அத்தியாயம்-30
பல்லவியோ, “அடிப்பாவி முட்டாள் பெண்ணே.. யானை தன் தலையிலேயே மண்ணை வாறி போட்டுக்கிட்டு, மதம் பிடிச்சி திரியுமாம். உனக்கு என்னடி கேடு. நல்ல வாழ்க்கையை நீயா கெடுத்து குட்டி சுவராக்கி வச்சியிருக்க. உங்கப்பாவே பரவாயில்லை. இந்த அளவு கீழ்தரமா இறங்கலை.
ஆனா நீ அந்த தம்பி உன்னோட பேசியதை எல்லாம் வெளியிட்டு இருக்க. எந்த தைரியத்துல அவர் வீட்டுக்கு போற?” என்று வீடியோவை கண்டதிலிருந்து புலம்பினார்.
“அம்மா… சும்மாயிரு. நான் ஒன்னும் உன் மருமகனோட மிட்நைட் மசாலா வீடியோவா வெளியிட்டேன்? அவன் திமிரா பேசியது. மக்களை கிள்ளுகீரையா நினைத்து பேசிய வீடியோ, அதை இப்ப வெளியிட்டு இருக்கேன். ஏன் என்ன தப்பு?” என்று சுரபி கொஞ்சம் நேரம் சும்மாயிருங்களேன் என்று சொல்வதற்கு பதிலாக ஆராவமுதன் இதை எவ்வாறு எடுத்துக் கொள்வானோ என்ற லேசான அச்சத்துடன் தான் அவளும் வந்தாள்.
பயப்படும்படியாக பெரிய காணொளி அல்ல அது.
ஆராவமுதன் வாயிலாக, அவன் வாய் வாய்வார்த்தையில், மக்களுக்கு பல சத்தியம் செய்யறோம். அதெல்லாம் நிறை வேத்தறோமா என்ன? கட்சிக்கு எது தேவையோ மக்களில் எது செய்தா என்னை பற்றி பேசுவாங்களோ அதை மட்டும் செய்தா போதும்னு நினைப்பதில்லை. என்ற காணொளியில் கூடுதலாக, “நம்ம நாட்டு மக்கள் சரியான முட்டாள்கள், நேரிடையாக களத்துல போய் ஒரு பொண்ணு செய்யற உதவி, மக்களுக்கு அவ கொண்டு வர நினைக்கிற திட்டங்கள் எதையும் யோசிக்கறதில்லை.
முதலமைச்சரோட வாரிசு களத்துல இறங்கிட்டான். இனி அவரை போல இவரும் நமக்கு சாமின்னு யோசிக்கறாங்க.
இங்க எந்த சமூகத்திலையும் ஒரு பொண்ணை முதலமைச்சரா நிறுத்தணுமானு கேள்வி தான் வரும். விதிவிலக்கா, தமிழகத்தில், இந்திய்வில் பெண் முதலமைச்சர் இருந்தாங்க சிலர் இப்பவும் இருக்காங்க. ஆனா தமிழகத்தில் இந்த ஆராவமுதன் வந்தப்பிறகு வேற பெண் முதலமைச்சர் ஆளணும் என்ற சான்ஸ் கம்மி.” என்ற திமிரான தோரணையில், மமதையான பேச்சில், அதை பார்த்தவருக்கும் கேட்டவருக்கும் ஆராவமுதனின் அபிமானம் சறுக்கும் வாய்ப்பு ஐம்பது சதமாவது உண்டு.
அதிலேயும் இந்த நேரம் அவன் பேசிய பேச்சு சச்சரவுக்குள்ளானது.
இவன் தற்காலிக முதல்வரா இருக்கும் பொழுதே இந்த பேச்சு பேசுகின்றானே?! நாளை ஐந்தாண்டு முதல்வராக பதவியில் இருந்தால் எத்தனை எள்ளலோடு மக்களை காண்பான் என்ற பேச்சு தீயாக மக்கள் மனதில் பாதித்தது.
நட்ராஜிற்கு இது மகள் ஆராவமுதனோடு பேசிய தருணத்தில் அவள் எடுத்த காணொளி என்று புரிந்ததால், பழையபடி மகள் இன்னமும் அரசியலில் பின்வாங்கவில்லை என்று தெளிந்துவிட்டார். என்ன தெளிந்து என்ன புரோஜனம். சுரபி மனதை காயப்படுத்திவிட்டார். அதற்கான பலன் அனுபவிக்கின்றார்.
பல்லவி தான் காரில் ஏறியதிலிருந்து இதோ சுரபி-ஆராவமுதன் வாழும் வீடு வந்தப்பின்னும் புலம்பலை நிறுத்தவில்லை.
“அந்த வீடியோ எடுத்தது நீயா தான் இருக்கும்னு நிவாஸ் சொல்லறார். என்னிடம் பேசுடி” என்று உலுக்க, வயிற்றில் கையை வைத்து, “நான் தான்.. நானே தான்” என்று இறங்க முயன்றாள்.
“இத்தனை நாள் அம்மா வீட்ல இருக்கேனு சொல்லிட்டு இப்ப எதுக்கு இங்க வர்ற? சண்டை பெருசாக போகுது. மாப்பிள்ளை கோபத்துல அடிச்சிட போறார். குழந்தை வேற இருக்கு” என்று கண்ணீரை துடைக்க, ‘ஏதே.. அடிப்பானா?’ என்பதை போல பார்த்து, ”அதெல்லாம் உங்க காலம். என்னை அடிச்சா, உள்ள தள்ளிடுவேன். அதோட குழந்தையை நாங்க இரண்டு பேருமே ரொம்ப எதிர்பார்க்கறோம்.” என்று முடித்துக்கொண்டாள்.
வாசலில் இறங்கவும் சிதம்பரமோ 'அவங்க வந்துட்டாங்க" என்றார்.
சிதம்பரம் வேகமாய் வந்தவர், “என்னம்மா இப்படி பண்ணிட்டிங்க” என்று கேட்க, “ஏன் அங்கிள் உங்களை சந்தேகப்படறாரா? அப்படி இருக்க வாய்ப்பில்லையே” என்று கேட்டு நடந்தாள்.
"இல்லைங்க... நான் இனி உங்களுக்கு உதவுவதில்லைனு தம்பிக்கு நல்லா தெரியும். அது நீங்க அவர் பேசறப்ப எடுத்த வீடியோனு தம்பியே சொன்னார். எல்லாம் நல்லா போயிட்டு இருக்கறப்ப இது தேவையா?" என்று பழகிய நட்பில் கேட்டார். கணவன் மனைவி என்று அழகான கண்டு பூரித்தவர்களில் இவரும் ஒருவர் அல்லவா?!
“எது அங்கிள்? என்ன எல்லாம் சரியா போகுது. நான் மக்களுக்கு செய்யற உதவிகள் எதுவும், திட்டமிட்டு போட்ட பிளான் கிடையாது. ஆன அதுல இவர் குறுக்க வந்தார். அதுக்கான பலன் அவருக்கு திருப்பி விட்டிருக்கேன்” என்றாள்.
“இந்தளவு புருஷனுக்கு எதிரா பண்ணுவிங்கன்னு நினைக்கலை அதுவும் இந்த தாய்மை கோலத்தில்…” என்று சோகமாக மாறி, இனி ஆராவமுதனே பேசட்டுமென பாதுகாவலுக்கு இருந்தவர்களை நோக்கி சென்றார்.
பல்லவியோ “தெரியாம செய்துட்டதா மன்னிப்பு கேளு” என்று ஆராவமுதனை பார்த்து மகளிடம்
இப்படியாவது பேசு என்று கூறினார்.
“நான் தெரிந்து தான் செய்தது. மன்னிப்பும் கேட்க முடியாது. ஏன்னா நான் தப்பு செய்யலை” என்றாள்.
ஆராவமுதன் கைகோர்த்து வெண்மையான டைல்ஸை தான் வெறித்தான். லேசான கோபம் முகத்தில் தெரிந்தாலும் சுரபியின் தாய்மை கோலம் அவனை நிதானமாக்கியது. மெதுவாக சுரபியை ஏறிட்டு, “ரொம்ப தலைவலியா இருக்கு, இஞ்சி டீ போட்டு கொடு” என்றான்.
அவன் பேசிய தோரணை எப்பவும் பேசுகின்ற சாயலில் இல்லை.
பல்லவியோ, சூடான டீயை பொண்ணு மேல கொட்டிடுவாரோ என்று, “நீ இரு, நான் போடறேன்” என்று முன் செல்ல, “எனக்கும் டீ வேணும் அம்மா” என்று அன்னையை அனுப்பிவிட்டாள்.
பெரும்பாலும் சமைக்க ஆட்கள் இருப்பார்கள். ஏதேனும் அரசியல் பேசுவது என்றால் கூட பால்கனி, உடற்பயிற்சி கூடம், மொட்டைமாடியில் இருக்கும் மற்றொரு அறை என்று தனிமைக்கு பஞ்சமிருக்காது.
அதீத காதல், அன்று முழுவதும் நீயும் நானும் தனித்து இருக்க வேண்டும்’ என்று ஆராவமுதன் சுரபி எண்ணினால் மட்டுமே சமையல்காரர்கள் கூட அவுட்ஹவுஸிற்கு அனுப்பி வைக்கப்பட்டு விடுவார்கள்.
இன்று சமையல் கட்டில் ஆட்களேயில்லை என்றால் ஆராவமுதன் அவுட்ஹவுஸில் அனுப்பி வைத்திருக்க வேண்டும்.
பல்லவியோ தேநீர் தயாரிக்க சென்றதும், "மீடியா ஆட்கள் என்னை தலை காட்ட முடியாத அளவுக்கு கேள்வி கேட்டாச்சு." என்றான் அமுதன்.
சுரபியோ, “ம்ம்ம் பார்த்தேன்… அது ஏஐ நான் இல்லைன்னு சொன்னிங்க. அதுக்கு நம்பற மாதிரி இல்லையேனு பதிலுக்கு கேட்டு, நீங்க கோபமா, என்னுடைய இந்த தற்காலிக ஆட்சியில் என்ன குறை கண்டிங்க. நான் இப்படி பேசலைனு நீங்க கதறாத குறையா கோபத்தில் கழுத்து நரம்பு புடைக்க ஆவேசமா பேசியதை பார்த்தேன்.” என்றாள் வெகு இயல்பாக.
“வர்ற தேர்தலில் எனக்கு மக்கள் மத்தியில் அவப்பெயரை கிரியேட் செய்து தேர்தல்ல வெற்றி பெற நினைச்சிருக்க?
இப்படி செய்யணும்னு முடிவு செய்தவ, தற்காலிக முதல்வரா பதவி ஏற்கும் பொழுதே வீடியோவை வெளியே விட்டிருக்கலாமே? ஏன் என்னை அப்ப விட்டுட்டு இப்ப?
அப்பவாது நீயும் நானும் சண்டைக்கோழிங்க. இப்ப அப்படியில்லையே…. பிறகு எப்படி உன்னால என்னை மக்களுக்கு மத்தியில் இக்கட்டில் தள்ளிவிட்ட?” என்று முன்பாவது காதலன் இன்று புருஷன் என்று மாறிய பின்னரும் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றாளேயென அவளை ஊடுருவினான்.
“நிலசரிவு மயங்கி உன் கெஸ்ட் அவுஸ்ல தங்கினப்ப, என்னோட செல்பி எடுத்தியே. அந்த போன் தானா, தொலைந்து, அந்த பர்டிகுலர் போட்டோ வெள்ளை சட்டை ஷார்ட்ஸ்னு இருந்த பிக், வெளியே கசிந்ததே, அது எப்படி?” என்று சம்பந்தமில்லாமல் கேட்டாள்.
ஆராவமுதன் தடுமாற்றத்துடன், சுரபியை கண்டான். அந்த பிக்சரிலும் பெரிதாக எதுவும் ஆபாசமாக இருக்காது. ஆனால் போன் தொலைந்தது பொய், திருடப்படவில்லை. மாறாக ஆராவமுதனே அவன் கையால் பதிவேற்றம் செய்திருந்தான். ஜனநாயக விடியலின் இளைஞர் அணி தலைவி காட்டன் புடவை, போட் நெக், த்ரிபோர்த் கைகள் என்று கண்ணியமான உடையில் வலம் வந்தவளை, ஸ்டையிலாக, லேசான கவர்ச்சியோடு, ஆராவமுதன் அருகே ஷர்ட் ஷார்ட்ஸ் அணிந்து, ப்ரி ஹேரில் நின்றதை போன் திருடியவன் வெளியிட்டுவிட்டானென பொய்யாக உரைத்து, ஆராவமுதனாகவே வெளியிட்டு, சுரபி அவனை காதலிப்பதையும், மணக்க மறுக்க கூடாதென்ற இக்கட்டையும் அதில் உருவாக்கியது அவன் தானே.
“அது.. அப்ப நமக்கு கல்யாணம் ஆகலையே” என்று கைவிரித்து கூற, சுரபி நகைச்சுவை கேட்டது போல சிரித்து, “கரெக்ட்… பட்… நமக்கு கல்யாணம் ஆகலை. ஆனா முதலிரவு நடந்து முடிந்து, நீயும் நானும் கணவன் மனைவிக்கான பந்தத்தில் இணைந்துவிட்டோமே. நமக்கு கல்யாணம் முடிந்ததா தான் நான் நினைச்சேன். ஆனா என் மானத்தை ஏலம் போட்டு தான், நீ உன் காதலை, கல்யாணம் என்ற கோட்பாட்டில் நிறுத்தின.
என் மானம் மரியாதையை பத்தி நீ அப்ப யோசிக்கலை அமுதா. மக்கள் மனசுல என்னை எப்படில்லாம் நினைப்பாங்கன்னு நீ யோசிக்கலை.
வக்கிரம் பிடிச்ச கட்சி ஆட்கள், மனிதர்களிடம், என்னோட அந்த ஒரு போட்டோ எப்படியெல்லாம் போய் சேர்ந்து, என்னை கேலிக்குள் ஆக்கும்னு நீ.. கொஞ்சமாவது நினைச்சியா? 18+ மீம்ஸ்ல என்னை நகைச்சுவைக்கு தள்ளிட்ட.” என்றதும் ஆராவமுதனின் தவறு அன்றைக்கு விட இன்று மலையளவு அதிகமாய் தெரிந்தது.
“சுரபின்னா… முதல்வன் இலக்கியனையே பேச்சு திறமையால் வெளுத்து வாங்கறவன்னு பேசப்பட்டதை, ஆப்ட்ரால்… ஒரு பிக்சரில் என்னை அதளபாதாளத்தில் தள்ளிட்ட அமுதா. அதெல்லாம் எதுக்கு? நீ உனக்கான அரசியல் சாம்ராஜியத்தில் உயர்ந்த இடத்துல போக தானே?
அப்படியிருக்க, என்னுடைய அரசியலுக்காக நான் 18 வயசுலயிருந்து இது தான் என் கொள்கைன்னு வாழ்ந்தவளுக்கு, உன்னை வீழ்ந்தி, எனக்கான இடத்தை தக்க வைக்க, கால நேரம் பார்த்தேன்.
தற்காலிக முதலமைச்சராக இருந்தப்ப, நான் இதை வெளியிட்டா, இலக்கியன் அங்கிளோட உடல்நிலையை காரணம் காட்டி, துக்கத்தில் இருக்கேன் மனவருத்தத்தில் இருக்கேன்னு மீடியாவிடம் நழுவியிருப்ப.
இல்லையா தேர்தல் வருவதற்குள் மக்களோட ஞாபகமறதியை உனக்கு சாதகமா பயன்படுத்தியிருப்ப. இப்ப அப்படி பண்ண முடியாது.
அதோட என்னை கல்யாணம் செய்யற நீ., அரசியல்ல ‘தற்காலிக முதல்வரா’ இருந்தவர் என்ற பெரிய அடையாளத்தை நான் உனக்கு தந்திருக்கேன்.
அந்த அடையாளம் போதும், இனி எனக்கான உரிமையை தானா வரவழைக்க இப்ப என்னிடம் நீ முன்ன ஆர்வக்கோளாறில் பேசியதை டிரெண்ட் பண்ணி விட்டேன்.
எப்படி? பட்டி தொட்டி, திரும்புற பக்கமெல்லாம் பேமஸ் ஆகிட்டிங்களா?” என்று கேலியாக கேட்டாள்.
ஆராவமுதன் நிதானம் இழக்கவில்லை. அவன் செய்த தவறு புரியாமல் இல்லை. முதலில் மீம்ஸ் எல்லாம் விளையாட்டுக்கு ரசித்தான். ஏன் சுரபியிடம் கூட பகிர்ந்தான். ஒரு கட்டத்தில் ஆபாசமான கருத்துபகுதியாக அவளது புகைப்படத்திற்கு கீழ் கருத்துகள் குவிய, வாசித்து கோபமுற்றான்.
அவனவன் அவளை நினைத்து புணருவதாக கற்பனை செய்த கருத்துக்களை வாசித்து, சைபர் க்ரைம் குழுவில் தெரிவித்து சத்தமில்லாமல் பகிரப்பட்ட புகைப்படத்தை எங்கும் இல்லாமல் மாற்ற பாடுபட்டான். அநாகரிகமாக கருத்தை பேசியவர்களை சிலரின் வீட்டுக்கு, அவன் செல்ல முடியுமா? தனிப்போலீஸ் படையில் சிலரை அனுப்பி வைத்து மிரட்டியிருந்தான்.
பெண்களை பொதுவெளியில் ஆபாசமான வார்த்தையில் பேசியதாக அபராதம் கூட போட்டு பதிவையும் அடியோடு நீக்கவும் வலியுறுத்தியிருந்தான்.
இதெல்லாம் சிதம்பரம் மூலமாக சுரபிக்கு கசிந்து சென்றிருக்கும். ஆனால் வலி… அந்த வலியை அவள் மறக்க வேண்டுமே. அதற்கு பதிலுக்கு பதிலாக தன்னை பழித்தீர்த்து விட்டாளே’ என்று பேசாத நிலையில் இருந்தான்.
சுரபி பேசவும் ஆராவமுதன் அமைதியாக நிற்பதையும் கவனித்து, பல்லவி அவசரமாய் இஞ்சி டீயை கொண்டு வந்து நீட்டினார்.
“தேங்க்ஸ் அத்தை” என்று இஞ்சி டீயை எடுத்துக் கொண்டு தனிமையை நாடி சென்றான்.
பல்லவியோ “என்னடி பேசி தொலைச்ச? அரசியலில் யாரையும் பார்க்க மாட்டேன்னு திமிரா பேசினியா?” என்று உலுக்க, ”கிட்டதட்ட” என்றவள், “எதுக்கும் பெட்டி படுக்கை எடுத்து வைம்மா. நாம நம்ம வீட்ல போக வேண்டிய சூழல் வரலாம்.” என்றாள்.
“என்னடி சொல்லற?” என்று பல்லவி மகளின் வாழ்வை எண்ணி பயந்தார்.
மகள் அவ்வளவு பேசியும் ஆராவமுதன் டீயை வாங்கிக்கொண்டு தனியாக சென்று விட்டானே.
-தொடரும்.
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 30)
இந்த அமைதியான ஆராவமுதனை பார்க்க… புலி பதுங்கிறது பாயறதுக்குத்
தானோன்னு நினைக்கத் தோணலை. தான் செய்த தப்பை ரியலைஸ் பண்றதாத்
தான் நினைக்கத் தோணுது.
அதோட ஆராவமுதன் இந்த தடவை முதலமைச்சரா வராக்
காட்டியும் எதிர்கட்சியில ஒரு உறுப்பினரா இருப்பான் தானே..? தவிர, அடுத்த முதலமைச்சர் தேர்வுக்காக இப்பத்துலேருந்தே ஸ்ட்ராங்கான அஸ்திவாரம் போட்டா சரியாப் போச்சுன்னுத் தான் முடிவெடுப்பான். ஆனா, சுரபியை விட்டுத் தரமாட்டான்
முக்கியமா தன்னோட குழந்தையை. ஏன்னா, அவன் சுரபி மேல வைச்ச காதலும் உண்மைத்தானே தவிர பொய் கிடையாது. அதுமட்டுமில்லாம,
சுரபி முதலமைச்சரேயானுலும்
அவன் முதலமைச்சரோட புருசன் தானே…?
ஆக மொத்தம், குளத்தை கொக்கு ஆண்டா என்ன, மனுசன் ஆண்டா என்ன மீன் இருக்கிற வரைக்கும் ஆதாயம் தானே…!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super 👌 2nd part iruka
Interesting ud
Impressive
Avanoda yellaaaa thillaaa langadium therunjuthaaaa mrg pannikittaaalaaa
Spr
Spr…. Very interesting
Super sis semma epi 👍👌😍 surabi ketadhu saridhane eppo amudhanala badhil pesa mudiyala ava evlo kashta patrupa parpom enna dhan mudivu yeduka poranga nu🧐
Amudhan oda indha thanimai avan thappu ah realize pannathu na la yum aduthu avan oda stagery ah think pannavum than thonuthu otherwise mathavanga nenaikira mathiri yen surabi yae nenaikirathu pola aval ah piriyurathuku lam illavae illa
Fantastic Surabhi. Excellent checkmate to amuthan. Awesome narration sis.
NICE VERY INTERESTING . surabi ippadi pesinatha veliya viduvanu ninaikala aana vituta atha ellam pathu ipo amuthan mela iruntha nambikai konajm pochi but amutha panatha manasula vachi ippadi veliya vitu iruka amutha etha eppadi la pani iruka antha bad comments padichathum than unaku purinji iruku la nee panthu thappunu atha tha surabi ipo pani iruka nee panthuku pali vangita
Super super😍😍 very interesting
Superb 😍🥰😍🥳🤩
💯💯💯💯👍👍👍👌👌👌👌👌 😍🥰😍🥳🤩
Typical depiction of today’s generation tit for tat attitude better to split out and live their own life no more Drama with kid
Semma sis… Surabiyoda ovuvoru vaarthaiyum saattai adi…. Semma. .
அருமையான கதை படிக்க படிக்க ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக உள்ளது உங்கள் கதை எப்பொழுதும் புதுவித எதிர்பார்ப்போடு இருக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும் விரைவில் அடுத்த கதையை எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌
Super super super super super super super super super super super super super
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️