Skip to content
Home » காலமறிதல்-49

காலமறிதல்-49

பொருட்பால்|அரசியல்|காலமறிதல்

குறள்:481

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது

காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப்‌ பகலில்‌ வென்றுவிடும்‌; அதுபோல்‌ பகையை வெல்லக்‌ கருதும்‌ அரசர்க்கும்‌ அதற்கு ஏற்ற காலம்‌ வேண்டும்‌

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

குறள்:482

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு

காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல்‌ (நில்லாத இயல்பு உடைய செல்வத்தை நீங்காமல்‌ நிற்குமாறு கட்டும்‌ கயிறாகும்‌.

குறள்:483

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்

(செய்யும்‌ செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன்‌ ஏற்ற காலத்தையும்‌ அறிந்து செய்தால்‌, அரிய செயல்கள்‌ என்பவை உண்டோ?

குறள்:484

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால்‌, உலகமே வேண்டும்‌ எனக்‌ கருதினாலும்‌ கைகூடும்‌.

குறள்:485

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்

உலகத்தைக்‌ கொள்ளக்‌ கருதுகின்றவர்‌ அதைப்பற்றி எண்ணிக்‌ கலங்காமல்‌ அதற்கு ஏற்ற காலத்தைக்‌ கருதிக்‌ கொண்டு பொறுத்திருப்பர்‌.

குறள்:486

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து

ஊக்கம்‌ மிகுந்தவன்‌ (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல்‌, போர்‌ செய்யும்‌ ஆட்டுக்கடா தன்‌ பகையைத்‌ தாக்குவதற்காகப்‌ பின்னே கால்வாங்குதலைப்‌ போன்றது.

குறள்:487

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

அறிவுடையவர்‌, (பகைவர்‌ தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில்‌ சினம்‌ கொள்ளமாட்டார்‌;(வெல்வதற்கு ஏற்ற காலம்‌ பார்த்து அகத்தில்‌ சினம்‌ கொள்வர்‌.

குறள்:488

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை

பகைவரைக்‌ கண்டால்‌ பொறுத்துச்‌ செல்ல வேண்டும்‌; அப்‌ பகைவர்க்கு முடிவுகாலம்‌ வந்தபோது அவருடைய தலைகீழே விழும்‌.

குறள்:489

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்

கிடைத்தற்கரிய காலம்‌ வந்து வாய்க்குமானால்‌, அந்த வாய்ப்பைப்‌ பயன்படுத்திக்கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச்‌ செய்யவேண்டும்‌.

குறள்:490

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து

பொறுத்திருக்கும்‌ காலத்தில்‌ கொக்குப்போல்‌ அமைதியா இருக்கவேண்டும்‌; காலம்‌ வாய்த்தபோது அதன்‌ குத்துப்‌ போல்‌ தவறாமல்‌ செய்து முடிக்கவேண்டும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!