அத்தியாயம்-26
ஒரே நாளில் ஒருவரது தோற்றமும் பொலிவும் மாற்றம் காண முடியுமா? ஆனால் இலக்கியன் மாறியிருந்தார். இத்தனைக்கும் ஆராவமுதன் சுரபியோடு தந்திரத்தால் தான் மணக்கின்றான் என்று அவன் செய்யும் காரியத்திற்கு துணை நின்றுயிருந்தவர், நாறாய் துவண்டிருந்தார்.
“என்ன இப்படி மாறிட்டார்?” என்று ஆராவமுதனிடம் கேட்டாள். அவரது தோற்றமும் பொலிவற்ற முகமும் நடிப்பதாகவோ மேக்கப் போட்டதாகவோ தெரியவில்லையே. , “நான் தான் சொன்னேன்ல, அவர் ரொம்ப பயந்துட்டார். இந்த அரசியல் திட்டங்கள், காதல், மோதல், திடீர் கல்யாணம் நமக்கு ஈஸியா இருந்தது. விவாகரத்து என்றதும் அப்பா ரொம்பவே உடைந்துட்டார்.
நீ எப்பவும் அரசியல் மேடையில் அனல் தெறிக்க பேசுவியா, அதனால் விவாகரத்து நடந்து நீ தனியா நான் தனியா வாழ்வோமனு நினைச்சிட்டார். நட்ராஜனை அவமானப்படுத்தியதுக்கும், உனக்கு என் பிரெண்ட்ஸால் நடந்த தவறுக்கும் பழிவாங்குவேன்னு அப்பாவோட கவலை.
எவ்வளவோ சொன்னேன், என்னுடைய காதலை அவ உணருறானு, எங்க… இப்படி மனசை கெடுத்துக்கிட்டு உடலையும் கெடுத்துக்கிட்டார்.” என்று கூற, இலக்கியன் மெதுவாக கையை தூக்கினார்.
சுரபி தான் முன்னே வந்து, “அமுதா… அங்கிள் கூப்பிடறார்” என்று அவன் சட்டையை இழுக்க, “ஏய்… உன்னை தான் கூப்பிடுவார்” என்று அவளை கரம் கோர்த்து முன் நிறுத்தினாள்.
இலக்கியனோ, மெதுவாக சுவாசக்குழாயை எடுத்துவிட்டு, “எங்க உன்னை மருமகளா பார்க்க முடியாதோனு பயந்துட்டேன்.” என்றவர் அவள் கையை பிடிக்க, “அங்கிள்.” என்று பதறினார்.
ஏனெனில் மூச்சுவிட சிரமம்பட்டு உடல் அச்சுருத்தியது.
“அய்யோ.. அப்பா.. மாஸ்க் கழட்டாம பேசுங்க” என்று அறிவுறுத்தினான் ஆராவமுதன்.
“விவாகரத்து எல்லாம் வேண்டாம்மா. ஆராவமுதன் உன்னை நேசிக்கறான்.
உன்னை இழந்தா அவன் ஏமாறுவான். அங்கிள் என்றதை தாண்டி மாமானு கூப்பிடு.
நட்ராஜிடம் நான் பேசணும்.” என்று கூறியதும், சுரபி திகைத்தாள்.
ஒரு மனிதனின் வீம்பு, சூடான ரத்தத்தின் ஆவேசம், அலட்சியம், இதெல்லாம் மரணம் நெருங்குவதாக தோன்றினால் மாற்றம் ஏற்படுமா என்ன? இங்கே இலக்கியன் தலைகீழாக பேசுகின்றார்.
“முதல்ல உடலை தேறி வாங்க. நான் விவாகரத்து பண்ணமாட்டேன். உங்க பையனா விவாகரத்து செய்யறதுக்கு வேண்டுமின்னா வாய்ப்புண்டு. ஏன்னா என்பேச்சு அப்படி” என்றவள் லேசாக சூழ்நிலையை இயல்பாக்கும் விதமாக பேசி, இலக்கியனையும் ஆராவமுதனையும் கண்டு, “நான் வெளியே இருக்கேன்” என்று அவ்விடம் விட்டு அகன்றாள்.
என்ன தான் ஆராவமுதன் தந்தை என்றாலும், அவளுக்குள் எதுவும் மாறவில்லை. மனதால் தண்டிக்க மனமின்றி, அதே மனதிடம் மன்னித்துவிட கூறி வெளியேறினாள்.
வெளியே அங்கிருந்த வராண்டாவில் நடந்து காத்திருக்க, “அய்யாவுக்கு இவளால தான் நெஞ்சுவலியே வந்திருக்கும்.” என்று தமிழக எழுச்சி கட்சி ஆட்களின் கிசுகிசுக்கும் சப்தம் கேட்க, சலித்து கொண்டு, மீடியா பக்கம் நடந்தாள். எப்படியும் திருமணமாகி அவள் மீடியா என்ற அரக்கனை சந்திக்க வேண்டுமே. எப்படியும் தன்னையும் ஆராவமுதனையும் ‘கன்டென்ட்’ ஆக்கி வீடியோவாக போட்டு காசு சம்பாதிக்கும் கூட்டமுமான யூடியூப் ஆட்கள் வேறு காத்திருப்பார்கள்.
பொதுவாழ்வுக்கு தன் வாழ்க்கையை அமைத்து வைத்துக்கொள்ளும் போது, இக்கட்டான சூழலாக இதையும் கையாள வேண்டும்.
“சுரபி மேம்… சுரபி மேடம்” என்ற குரல்களை தவிர்க்க முடியாது அவளே வந்தாள்.
ஆளுங்கட்சி ஆட்கள் இருக்க இங்கே எதிர்கட்சி தலைவியான சுரபி தனியாளாக வரவும் கூட்டம் சூழ முயன்றது.
சிதம்பரமோ தன் நம்பிக்கைக்கு உரியவர்களை சுரபிக்கு முன்னிருத்தி, அதிகமாக நெருக்கடி கொடுக்காமல் பாதுகாக்க ஏற்பாடு செய்தார். அவர்கள் கட்சி உடையையோ தொண்டர்களோ என்று இல்லாமல் பாதுகாப்புக்கு உரியவர்களாக தடுக்கும் பணியில் முனைந்தார்கள்.
அதனால் தடுப்புக்கு சற்று தள்ளி கேள்விக்கணைகள் வீசப்பட்டது.
“மேம்…குருவாயூருக்கு போய் கல்யாணம் பண்ணிருக்கிங்க. வாழ்த்துகள்… ஏன்மேடம் திருப்பதிக்கு போகலை” என்ற முதல் பேச்சுக்கு மலர்வான முகத்துடன் நன்றியுரைத்தாள்.
“மேடம்… நீங்க ஜனநாயக கட்சியோட இளைஞர் அணி தலைவி. முதலமைச்சர் மகன் ஆராவமுதனை மணந்திருக்கிங்க. தமிழக அரசியலில் இப்படியொரு அரசியல் ஜோடி பார்த்ததில்லை. இதனால் கட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்து, உங்க கட்சியிலருந்து நிவாஸ் விலகிட்டாராமே. உங்க கட்சி ஆட்களே நம்பிக்கையில்லாம விலகும் போது, மக்கள் இதை எப்படி ஏற்பாங்கன்னு நினைக்கறிங்க?” என்றதும், சுரபி மைக்கை தனக்கருகே நிறுத்தி, “எல்லாருக்கும் வணக்கம். திருமணத்துக்கு நிறைய பேர் வாழ்த்து சொல்லி கத்துவது மகிழ்ச்சியை தருது. ஆனா இது மருத்துவ வளாகம் இங்க ஆராவரம் ஆர்ப்பட்டம் இல்லாம கேள்விகளை கேளுங்க.” என்று முதலிவ் பொறுப்பானவளாக மருத்துவமனை அருகே செய்ய கூடாதவையில் ஒன்றை சுட்டி காட்டி பேசினாள்.
“அப்பறம் இப்ப ஒருத்தர் கேட்டதுக்கு பதில்..” என்றவள் எச்சியை விழுங்கி, “நான் மணந்தது ஆராவமுதனை தான். அவரோட அரசியலை இல்லை. தமிழக மக்களுக்கு நல்லவே தெரியும். முதலமைச்சர் இலக்கியனுக்கும், எங்க அப்பாவுக்கும் நல்ல நட்பு இருந்தது. நடுவில் தமிழக எழுச்சி கூட்டணியோட கொள்கைகள் பிடிக்காம அப்பா வந்துட்டார்.
ஆனா அதுக்கு முன்ன நான் ஆராவமுதனை விரும்பியிருந்தேன். அதை அவரிடம் அந்த வயசுல சொல்லிருக்கேன்.
அதுக்கு வீட்ல கண்டிப்பும் அதட்டலும் வாங்கி, அதை மறந்து போன நாட்களா மாறியது. நடுவுல ஏகப்பட்ட பிரிவுகள் அதோட படிப்பு அரசியலில் சேவைகள்னு என் நேரத்தை பகுத்திருந்தேன். இப்ப சமீபத்தில் மாநாட்டில் கலந்துக்க போனப்ப, நிலசரிவு நடந்த இடத்தில் ஆராவமுதனை திரும்ப சந்தித்து பேச வாய்ப்பு அமைந்தது.
பழைய காதல் திரும்ப மொட்டு விட்டது. அவரோட புகைப்படம் எடுத்தது கூட வைரலா போனதாக கேள்விப்பட்டேன்.
இந்த காதல் இணையாதுனு அவரிடம் மறுத்தேன். நானா எந்தயிடத்திலும் ஆராவமுதனை மணப்பதா சொன்னதில்லை… இங்கயிருக்க எந்த செய்தி அலைவரிசையில், பேப்பரில் சொன்னதில்லை தானே?!” என்று கேட்க எதிரே இருந்தவர்கள் ஆட்டுக் கூட்டமாக இல்லையென்று மறுத்தார்கள்.
“எஸ்… நானா காதலிப்பதை சொன்னதில்லை. அரசியலில் எதிரெதிர் கட்சிகள் மணப்பது சரிவராதுனு ‘தற்காலிக முதலமைச்சரி’டம் சொன்னதுக்கு, அவர் தான் ‘ஏன் ஒரே ஆபீஸ்ல கணவன் மனைவி வேலை பார்த்ததில்லையா? ஆப்போசிட் ஆப்போஸிட் பார்டிகளுக்குள் கல்யாணம் நடந்து கேள்விப்பட்டதில்லை.
அரசியல் என்பதும் அப்படி தான். உன் கட்சியில் என் தலையீடு இருக்காது. என் கட்சில உன் தலையீடு இருக்காதுன்னு இருவருமே பேசி வச்சியிருக்கோம்.
அதை தாண்டி நம்பிக்கையில்லாதவர்கள் கூட்டணிக்கு பின்னாடி போயிட்டாங்க. கட்சியில் இருப்பவர்கள் காலம் கடந்து என்னை புரிஞ்சுக்கிட்டா போதும். நான் அரசியலில் வந்தது, நானா மக்களுக்கு சேவை செய்யணும் என்ற நோக்கத்திற்காக.
மத்தபடி அரசியலை பொறுத்தவரை, நான்-ஆராவமுதன் எப்பவும் எதிரெதிர் கட்சிகள் மட்டுமே.
இங்க இன்னிக்கு வந்தது ஒரு மருமகளா, இலக்கியன் அங்கிளை சந்திக்க மட்டும் தான்.” என்றவள் புன்னகை மாறாமல் நீரை அருந்தினாள்.
“மேடம்… உங்க திருமணத்தால் முதலமைச்சருக்கு உடல்நிலை சீரற்று போயிடுச்சுனு தொண்டர்களும் மக்களும் பேசிக்கறாங்களே?.” என்றதும் அவசரமாய் நீரை வைத்துவிட்டு, “மன்னிக்கணும்… எங்க திருமணத்தால் இலக்கியன் அங்கிளுக்கு இப்படி ஆனதுனு தப்பும் தவறுமா எழுதாதிங்க. ஆராவமுதன் ஏற்கனவே பகிரங்கமா என்னை விரும்பியதை மீடியாவில் அம்பலப்படுத்தியிருக்கார். அப்படியிருக்க எப்ப வேண்டுமென்றாலும் என்னை மணப்பது சாத்தியம் என்று இலக்கியன் அங்கிளுக்கு தெரியும். இந்த உடல்நிலை கோளாறு, உணவு சம்பந்தப்பட்டவைகளால் முறையால் ஏற்பட்டிருக்கலாம்.
அதோட வழிவழியா இதயநோய் அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு இருக்கு. எங்க கல்யாணம் தான் காலஷ் கல்யாணம்னு இல்லை.” என்றாள்.
மீண்டும் ஒரு பெண் முன் வந்து, “அப்ப முதலமைச்சர் ஆராவமுதன் சாரோட எதிர்கட்சியா இருந்து உங்க கேள்விகள் தொடருமா?” என்று கேட்டாள்.
சுரபியோ ”கண்டிப்பா… தற்காலிக முதலமைச்சரான ஆராவமுதனோடவும் என்னுடைய அரசியல் கேள்விகள், ஈட்டி போல தாக்கும்.” என்றாள்.
இங்கு ஆராவமுதனோ இலக்கியன் அறையிலிருந்த டிவியில் மனைவியின் பேச்சை பார்த்து, “இவளுக்கு யாரும் ஸ்கிரிப்ட் எழுதி தராம எப்படி தான் பேசறாளோ?
நல்லா தான் பேசறா… இப்ப கூட பாருங்க… அவ முன்ன காதலிச்சதும், அடிவாங்கியதும் சொல்லிட்டு, கூடவே நட்ராஜ் அங்கிள் உங்க கொள்கைகளில் பிடிக்காம போனதா குண்டூசி குத்தறா.
இதுல… நானா அவளிடம் வலியவலிய போய் மணக்க கேட்டதையும் ஹை-லைட் பண்ணிருக்கா.
கடைசி பேச்சை கேட்டீங்களா?! அந்த டிவி ஆங்கர், முதலமைச்சர் ஆரவமுதன்னு சொல்லறா. ஆனா உங்க மருமக, தற்காலிக முதலமைச்சர்னு மென்ஷன் பண்ணறா.
சுத்தி கூட்டம், பிளாஸ் லைட்ஸ், மீடியா, லைவ் டெலிகாஸ்ட் வேற, ஆளுங்கட்சி ஆட்கள் நிறைந்த இடத்துல, பொண்ணா இருந்தாலும் என்ன தெளிவா பேசறா பாருங்க.
என்னயிருந்தாலும் அரசியலில் எனக்கு சீனியர் இல்லையா.. பீல்டுல இருந்து தேறிட்டா.
இங்க நீங்க தான் தேவையில்லாம விவாகரத்து என்ற பேச்சில் பயந்துட்டிங்க. பயந்ததும் இல்லாம, ஆக்டிங் கொடுக்க சொன்னதில் நிஜமாவே ஹார்ட் பேஷண்டா மாறிட்டிங்க.” என்று தந்தையை கடிந்தான்.
அழகாக பிளான் போட்டு அது சொதப்பினாலும், முதலமைச்சராக வந்து விட்டும், தந்தையின் உடல்நிலையை தளர்ந்துவிட்டதில் சற்று சுணங்கினான்.
இலக்கியனோ சுவாசக்குழாயை கழட்டி, “அவ ஆன் தி ஸ்பாட் பேச சொன்னாலும் பேசுவா. அந்தளவு தமிழ்ல நாலேட்ஜ் இருக்கு. வார்த்தையை பதமா கோர்ப்பதில் கில்லாடி. இனி ஆட்டத்தை பார்க்க தானே போற” என்று சுரபிக்கு பில்டப் கொடுத்தார் இலக்கியன்.
ஆராவமுதன் எப்பொழுதும் இலக்கியனிடம், அவளாம் ஒருத்தின்னு பிரிப்பர் பண்ணி பேசறிங்க.’ என்று முன்பு கேலி செய்வான்.
‘அட ஒரு வார்த்தை விட்டாலும் அதை பிடிச்சிக்கிட்டு நம்மளை கேள்வி கேட்டு மீடியாவையும் உசுப்பேத்திடுவா. உனக்கு தெரியாது அமுதா. அவ நீ உன்னை விரும்பிறய சுரபி இல்லை.’ என்று அடிக்கடி புகழ்ந்ததற்கு சாட்சியாக நேரிலும் கண்டான்.
“ஆல்தி பேஸ்ட் அமுதா…. இது கல்யாண வாழ்க்கைக்கு மட்டுமில்லை. அரசியல் களத்துல நீ கால் பதிச்சு அவளோட மோதுவதற்கும்” என்று சிரிக்க முயன்றார்.
இலக்கியனின் உடல்நிலை இன்னமும் சோர்வில் கிடத்தியிருந்தது.
வாசலில் சிதம்பரம் சுரபி குரல் கேட்கவும், “அவ தான் அனேகமா சொல்லிட்டு போக வந்திருப்பா.” என்று ஆராவமுதன் கூற, “அமுதா.. நான் கிளம்பறேன். ஈவினிங் அப்பாவை பார்க்க போகணும். அங்கிள் உடலை கவனிச்சிக்கோங்க” என்றாள்.
“ஏ.. என்ன அவசரம்” என்று ஆராவமுதன் சொல்ல, “ஹலோ.. டெம்ரர்லி மினிஸ்டர்… தமிழக பாராளுமன்றத்தில் போகணும். நான் ஜனநாயக விடியலோட இளைஞர் அணி தலைவி எனக்கு இந்த பஞ்சுவாலிட்டி ரொம்ப முக்கியம்.” என்றவள் மருத்துவமனை வளாகத்தில் அவளது சொந்த காரை வரவழைத்து இருந்தாள். டிரைவர் வந்துவிட்டதாக கூறவும் அவள் இலக்கியனிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்
ஆராவமுதனோ செல்பவளை வியப்பாய் பார்வையிட, “நீ..யும் போ. முதலமைச்சர் பதவியில், சொந்த விருப்பு வெறுப்புஅதுல இருக்க கூடாது.” என்றதும் தான் நினைவு கலைந்தான்.
“உடலை பார்த்துக்கோங்கப்பா. நர்ஸ் வரசொல்லிட்டு போறேன்” என்று ஆராவமுதனும் சென்றான்.
‘பொண்டாட்டி கூடவே சுத்தறதும் நல்லாதான்யா இருக்கும்’ என்ற மிதப்பில் தான் ஆராவமுதன் பரபரப்பாய் கிளம்பினான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Surabi nijamavae oru expert than politics la athu avolo da pechu la yae theriyuthu amudha nega ippo cm sir anga yum pondati ah parkalam nu jolly ah pora ah
Spruuuuuu… spr going 👌
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 26)
அடேய்… போங்கடா..! நீங்களும் உங்க எதிரெதிர் கட்சியும்..!
ஆக மொத்தம், அரசியல் களம் மட்டுமில்லை, இனி இவங்க வீடும் இப்படித்தான் ரணகளமா இருக்கும் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Ada ada ennama poguthu
Super concept 👌
Wow! Super super fantastic narration. Very wonderful narration. Husband wife in opposite parties. Very very very intresting sis.
Super super super😍😍
👌
Ada paavi epdi oru nenapu veraya unnaku
Nice 👍👍👍
Arivusudar surabi arasiyal kalathilum jollikkum natchathiram than. Aravamudhan
Ithula arichuvadi than
Impressive
SUPER SUPER . oruthar ku oruthar salachavanga illa surabi mnnadi ena tha thairiyama ellam pesinalum amutha nee pathu aacharya padra mari than iruka surabi ethir katchi ah irunthu ena la panringanu papom
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️