அத்தியாயம்-7
Thank you for reading this post, don't forget to subscribe! அதிகாலை ஆறுமுப்பதாக, காருண்யா எழுந்தாள்.
“என்ன ராகவி, நாழியாகுதுன்னு எழுப்ப வேண்டியது தானே” என்று குளித்து முடித்து வந்தவளிடம் கோபித்தாள்.
“நீயே இங்க வந்ததிலருந்து இன்னிக்கு தான் லேட்டா எழுந்துக்கற. சரி வரலாறு மாறுதுன்னு விட்டுட்டேன். ஆமா… நேத்து முழுக்க உன் ஹரன் கூட பேசினியே எப்படி போச்சு?” என்று கண் சிமிட்டி கேட்டாள்.
“ஹரனா? அது யாரு?” என்றவள் ராகவி முறைக்க, “ஓ.. ஹரிஹரனா.. நன்னா டீசன்டா தான் பேசினார்.” என்று அலுவலகம் செல்ல கிளம்பினாள்.
இந்துவும் அப்பொழுது தான் கைகளை முறுக்கி எழுந்தாள்.
“எப்பவும் நைட்டு போன் பேசிட்டு காலையில் எழுந்துக்க முடியாம கஷ்டப்படுவேன். இப்ப நீயுமா?” என்று கேலி செய்ய காருண்யாவிற்கு அது எரிச்சலை தந்திருக்க வேண்டும். அதற்காகவே குளித்து முடித்து வேகமாய் அலுவலகம் கிளம்பினாள். காலை உணவை கூட மறந்து மறுத்துவிட்டு ஓடினாள்.
அவளை பொறுத்தவரை அலுவலகத்திற்கு நேரம் தவறாமல் வந்திட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே.
அரக்க பறக்க அலுவலகம் வந்து மூச்சு விட்டாள். எப்பவும் வரும் நேரத்திற்கு முன்பே வந்துவிட்டாள். அதன்பின்னே வயிறு ஒன்று இருப்பதை நினைவுப்படுத்தியது.
கேண்டீன் சென்று ஏதாவது வயிற்றுக்கு தள்ள முடிவெடுத்து வந்தாள்.
அங்கே ஷாலினி ராவணன் பேசியபடி சாப்பிட, ராவணனை கண்டு ஆச்சரியமாக புன்னகைத்து பூரி ஆர்டர் தந்து வாங்கி வந்தாள்.
“என்ன காருண்யா மெஸ்ல சாப்பிடலை?” என்று ஷாலினி கேட்க, “இல்லை… நாழியாச்சுன்னு அங்க சாப்பிடமா வந்துட்டேன்.” என்று ராவணன் அருகே அமர்ந்தாள்.
ராவணன் சாப்பிட்டு முடித்துவிட்டதால் ஸ்பூனை வைத்துவிட்டு டிசு பேப்பரை எடுத்து வாயை துடைத்தான்.
ஷாலியோ ராவணன் எழுந்துக்கொள்வானென எண்ணி, அவள் எழுந்து டஸ்பின் பக்கமாக சென்றாள்.
ராவணனோ “ஏய் ரிலாக்ஸ்.. மெதுவா சாப்பிடு” என்று கைகடிகாரத்தை பார்த்து “டைம் நிறைவேயிருக்கு” என்றான்.
“நீ போகலை” என்று கேட்டாள்.
“போயிடுவேன் நீ தனியா சாப்பாட்டை விழுங்குவ. ஆபிஸ் டைம் தான் இருக்கே. தனியா சாப்பிடறப்ப லோன்லியா இருக்கும். யாராவது கூடயிருந்தா நல்லாயிருக்கும் இல்லையா?!” என்று கேட்டதும் ஆமென்று புன்னகைத்து மெதுவாக சாப்பிட்டாள்.
சட்டென நினைவு வந்தவளாக, போனை எடுத்து கேலரி திறந்து, ராவணனிடம் நீட்டினாள்.
ராவணன் நெற்றி சுருக்கி வாங்கி பார்த்தான்.
ஆணின் புகைப்படம், இதில் காருண்யாவிடம் லேசான வெட்கம் என்றதும், “ஏ ஹரிஹரனா?” என்று கேட்டான்.
”ம்ம் நேத்து அப்பா அனுப்பினார். அதோட நம்பர் ஷேர் பண்ணின்டோம்.” என்றாள்.
“நம்பர் ஷேர் பண்ணினியா? அப்ப.. போன் பண்ணி பேசினியா? எப்படி பேசறார்” என்று சந்தோஷமாய் கேட்க, ”ம்ம்” என்றாள்.
”ஓ.. ஓஹோ… அதான் லேட்டா எழுந்து, லேட்டாகிடுச்சோனு பயந்து அவசரமா கிளம்பி, எப்பவும் வர்ற டைமுக்கும் முன்ன வந்துட்டியா?” என்று சிரிக்க, “நீங்களும் மத்தாவா மாதிரி கிண்டல் பண்ணறேளே” என்று முகம் வாடியது.
“கூல் டியர். அதுவொன்னும் தப்பில்லையே. உனக்கான பார்ட்னர்னு உங்கப்பா தேர்ந்தெடுத்த பையன். அவனிடம் பேசியது லேட்டானது நார்மல் தான்.
ஆக்சுவலி நிறைய பேசினியா? பாண்டிங் எப்படியிருக்கு? எப்படி பழகறார்” என்று கேட்டான்.
சில நிமிடம் காருண்யா நேற்றைய பேச்சிற்கு சென்று வந்தாள்.
“அவாளா கால் பண்ணினா. அறிமுகப்படுத்தி பேசினா. இந்த கம்பெனில உத்தியோகம், தோப்பனாருக்கு ஒரே பிள்ளையாண்டாளாம். இத்தனை நாளா அப்ராட் போறது ட்ரீமா இருந்தது. என் போட்டோ பார்த்ததும் அப்ராட் போகாம முதல்ல பொண்ணு பார்க்க போகலாமானு இருக்குனு சொன்னார்.” என்றதும் ராவணன் சிரித்தான்.
“இப்படி சிரிச்சேள்னா சொல்ல மாட்டேன்” என்று காருண்யா கூற முகத்தை முன்பு போல மாத்தினான்.
“விவாஹம் எப்ப நடக்கும் ஆசையா இருக்குன்னு சொன்னா. அவாளோட அப்பா அம்மாவை பத்தியும் சொந்த ஊர் பத்தியும் பேசினா. அதோட வந்ததும் நேக்கும் அவருக்கும் நிச்சயம் முடிந்ததும் காலம் கடத்தாம கல்யாணம் பண்ணிக்கிறதா பேசினார்.” என்று தோளைக் குலுக்கினாள்.
“ஓகே… நீ என்ன பேசின. என்ன பீல் பண்ணற” என்று கேட்டான்.
தன் தோழிக்கு என்ன உணர்வு தோன்றுகின்றதென்று அறியும் ஆவலுடன்.
“பேசறச்ச நல்லவாளா தெரியுது. பார்க்க நன்னா இருக்கா. அப்பாவுக்கு பாட்டிக்கும் பிடிச்சிருக்கு. பேசியவரை என்னோட ஆசைக்கு எதிரா பேசவேயில்லை. இது போதும்.” என்றாள்.
ராவணன் “சூப்பர்” என்று கூறியதும் இருவரும் எழுந்தார்கள்.
குப்பை தொட்டியில் தட்டை போட்டுவிட்டு, முன்னே கேபினில் செல்ல நகர கைநீட்டி கூறினான்.
இருவரும் அவரது கேபினில் வரவும், வேலைகளில் முழ்கினார்கள். பிரேக் டைமில் ராவணன் தான் எழுந்து சென்றான். காருண்யா அதேயிடத்தில் வேலை செய்தாள்.
ரோஸ்லினுடன் ராவணன் பேச்சு போனது. ஷாலினி ரோஸ்லினிடம் காருண்யா ஏதோ போட்டோ காட்டி ரொம்ப நேரம் பேசினான் என்று கிசுகிசுப்பை பரப்ப, அதை கேட்டு ரோஸ்லின் மதியம் போல “இதெல்லாம் நல்லதுக்கு இல்லை காருண்யா. முன்ன எல்லா என்னிடம் தான் ஃப்ரீயா பேசுவ. இப்ப என்னை மறந்தே போயிட்ட. கடவுள் ஓவரா தான் உன் பிரெண்டை அனுப்பி உனக்கு ஆதரவா நிறுத்திட்டார்.” என்று பொடி வைத்து பேச்சிழுக்க, “ஏய்… ஷாலினி என்ன சொன்னா? ஏன் வில்லி மாதிரி பேசற ரோஸ்லின்.
நேக்கு ராவணன் மாதிரி தானே நீயும்.” என்றாள்.
“பார்த்தியா பார்த்தியா.. ராவணன் மாதிரி தான் நான். என் இடம் இரண்டாம் பட்சமாகிடுச்சே” என்று போலியாக கோபிக்க, “ஏன் இப்படி பேசற. மனுஷாளிடம் பழகவே யோசிக்கற ஜந்து நான். இங்க உன்னிடம் தான் நன்னா பழகுறது. நீயும் கேலியும் நக்கலுமாய் பேசறியே.” என்று சோகமானாள்.
“ராவணனிடம் போன்ல என்ன காட்டி பேசின. ஷாலினி சொன்னா போனை பார்த்து பார்த்து ராவணன் ஏதோ உன்னிடம் ஆர்வமா பேசினாராம்.” என்று கேட்டதும், போனை எடுத்து ரோஸ்லினிடம் காட்டினாள்.
“ஹரன்.. ஹரிஹரன் அப்பா போட்டோ அனுப்பினா. ராவணன் இருந்ததால் அவரிடம் காட்டினேன். வேலை நேரத்துல உன்னிடம் காட்ட எழுந்து வந்தா மத்தவா எல்லாம் ஏதாவது கிசுகிசுப்பா. எதுக்கு வம்புன்னு பிரேக் டைமில் காட்ட நினைச்சேன். இன்னிக்கு வேலை அதிகமோனோ. அதனால் இப்ப காட்ட வேண்டியதா போச்சு.” என்று விவரிக்க, “ம்ம் சூப்பரா இருக்கார். நானே போட்டோ கேட்கலாமானு நினைச்சேன். நைஸ் நைஸ்… ஆனாலும் உனக்கு என்னை விட ராவணன் இம்பார்டனா மாறிட்டார். அதான் உண்மை.” என்றாள் லேசான வருத்தம் கொண்டு.
“பட் நீ பழகறது தப்பில்லை… இந்த ஷாலினி… ராவணனுக்கு ரூட் போடுறா. அவனையே சுத்தறா. அதான் பக்குனு இருக்கு” என்று ரோஸ்லின் சிடுசிடுக்க, “நீ ராவணனுக்கு ரூட் போடும் போது அவளும் போட்டிக்கு இருக்கட்டுமே. காம்படேஷன் இருந்தா தானே நன்னா இருக்கும்.” என்று சிரித்தாள் காருண்யா.
“என்ன ரூட் போட்டு என்ன யூஸ் அழகா பேசறான். அட்ராக் பண்ணறான். இந்த பிராஜக்ட் முடியவும் லவ் சொல்லிடலாமானு தோணுது. கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்” என்றாள் ரோஸ்லின்.
“நோக்கு பெரிய கும்பிடு. என்னை ஆளை விடு தாயி. எங்காத்துக்கும் அவா ஆத்துக்கும் நடுவல சுவர் மட்டும் தான். அப்படியிருக்க மாமிக்கிட்ட அடிவாங்க வச்சிடாதேள். மாமி ரொம்ப நல்லவா. என் மேல மதிப்பு வச்சிண்டு இருக்கா. அதை கெடுத்து விட்டுடாதேள். எதுக்கும் ‘மாமியிடம், ‘மாமி.. மாமி.. ராவணனை எங்க ஆபிஸ்ல எல்லாம் ஜோள்ளு விடறா’னு சொல்லி வைக்கறேன்” என்று சிரித்தாள் காருண்யா.
“போடி” என்று ராவணனை தீவிரமாக பார்த்து ரசித்தாள் ரோஸ்லின்.
அதன்பின் தினமும் வேலையில் அதிக கவனத்துடன் குழுவாக வேலையில் நேரம் சென்றது.
காருண்யா வாழ்வில் இரவு தூங்கும் முன் ஹரன் பேசுவான். ராகவி, இந்துவிடம் எப்பவும் போல சிறிது பேசி கடப்பாள்.
அலுவலகம் வந்ததும் ரோஸ்லின், ராவணனுடணும் பேசி வேலை செய்யவும் நேரம் சரியாக இருந்தது.
பத்து பேரிடமும் வேலைகள் பகுத்து கொடுத்து செய்யும் மேலிடத்தில், ராவணன் வழிநடத்துவதில் இருந்தான்.
ஷாலினி சில நேரம் ராவணனுடன் நெருக்கமாய் பேச, போட்டிக்கு ரோஸ்லினும் அங்கே இருப்பதை தாமதமாய் கவனித்தாள்.
அதெல்லாம் ராவணன் அழகாக வேலை பற்றி மட்டும் பேசி கையாண்டு அனுப்புவான்.
தனியாக பேசி சிரிப்பதை கவனமாய் தவிர்த்தான். அவன் வேலை என்றால் இப்படி மாறிடும் சுபாவம்.
இப்படி இருந்த தருணம் ஷாலினி விதவிதமான அசைவ உணவை கொண்டு வந்து ராவணனுக்கு தானே சமைத்ததாக கொடுத்தாள்.
அசைவம் சாப்பிடும் இடத்தில் காருண்யா இருக்க மாட்டாள். அதனால் சில நாட்கள் ராவணனை தவிர்க்க வேண்டிய சூழலில் காருண்யா விலகினாள்.
இப்படியாகும் பட்சத்தில் சில விஷயம் குறுகிய நாளில் செய்ய மெனக்கெட்டு பரபரப்பாய் மாறினார்கள்.
காருண்யாவையும் இதற்கிடையே ஹரனின் தாய் தந்தையர் ஒரு காபி ஷாப்பில் பார்த்து பேசி சென்றார்கள்.
அதற்கும் ஹரன் “என் தோப்பனாருக்கும் எங்கம்மாவுக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னாள். நீ வைர விக்கிரகம் மாதிரி இருந்தேன்னு வாய் ஓயாம புகழறா. அந்த அம்பாளே நம்மாத்துக்கு மாட்டு பொண்ணா வரப்போறாடானு சீக்கிரம் வான்னு சொன்னாங்கோ.” என்று பூரித்தான்.
“ம்ம்.. மாமா மாமி நன்னா பழகினா. பேசறதும் உங்களை மாதிரியே. ஒரே பிள்ளையாண்டாளா போச்சு மக மாதிரி பார்த்துக்கணும்னு பூவெல்லாம் வச்சா. நான் காலில் விழுந்து சேவிச்சேன். ஆசிர்வாதம் பண்ணாள். உங்காத்துல யாரோ பெரிய மாமா ஒருத்தரிடம் கலந்து பேசி அவர் வந்து என்னை பார்த்துட்டா அடுத்து பத்திரிக்கை கூட அடிச்சிடலாம்னு பேசிண்டு இருந்தா.” என்று கூறவும் ஹரனும் “ஆமா அவா கொஞ்சம் நிறைய எதிர்பார்ப்பா. சாட்டிஸ்பேக்ஷன் பண்றது சுலபமில்லைன்னு அப்பா சொல்வா. ஆனா உன் போட்டோ பார்த்து சம்மதிச்சிட்டார். என்ன நான் பார்க்க வர்றப்ப என்னையும் அழைச்சிண்டு போன்னு சொன்னார்.” என்று கூறவும், “ஹரன் அப்படி நீங்க வந்தேள்னா முன் கூட்டியே சொல்லுங்கோ நான் சேரியாவது கட்டிண்டு வந்துடுவேன்.” என்று கூற “ம் நிச்சயமா” என்றான் ஹரன்.
“மடிசார் கட்டிய போட்டோ கேட்டிருந்தேனே, இப்ப ஒன்னு அனுப்பேன். நேக்கு பார்க்க ஆசையா இருக்கு.” என்று கேட்க, “அச்சோ... இப்பன்னு பார்த்து எதுவுமே இல்லை. எல்லாம் பழைய போட்டோவா இருக்கே. நான் செல்பி எடுத்து வைக்கற ஆளும் இல்லை. எல்லாம் பூ, நிலானு குழந்தை போட்டோனு கிடக்கும்.
ஆங்… ஆபிஸ்ல விழா வருமோன்னோ அப்ப சேலை கட்ட சொல்வா. அந்த நேரம் மடிசார் கட்டிண்டு போட்டோ எடுத்து அனுப்பறேன். தனியா கட்டிட்டு நின்னா கேலியா பேசுவா.” என்றாள்.
“ஓகே.” என்றான் பெருமூச்சுடன். போனில் எந்தளவு அறிந்து காருண்யா பேசினாள். எல்லாம் இனிதாய் சென்று கொண்டுயிருந்த சமயம்.
அன்று ராவணன் தனக்கான கணினியில் வேலையில் மூழ்கியிருந்த சமயம், அவனுக்கு கீழ், ஷாலினி, காருண்யா, ஜெயந்தும் அன்றே சில விவரத்தை மேலிடத்துக்கு செய்து அனுப்ப மெனக்கெட்டார்கள்.
அலுவலக நேரத்தை தாண்டி இக்குழுவில் வேலை தொடர்பாக நேரங்கள் நகர்ந்தது. சில மணிநேரம் கழித்து, ஜெயந்திற்கு போன் கால் வந்ததும், மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று அனுமதி கேட்டு சென்றுவிட்டான்.
ஷாலினி காருண்யா மட்டும் ராவணன் கூடவே வேலையில் சொல்ல சொல்ல மூழ்கியிருந்தார்கள். ராவணன் உதட்டிலிருந்து தன் பெயர் விழும் இந்த நேரம் தன்னிடம் பேசுவானென காத்திருந்த ஷாலினி. கணினியில் தலையை விட்ட ராவணனின் உணர்ச்சிகளற்ற முகம், எரிச்சலை தந்தது. அதற்கு முக்கிய காரணம் ‘காருண்யா காருண்யா’ என்று எதுவென்றாலும் அவளது பெயரை அழைக்க, ரெஸ்ட் ரூம் செல்வதாக எழுந்தவள், அவளை இருவரும் தேடவில்லை என்றதும், கடுப்பாகி மெதுவாக வீட்டுக்கு கழண்டு கொண்டாள்.
காருண்யா ராவணன் மட்டுமே தனியாக வேலை செய்ய நேர்ந்தது.
காருண்யாவுமே வேலையில் மூழ்கியதில் கணினியின் முகப்பை தவிர கண்ணை அங்கும் இங்கும் திருப்பவில்லை.
லேசான முதுகுவலி காரணமாக சோர்வை களைவதற்கு திரும்பிய போது ஷாலினி இல்லாததை கவனித்தாள்.
‘இவா எங்க போனா?’ என்று போனில் அழைக்க செல்லும் நேரம் குறுஞ்செய்தியில், My mother called me urgently. So I’m going. Tell this to Ravana dear. I called you two or three times, You didn’t pay attention. I’ll come quickly tomorrow morning and see to the work then. Tata bye’ என்று அனுப்பியிருந்ததாள்.
நேரத்தை பார்த்ததும் இடத்தை ஆராய்ந்தாள். “மை காட்… நாழியாயிடுச்சா… ராவணன்… ராவணா…” என்று அழைக்க, கணினியிலிருந்து தலையை திருப்பாமல், ”சொல்லு” என்றான்.
“நாழியாகுது” என்றாள்.
“சோ வாட்.. உன் கூட ஷாலினி இருக்காளே” என்று கூறினான்.
“ராவணா…மணி இப்பவே ஒன்பது முப்பது ஆகுது. ஷாலினி எட்டு மணிக்கே போயிருக்கா” என்று குறுஞ்செய்தியை காட்டினாள்.
ராவணன் கழுத்தை திருப்பி சுற்றிமுற்றி பார்வையிட, தங்கள் இருப்பிடத்தை தவிர எங்கும் இருள் சூழ்ந்திருந்தது.
”கொஞ்சம் நேரத்திற்கு முன்ன சொல்லிருக்கலாமே. ஷட்டவுன் பண்ணிட்டு போகலாம்” என்றான்.
ஷட்டவுன் செய்யும் முன் எல்லா டேப்பில் செய்த வேலையை, சேமித்து க்ளோஸ் செய்யவே கூடுதலாக நேரம் இழுத்தது.
இதில் ஹரன் போன் செய்யவும், இந்த நிஸப்தத்தில் பேசினால் ராவணனுக்கு பேசுவது அப்பட்டமாய் கேட்கும் என்று சைலண்டில் போட்டு விட்டாள்.
அவனும் விடாமல் அலைப்பேசியில் அழைக்க, கொஞ்ச நேரத்தில் வெளியே போனதும் பார்த்துக்கலாம் என்ற மிதப்பில் இருந்தாள்.
“சாரி காரு.. ஷாலினி, ஜெயந்த் இருக்காங்கன்னு நினைச்சு தான் வேலையில் மூழ்கியது. ஜெயந்த் போனது தெரியும் ஷாலினி போனது தெரியாது. உன்னை வேற உட்கார வச்சிட்டேன். மணி பத்தாகுது” என்று கூற, அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் செக்கியூரிட்டி வெளியே சாப்பிட்டுக் கொண்டுயிருந்தவர், ஆபிஸ் பூட்டியாச்சா சார்?” என்று கேட்டு சாவியை வாங்கிக் கொண்டான்.
எந்நேரமும் டே ஷிப்ட் நைட் ஷிப்ட் என்று மற்ற தளத்தில் ஆட்கள் வந்துக்கொண்டிருக்க, சிலர் நடமாடியிருந்தனர். ஆனாலும் பார்ப்பதற்கு வெறிச்சோடியே கிடந்தது.
கீழே ஏதோ ஒன்று ஓட, ‘பெருமாளே’ என்று காருண்யா கத்த, அவள் விழாமல் தாங்கிய ராவணனோ, “எலி… எலி ஓடிடுச்சு” என்று அவளை நிறுத்த உதவினான்.
“பேஷ்டா அம்பி. உனக்கு ஆத்துக்காரியா வர்ற பொண்ணோட லட்சணம். இதுக்கு தான் போன் பண்ணாம பார்க்கலாம்னு சொன்னேன். நேர்ல பார்த்துக்கோ… நீ துடியா துடிச்சியோன்னோ” என்று ஹரிஹரனும் அவரோடு சற்று பருமனாக நாமம் போட்டு பெரியவர் ஒருவரும் நின்றிருந்தார்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
ஓடுறா கைப்புள்ள… திரும்பி பார்க்காம. ரீடர்ஸ் துரத்துவதற்குள்….
Waiting for nxt epi 😍
ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 7)
நினைச்சேன்.. பெரியப்பா வராரு, அவரு பார்த்து ஓகே சொன்னாத்தான் எல்லாமே நல்லா நடக்கும்ன்னு சொன்னவுடனே, மனசுக்குள்ள
வில்லங்கம் வருதுன்னு
மணியடிக்க ஆரம்பிச்சிடுச்சு.
என்ன கேட்டா, பார்த்தவுடனே இப்படி குத்தம் சொல்றது, குதர்க்கமா பேசறவா வீட்டுக்கு வாழப்போறதை விட பேசாம வாழவெட்டியாவே இருந்திடலாம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 7)
நினைச்சேன்.. பெரியப்பா வராரு, அவரு பார்த்து ஓகே சொன்னாத்தான் எல்லாமே நல்லா நடக்கும்ன்னு சொன்னவுடனே, மனசுக்குள்ள
வில்லங்கம் வருதுன்னு
மணியடிக்க ஆரம்பிச்சிடுச்சு.
என்ன கேட்டா, பார்த்தவுடனே இப்படி குத்தம் சொல்றது, குதர்க்கமா பேசறவா வீட்டுக்கு வாழப்போறதை விட பேசாம வாழவெட்டியாவே இருந்திடலாம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 8)
நினைச்சேன்.. பெரியப்பா வராரு, அவரு பார்த்து ஓகே சொன்னாத்தான் எல்லாமே நல்லா நடக்கும்ன்னு சொன்னவுடனே, மனசுக்குள்ள
வில்லங்கம் வருதுன்னு
மணியடிக்க ஆரம்பிச்சிடுச்சு.
என்ன கேட்டா, பார்த்தவுடனே இப்படி குத்தம் சொல்றது, குதர்க்கமா பேசறவா வீட்டுக்கு வாழப்போறதை விட பேசாம வாழவெட்டியாவே இருந்திடலாம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
வந்துடுச்சி பாருங்க வில்லங்கம்
Edhirpaathen
enga vachanga pathiya twist kondu vanthu ena ethunu olunga pakama visarikama udane intha mari pesa vanthuduvanga
Appo nega periyappa ah va periya oppu ah vachi irukiga nu ippo than ah theriyuthu
Super sis nice epi 👌😍❤️ ada kadavuley endha time la edhunga en enga vandhuchunga paavam eppo enna Panna poralo🙄