Skip to content
Home » About

About

Welcome

பிரவீணா தங்கராஜ் நாவல்களை அச்சுப் புத்தகமாக (Paperback) வாங்க விரும்புவோர்pravee.thangaraj@gmail.com என்ற மின்னஞ்சலிலும் அல்லது 98409 32361 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு புத்தகம் வாங்கலாம்.

பிரவீணா தங்கராஜ் என்று, நாவல் எழுத்தாளராக அடையாளப்படுத்தி கொள்ளும் நான் சென்னையில் வசிப்பவள். சிறு வயதில் தங்கமலர், சிறுவர்மலர், கல்கண்டு இதழ் என்று புத்தகம் வாசிக்கும் எனது பயணம், இதோ தொடர்ந்துக் கொண்டே வந்து, நாவல் எழுத்தாளராக உங்களுக்கு அறிமுகமாகின்றேன்.   

நம் வாழ்வில் சின்ன சின்ன நிகழ்வுகளை சுவைப்பட எழுதி வைப்பதற்கு டைரி தேவைப்படும். அப்படி ஆரம்பித்து எழுத பழகியதே என் எழுத்தின் ஆரம்பம்.

   கல்லூரியில் விளையாட்டாய் கவிதையை கிறுக்கி தோழிகளிடம் காட்டிய பொழுது எனது முதல் கிறுக்கல்கள் ஆரம்பமானது. சின்ன சின்னதாய் வாழ்க்கையில் என்னோடு கலந்தவையை கவிதை மூலம் இயற்றி இரண்டாம் கட்டத்திற்கு வந்தேன். அதனை வீட்டில் என் அத்தை(அப்பாவின் அக்கா) மாமா(கல்லூரி பிரின்சிபால் பதவியில் இருந்தவர்) இருவரிடமும் காட்டிய அன்று ‘பொண்ணு நீ என்னை மாதிரியே கவிதை எழுதற, எழுதுவது எல்லாருக்கும் வராது. உனக்கு கவிதை எழுத வரும் என்ற பொழுது, நீ இன்னமும் நிறைய எழுது என்று தட்டி கொடுத்து பிழை களைந்து பாராட்டினார்கள். இதுவே என் முதல் ஊக்கம். அதன் பின் மனதில் ரசித்தவை எழுத்தில் வடித்தேன். சமூகத்தின் மீது எழும் கோபத்தையும், இயற்கையை ரசிப்பதையும், எழுத, அடுத்து அத்தியாயமாக காதலையும் எழுத வைத்து கவிதை வடித்தேன். மங்கையர் மலர் ராணிமுத்து, கல்லூரிமலர், குமுதம் சிநேகிதி, என்று புத்தககளில் வரிசையாக கவிதை வெளிவந்தது. என் எழுத்துக்கு அது அஸ்திவாரம்.

கவிதை கொஞ்சம் எட்டி வைத்து, பொழுது போகவேண்டுமென்று கதை படிக்க ஆரம்பித்தேன். புத்தகப் ப்ரியையான என்னை, கவிதை மட்டுமா? கதையும் எழுது என்ற மனசாட்சியின் தூண்டுதலில் எழுத துவங்கியது. நாம் நம் வாழ்வில் பொதுவெளியில், விழாக்களில், நல்லது கெட்டது நிகழ்ச்சியில் என்று பல அனுபவத்தினை உள்வாங்கி, வாழ்வின் பிரச்சனைகளையும், தீர்வாக மாற்றி, நாயகன் நாயகியாய் உருவகித்து பிரச்சனையை அவர்களுக்குள் ஏற்றி, அதற்கு தீர்வும் கொடுத்து நாமும் ஒரு பிரம்மனாய் கதாபாத்திரத்தின் மீது தலையெழுத்தாக எழுதி, அவர்களை கதை மாந்தர்களாக நடமாட வைப்பதே ஒரு அலாதி மகிழ்ச்சி.  அப்படிப்பட்ட அலாதியை, விரும்பி நாவல்களாக படைக்க ஆரம்பித்து, இதோ வாசகர்களான உங்கள் முன், நாவல் எழுத்தாளராக மாறியுள்ளேன். அதன் பயணம் இதோ இப்பொழுது praveenathangarajnovels.com என்ற தளம் அமைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இதற்கு முன் எழுதிய 80 கதைளில் பாதி அச்சு புத்தகமாகவும் மற்றும் அமேசானில் இ-புத்தகமாக காபிரைட் செய்யப்பட்டுள்ளது. அதில் காதல் குடும்பம், உறவு, நட்பு, பெண்களை முன்னிறுத்தி மையமாகவும், திகில் நகைச்சுவை மற்றும் சமூகம் சார்ந்த கதைகள் அடங்கியன.

எனது கதைகளின் பட்டியலும், சுட்டிகளும் அறிந்திட praveenathangarajnovels.com என்ற தளத்தில் காணலாம். மேலும் ராணி முத்து நாளிதழில் *பிரம்மனின் கிறுக்கல்கள்* என்ற நாவல், ஜூன் 16, 2022 வெளியாகி உலகத்திற்கு என்னை அடையாளப்படுத்தியது. அதற்கு முன்பிருந்தே என் நாவலை தொடர்ந்து பதிப்பித்த ஸ்ரீ  பதிப்பகத்தினருக்கும் உஷா மேம் லதா மேம் இருவருக்கும் எனது நன்றிகளும் பேரன்பும். 

தற்போது பூ மகள் மாதயிதழில் கதைகள் வெளிவருகின்றன. என்னுடைய இனி வரும் கதைகள் அருணோதயம் பதிப்பகம் மூலமாக புத்தகங்களாக வெளியாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றேன்.

மனமெனும் ஊஞ்சல்-4

அத்தியாயம்-4    நிரஞ்சன் மதிய உணவு சாப்பிட வராமல் போகவும் ஊருக்கு போனதாக முடிவெடுத்து கொண்டார்கள்.    நைனிகாவுக்கும் ‘என்ன…

Read More

அலப்பறை கல்யாணம்-6

அத்தியாயம்-6   தமிழரசனுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது.   நமக்கு கல்யாண கனவு வருதுன்னு பார்த்தா, என்னவோ என்னை சுத்தி…

Read More

இருளில் ஒளியானவன்-9

இருளில் ஒளியானவன் 9 நண்பர்கள் இருவருக்குமே வைஷ்ணவியை மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் இருந்தது.கேசவன் தன் மகன்…

Read More

புதுக்காவியம் அரங்கேறுது-1

ஹாய் பிரண்ட்ஸ் புதுக் காவியம் அரங்கேறுது.. எனது இரண்டாவது கதை. சில காரணத்தினால் எனது போட்டிக் கதையான தொடுவானமாய் உனை…

Read More

மனமெனும் ஊஞ்சல்-3

அத்தியாயம்-3    நிரஞ்சனுக்கு கடையிலிருந்து காபி கொண்டு வந்து கொடுத்த ராஜப்பன், “அப்பாவிடம் இலக்கியா இறப்பை சொல்லிட்டிங்களா? என்ன சொன்னார்….

Read More

மகிழ்ந்திரு-5

அத்தியாயம் 5 மகிழுந்துவின் மேல் சாய்ந்து நின்றபடி, கைப்பேசித் திரையில் மணியைப் பார்த்தான் மகிழ். அது நள்ளிரவு ஒன்று எனக்…

Read More