அத்தியாயம்-11
அண்ணாமலை குழந்தை போல அழவும், துஷாராவும் சேர்ந்துக்கொண்டாள்.
நான்சிக்கு இந்த கண்ணீர் காட்சிகள் எல்லாம் புதிதாக பார்த்து திகைத்தார்.
ஹர்ஷாவோ இதென்ன இப்படி அழுகின்றார்?
காதலியையா? அல்லது மாமனாரையா? யாரை சமாதானம் செய்வது என்று தலையை சொரிந்தான்.
வள்ளி தான் “அட பொண்ணை பெத்தா என்னைக்கா இருந்தாலும் பிரிவு நிச்சயம்.
இது தெரியாத போலீஸா நீங்க? ஏன்டி அவர் தான் சின்ன குழந்தை மாதிரி அழுதா நீயுமா?
கல்யாணம் ஆனா துரத்திவிடுவேன்னு சொன்னேனா இல்லையா? என்ன ஆஸ்திரேலியாவுக்கு பறக்க போற.” என்று தூரத்தை சுட்டி காட்டினார்.
இது போதாதா துஷாராவுக்கு மேலும் அழுதாள். மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து அப்பாவை பார்க்க வேண்டும் என்று தோன்றினால் பறக்க முடியுமா? தந்தைக்கு அந்தளவு வசதி உண்டா?
“நான் கல்யாணமே பண்ணிக்கலை. நான் இங்கயே அப்பாவோடவே இருந்துடறேன்.” என்று வார்த்தையை கேட்டு ஹர்ஷா நிகழ்விற்கு வந்தான்.
“ஏ..ஏ..ஏ..ஏ என் தலையில் பாறையை போடற. அங்கிள் என்ன அங்கிள் நீங்க. நீங்க அழுதா, அவ என்னயென்ன பேசறா பாருங்க. ப்ளீஸ் அங்கிள். அழாம கல்யாண வேலை ஏதோ கேட்டீங்களே. அதை பேசுவோம்.” என்று காரியத்தை நினைவுப்படுத்தினான்.
கண்ணீரை கட்டுப்படுத்தி, மகளை பக்கத்தில் அமர வைத்து, “கல்யாணம் எங்க வைக்கணும்? எங்க வசதிக்கு மீறி, என்னால என் மகளுக்கு, உங்க வசதிக்கு ஏற்றார் போல என்ன செய்யறதுன்னு தெரியலை.” என்று துவண்டார்.
ஹர்ஷாவோ “ஏன் அங்கிள் இப்படி பேசறிங்க. அன்னைக்கு துஷாராவை யாரோ பொண்ணு பார்த்தப்ப, எவ்ளோ அழகா வெல்கம் பண்ணி கல்யாணம் பேசனிங்க. இப்ப நான் என்றதும் அழறிங்க” என்று தேற்ற முயன்றான்.
“முன்ன வந்த வரனுக்கு துஷாராவை கட்டிவச்சா, பக்கத்துல அரை மணி நேரம் தான். நினைச்சா ஓடி போய் பார்த்திடுவேன். இப்ப.. நிலைமை அப்படி கிடையாதே.” என்றவர் ஆஸ்திரேலியாவுக்கு மகள் மணம் முடித்து சென்றால் வருடம் ஒரு முறை காண நேரும். கண்ணுக்குள் வைத்து வளர்த்தப் பிறகு தூரம் அனுப்பவும் கவலை. அதே போல மகளுக்கு பிடித்தவனாக ஹர்ஷா இருக்க கட்டித்தராமல், அதுவும் இந்தளவு பேசி முடிவாகும் சமயம் மறுக்க முடியுமா?
“அங்கிள் அங்கிள்… இங்க பாருங்க. ஆஸ்திரேலியா ஒன்னும் வரமுடியாத நாடா? அதெல்லாம் நினைச்சதும் பார்க்க வரலாம். நீங்க பார்க்கணும்னு சொல்லுங்க. நான் அவளை அடுத்த நிமிஷம் கூட்டிட்டு வந்து கண்ணு முன்ன நிறுத்தறேன்.
ஏய் துஷாரா சொல்லு. நீயும் சேர்ந்து அழுவற. என்னை உனக்கு பிடிக்கும்ல” என்று அவளை உலுக்கினான்.
அதன் பிறகே அண்ணாமலை மகளின் கண்ணீரை துடைத்து தன்னையும் திடப்படுத்தி கொண்டு, “சரி கல்யாணம் எங்க பண்ணணும்” என்று அதையே கேட்டார்.
தாமோதரனோ, “அதெல்லாம் ரொம்ப யோசிக்காதிங்க சம்பந்தி. இங்க கோவிலில் கல்யாணம் வச்சி மண்டபத்துல ரிசப்ஷன் வைங்க. உங்க சொந்தம் பந்தம் வரட்டும்.
அப்பறம் ஒரு வாரம் கழிச்சு ஆஸ்திரோலியா போய் அங்க ஒரு ரிசப்ஷன் முடிச்சிடுவோம். எங்களுக்கு அங்க ரிலேட்டிவ் விட பிசினஸ், பிரெண்ட்ஸ், நெய்பர்ஸ், கொலிக் இப்படி தான். அதனால் வீட்லயே நைட் பார்ட்டி ரெடி பண்ணிடுவோம். அங்க கார்டன்ல அதுக்கான டெக்கரேஷன் பண்ணிடலாம். சிம்பிள். நகை பாத்திரம், பண்டம்னு எதுவும் தேவைப்படாது. நீங்க பொண்ணை கொடுத்தா போதும். என் பையன் உங்க பொண்ணை பூ மாதிரி பார்த்துப்பான்.” என்றார்.
நான்சியும் “இந்த வீட்ல வள்ளி சிஸ்டர் தான் போல்ட் லேடி. மருமக கொஞ்சம் அழுமூஞ்சி” என்று கூற வள்ளி சிரித்தார்.
“நான்சி சிஸ்டர் சொல்லக்கூடாது. சம்பந்தினு சொல்லு. இல்லை அண்ணினு சொல்லணும். அண்ணாமலைசம்பந்தியை வேண்டுமின்னா ப்ரதர் ஆர் அண்ணானு சொல்லு. ஹர்ஷா… நீயும் மாமா அத்தைன்னு கூப்பிடணும்டா” என்று உறவுமுறையை முன் நிறுத்தி திருத்தினார் தாமோதரன்.
“இவர் ஒருத்தர் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிடுவார். நான் துஷாராவை டாட்டர்னு சொன்னா அதுக்கும் கிளாஸ் எடுப்பிங்களா? நான் துஷாராவை பொண்ணு மாதிரி நடத்த மாட்டேன். எனக்கு பொண்ணு தான். அதனால் சம்டைம் வள்ளியை சிஸ்டர்னு கூப்பிட்டா மிஸ்டேக்கா நினைக்காதிங்க.” என்று கூறவும் வள்ளியும் “அண்ணியும் வேண்டாம் அக்காவும் வேண்டாம். வள்ளினு கூப்பிடுங்க.” என்று சிரித்து பேச, அண்ணாமலை மகளுக்கு நல்ல குடும்பமும் அமைந்ததில் சந்தோஷம் கொண்டார்.
அதன் பின் அங்கு தான் சிற்றுண்டியை கொறித்தார்கள் தாமோதரன்-நான்சி மற்றும் இந்த வீட்டு மாப்பிள்ளையாக போகும் ஹர்ஷா.
“அங்கிள்… ராம்கி கல்யாணத்துக்கு நீங்களும் வாங்க.” என்று ராம்கி ரிஷப்ஷனுக்கு இரவு போக வேண்டும், துஷாராவை பிரிய நேருமே என்று மூவரையும் கூப்பிட்டான்.
“இல்லை தம்பி.. நீங்க வர்றிங்க என்ற ஒரே காரணத்துக்காக மேலதிகாரிக்கிட்ட இப்பவும் பர்மிஷன் கேட்டுட்டு வந்திருக்கேன். ஈவினிங் ஒரு அரசியல் மீட்டிங். அங்க காவலுக்கு போகணும். தப்பா எடுத்துக்காதிங்க. ரிட்டேயர்மெண்ட் ஆகற வரை என் உத்தியோகம் எனக்கு முக்கியம்” என்று எடுத்துரைத்தார்.
ஹர்ஷா பார்வை துஷாராவை தழுவ, “வேண்டுமின்னா துஷாராவை அழைச்சிட்டு போங்க.” என்று அனுமதி தர ஹர்ஷா முகம் பிரகாசமானது.
“நான் வரலை.” என்று துஷாரா மறுக்க, “மாமாவே பர்மிஷன் தந்துட்டார். ப்ளீஸ் துஷாரா ரொம்ப பண்ணாத.” என்று உரிமை காட்டினான். அங்கிள் என்ற வார்த்தையை கத்தரித்து ‘மாமா’ என்று தந்தை கூறியபடி விளித்தான்
வள்ளியும் “போயிட்டு வாடி. உனக்காக ஹர்ஷா தம்பி எவ்ளோ கஷ்டப்பட்டு வந்திருக்கார். சம்பந்தி கூட பேசி பழகு. அப்படியே ஹர்ஷா கூடவும் தான்.” என்று கிசுகிசுக்க யோசித்தாள்.
“அத்தை… நீங்க டிரஸ் எடுங்க. அவளுக்கு மாட்டி விட்டு, நான் கூட்டிட்டு போறேன். வரலைன்னா நான் தூக்கிட்டு போறேன்” என்று துஷாராவை பார்த்து ஜம்பமாய் உரைத்தான்.
“அவ ரூம் தான் தொரியுமே. நீங்களே அவளுக்கு டிரஸ் சூஸ் பண்ணுங்க. ஆனா எடுத்துவச்சிட்டு வந்துடணும்” என்று வள்ளி கூற ஹர்ஷாவோ சிகைக்கோதி வெட்கம் கொண்டான்.
அதன் பின் அண்ணாமலை டியூட்டிக்கு போக, வள்ளியும் துஷாராவும் ராம்கி திருமணத்திற்கு ஹர்ஷா தாய் தந்தையரோடு கிளம்பினார்கள். நான்சி தனக்கு அங்கே அறிந்தவர் யாருமில்லை. வள்ளி வந்தால் பேசி பழக வாய்ப்பாக அமையும் என்று அழைத்து சென்றார்.
ஹர்ஷா தங்கிருந்த அறைக்கு வந்து, “டூ மினிட்ஸ்… மடமடனு கிளம்பிடுவேன்.” என்று வள்ளியையும் துஷாராவையும் அமர வைத்து மூவரும் கிளம்ப தயாரானார்கள்.
நான்சி மேற்கிந்திய உடையே அணிந்ததால் இம்முறை சேலை கட்ட முற்பட, வள்ளி சம்பந்திக்கு உதவினார்.
தாமோதரன் மனையாளை கண்டு மதிமயங்க, ஹர்ஷாவோ “துஷாரா கொஞ்சம் இங்க வாயேன்” என்று கூப்பிட, நான்சியோ “என்னனு கேட்டு வந்துடுமா” என்று அனுப்பினார்.
துஷாரா அறைக்குள் வரவும் அங்கே கோர்ட்சூட் சகிதம் நின்றவன் அவளை அழைக்க, தயங்கி அன்னநடை பயின்று வந்தாள்.
ஏற்கனவே இந்த அறையை கண்டு வள்ளியும் துஷாராவும் வாய் பிளந்து நின்றார்கள். அறையின் வாடகையே அதிகமென்று இருப்பிடமே சொல்லும். அப்படிப்பட்டவன் தங்கள் வீட்டில் வந்து சிறு அறையில் எப்படியிருந்தான்.
இன்று இந்த அறையில் ஒரு இளவரசன் போல நின்று கோர்ட் பட்டனை அணிந்து “எப்படியிருக்கேன்?” என்று கேட்டான்.
“என்னயிருந்தாலும் தமிழ் பசங்க லுக் கொஞ்சம் கம்மியா தான் இருக்கு. நீ அத்தை மாதிரி ஜாடை. முடி கலரே வெளிநாட்டு பையன்னு காட்டிக்கொடுக்குது.” என்று எப்பவும் பேசும் வாய்துடுக்கில் கூற, துஷாராவை ஏறயிறங்க பார்த்தான்.
துஷாராவோ, “ஆனாலும்…. இந்த ப்ளூ கலர் கண்ணு… குறுகுறுன்னு பார்க்கறப்ப, ஆஸ்திரேலியா பையன் என்ற பாகுபாடு பார்க்காம கவுந்துட்டேன்” என்று கூற, அவள் வெற்றிடையை வளைத்து தன் பக்கம் இழுத்தான் ஹர்ஷா.
“குறுகுறுன்னு பார்க்க வைக்கிறது நீ தான். அதுவும் இன்னிக்கு… எவ்ளோ அழகா இருக்க தெரியுமா?” என்று அவன் கரங்கள் வெற்றிடையில் தாளமிட்டு, அவன் இதழோ அவள் செவ்விதழில் பயணம் செய்ய முற்றுகையிட்டான்.
இதழின் சுவை கூட்டி, உலகத்தை மறந்தவனாக, அவளையும் உலகத்தையே மறக்க வைத்துக் கொண்டிருந்த நொடிகளில், துஷாராவும் முத்தத்தில் மூழ்கியிருந்தாள்.
நான்சி வந்து, “மை சன்… என்ன பண்ணிட்டு இருக்க?” என்ற குரலில், வெற்றிடையை பிடித்து, இதழில் முத்தக்கவிதையை இயற்றியவன் வெற்றிடையை இறுக பிடித்திருந்த தன் கரத்தை தளரவிட்டு நகர்ந்தான்.
“ஹர்ஷா… இது ஆஸ்திரேலியா இல்லை. வள்ளி சிஸ்டர் பார்த்தா என்னாகறது? இதெல்லாம் ஆப்டர் மேரேஜ் வச்சிக்கோ” என்று கண்டித்து, “துஷாரா பயப்படாத… இங்கயிருந்து வந்தப்பிறகு அங்க சதா உன் நினைவுல புலம்பிட்டு இருந்தவன். அதான் சான்ஸ் கிடைக்கவும் யூஸ் பண்ணறான்.” என்று தோளில் கைப்போட்டு, அழைத்து செல்ல, பயமும் நடுக்கமுமாய் நடந்தாள் நாயகி.
இரண்டடி நடந்தவளின் துப்பட்டாவை ஹர்ஷா இழுக்க, திரும்பினாள்.
இம்முறை கருநீல விழிகளில், காதலும், இதழை பிரிந்த ஏக்கமும் தெரிய, ”லேம்போஸ்ட்… தக்காளி…” என்று உச்சரித்து துப்பட்டாவை தன்னோடு இழுத்துக்கொண்டு தன் அத்தை நான்சியோடு நடந்தாள்.
ஹர்ஷாவோ மனதை மயக்கும் புன்னகை சிந்தி அவளை பின் தொடர்ந்தான்.
அனைவரும் கேப் புக் செய்து ராம்கி ரிஷப்ஷனுக்கு வந்து சேர்ந்தார்கள்.
ராம்கியோ “ஹேய் மச்சான்… அப்பவே நினைச்சேன் டா. துஷாராவுக்கு மட்டும் மேரேஜ் ஆகலைனா, நீ ஆன்ட்டி அங்கிளை கூட்டிட்டு போகறப்ப, ஒரு முடிவோட வந்துடுவன்னு.” என்று கைகுலுக்கி கட்டிப்பிடித்தான்.
“ஹாப்பி மேரீட் லைப்” என்று துஷாரா கூற, “தேங்க்யூ துஷாரா.. சாரி… மேரேஜுக்கு பத்திரிக்கை வைக்க இவனிடம் கேட்டேன். எப்ப கேட்டாலும், என்னை அவளையே நினைக்க வைச்சி பைத்தியம் பிடிக்க வைக்காதடா. துஷாரா பத்தி பேசாதனு ஆப் பண்ணிடுவான். வள்ளி ஆன்ட்டி அதான் பத்திரிக்கை வைக்கலை. பட் நீங்க வந்தது எனக்கு ரொம்ப ரொம்ப ஹாப்பி. அதுவும் இவனை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் கூட இந்தியாவுக்கு முதல் முதல் வந்து மதுரையில ஆட்டம் போட்டு, சென்னை வந்து காதல்ல விழுந்துட்டானேனு எத்தனை தடவை பீல் பண்ணிட்டேன் தெரியுமா. இப்ப தான் இவனை இப்படி பார்க்க திருப்தியா இருக்கு” என்று கூறவும் ஹர்ஷாவோ, “டேய் மாப்பு… போய் உன் ஜோடி பக்கத்துல நில்லுடா. என் காதல் கதைக்கு டைம் கொடு. பர்மிஷன் கேட்டு கூட்டிட்டு வந்துயிருக்கேன். நிறைய பேசணும்” என்று நண்பனை மேடைக்கு அனுப்பினான்.
துஷாராவை தனியாக அழைத்து பேச வந்தான்.
துஷாரா தன் அன்னை வள்ளியை பார்க்க அவரும் பேச செல் என்று அனுமதி தந்தார்.
ஹர்ஷாவோ “எங்கம்மாவுக்கு இங்க ராம்கி அம்மாவை தவிர யாரையும் தெரியாது, போரடிக்கும்னு நினைச்சேன். அத்தை இருக்காங்க… இனி அவங்க பேசி பழகட்டும்.” என்று தனியிடமாக பார்த்து அமர்ந்தான்.
துஷாராவோ “எங்க போனாலும் உங்களை எல்லாரும் நோட் பண்ணறாங்க. நீங்க சென்னை மக்களோட தனிச்சு தெரியறிங்க” என்று கூற, “ஆஸ்திரேலியா சிட்டிசன் தனியா தான் தெரிவேன். சோ வாட். நீ என்னை கவனியேன்” என்று அவள் முகத்தை அவன் பக்கம் பார்க்க திருப்பினான்.
“என்ன நீங்க தொட்டு தொட்டு பேசறிங்க. அங்க ரூம்ல கிஸ் பண்ணறிங்க.” என்று சுணங்க, “ஏய்… துஷாரா… இங்க பாரு.
நீ என்னோட துஷாரா. உன்னை நான் தொடலாம்.. கிஸ் பண்ணலாம்.. அதுக்கும் மேலயும், நீ இடம் கொடுத்தா…” என்று பேசியவன் மார்க்கமாய் கண் சிமிட்டினான்.
அவனது சில்மிஷ பேச்சை ரசித்தவளாக, “ஆஹ்ஆஹா” என்று தற்போது மறுப்பவளாய், அவன் கருநீல கண்ணில் காதலில் மூழ்கினாள். தங்கள் திருமணத்தை பற்றி பல கனவு பேச்சு பேசினார்கள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
2 அத்தியாயம் இருக்கு. பிறகு புதுக்கதை ஐயங்காரு வீட்டு அழகே கதை பதிவிடப்படும். அதுவும் லாகின் செய்து தான் வாசிக்க இயலும். கூடவே வாசிங்க… ரொம்ப நாள் வச்சியிருக்க மாட்டேன். அதனால் போட போட உடனே வாசித்துடுங்க. ரெகுலர் அப்டேட் வந்துடும். ல்
👌👌👌👌💕💕💕💕💕💕💕💕😍😍😍😍
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 happa atlast ellarum happy 😀 paavam appavum ponnum piriyira yekkathula erukanga enna erundhalum avlo dhooram poi ponna parthutu vara mudiyuma🥺 anyway marriage agi nallabadiya erundha k 😍😘🥰
கிடைக்காது என்று எண்ணிய
காதல்_ காதலியை கரம்பிடித்து
கல்யாணம் வர செல்ல
காத்திருந்த காதலனுக்கு
கண்மண் தெரியாது சந்தோசம்….
கையில் பிடிக்க முடியவில்லை…
கட்டவிழ்த்த காலை போல
காதலில் துள்ளுகிறான்….
காதலி துஷாரா தான் பாவம்….
தென்றல் நீ தானே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 11)
அப்பாடா…! எப்படியோ எல்லாம் சுமூகமா முடிஞ்சு கல்யாணம் வரைக்கும் போயிடுச்சு. இதுல ரெண்டு வீட்டு பெரியவங்களும்
பசங்க ரெண்டு பேரையும் டேட்டிங் கூட அனுப்பிச்சிட்டாங்க. வாட் எ மிராக்கிள், வாட் எ மிராக்கிள் ?
அட.. நான் டேட்டிங் சொன்னது ராம்கி கல்யாணத்தை தான்ங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
இந்திய பொண்ண ஆஸ்ட்ரேலிய பைய்யன். அருமை
Super
Super super. Wonderful love. Cute romance. Intresting sis.happy family.
Mrge epo
Harsha vanathula parakala aana athuku equal ah na happy mode la irukan avan kum dushara kum kalyanam ok aanathu la
Lovely update 🥰🥰🥰🥰💞💞💞💞💞💞
Simply superb 👌
🧡🧡🧡🧡🧡❤️❤️🥰🥰🥰