Skip to content
Home » வாழ்க்கைத் துணைநலம்-6

வாழ்க்கைத் துணைநலம்-6

                                         திருக்குறள் 

                                                       அதிகாரம்-6

                                              வாழ்க்கைத் துணைநலம் 

குறள்:51 

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

விளக்கம்:

இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித்‌ தன்‌ கணவனுடைய பொருள்‌ வளத்துக்குத்‌ தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத்‌ துணை ஆவாள்‌.

குறள்: 52

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்

விளக்கம்:

இல்வாழ்க்கைக்குத்‌ தக்க நற்பண்பு மனைவியிடம்‌ இல்லையானால்‌. ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும்‌ பயன்‌ இல்லை.

குறள்:53 

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

விளக்கம்:

மனைவி நற்பண்பு உடையவளானால்‌ வாழ்க்கையில்‌ இல்லாதது என்ன? அவள்‌ நற்பண்பு இல்லாதவளானால்‌ வாழ்க்கையில்‌ இருப்பது என்ன?

குறள்:54

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

இல்வாழ்க்கையில்‌ கற்பு என்னும்‌ உறுதிநிலை இருக்கப்‌ பெற்றால்‌, பெண்ணைவிடப்‌ பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

 குறள்:55

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

விளக்கம்:

வேறு தெய்வம்‌ தொழாதவளாய்த்‌ தன்‌ கணவனையே தெய்வமாகக்‌ கொண்டு தொழுது துயிலெழுகின்றவள்‌ பெய்‌ என்றால்‌ மழை பெய்யும்‌!

குறள்:56

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

விளக்கம்:

கற்புநெறியில்‌ தன்னையும்‌ காத்துக்கொண்டு, தன்‌ கணவனையும்‌ காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும்‌ காத்து, உறுதி தளராமல்‌ வாழ்கின்றவளே பெண்‌.

குறள்:57

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

விளக்கம்:

மகளிரைக்‌ காவல்‌ வைத்துக்‌ காக்கும்‌ காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்‌? அவர்கள்‌ நிறை என்னும்‌ பண்பால்‌ தம்மைத்‌ தாம்‌ காக்கும்‌ காப்பே சிறந்தது.

குறள்:58

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

விளக்கம்:

கணவனைப்‌ போற்றிக்‌ கடமையைச்‌ செய்யப்‌ பெற்றால்‌ மகளிர்‌ பெரிய சிறப்பை உடைய மேலுலக வாழ்வைப்‌ பெறுவர்‌.

குறள்:59 

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

விளக்கம்:

புகழைக்‌ காக்க விரும்பும்‌ மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும்‌ பகைவர்முன்‌ காளைபோல்‌ நடக்கும்‌ பெருமித நடை இல்லை.

குறள்: 60 

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

மனைவியின்‌ நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம்‌ என்று கூறுவர்‌; நல்ல மக்களைப்‌ பெறுதலே அதற்கு நல்லணிகலம்‌ என்றும்‌ கூறுவர்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *