Skip to content
Home » ஐயங்கார் வீட்டு அழகே-14

ஐயங்கார் வீட்டு அழகே-14

அத்தியாயம்-14

Thank you for reading this post, don't forget to subscribe!

ராவணன் பேட்சுலர் பார்ட்டி கொடுத்துவிட்டு வருவதால் சென்னையில் சுற்றிக் கொண்டிருந்தான்.

  காருண்யா காஞ்சிபுரம் சென்றதாக குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினாள்.

  அடுத்து ஒரு வாரம் காருண்யா இல்லாத இருப்பிடத்தில், ராவணன் எதையோ இழந்தவனாக வெறித்தான்.
 
  “என்ன ஐயர் மாப்பிள்ளை கல்யாண பொண்ணை தேடறிங்களா?” என்று ஜெயந்த் கேட்க, “நோநோ.” என்றான் ராவணன். “அதான் முகத்தில் வழியுதே” என்று கேலிக்கையாக சென்றார்கள்.

  பேட்சுலர் பார்ட்டியையும் வீட்டில் தான் கொண்டாடினான். தனக்கொரு அறையும், தன் தாய்தந்தை வந்தால் தங்க ஒரு அறையும் என்று பார்த்து வாடகைக்கு பிடித்திருத்த வீடு என்பதால் பேட்சுலர் பார்ட்டி கொண்டாட உரிமையாளரிடம் அனுமதி வாங்கி ஜமாய்த்தான்.

திருமணத்திற்கு இரண்டு நாள் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தான். என்ன தான் ராவணன் வேறு பிரிவினன் என்றாலும் சீனிவாசன் மகளுக்காக யோசித்து ராவணனை மாப்பிள்ளையாக ஏற்க விரும்பினார்.‌
   ஆனாலும் தமிழ் பிராமண திருமண முறைபடி திருமணம் நடைப்பெற கோரிக்கை வைத்தார். சிவராமனுக்கு திருமணம் என்பது அவர்கள் முறைப்படி இருக்கட்டுமென விட்டுவிட்டார். பழங்கால மரபுகள் கொண்ட விழாவாக காண சிவராமனுக்கும் ரோகிணிக்கும் ஆர்வம் இருக்கும். ராவணனுக்கு…? அவனோ ‘என்னது நாமம் போடணுமா? நெவர், என்னால சட்டை இல்லாம எல்லார் முன்னாடி நிற்க முடியாது. தாடிலாம் எடுக்க மாட்டேன்’ என்று பிடிவாதம் செய்தான்.
  அப்படியிப்படி பேசி ரோகினி தாடி மட்டும் இருக்கட்டு, சட்டை கொஞ்ச நேரம் போடாம இரு. அந்த நாமத்தை போட்டுக்கோ’ என்று சம்மதிக்க வைத்திருந்தனர்.

திருமணம் என்பது இரண்டு மனமும், இரு குடும்பங்களின் சங்கமம். காருண்யாவும், ராவணனும் திருமணம் செய்து கொள்ளும் இந்நிகழ்வே சாட்சி. ஆனால் இரண்டு குடும்பம் சங்கமம் ஆகின்றது. ஆனால் இரண்டு மனம்? அது இன்னமும் பெரிய வினாவை ஏந்தியே நிற்கிறது.

பொதுவான ஐயங்கார் திருமணம் பின்வரும் நிகழ்வுகளால் நடைப்பெறும்.
மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்ளுதல். முன்பே கூறியதால் ரோகிணி தான் பரிசு வாங்கியிருந்தார். அதை தான் காருண்யாவுக்கு ராவணன் தந்தான். அதை பிரித்து பார்க்கும் ஆசையோ அவளுக்கு இல்லை.

  ஒரு நாள் முன்னரே பந்தாக்கால் நட்டியிருந்தனர். அதனால் இரு வீட்டிற்கு முன்னும் வாழையும் பந்தக்காலும் ஊன்றியிருந்தது.

காருண்யா- ராவணன் திருமணத்தின் தொடக்கமாக வண்ணமயமான மெஹ்னி கார்னிவல் அமைந்திருந்தது. இந்த நிகழ்வு மண்டபத்தில் உள்ள பசுமையான செயற்கை புல்வெளியில் நடைபெற்றது. அலுவலக ஆட்கள் எல்லாம் வந்திருந்தனர். அவர்களை தனியாக லாட்ஜில் தங்க வைக்கும் பொறுப்பெல்லாம் ராவணன் ஏற்றிருந்தான்.

   சாரதா ராகவி இந்து மூவர் மட்டும் திருமணத்திற்கு நேராக வந்திறங்கினார்கள்.

விழாவின் உற்சாகமான மனநிலை அரங்கத்தின் அற்புதமான அலங்காரத்தால் மேம்படுத்தப்பட்டது என்றால் அலுவலக நண்பர்களின் கேலி கிண்டலில் இயல்பாகவே புன்னகை முகமாக இருவரும் மாறினார்கள்
புதிய பூக்கள், அலங்கரிக்கப்பட்ட குடைகள் மற்றும் பிற வண்ணமயமான குஞ்சம் பூசப்பட்ட முட்டுகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட அவ்விடம் மற்றவர்களுக்கு ரசிக்குபடி இருந்தது.

மெஹந்தி திருவிழாவில் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்பதைக் காண்பது மகிழ்ச்சியாக இருந்தது. நிகழ்ச்சியின் நாயகி மட்டும் முகம் உம்மென்று இருந்தாள். அவளையும் ரோஸ்லின் ராகவி ஷாலினி இந்து என்று சிநேகிதிகள் பட்டாளம் சூழ்ந்து கேலி செய்து இடத்தை கலகலப்பாக மாற்றினார்கள்

மணமகன் ராவணன் சிவப்பு நிற பார்டர் கூடிய வெள்ளை பட்டு வேட்டியை அணிந்திருந்தார். அது கூட காருண்யா தந்தை அவர்கள் வழக்கப்படி கட்ட உதவினார்.
  ராவணனுக்கு அசௌகரியமாக இருந்தது. மாமனார் அவர் தனக்கு உடையுடுத்த உதவினால் அப்படி தானே?!
மணமகள் காருண்யா தனது பாரம்பரிய அலங்காரத்தில் திருமண சடங்குகளுக்காக காருண்யா தனது உடையை மாற்றி வந்தாள். அவள் ஒன்பது கெஜம் நீளமுள்ள ஒரு அற்புதமான சிவப்பு சேலையை அணிந்திருந்தாள், அதில் நுணுக்கமான வடிவங்கள் இருந்தன, அது அவளது அழகை பல மடங்கு மேம்படுத்தியது.

முக்கிய திருமண விழாவான, பாரம்பரியத்தின் படி மணமகன் காசிக்குச் செல்வதாக கூறி நடக்க சொல்ல, பின்னாலே சீனிவாசன் வந்து குடையோடு, தடுத்து நிறுத்தி என் மகளை மணந்துக் கொள்ளுங்கள் என்பது மூலம் தொடங்கியது.
  ‘இவங்களே போக சொல்லிட்டு இவங்களே கூப்பிடறாங்க, கடவுளே’ என்று எண்ணினாலும், நண்பர்கள் கேலி செய்தபடி இருக்க, அதுவும் ஒரு விதமாக மனதோடு ரசித்தான்.

காருண்யாவை திருமணம் செய்து கொள்ள ராவணன் முழுதாய் சம்மதித்தான். இந்த சடங்கைத் தொடர்ந்து மாலை அணிவிக்கும் விழா நடைபெற்றது. மணமக்களை இரு குடும்பத்தின் பெரியவர்கள் வரவேற்ற பிறகு, சடங்குகள் மாலை மாற்றத்துடன் தொடங்கின. தம்பதியினரை தோள் வளையில் இருவீட்டாரின் சுற்றமும் தூக்கினார்கள்
மேலும் குடும்பத்தினரும் நண்பர்களும் மணமகனையும் முன்னும் பின்னுமாக இழுத்து மாலை அணிவிப்பதைக் கண்டு அவ்விடத்தில் சிரிப்பு வெடித்தது. அது மிகவும் வேடிக்கையாக இருந்தது. அங்கே அமிர்தம் போல பழமையில் ஊறிய மாமிகள் பலரும் அந்த வேடிக்கையை கூடுதலாகவே விரும்பினார்கள். கூடுதலாக அவர்களது மணநாளை மனதிற்குள் நினைத்து பார்த்திருப்பார்கள்.
   மணமக்கள் ஒருவருக்கொருவர் மூன்று முறை மாலை அணிவித்தனர்.

இதன் விளைவாக நிறைய வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியான நிகழ்வாக மனதில் பதிய வேண்டும். ஆனால் காருண்யா முகம், லேசான புன்னகையை ராவணன் காண ஏதோ கட்டாயப்படுத்தி நிற்க வைத்தது போல தோன்றியதில் அவனுமே ஏதோ புன்னகையை கடமைக்கு வழங்கினான். அப்படி இருந்தும் மற்றவர்கள் மத்தியில் வேறுபாடு தெரியவில்லை. 

ஊஞ்சல் விழாவிற்கான நேரம் வந்தது. விழாவிற்காக அழகாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்திருந்த ஜோடி மிகவும் அழகாகத் தெரிந்தனர். என்ன அவள் பக்கத்தில் இடித்துக் கொண்டு அமரும் தன் நிலையில் ராவணன் கொஞ்சம் அதிருப்பதி அடைந்தான்.

அடுத்து, பிராமண திருமண சடங்குகளில் மிகவும் புனிதமானது கன்னிகா தானம் தான். இந்த சடங்கு இரண்டு பேரை ஒன்றாக இணைப்பதாகக் கூறப்படுகிறது. இனிப்பும் கசப்பும் என்று இரு உணர்வுகளின் அழகான கலவையான ஒரு பாரம்பரியமாகும், இதில் மணமகளின் தந்தை மணமகனிடம் தனது கையை கொடுப்பார். 

காருண்யா அழகான மணமகளாக, மரபுகளைப் பின்பற்றி, தனது தந்தை சீனிவாசன் மடியில் அமர்ந்தாள். ராவணன் காருண்யா கழுத்தில் மங்கள சூத்திரத்தைக் கட்டினான்.
அம்மி மிதித்து அவள் பொற்பாதத்தில் மெட்டியை பூட்டினான். இதில் வானத்தை பார்த்து கண்ணுக்கு தெரியாத அருந்ததி நட்சத்திரத்தை கண்டீரா என்று ஐயர் கேட்க, இதெல்லாம் ஏற்கனவே அறிந்ததால் “ஆஹ்.. அருந்ததி சந்திரமுகி, பொம்மாயி’ எல்லாம் தெரியறாங்க” என்றான் கேலியாக.
  ரோகிணியோ, “ராவணா” என்றதும், “அருந்ததியை பார்த்துட்டேன்னு சொன்னேன் அம்மா” என்றான்.
   அனைவரும் காண இது ஒரு அழகான தருணம். திருமணத்தின் மற்ற அனைத்து சடங்குகளையும் தம்பதியினர் முகத்தில் ஓரளவு புன்னகையுடன் முடித்தனர்.

காருண்யா பட்டுச் சேலையில் பிரகாசமாகத் தெரிந்தாலும், ராவணன்  நாமம் அணிந்த, பஞ்சகஜம் வேஷ்டி அணிந்த ஐயங்கார் மணமகனைப் போல தெரிந்தான். 

தாலி முடிந்தவுடன் காருண்யா கண்களும் அவள் பாட்டியின் கண்களும் ஈரமானது. ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். அது மிகவும் இதயப்பூர்வமான தாக்கியது. இவ்வளவு நேரம் பாட்டி அமிர்தம் துணை இழந்தவராக ஒதுங்கியே இருந்தார். தாலி எறியதும் அன்னை நினைப்பில் பாட்டியை தேடி வந்து கட்டிப்பிடித்து கண்ணை கசக்கினாள்.

“ஒன்னுமில்லைடி ராசாத்தி. நோக்கு உன்‌ மனசை போல நல்ல ஆம்படையான் கிடைச்சிருக்கான்” என்றார்.
மற்றவர்களும் தம்பதியினரை வாழ்த்தினர். அந்த அருமையான தருணங்கள் சில அழகான திருமண புகைப்படங்களுக்கான வாய்ப்பை வழங்கின, அதையெல்லாம் படம் பிடித்துக் கொண்டனர் வீடியோக்காரர்கள்.

இதற்கு மேலும் தன்னை கட்டுப்படுத்தி தன் இயல்பை தொலைக்க இயலாதவனாய் ராவணன் தனிமையை எதிபார்த்தான். 

பாட்டி தான் பாலும் பழமும் கொடுக்க தனியறைக்கு அழைத்து செல்ல கூற இருவரும் அங்கே வந்தனர். ரோகிணி மூலமாக பாலும் சர்க்கரை தொட்டும் இருவருக்கும் வழங்கப்பட்டது. காருண்யா மெதுவாக ராவணனை காண, அவனோ பூணூலை காட்டி இதை எப்ப கழட்டணும்?” என்று கேட்க, மலங்க மலங்க விழித்தாள். 

“அவா வந்து சொல்வா” என்று பொதுவாய் கூற, ” அவங்க எப்ப வந்து சொல்றது. எனக்கு இது ஒரு மாதிரி உடம்புல கூசுது” என்று நெளிந்தான். 

“நான் அப்பாவிடம் கேட்டுட்டு வர்றேன்” என்று செல்ல போனவளை முந்தானை தடுத்தது. அவள் சேலை அவன் மேலே சாற்றிய பெரிய சரிகை  துண்டால் இழுப்பட்டது. 

அவள் சங்கடமாய் அவனை காண, “மை காட்” என்றவன் அங்கிருந்த வாஷ்பேஷனில் முகம் அலம்பினான். அவன் நெற்றியை அலங்கரித்த நாமத்தை அழித்தான். அவன் மீது அணிந்த துண்டால் முகத்தை துடைத்தான். 

காருண்யா அவன் செயலில் துவண்டு இருக்க வேண்டும். ஆனால் ராவணனுக்கு நாமம் எல்லாம் போட்டது வித்தியாசமாக இருந்தது. காண்பதற்கு அழகாக தெரிந்தாலும் இயல்பு பறிப்போனதாக தோன்றியது. இதில் பூணூல் வேறு அவன் எப்பொழுது கழட்டலாம் என்ற ஆர்வமாக இருக்க அவன் திடக்கத்திரமான உடலில் லேசாக பயந்தாள். சட்டை இல்லாமல் அவன் இருக்கும் கோலம் சற்றே மிரட்டியது. அவனுமே காருண்யா அணிந்த புடவையில், ஆங்காங்கே மஞ்சள் வண்ணத்தில் இடையும், ஒரு பக்கம் வாழை தண்டு கால்களும்  தெரிய, ஆடிபோனான். 

இருவருமே வேறு வேறு பக்கம் திரும்ப பாட்டி அமிர்தம் குரல் கேட்க, “பாட்டி” என்று அழைத்து, “பாட்டி ராவணனுக்கு பூணூல் உருத்துது. கழட்டட்டுமா? கேட்டுட்டு இருக்கான்” என்று கூற அடுத்த நிமிடம், “ஏண்டிம்மா, உன்னை நான் இப்படி தான் வளர்த்தேனா? ஆம்படையானை பேர் சொல்லி பேசற? யாராச்சும் எதச்சயமா கேட்டுட்டு என்னை வைய போறா. முன்ன ஸ்நேகிதன இருக்கலாம். இப்ப அப்படியில்லை” என்று அதட்டினார். அதட்டியதும் நிறுத்தியிருக்கலாம், “இப்படி தான் முதல்ல வந்தவாளை ஹரன்னு சொல்லி மரியாதையை கெடுத்து இருக்க” என்றதும் “பாட்டி” என்று உடைந்த குரலில் கண்ணீர் துளிர்க்க, அதன்பின்னே அமிர்தம் பேசியதின் வீரியம் புரிந்தது கொண்டார். 

“மன்னிச்சிடுடிம்மா வந்தவா நிறைய பேர் ஏதேதோ கேட்டு என்னை படுத்தி எடுத்துட்டா. அந்த கோபத்தை  காட்டிட்டேன். எவ்ளோ சந்தோஷமான நாள் இது. உங்கம்மா மேலருந்து உன்னை ஆசிர்வதிச்சுயிருப்பா. நான் தான் அசடு” என்று இறைஞ்சினார். 

  “இருக்கட்டும் பாட்டி… நேக்கு பழகிடுச்சு.” என்று கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

  “உங்களுக்கு எது சௌகரியமோ அப்படி உடுத்திக்கோங்க. விவாஹம் எங்க கலாச்சாரம் படி செய்ய ஒப்புக்கொண்டதே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். இதுக்கு மேல உங்களை கஷ்டப்படுத்த போறதில்லை.” என்று பாட்டி வாய்வார்த்தையாக இராவணனிடம் கூறவும், அடுத்த நொடி பூணுலை  கழட்டிவிட்டு, அங்கிருந்த அலமாரியில் உள்ள சட்டையை அணிந்து பட்டனை போட்டான்.

  பூணுலை சட்டென கழட்டிவிடுவானென அவர் எதிர்பார்க்கவில்லை. சட்டை மட்டும் அணிவான் என்று எண்ணினார். ஆனால் ராவணனுக்கு புதிதாக உடலில் உரசியதால் எதையும் சிந்திக்காமல் செய்துவிட்டான். அவன் ஒன்றும் பிராமண சமூகத்தை சேர்ந்தவனில்லையே. 

   திகைப்படைந்தது என்னவோ பாட்டி மட்டுமே. காருண்யாவுக்கு ராவணன் இதற்கு மேலே செய்வான். ஏதோ அவனது அன்னை ரோகிணிக்காக இந்த உடை நாமம் அணிந்திருப்பான். இதெல்லாம் பாட்டி அறியாதது. அவன் இதுவரை நாமமும் உடையும் அணிந்ததே பெரிய விஷயம் தான்.
 
  பேண்ட் எடுத்தவன், இருவர் இருக்கவும், “இந்த சேலையோட  முடிச்சு துண்டோட ஜாயின் ஆகிருக்கு. சோ.. இதை வேண்டுமின்னா ஷோல்டர்ல வச்சிக்கறேன்” என்று அமிர்தத்தின் முகபாவணையில் சமாளித்தான்.

   “இந்த துண்டை கையில இங்க வச்சிக்கவா. டிரஸ் மாத்தணும். இந்த வேஷ்டி வித்தியாசமா இருக்கு.” என்று மெத்தையருகே துண்டை வைக்க கேட்க, “காருண்யா உன் கையில வாங்கிக்கோ. நான் வெளியே இருக்கேன். உன்‌ மாமி ரோகிணியை வரச்சொல்லறேன்” என்று நழுவினார்.

   துண்டை அவள் தோளில் வைத்துவிட்டு அங்கிருந்த ரெஸ்ட்ரூமுக்கு சென்றான். 

   ‘எனக்கு விவாஹம் முடிந்து விட்டது.’ என்று ஆயாசமாக மலைத்தாள் காருண்யா.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

9 thoughts on “ஐயங்கார் வீட்டு அழகே-14”

  1. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 14)

    ஆமா, ஆமா… இந்த கல்யாண சடங்கெல்லாம் ரொம்ப வித்தியாசமாத்தான் இருக்கும். ஆனாலும் ரொம்ப அழகா, அதே சேரத்துல தமாஷாவும் இருக்கும். இதுல சின்ன சடங்கு மிஸ்ஸானாலும் அபசகுனமாத் தான் ஃபீல் ஆகும்.

    எப்படியோ ஒருவழியா கல்யாணம் முடிஞ்சாச்சு.
    இனி ரெண்டு பேரும் சேர்ந்து குடித்தனம் பண்ணப் போறாங்களோ தெரியலை.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    super marriage over but ravana kuda etho oru alavuku ava mela interest kamikiran aan intha karu ena ninaikira therilaye puriuthu manasula ena iruko atha ravana tha kekanum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *