Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-15

ஐயங்காரு வீட்டு அழகே-15

அத்தியாயம்-15

Thank you for reading this post, don't forget to subscribe!

  திருமணம் முடிந்த அன்றே ரிஷப்ஷன் நடைப்பெற்றது. இதில் கோர்ட் சூட் என்று ராவணனுக்கு தோதாக உடை அணிந்துக் கொண்டான்.
    காருண்யாவுமே வண்ண லெகங்கா அணிந்து நின்றாள். ராகவி, இந்து, சாரதா எல்லாம் போட்டோவுக்குபோஸ் கொடுத்துவிட்டு வாழ்த்தி கட்டி பிடித்து சென்றார்கள். ராகவி இரண்டு மூன்று முறை, “சென்னை வந்துட்டா ஹாஸ்டல்ல இருந்து வெக்கட் பண்ணிடுவ தானே காருண்யா?” என்று கேட்டு தலையில் இடியை இறக்கினாள்.

  இதுவரை அதெல்லாம் யோசிக்காத காருண்யாவுக்கு ராவணனோடு இருக்க வேண்டுமோ? என்று துவண்டாள்.
   பிறகு தன்னை சமாளித்து ஆமென்றாள்.

  ரோஸ்லின் ஷாலினி ஜெயந்த் இன்னும் டீம்மில் உள்ள மெம்பர் எல்லாம் ரிசப்ஷனில் நடனமாடினார்கள்.
    ஐயர் வீட்டு கல்யாணம் என்றால் யாரும் இசைக்கு ஏற்ப ஆடமாட்டார்களா என்ன? அங்கு வந்த சிலரோ ‘கன்னிம்மா’ பாட்டுக்கும், ஆடினார்கள். அதன் காரணமாக ராவணன் அலுவலக  ஆட்கள் நடனமாடினார்கள். மாமிகளில் சிலர் பட்டுயுடுத்தி டிஜேவின் மைக்கில் பாட்டை பாடினார்கள். என்ன அதெல்லாம் மெலடி பாடல்கள். கேட்க வசிகரமாக இருந்தது. அன்றைய நேரம் அழகாய் நகர, இரவு காருண்யா வீட்டில் சாந்தி முகூர்த்தம் நடைப்பெற பாட்டி பிடிவாதம் பிடித்தார். ஆனால் ராவணன் காருண்யா ராசியோ என்னவோ நான்கு நாட்கள் கழித்து சாந்தி முகூர்த்தம் நடைப்பெற ஐயர் தேதி குறித்தார். ‘அப்பாடி சென்னை போயிடலாம்’ என்று ராவணன் எண்ணம்.
 
  காருண்யாவுக்கோ, நல்ல வேளை இப்ப நிம்மதியா தூங்கலாம்’ என்ற பெரும் நிம்மதி.
   இருவரையும் பிரித்து வைத்துக் கொண்டார்கள். பாவம் இந்த சின்னஞ்சிறுசுகள் லிப்டில் அளவுள்ள அறையில் பூட்டி வைத்தாலும் தங்களுக்குள் எல்லையை பிரித்து வாழ்வார்கள் என்று அறிய தவறினார்கள்.
  
அதன் பின் அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும், காருண்யா வீட்டில் சாம்பார், வத்தக்குழம்பு, கூட்டு பொரியல் ரசம் அவியல் என்று சாப்பிட்டாலும் ஞாயிறு அன்று அசைவத்தை எதிர்பார்த்து ஏமாந்தான்.

  ‘நம்ம வீட்டுக்கு போனதும் ஒரு பிடி பிடிக்கணும்’ என்று முடிவுக் கட்டியிருக்க, ரோகிணியுமே காருண்யாவுக்காக அசைவத்தை தவிர்த்து, குருமா குழம்புகளும், காளான் கிரேவி, பன்னிர் புலாவ் என்று தயாரித்தார்.
 
காருண்யாவுக்கு சிறு வயதிலேயே ரோகிணி சமையல் பிடிக்கும். பாட்டி அவருக்காகவும் தந்தை உடலுக்காகவும் சற்று உப்பு காரம் குறைத்தே பழகியிருந்தார். ரோகிணி வீட்டில் அப்படியில்லை. ருசியாக மணமாக விரும்பி சுவைத்தாள்.

‘அம்மா மட்டன் எடுக்கறதா சொன்னிங்க” என்று கேட்டதற்கு, ‘வாயை மூடுடா. சம்பந்தி இருக்கார்” என்று கிச்சன் பக்கம் ஓடினார்.

  அப்பொழுதே அமிர்தம் வீட்டில் மாமிசம் சாப்பிடறவா’ என்று அதிருப்தி அடைந்தார். இனி அதிருப்தி அடைந்தாலும் வேறு வழியில்லையே. சீனிவாசன் சிவராமனோடு சாப்பிட்டார். பாட்டி அமிர்தமோ ”இன்னிக்கு பெருமாளுக்கு விரதமிருக்கேன். பச்ச தண்ணி பல்லுல படக்கூடாது” என்று ரோகிணி எது சமைத்தாலும் கொடுத்தாலும் மறுத்துவிட்டார்.

  ராவணனுக்கு பாட்டி அமிர்தத்தின் மீது ஒரு கோபம் உண்டு. சிறுவயதில் மீன் சாப்பிட்டு ஓடிவந்த ராவணனை வாசலிலேயே நிற்க வைத்து அனுப்பி விட்டார். அதெல்லாம் அடிக்கடி நடக்கும் சம்பவம்.
  ரோகிணி அன்பாய் வேறு ஏதேனும் தந்தால், “அச்சோ.. நேக்கு இதெல்லாம் ஒத்துக்காது, பிடிக்காது, விரதமிருக்கேன், நேக்கு ஒவ்வாமை” என்று இல்லாத காரணங்களை அடுக்குவார்.

கிட்டதட்ட அமிர்தம் அம்பாள் பார்ஷியாலிட்டி பார்ப்பதை அவன் நன்கறிவான். இதே அவா இனத்தில் இருப்பவர் ஏதேனும் கொடுத்தால், “அதனால் என்ன தாடிம்மா” என்று சப்பென்ற உணவு பண்டத்தை சுவையாக கூட்டி கூட புகழ்வார். நாயகனுக்கு எந்த சம்பவமும் மறக்காது என்பதை பாட்டி அறியவில்லை போல.

    சீனிவாசன் மட்டும் சம்பந்தி கை நனைத்து வழியனுப்பினார். அவர் எந்த இடத்திலும் குறை சொல்லும் விதமாக நடக்கவில்லை. சொல்லப் போனால் சீர்வரிசை முதல் கொண்டு ராவணன் வீட்டை நிறைத்தார்.

  ராவணனோ, எதையும் கண்டுக்கவில்லை. அவனை பொறுத்தவரை இதெல்லாம் சென்னைக்கு வராது. பக்கத்து பக்கத்து வீட்டில் பொருட்கள் எங்கிருந்தால் என்ன? என்று வேலையை கவனித்தான்.

   தனியறையில் காருண்யா வீட்டில் இருந்தது போல ராவணன் வீட்டுக்கு வந்ததும் மாறியது.

ராவணன் அறையில் தான் காருண்யாவை தங்க கூறினார்கள்.

  காருண்யாவோ ராவணன் அறையை சுற்றி பார்வையிட,”நீ எங்க வீட்டுக்கு வந்து ரொம்ப வருஷமாகுது. இதுல என்‌ரூமுக்கு வந்ததை எல்லாம் மறந்திருப்ப.
  முன்ன பார்த்த ரூம் மாதிரி இல்லாம மொத்தமா மாத்தியிருப்பேன்.‌எனக்கு பிடிச்ச ஆட்களோட பிக், மியூசிக், திங்க்ஸ்னெ ஒவ்வொன்னு ஒரு ரகத்தில கிடக்கும்.” என்றவன் உட்கார கூறினான்.

  “நீங்க நிற்கறேளே?” என்றவள் பேச்சில் ராவணன் புரியாமல் விழிக்க, “பாட்டி சொல்வா… ஆம்படையான் முன்ன பொம்மணாட்டி உட்கார கூடாதுன்னு. நீங்க கூட பார்த்திருப்பேளே. அன்னிக்கு எல்லாம் அப்ப மாமாவோட பேசறப்ப தூணுக்கு பின்ன நின்று பேசினாளே தவிர, சபையில முன்ன வரமாட்டா.” என்றாள்.

“ஏய் காரு நீ ஏன் இப்படி இருக்க?” என்று கேட்டான்.

  “இப்படின்னா? புரியலை. என்ன சொல்ல வாரேள்” என்று கேட்டாள்.

  “உங்க பாட்டி பழைய ஆளு. ஆனா நீ இந்த சொசைட்டில வளர்றவ தானே. ஐடில வேலை பார்க்கற. இன்னும் என்ன ரூல்ஸ். ஆம்பள முன்ன பொம்பள பேச வரக்கூடாது. புருஷன் முன்ன பொண்டாட்டி உட்கார கூடாதுன்னு. நம்ம இரண்டு பேருக்கும் ஒரே வயசு. மாசத்துல என்னை விட நீ சின்னவ” என்று பழைய பஞ்சாங்கமாக இருப்பவளை பார்த்து கேட்டான்.

  ஏதோ இப்படியாவது பேசி தொலையட்டும் என்று இறைவன் விட்டுவிட்டார் போல.

  “பாட்டி அம்மா இல்லாத பொண்ணுன்னு என்னை பார்த்து பார்த்து வளர்த்தா. எந்த கெட்ட பெயரும் வந்துடக்கூடாது. அதனால் யாரிடம் எந்த முறையில் பேசணுமோ பழகணுமோ, மரியாதை தரணுமோ எல்லாம் அதுக்கு ஏத்த மாதிரி கத்து கொடுத்திருக்கா.
  உங்களை பேர் சொன்னதுக்கே அன்னைக்கு வாங்கி கட்டிண்டேன். அதனால் அவா எப்படி விரும்பறாளோ அப்படியே இருப்பது எனக்கு சேமமா இருக்கும். மாச வித்தியாசம் என்றாலும் இப்ப நீங்க என் ஆம்படையான். பாட்டி இதை தான் சொல்வா” என்றவளிடம் பொறுமையாக எடுத்து பேசிப்போம். எப்படியும் ஒரேயிடத்தில் வேலை என்றால் பக்கத்தில் அமராமல் நின்று கொண்டா வேலை பார்ப்பாள்? என்று சென்னை போய் பார்த்துக்க முடிவெடுத்தான்.

     அன்று அமிர்தம் “இரண்டு நாள் கழிச்சு சாந்தி முகூர்த்தம் முடிச்சிட்டு போகலாமே. கல்யாணமாகி உடனே போகணுமா?” என்று ரோகிணியிடம் கேட்டபடி திண்டபண்டத்தை சீராக அடுக்கி வைத்தார்.
  எல்லாமே அமிர்தம் தனியாளாக நின்று, பேத்திக்கு இனிப்பு காரம் என்று செய்தார்.
  வெளியே வாங்குவது அமிர்தத்திற்கு பிடிக்காது. சீனிவாசனிடம் சொல்லி எல்லாமே கைப்பட மாவரைத்து முறுக்கு சீவல், லட்டு, பூந்தி அதிரசம், ஜாமூன் என்று எல்லாமே தூக்கில் அடுக்கி வைத்தார்.

   “உங்களுக்கே தெரியுமே மாமி. பெங்களூர்ல படிக்கறப்பவும் சரி. வேலை பார்க்கும் பொழுதும் சரி. பெருசா லீவுக்கு இங்க வந்துட்டு போவானா? நாங்க தான் அவனை பார்க்க ஓடுவோம்.

  அதுவுமில்லாம பிராஜக்ட் செய்யணும் தான் சென்னைக்கு வந்திருக்கான். கல்யாணம் அதுயிதுனு இவங்க இரண்டு பேரும் இங்க வந்துட்டா வேலை யாரு பார்ப்பாங்க. காருண்யாவுக்கு தான் ஐடி வேலை பத்தி நல்லா தெரியுமே” என்றதும், “பாட்டி ஆரம்பிக்கறப்பவே லீவு எதுவும் எடுக்க கூடாதுன்னு ஜவஹர் சார் சொல்லிருந்தார். ஏதோ கல்யாணம் என்பதாலும், அவரு… வேலையை முன்கூட்டியே பார்த்து வச்சிட்டு வந்ததாலும் இந்த லீவு சாத்தியப்பட்டுச்சு” என்றதும் அமிர்தமோ சலித்துக் கொண்டார்.

“நீங்கோ என்ன எடுத்து வைக்கணுமோ வையுங்க மாமி.” என்றார். எப்படியும் செல்வதென்று முடிவானப்பின் எடுத்து வைப்பது தானே சிறந்தது.

  “என்ன நீ மாமியை எடுத்து வைக்க சொல்லற. உன் ஆத்துக்காரருக்கு எது தேவையோ, நீ தான் இனி பார்த்து செய்யணும்.” என்று அதட்ட, காருண்யாவுக்கு பாட்டி அமிர்தம் மீது கோபம் பொங்கியது‌.

  இந்த வீட்டில் ராவணன் அறை என்பதை தாண்டி அவளுக்கு ராவணனின் உடைமைகள் எதுவும் தெரியாது‌. அப்படியிருக்க, அவனுக்கு என்ன தேவை என்று அவள் எப்படி அறிவாள்? இந்த பாட்டி வேறு கழுத்தை அறுக்கின்றாரே என்று தோன்றியது.

  அவளை கட்டிய ஆம்படையான் ராவணனோ “பாட்டி அவளுக்கு இங்க எது என்னுடைய திங்க்ஸ் என்று தெரியாம எப்படி எடுத்து வைப்பா. அம்மாவே எடுத்து வைப்பாங்க. அவ அவளோடதை எடுத்து வச்சா போதும்” என்றான்.

   ராவணனை அதட்ட முடியுமா? “இருக்கட்டுமே… அவளும் எல்லாம் தெரிந்துக்க வேண்டாமோனோ? நீ ரோகிணி மாமியோட போய் உதவு” என்று ஏவினார்.
 
  இதற்கு பிறகு மறுத்தால் நன்றாக இருக்காது என்று காருண்யா ரோகிணியோடு சென்றாள்.

அறைக்குள் வந்ததும், “இங்க பாரு காருண்யா. நீ இங்க உட்காரு. ராவணனுக்கு தேவையானதை நான் எடுத்து வைக்கறேன். உங்க பாட்டி எல்லாம் பழைய பஞ்சாங்கம். இப்படி தான் அட்வைஸ் பண்ணி கொல்லுவாங்க. நீ இங்க ஃப்ரியா இரு” என்று தாடை பிடித்து கூறவும், காருண்யா கண்களில் கண்ணீர் வழிந்தது.

   “நேக்கு அம்மா இருந்திருந்தா என்னலாம் சொல்லி வளர்ப்பாளோ அதெல்லாம் பாட்டி சொல்லி வளர்த்திருக்காங்க. ஆனாலும் சில நேரம் பாட்டி ரொம்ப என்னை இக்கட்டு கொடுக்கறச்ச, அம்மா இருந்திருந்தா நேக்கு இந்த நிலைமை வந்திருக்காதோனு நினைக்காத நாளில்லை மாமி.” என்றதும் ரோகிணி அவளை தன் தோளில் சாயவைத்து தலையை நீவி விட்டார்.

   “உங்க சாஸ்திரம் சம்பிரதாயம் தான் இப்படின்னு இல்லைடிம்மா. இங்க பொண்ணுக்கு எல்லார் வீட்டிலும் கொடுக்குற அட்வைஸ் தான்‌.
உங்க பாட்டி இப்பன்னு இல்லை. எப்பவும் இப்படி தானே. அதனால் கண்ணீர் வடிக்காத.
  உனக்கு நினைவிருக்கா தெரியலை. உனக்கும் ராவணனுக்கும் சின்ன வயசுல சண்டை வந்தா நான் ராவணனை தான் விட்டுக் கொடுத்து போக சொல்வேன். ஏன்னா அம்மா இல்லாத பிள்ளை இங்க நம்ம வீட்டுக்கு வந்து அழுது ஏங்கிடக்கூடாதுன்னு நினைப்பு உண்டு. அப்படியிருக்க எங்க மருமகளா வந்தப்பிறகு அழவச்சி, ஏங்க விடுவேனா?
  எனக்கும் ஒரே பையன். நீயும் உங்க வீட்டுக்கு ஒரு பொண்ணு. இனி வர்ற காலத்தில் சேர்ந்து வாழறப்ப தானே மனசை புரிஞ்சுக்க முடியும். எடுத்ததும் அவனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு உனக்கு எப்படி தெரியும்?
  சொல்லப்போனா எனக்குமே அவனுக்கு என்ன பிடிக்கும்னு முழுசா தெரியாது. எங்களை விட்டு காலேஜ் படிக்க பெங்களூர் போனதிலருந்து, இப்பவரை அவன் சுயமா வாழ்ந்து பழகிட்டான். சின்ன வயசுல பிடிச்சதெல்லாம் இப்ப பிடிக்கும்னு கொண்டு போனா, நான் என்ன இன்னும் குழந்தையானு மறுத்திருக்கான்.
  
  இனி எங்களை விட நீ தான் அவன் கூடவே இருக்க போற. இரண்டு மூன்று மாசத்தில உனக்கு அவனோட விருப்பு வெறுப்பு தெரியும் அவனுக்கும் உன்னோட விருப்பு வெறுப்பு தெரியும். அடுத்த முறை வர்றப்ப நீயே கூட ‘அய்யோ அத்தை அவருக்கு இது பிடிக்காதுன்னு’ என் மகனை பத்தி எனக்கு தெரியாத ரகசியத்தை சொல்வ” என்றவர் பேசிக்கொண்டே ராவணனுக்கு தேவையானதை எடுத்து வைத்தார்.

  ஏனோ ரோகிணி மாமி இன்னமும் மாறாத அதே நேசத்தோடு பழகுவதில் காருண்யா முகம் பூவாய் மலர்ந்தது. லேசாய் உதடு விரித்து சிரித்து கண்ணீரை துடைத்து கொண்டாள்.

“ஆங்..‌. முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். எப்படியும் உங்க பாட்டி சொல்லியிருப்பா. இருந்தாலும் நான் உன்னிடம் சொல்லறேன். நாளைக்கு தான் உங்க வீட்ல நாரயணன் ஐயர் உனக்கும் ராவணனுக்கும் சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் குறிச்சி கொடுத்திருக்கார்.
 
  அங்க போனப்பிறகு சிட்டுவேஷன் எப்படியோ? அவன் மனசும் உன்‌ மனசும் எப்படி விருப்பப்படுதோ அதுக்கேற்றது மாதிரி பார்த்துக்கோங்க. உனக்கு அவகாசம் தேவைப்பட்டா அவனிடம் சொல்லு.” என்று கூற, மௌனமாய் தலையாட்டிக் கொண்டாள்.

  “சரி… இப்படியே மடிசாரோட போக வேண்டாம். சுடிதார் போட்டுக்கோ” என்று கூற, கதவு திறக்கும் சப்தம் கேட்டது.
  “பாட்டி திட்டுவா.” என்று காருண்யா உதிர்க்க, “லூசா நீ… நாம நாலு ஐந்து மணி நேரம் டிராவல் பண்ணணும். டிராவலுக்கு எது கம்பர்டபிளோ அதை போட்டுக்கோ. சும்மா… எல்லாத்துக்கும் பாட்டி பாட்டி…” என்றவன் பல்லை கடிக்க, “ராவணா.” என்று ரோகிணி ஒரு வார்த்தை கூற, “ம்ம்மா.. என் பக்கத்துல மடிசார் கட்டிட்டு இருந்தா எனக்கு அப்நார்மலா இருக்கும். அட்லீஸ்ட் நார்மலா சேலை கட்டிட்டாவது வர சொல்லுங்க” என்று கோபமாக தன் கணினி பையை எடுத்து வெளியேறினான்.‌

  “உன் பிரெண்டு ஓவரா தான் போறான்.” என்று ரோகிணி சிரிக்க, காருண்யாவோ, “இப்ப அவா என் சிநேகிதன் இல்லை மாமி” என்றாள் வாடிய முகத்தோடு.
 
  “புருஷனை பிரெண்டாவும், அப்பாவாவும் அம்மாவாவும் பார்க்கலாம். எல்லாம் எடுத்து வச்சாச்சு. இனி அவன் வந்து லாக் பண்ணிப்பான்.‌
நீ முதல்ல சேலை மாத்திடு. நான் ஸ்னாக்ஸ் எல்லாம் எடுத்து வச்சதை சரிபார்த்துட்டு வர்றேன்.” என்று சென்றார்.

   மடிசாராக கட்டியிருந்த சேலையை கழட்டிவிட்டு இலகுவான சேலையாக பார்டர் போட்டிருந்ததை எடுத்து பாதி அணியும் நேரம், கதவு பட்டென்று திறந்து ராவணன் நுழைந்தான்.

  “அய்யோ” என்று சேலையை இழுத்து சேர்த்து அவ்விடத்திலேயே அமர்ந்து மேனியை மறைத்தாள் காருண்யா.

  ராவணனோ கதவு தட்டாமல் வந்த மடத்தனம் மண்டையில் உதிக்க, “சாரி.” என்று வேகமாய் வெளியேறினான்.

  அவன் வந்து சென்றது இமை மூடி திறக்கும் நேரமென்றாலும், காருண்யாவுக்கு பயத்தில் முகமெல்லாம் முத்து போல வேர்த்து விட்டது.
  அவன் வெளியேறியதில் வேகமாய் வந்து கதவை தாழிட்டு நெஞ்சில் கைவைத்து மூச்சை விட்டாள். அவனை குறை சொல்ல முடியாது. இது அவனது அறை, தற்போது ஊருக்கு கிளம்பும் டென்ஷனில் இருக்க, கவனித்திருக்க மாட்டான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
 
 

8 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-15”

  1. Interesting episode.. enna dan paati pazhaya panjangam naalum avanga solra madhiri kudave irundhu paatha dan raavanoda likes dislikes terinjukalam. Life ku first step eduka solranga paati.. I like it…

  2. Dharshini

    Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 kaarunya ku ennoru amma kedachachi eppdiyo renduperum chennai ku poi thani thani ya dhan vazha poranga🙄 paati romba thitranga pa erundhalum adhula oru nanmai eruku👍 eni enna nadakumo parpom 🤔🧐

  3. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 15)

    வாவ்…! ரோகிணி நல்ல அம்மா, நல்ல மாமியார். இவங்களை ரொம்ப பிடிக்குதே. ஆனா, இந்த காருண்யாவைத்தான் எனக்கு பிடிக்கவே இல்லை, ராவணனை பிடிக்குதோ இல்லையோ, ஆனா இப்படியா பட்டு தெறித்தாற் போல கறார பேசறது. அட்லீஸ்ட் பேசறச்சயாவது கொஞ்சம் ஸீவீட்டா, இன்முகத்தோட பேசலாமே. ராவணன் கிட்ட மட்டுமில்லை, அவளோட ஃப்ரெண்ட்ஸ்ங்க கிட்ட கூட ஒரு மாதிரி தான் பேசறா. விட்டா உன் புன்னகை என்ன விலைன்னு கேட்கணும் போல.

    போயும், போயும் ராவணனோட வாழ்க்கை இவ கூடயா ஜோடி சேரணும்ன்னு நினைக்க வைச்சிடுறா போங்க.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  4. Super super. Patti is very old. But Rohini is very good mother in law. Karri move on this is your life. Ravana also very good and understanding husband. Good friends now become couples. Intresting

  5. Super super super super super super super super super super super super super super super super super super super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *