Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-5

ஐயங்காரு வீட்டு அழகே-5

அத்தியாயம்-5
     
     இன்று அலுவலகம் வரும் பொழுது அங்கே ஏற்கனவே ராவணன் அவனது இடத்தில் அமர்ந்திருந்தான்.

Thank you for reading this post, don't forget to subscribe!

   ‘இன்னிக்காவது முகத்தை திருப்பாம பேசிக்கணும்’ என்று “ஹாய் குட்மார்னிங்” என்று அவளே கூற, “குட்மார்னிங்” என்று புன்னகைக்க, “நேத்து எங்காத்துக்கு போன் போட்டேன். பாட்டியிடம் உங்களை பத்தி சொன்னேன். உங்களை விசாரிச்சா” என்றதும் ராவணன் “மீடூ. அம்மாவுக்கு போன் பண்ணினேன் அம்மாவும் உன்னை பத்தி விசாரிச்சாங்க.” என்றான்.‌
 
   இருவரின் பேச்சும் இயல்பாய் வந்தது. ராவணனுக்கு அதில் நிம்மதி படர்ந்தது எனலாம்.
   அலுவலகத்தில் மற்றவர்களும் வந்து சேர, வேலைகள் தொடர்ந்தது.

   முதல் நாள் போல் இல்லாமல் வேலையில் நிஜமாகவே நுணுக்கத்தை கற்றுக் கொடுத்து, எளிதாக தங்கள் புது பிராஜக்டை செய்ய வழிநடத்தினான் ராவணன். அந்தவகையில் வேலையில் கில்லாடியென அசரடித்தான்.

  ரோஸ்லின் மதியம் சாப்பிட அமர்ந்த பொழுது, “பார்க்க நல்லா அம்சமா, அழகா அறிவாயிருக்கான். இன்னமும் கல்யாணமாகலை. வேலையெல்லாம் நல்லா செய்யறான். லவ் ஏதாவது இருக்கா காருண்யா. உன் பக்கத்து வீட்டு பையன் தானே. உனக்கு தெரியாம இருக்குமா?” என்று ராவணனை பற்றி அறிய கேட்டாள்.

“அவா எங்காத்துக்கு பக்கத்து வீடு என்றச்ச, நேக்கு எல்லாம் தெரியும்னு அர்த்தமில்லை ரோஸ்லின். பெங்களூர்ல வேலை செய்தவா. எத்தனை காதல் இருக்குமோ. நேக்கு தெரியாதுடிம்மா. தோற்றத்தை வச்சி மத்தவாள எடைப்போடாத” என்றாள் காருண்யா.

   “பச் பார்த்துக்கறேன். வேற ஏதாவது ஊர்ல லவ் இருந்துச்சா அதை மட்டும் சொல்லுடி” என்று ரோஸ்லின் அலைபாயும் மனதோடு கேட்டாள்‌.

  காருண்யா சிறிது நேரம் யோசித்து பார்த்தாள். ராவணன் சிறுவயது முதல் ஊரில் இருந்தவரை பெண்களோடு பழகியது என்றால் தன்னிடம் மட்டுமே என்று புரிய, அதை அப்படியே உரைத்தாள்.‌

”அட உன்னை தவிர யாரிடமும் பழகியது இல்லையா. உன்னோட லவ்வுனு இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்ப அப்படின்னா..‌ ஐ ஜாலி பையன் கமிட்டெட் இல்லை‌” என்று சந்தோஷப்பட்டாள்.

  காருண்யாவுக்கு எங்காவது முட்டிக்கொள்ளலாம் என்பது போல இருந்தது.

   “பெங்களூர்ல வேலைக்கு போயிட்டான். நேக்கு தெரிந்து ஐந்தாறு வருஷம் அங்க தான் சுத்திண்டு இருந்திருப்பான். குட்டி குட்டி பாவாடை, டெனிம் ஜீன்ஸ் எல்லாம் சாதாரணமா போடறவா ஊரு. ராவணன் அங்க எந்த பொண்ணிடமாவது மயங்கியிருக்கலாம். உன் வாட்டர் பால்ஸை லாக் பண்ணிட்டு, நோக்கு அவனை அந்தளவு பிடிச்சிருந்தா அவனிடம் நேரிடையா கேட்டுக்கறது நல்லது.” என்று கூறிவிட்டு தயிர்சாதத்தை விழுங்கினாள்.

  ராவணன் உணவை எடுத்து வந்து இவர்கள் முன் அமர்ந்தான்.

  “ஹே… எல்லாம் ரவுண்ட் டேபிளில் உட்காரலாமே. ஏன் நீங்க இரண்டு பேர் மட்டும் தனியா?” என்று வந்தான்.
   
    “ஆக்சுவலி அப்படி தான் சாப்பிடுவோம். பட் ஷாலினி இன்னிக்கு பிஷ் ப்ரை கொண்டு வந்திருக்கா” என்றதும், “ஓ ரியலி… அச்சோ அப்ப ஒரு பீஸ் ஆட்டைய போட்டுட வேண்டியது தான்” என்றவனை காருண்யா முறைக்க, ரோஸ்லினோ “ராவணன் காருண்யா யாராவது நான்வெஜ் கொண்டாந்தா அவ தனியா வந்து சாப்பிடுவா. சரி கம்பெனி கொடுக்கலாம்னு நானும் வந்துட்டேன்.” என்றதும் ராவணன் “ஓ”  என்றான்.‌

  காருண்யா ராவணனை கண்டு “நீங்க வேணும்னா அவாளோட சேர்ந்து சாப்பிடுங்கோ. நீங்க வர்றச்ச கூப்பிட்டு பேசினாளே” என்று அவனை இவ்விடம் விட்டு விரட்டவே பெரிய மனதாய் கூறினாள்.

  “இட்ஸ் ஓகே… ஷாலினியோட இன்னமும் நான் அந்தளவு பழகலை. பழகியப்பின் பார்த்துக்றேன்.” என்று காருண்யாவையே பார்த்தான். எனக்கு மீன் வறுவல் பிடிக்கும்னு நினைவு வச்சியிருக்காளே என்று எண்ணி கொண்டான்.
 
  ரோஸ்லின் ”இதுவும் வறுவல் தான் சாப்பிடுங்க” என்று உருளைக்கிழங்கு வறுவலை நீட்ட, எடுத்துக் கொண்டான்.

  தயிரும் அதற்கு உருளை கிழங்கு வறுவலும் கூடவே மாங்காய் ஊறுகாய் என காருண்யா சாப்பிட அதையும் பார்த்தான். ஊறுகாய் மட்டும் குட்டியாக பாக்ஸை வைத்து எடுத்து வந்திருந்தாள். அது வீட்டு உபயோகமென சொல்லாமலே தெரிந்தது.

  “ஏன் காருண்யா… பாட்டி செய்து கொடுத்த ஊறுகாயா?” என்று கேட்க, ”ம்ம். பொடியும் ஊறுகாயும் நிறைய கொடுத்து விட்டிருக்கா. நான் சனி ஞாயிறு மட்டும் தான் சமைப்பேன்.” என்று உபரி தகவலை தரவும், “ஏய்… ஒரு நாள் உன் கையால குக் பண்ணி கொண்டு வா. டேஸ்ட் பண்ணி பார்க்கணும்” என்று தன் பால்ய சிநேகிதி சமைப்பதால் உரிமையாக, கோரிக்கை வைக்க, சம்மதமாய் தலையாட்டினாள்.

  மீண்டும் பழையபடி வேலைகள் துவங்கியது. மாலை ஸ்கூட்டியில் கிளம்பும் நேரம், “நேத்தே சொல்லணும்னு நினைச்சேன். காஞ்சிபுரத்துல சந்து பொந்துல சைக்கிள் ஓட்ட அப்படி பயந்த. இங்க சென்னையில் நல்லாவே வண்டி ஓட்டற.” என்று பாராட்டினான்.

    காருண்யாவோ முதலில் பஸ்ஸில் பயணம் செய்தாள். ஆள் ஆளுக்கு இடிக்க, அவளால் எவ்வாறு பஸ்ஸில் பயணிக்க என்று தள்ளாடிவிட்டாள். காஞ்சிபுரத்தில் தந்தையின் வண்டியில் மட்டுமே எங்கும் செல்வாள். பஸ் பயணம் எல்லாம் செல்வது அபூர்வம்.
  அடுத்து ஆட்டோவில் முயற்சிக்க, தொடர்ந்து அவளிருந்த ஆட்டோ ஸ்டான்டில் ஏறுவாள், அங்கொருவன் காதலென்று பேச்செடுத்து பின்னாடியே தொல்லை புரிய, வீட்டில் சொன்னால் பாட்டி ‘வேலை பார்த்தது போதுமென்று’ கூறிவிடுவாரென, ஸ்கூட்டியை வாங்கும் முடிவில் இருந்தாள். பஸ் ஆட்டோ கற்றுத்தந்த பாடமோ என்னவோ ரோட்டில் கல்லில் இடறி விழுந்தாலும், முட்டி மோதினாலும் தனித்து ஸ்கூட்டியிலேயே செல்ல கற்றுக் கொண்டாள். முதலில் எல்லாம் அத்தனை பயம் இருந்தது. இப்பொழுது பழகிக் கொண்டாள். அதை சொன்னால் ராவணன் எள்ளலாக பார்த்தாலும் பார்ப்பானென புன்னகை தான் பதிலாக தந்தாள்.

“எனக்கு நல்லா நினைவிருக்கு. எங்க மாடில நின்று தெருவை வேடிக்கை பார்த்தப்ப, பக்கத்து சந்துல பூனை குறுக்க போனதுல, சைக்கிளை அது மேல மோதாம வேற பக்கம் திருப்பி, கல்லுல ஸ்கிட்டாகி, கீழே விழுந்து, ரத்தம் சொட்ட சொட்ட, பாவாடையை முட்டி வரை தூக்கிட்டு அழுதுட்டே ‘பாட்டி’ன்னு வந்த. ஏய்.. தழும்பு ஏதாவது இருக்கா?” என்று கேட்க, அவனை விழிவிரித்து திகைத்து பார்த்து, ‘இல்லை’ என்பதாய் தலையாட்டினாள்.

“நீ விழுந்த வேகத்துக்கும் ரத்தம் சொட்டியதுக்கும், வீர தழும்பு வந்திருக்கணுமே” என்றதும் “அது பாட்டி மருந்து வச்சி கட்டியதும் சரியாகிடுச்சு” என்றவள் நான் புறப்படறேன்” என்று சென்றாள்.

  அவள் சற்று தயக்கமாகவே பழக பெரிதாக யோசிக்கவில்லை. பெண்கள் பள்ளிக்கூடம் மாறியப்பின் அவள் தோழிகள் வட்டம் என்றதிலேயே பழகி, காஞ்சிப்புரத்திலேயே தன்னை தவிர்த்தால் இந்த பட்டும் படாமலும் பழகும் பழக்கம் வித்தியாசமில்லை.
 
   கேப் புக் செய்து வீட்டுக்கு சென்றான் ராவணன்.

   காருண்யா ஸ்கூட்டியில் வரும்பொழுது, இவன் நம்மளை சைக்கிளில் விழுந்து வாறியதை மாடிலயிருந்து பார்த்துயிருக்கான். நான் தான் யாரும் பார்க்கலைன்னு பாவாடையை முட்டிவரை தூக்கிட்டு அபிஷ்டு கணக்கா தெருவுல நடந்து வந்திருக்கேன்.’ என்றவள் மெஸ்ஸிற்கு வந்து குளித்து உடைமாற்றினாள்.

  ராகவி வராததால் நைட்டி அணிந்தவள் கதவை மூடிவிட்டு, முட்டிவரை தூக்கி காலை பார்க்க, அன்று விழுந்து வாறிய விழுப்புண் வீர தழும்பாய் காட்சியளித்தது.

   எத்தனை முறை பாட்டியிடம் ‘இந்த தழும்பு மறையாதா பாட்டி’ என்று அந்த வயதில் கேட்டு கவலைப்பட்டது.
   ‘தான் விழுந்து வாறியதை எல்லாம் நினைவு வைத்திருக்கின்றானே’ என்று எண்ண, ‘தட்தட்’ என்ற சத்தத்தில் திடுக்கிட்டு திரும்ப, கதவை யாரோ தட்டுவது கேட்டது.

  “ராகவி… கதவை திறடி” என்று தட்ட அது இந்து குரல்
என்று கதவை திறந்தாள்.

  “நீயா… எப்பவும் கதவை பூட்ட மாட்டியே” என்று கேட்க, பாத்ரூம்ல இருந்தேன் அதனால கதவை தாழ்பாள் போட்டேன்” என்று பதில் தந்தாள்.

  இந்துவோடு அதிகம் பேசுவது இல்லை என்றதால் ராவணன் பற்றிய நினைப்பை தள்ளி வைத்து தன் உடைகளை மடித்து வைத்தாள்.
 
  இந்து தன் காதலனோடு கடலை வறுக்க, போனில் மூழ்கினாள்.

காருண்யா அவளது வேலையில் மூழ்க ராகவி வரவும், அவளுடன் சிறிது நேரம் பேசிவிட்டு, தந்தைக்கு அழைத்தாள்.

  சீனிவாசன் மகளிடம் நலத்தை அறிந்துக் கொண்டு, அவருமே ராவணனை விசாரித்தார்.

   “அம்மா சொன்னா… ராவணன் உன் ஆபிஸ்ல வேலை பார்ப்பதா. தெரிஞ்சவா முன்ன கூடயிருந்தா ஒரு திருப்தி சப்போர்ட் கிடைக்கும். இப்ப நீ உத்தியோகத்தை விட்டு விலகற நேரம் தெரிஞ்சவா இருக்கா. இந்த பகவனை என்ன சொல்லறது” என்றார்.‌

  காருண்யாவிற்கு திடுக்கிட்டு, “ஏன்ப்பா… உத்தியோகத்தை விட்டு விலகப்போறேன்” என்று கேட்டாள்.

  “அசடாட்டும் பேசறியேம்மா. நீ தானே சொன்ன. விவாஹம் ஆகறச்ச உத்தியோகத்தை விட்டு விலகிடுவேன்னு.” என்று நினைவுப்படுத்தினார்.‌

  “அது விவாஹம் ஆகறப்ப தானே?” என்று பேச, “அப்பா நோக்கு வரன் பார்த்தை பாட்டி செல்லலையோ?” என்று கேட்க, “சொன்னாளே” என்றாள்.

   “ஆஹ் அவா தான். ஹரிஹரன் வீட்டில் எல்லாம் பேசிட்டோம். அவாளும் உன்னை போட்டோவுல பார்த்துட்டா. மாப்பிள்ளையாற பிள்ளையாண்ட மட்டும் நேர்ல பார்க்க வர்றேன்னு சொன்னார். ஆனா அவசரமா அப்ராட் போகறார். வந்து உன்னை பார்த்துட்டா, கூடிய விரைவில் விவாஹம் வச்சிடலாம்னு யோசனை.‌ உன் பாட்டிக்கு அடிக்கடி மேலுக்கு முடியலை. சதா சர்வ நேரமும், கால் வலி முதுகுவலியில பிராணம் போகுதுன்னு புலம்பறா. நோக்கு விவாஹம் செய்து வைக்காம பகவான் கூப்பிட்டுக்குவாரோனா பயப்படறா. அதோட நேக்கு உன்னை மணக்கோலத்தில் பார்க்க ஆசை.  உன் அழகுக்கும் அறிவுக்கும் சட்டுனு முடிவாக வாய்ப்பிருக்கு. எல்லாத்துக்கும் தயாராயிருக்கணும்” என்று கூற, தந்தையின் பேச்சில் புதிதாக குடிவந்த வெட்கத்தில், “போங்கப்பா… நேக்கு வெட்கமா இருக்கு. விவாஹத்துக்கு நீங்க நல்லவரா பார்த்து முடிவெடுக்கற போறேள். நான் அதுவரை வேலைக்கு போறேனே.” என்று கூற, “சரிம்மா உடம்பை பார்த்துக்கோ” என்று பதில் தந்தார்.

  தந்தை விவாஹத்தை பற்றி பேசியதும் இயல்பான நாணம் வந்து குடிப்புகுந்து விட்டது. 
   மடிசார் அணிந்து தந்தை மடியில் விவாஹம் நடைபெறுவது போல எண்ணியவளுக்குள் கன்னங்கள் இரண்டும் சிவந்து போனது. தந்தை பார்த்த ஹரிஹரன் என்ற பெயரை உச்சரித்தாள். ஏற்கனவே காருண்யா நல்ல எலுமிச்சை நிறம். வெட்கப்பட்டதால் தக்காளி போல கன்னங்கள் சிவந்தது. மஞ்சள் நிறத்தில் கன்ங்கள் மட்டும் செம்மையுற்றது.

   ராகவி எட்டி பார்த்து “என்னாச்சு? புதுசா வந்தவன்ல யாராவது காதலிக்கறேன்னு சொல்லிட்டானா என்ன? முகம் சிவக்கு” என்று கேட்டதும் தான் தாமதம்.

“அபிஷ்டு மாதிரி பேசாத ராகவி” என்று கோபமாக, “ஏய் அதான்பா.. உன் சைல்ட்வுட் பிரெண்ட் ராவணன் பிரப்போஸ் பண்ணிட்டாரா” என்றதும், “பல்லை உடைப்பேன். இப்படி பேசிண்டு இருந்தேள்னா… நேக்கு என் தோப்பனார் நேக்கு விவாஹம் செய்ய மாப்பிள்ளை பார்க்கறதா சொல்லிண்டு இருந்தாளே. அது முடிவாகற மாதிரி இருக்குன்னு சொன்னார். அதை நினைச்சி சிரிச்சேன். ராவணனை எல்லாம் காதலிக்கலை.
   மத்தவா எல்லாம் காதலிக்கறேன்னு சொல்லற அளவுக்கு நான் இடம் கொடுக்கவும் மாட்டேன்.” என்று மெஸ்ஸிற்கு நடையிட்டாள்.

“இப்ப நான் என்ன சொன்னேன்? இங்கிருந்ததிலருந்து இப்ப தான் தனியா சிரிச்சா. புதுசா தெரிந்தது. அதனால் காரணம் அவ சைல்வுட் பிரெண்டா இருக்குமோனு நினைச்சேன். பாரு இந்து” என்று அவளிடம் கூற, “என்னைக்கும் கதவை மூட மாட்டா. இன்னிக்கு கதவை மூடியிருந்தா. நான் கூட வித்தியாசமா இருக்காளேனு கேட்க நினைச்சேன். உனக்கே தெரியும் வந்த புதுசுல நான் ஆண் வாய்ஸா இருக்கு உன் லவ்வரா கேட்டதுக்கு வெடுக்குன்னு நீ தான் லவ் பண்ணுவ. நான் என் தோப்பனார் கூட பேசிட்டு இருக்கேன். அவர் பார்க்கற ஆம்பளையாண்டளை தான் கட்டின்பேன்’ ஒரு தடவை கோபமா பேசினா பாரு, அதுலயிருந்து பெர்சனலை பத்தி அவளிடம் பேசறதில்லை.” என்று தோளைக்குலுக்கினாள்.

  ராகவிக்கு பெரிதாக காருண்யாவின் செய்கைகள் வித்தியாசமாக இல்லை.
  ஆனால் அவள் சொல்லியதில் காருண்யா மனமோ, ஏதோ தன் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படுவதாக தோன்றியது. ஒரு வேளை கல்யாண கனவுகளில் மூழ்கியதால் மாற்றம் ஏற்படலாமென்று எண்ணினாள்.

-தொடரும்.
  -பிரவீணா தங்கராஜ்

7 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-5”

  1. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 5)

    அதெல்லாம் வந்தாச்சு, வந்தாச்சு.. எப்பவோ இதயத்துக்குள் ராவணா வந்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தாச்சு. இனி நீயே தள்ளி வைக்க நினைச்சாலும் தள்ளிப் போக முடியாது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    alaga appa partha mappilaiya kattika ready ah iruka yen ippadi rendu perum ravana va vachi pesringa ava hariharan sonna pera vachi ninachi pathu sirichitu iruka inum ravanaa ulla varala just friend ah tha ninaikura ava chinnathula nadantha vishayatha avan sonnathum yosikura thats all

  3. கல்யாணத்துல எதுவும் பிரச்சினை வருமோ!??… மாப்பிள்ளையை பார்க்க நாங்களும் வெயிட்டிங் கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *