத்தமா குற்றம் சொல்லலை. தவறு செய்பவரிடம் நான் முன் வைக்கும் கேள்வி. எல்லா இடத்திலும் ஆக்டிவா கமெண்ட்ஸ் போடற ரீடர்ஸ் என் கதைக்கு மட்டும் கமுக்கமா இருந்துட்டு அந்தபக்கம் பிடிஎப் வேற கேட்கறிங்க. 😒

27 thoughts on “Hello Miss எதிர்கட்சி-20”

  1. வாவ் சுரபி மா ,
    நீ என்ன திட்டம் போட்ட
    இந்தப் புள்ள இந்த துள்ளத் துள்ளுது
    செமையா திருப்பி கொடுத்துட்டே போலம்மா
    ஸ்டோரி ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போகுது

    1. Ammadi nee yenna ma plan sathamillama potta. Aanalum nee avanuku mun arasiyala padichavanu kaatita. Writer athu yenna twist nu solranga papom

      1. ஹீரோயின் கர்ப்பமானதும் இரவுக்கு அடங்கிடுவாங்களோ அப்படின்னு நினைச்சேன் வெரி வெரி இன்ட்ரஸ்டிங் வெய்டிங் ❤️❤️❤️நெக்ஸ்ட் எபிசோடு

      2. ஹீரோயின் கர்ப்பமானதும் ஹீரோவுக்கு அடங்கிடுவாங்களோ அப்படின்னு நினைச்சேன் வெரி வெரி இன்ட்ரஸ்டிங் வெய்டிங் ❤️❤️❤️நெக்ஸ்ட் எபிசோடு

  2. Wow super. What did Surabhi? Amuthan you deserve this. Praveena sis your writings are awesome, wonderful, very neat and clean narration. We all for u to support you. Keep rocking Sis.

  3. இதுதாங்க நம்ம ஹீரோயின் சூப்பர் சூப்பர் நான் கூட கொஞ்சம் பயந்துட்டேன் ஹீரோயின் ஹீரோக்கு அடிபணிந்துவிடுவார்களோ என்று இங்க தான் நீங்க நிக்கிறீங்க பிரவீனா தங்கராஜ் என்றால் சும்மாவா we always supportive and we love your writing

  4. Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍 surabi na summa va amudhan Ava un kita maatala nee dhan Ava kita maatiyiruka😂

  5. அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
    அமுதன் இப்படி ப்ளான் பண்றது மட்டும் சமர்பிக்க தெரிஞ்சது அமுதன் காலி

  6. M. Sarathi Rio

    Hello Miss எதிர்கட்சி..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 20)

    ஐய்..ஐய்…! நானும் பாஸாயிட்டேன். ஆமாங்க,
    நானும் சூப்பரா கெஸ் பண்றேன் இல்ல..? நான் என்ன கெஸ் பண்றேனோ அதெல்லாம் வரிசையா நடந்திட்டு வருதே.
    இது மட்டும் போதாது. இந்த அமுதன் இன்னும் நிறைய பல்பு
    வாங்கணும். பின்னாடி இருந்தா குத்துறான்….? ஒரு பெண்ணை அடக்கணும்ன்னா, அவளோட கற்ப்பையும், கர்ப்ப பையையும் தான் ஆயுதமா எடுப்பானா..?
    ஏன் பொம்பிளைங்க எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டாங்களாம். தைரியம் இருந்தா நேருக்கு நேர் மோதி பார்க்கணும். அதை விட்டு பின்னாடி போய் குத்த கூடாது.
    இதுவே ஒரு ஆம்பிளைன்னா நேருக்கு நேர் மோதியிருப்பான் தானே..? ஆம்பிளையை விட சுரபி எந்தவிதத்துல குறைஞ்சு போயிட்டான்னு இப்படி திரைக்குப் பின்னாடி தில்லாலங்கடி வேலையெல்லாம் பண்ணி வைச்சிருக்கான்…? இதுவே இவனுக்கொரு அசிங்கம் தான்.
    அதை உணருறானா இல்லையா…?
    “போடா, போடா புண்ணாக்கு..
    போடாத தப்பு கணக்கு…
    போடா, போடா புண்ணாக்கு..
    போடாத தப்பு கணக்கு…
    கிறுக்கு உனக்கு இருக்கு…
    இப்ப எண்ணாத மனக் கணக்கு
    பல கிறுக்கு உனக்கு இருக்கு…
    இப்ப எண்ணாத மனக் கணக்கு”

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    .

  7. Rendum onaium onnu salachathu illa pola… Ivan 8 adi ponaa ava 16 adi… Pregnant verum drama vaa???? But yepdi ivana identify pannunaaa.. Ivan yetho vela paakuranu yepdi guess panaa

  8. அப்பாவும் மகனும் சேர்ந்து பொட்ட பிளான் எல்லாம் சுரபி தவிடுபொடியா ஆகிடுறா….😄😄😄சபாஷ் சுரபி….💃well done girl 💃💃💃😄😄 அந்த அமுதன்..நொந்து போறான்.
    வீணா…நீங்க எப்பவுமே…ஹீரோ அந்த ஹீரோயின் கேரக்டர் a…equal a thaan பாப்பீங்க….athu thaan உங்களோட highlight …hero va big a காட்டி, ஹீரோயின் a… மைனஸ் பண்றது உங்க attitude இல்லையே…..☺️🤩 ஸ்டோரி moving semma….keep rocking Veena….🫂❤️🌹🌹🌹☺️

  9. Super super super super super super super super super super super super super super super super super super super very very interesting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *