Skip to content
Home » காதலின் காலடிச் சுவடுகள்-13

காதலின் காலடிச் சுவடுகள்-13

காதலின் காலடிச் சுவடுகள் 13வேந்தன் வயது இருக்கும் ஒருவன் சண்டையிட சாப்பிட முடியாமல் எழுந்து நின்ற மதுவை” யாழினி நீ உட்கார்ந்து சாப்பிட்டு போ”….என்ற வேந்தன்..” அவ வருவா மகேந்திரா நீ போய் ஹால்ல உட்கார் … இல்லையென்றால் நீயும் சாப்பிட வா…. பாவம் அவ நைட்டும் சரியா சாப்பிடவில்லை… என்று சொன்னான்… ” என்னோட தங்கையை பார்த்துக்க எனக்கு தெரியும்.. நீ எதுவும் எனக்கு கிளாஸ் எடுக்க வேண்டாம் புரியுதா”??? ” மகி ப்ளீஸ் சொன்ன புரிஞ்சுக்கோ… அவ சாப்பிட்டதும் கூட்டிட்டு போ”…. ” உன் வேலை என்னவோ அது மட்டும் பாரு வேந்தா!!! இனிமேல் என்னோட தங்கச்சி பக்கம் நீ வர கூடாது சொல்லிட்டேன் “…. ” வான்னு சொன்னா வர மாட்டியா” என்று மதுவை பளார் என்று கன்னத்தில் அடிக்க… மகேந்திரனை திருப்பி அடித்தான் வேந்தன்…. ” இங்க பாரு மகேந்திரா நீ இனிமேல் அவள் அடிச்சேன்னு தெரிஞ்சுது அவ்ளோதான் பார்த்துக்கோ “….. ” என்னையே அடிக்கிறியா??? அவ என்னோட கூட பொறந்தவ அவள அடிப்பேன், உதைப்பேன் அதை நீ யாரு கேக்க”???? ” நான் தான் கேட்பேன் …நான் மட்டும் தான் கேட்பேன்….ஏன்னா அவ என்னோட பொண்டாட்டி “…. ” “என்னடா சொன்ன யார் யாருக்கு பொண்டாட்டி கல்யாணம் ஒன்னு நடந்தா தான …. உனக்கு கல்யாணம் செய்து கொடுப்பதற்கு பதிலாக அவள உயிரோடு வைத்து கொளுத்திட்டு போய்டுவேன்”…. ” என்னடா சொன்ன ” என்று வேந்தன் , மகேந்திரன் சட்டையை பிடிக்க அங்கே கைகலப்பு ஆனது….. வீட்டில் இருப்பவர்கள் வந்து இருவரையும் பிரித்து விட்டனர்…. சட்டையை சரி செய்து கொண்ட மகேந்திரன் மதுவை தரதரவென இழுத்து சென்றான்… வேந்தன் தலையில் கைவைத்து கொண்டு அமர்ந்து விட்டான்…. வேந்தனின் தோள் மேல் பாட்டி கைவைக்க .. ” இவன் எப்பதான் பாட்டி புரிஞ்சுக்க போறான்”… கண்களில் வலியுடன் கேட்டான்…. ” அவன் புரியாமல் செய்துட்டு இருக்கான் சாமி… சரி ஆகிடுவான் எடுத்து சொன்னா”… ” நீ வா சாமி வந்து சாப்பிடு”….. “எனக்கு வேண்டாம் பாட்டி… யாழினி பாவம் அங்க போய் இன்னும் என்ன என்ன பண்ணுவானோ”???? ” அதெல்லாம் எதுவும் ஆகாது தம்பி… நீ போய் ரெஸ்ட் எடு “… நாளை மறுநாள் தாத்தாக்கு திதி குடுக்கணும்… வேலை நிறைய இருக்கும். …. என்று துண்டை தோளில் போட்டு கொண்டு வெளியில் சென்றார் ரங்கநாதன்…. வேந்தனுக்கு தெரியும் மதுவை பற்றி விசாரிக்க தான் அவர் செல்வார் என்று… எதுவும் பேசாமல் மாடியில் இருக்கும் தனது அறை சென்றான் வேந்தன்….. தனது அறைக்குள் வந்ததும் அருணிற்கு கால் செய்தான் வேந்தன்…. ” வீட்டுக்கு போய்டியா அருண்”??என்ற வேந்தனிடம்… ” டேய் லூசு பயலே நீ தானடா கூட்டிட்டு வந்து விட்ட”??? “அருண்””வேந்தா என்னடா??? ஏன் உன்னோட குரல் ஒரு மாதிரி இருக்கு???. . எதாவது பிரச்சினையா??? மது மது எங்கடா அவள வீட்டில் விட்டுட்ட தான”???? ” அவள மகி அடிச்சு இழுத்துட்டு போய்ட்டான்டா”!!!! ” என்னடா சொல்ற??…. என்ன நடந்தது தெளிவா சொல்லு”???… “யாழினி பாவம் டா ஒரு வாய் சாப்பிட கூட விடல “.. என்று நடந்ததை வேந்தன் கூற…. ” இப்ப என்னதான் டா செய்ய போற”??? ” தெரியலை அருண் கண்ண கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கு”….. ” எது செய்ய முடிவு எடுத்தாலும் சீக்கிரம் செய் வேந்தா”… ” சரி டா நான் போன் வைக்கிறேன்.. கொஞ்சம் நேரம் தூங்கினால் தான் யோசிக்க முடியும் பை”…… “பை டா ” அருண் கால் கட் செய்தவுடன் போனை சார்ஜில் போட்டு விட்டு தூங்கினான்……. தொடரும்…..

2 thoughts on “காதலின் காலடிச் சுவடுகள்-13”

  1. CRVS2797

    அடப்பாவி..! அப்ப தாலி கட்டாமலே பொண்டாட்டின்னு ஏண்டா சொன்னே அவசரகுடுக்கை…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *