Welcome
praveenathangarajnovels.com தளத்தில் கதைகளை வாசிக்க, எழுத்தாளர்களை எழுதவும் அன்போடு வரவேற்கின்றேன்.
பிரவீணா தங்கராஜ் என்று, நாவல் எழுத்தாளராக அடையாளப்படுத்தி கொள்ளும் நான் சென்னையில் வசிப்பவள். சிறு வயதில் தங்கமலர், சிறுவர்மலர், கல்கண்டு இதழ் என்று புத்தகம் வாசிக்கும் எனது பயணம், இதோ தொடர்ந்து கொண்டே வந்து நாவல் எழுத்தாளராக உங்களுக்கு அறிமுகமாகின்றேன்.
நம் வாழ்வில் சின்ன சின்ன நிகழ்வுகளை சுவைப்பட எழுதி வைப்பதற்கு டைரி தேவைப்படும். அப்படி ஆரம்பித்து எழுத பழகியதே என் எழுத்தின் ஆரம்பம்.
கல்லூரியில் விளையாட்டாய் கவிதையை கிறுக்கி தோழிகளிடம் காட்டிய பொழுது எனது முதல் கிறுக்கல்கள் ஆரம்பமானது. சின்ன சின்னதாய் வாழ்க்கையில் என்னோடு கலந்தவையை கவிதை மூலம் இயற்றி இரண்டாம் கட்டத்திற்கு வந்தேன். அதனை வீட்டில் என் அத்தை(அப்பாவின் அக்கா) மாமா(கல்லூரி பிரின்சிபால் பதவியில் இருந்தவர்) இருவரிடமும் காட்டிய அன்று ‘பொண்ணு நீ என்னை உனக்கு கவிதை எழுத வரும் நீ இன்னமும் நிறைய எழுது என்று தட்டி கொடுத்து பிழை களைந்து பாராட்டினார்கள். இதுவே என் முதல் ஊக்கம். அதன் பின் மனதில் ரசித்தவை எழுத்தில் வடித்தேன். சமூகத்தின் மீது எழும் கோபத்தையும், இயற்கையை ரசிப்பதையும், எழுத, அடுத்து அத்தியாயமாக காதலையும் எழுத வைத்து கவிதை வடித்தேன். மங்கையர் மலர் ராணிமுத்து கல்லூரிமலர் என்று மூன்று புத்தகத்திலும் வரிசையாக கவிதை வெளிவந்தது. என் எழுத்துக்கு அது அஸ்திவாரம்.
கவிதை கொஞ்சம் எட்டி வைத்து, பொழுது போகவேண்டுமென்று கதை படிக்க ஆரம்பித்தேன். புத்தகப் ப்ரியையான என்னை, கவிதை மட்டுமா? கதையும் எழுது என்ற மனசாட்சியின் தூண்டுதலில் எழுத துவங்கியது. நாம் நம் வாழ்வில் பொதுவெளியில், விழாக்களில், நல்லது கெட்டது நிகழ்ச்சியில் என்று பல அனுபவத்தினை உள்வாங்கி, வாழ்வின் பிரச்சனைகளையும், தீர்வாக மாற்றி, நாயகன் நாயகியாய் உருவகித்து பிரச்சனையை அவர்களுக்குள் ஏற்றி, அதற்கு தீர்வும் கொடுத்து நாமும் ஒரு பிரம்மனாய் கதாபாத்திரத்தின் மீது தலையெழுத்தாக எழுதி அவர்களை கதை மாந்தர்களாக நடமாட வைப்பதே ஒரு அலாதி மகிழ்ச்சி. அப்படிப்பட்ட அலாதியை விரும்பி நாவல்களை படைக்க ஆரம்பித்து இதோ வாசகர்களான உங்கள் முன் நாவல் எழுத்தாளராக மாறியுள்ளேன். அதன் பயணம் இதோ இப்பொழுது praveenathangarajnovels.com என்ற தளம் அமைப்பதிலும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இதற்கு முன் எழுதிய 70 கதைளில் பாதி அச்சு புத்தகமாகவும் மற்றும் அமேசானில் இ-புத்தகமாக காபிரைட் செய்யப்பட்டுள்ளது. அதில் காதல் குடும்பம், உறவு, நட்பு, பெண்களை முன்னிறுத்தி மையமாகவும், திகில் நகைச்சுவை மற்றும் சமூகம் சார்ந்த கதைகள் அடங்கியன.
எனது கதைகளின் பட்டியலும், சுட்டிகளும் அறிந்திட praveenathangarajnovels.com என்ற தளத்தில் காணலாம். மேலும் ராணி முத்து நாளிதழில் *பிரம்மனின் கிறுக்கல்கள்* என்ற நாவல், ஜூன் 16, 2022 வெளியாகி உலகத்திற்கு என்னை அடையாளப்படுத்தியது. அதற்கு முன்பிருந்தே என் நாவலை தொடர்ந்து பதிப்பிக்கும் ஸ்ரீ பதிப்பகத்தினருக்கும் உஷா மேம் லதா மேம் இருவருக்கும் எனது நன்றிகளும் பேரன்பும்.
மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 5
மெய்யரசன் போன் பேசி முடிக்கவும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரவும் சரியாக இருந்தது. அவர்களைப் பார்த்தவருக்கோ ஒரு நிமிடம் என்ன செய்வது…
மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 4
“டேய் கண்ணா…. இது என்னோட அக்கா… நாளைக்கு நீங்க எங்க வீட்டுக்கு தான் பொண்ணு பார்க்க வர போறீங்க” என்று…
சித்தி – 10
ஜீவானந்த் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது வாசலில் சத்தம் கேட்டதும் பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு வெளியே வந்து பார்க்க,…
தேன்மொழி பேசும் பைங்கிளியாள் 51
நீண்ட நாட்கள் என்ன வருடங்களே கடந்து விட்டது மீண்டும் அந்த அறைக்குள் அவன் மனைவியாக நுழைகிறாள் பெண்ணவள் ஆனால் இந்த…
என் சுவாசம் உன் வாசமாய் – 3
அத்தியாயம் 3 அறைக்குள் நுழைந்தவனுக்கு அடக்க முடியாத கோபம். ‘எவ்வளவு திமிர் அவளுக்கு? பிள்ளையைத் தூக்கிட்டுப் போவாளாம்? யார் பிள்ளைய…
என் சுவாசம் உன் வாசமாய்-2
அத்தியாயம் – 2 அனைவரையும் இந்திரஜித் முறைக்க எல்லோரும் சொல்லாமல் கொள்ளாமல் இடத்தைக் காலி செய்தனர். தன் தாயை முறைத்தவன்,…