தீரனின் தென்றல் – 34
Thank you for reading this post, don't forget to subscribe!தீரன் தான் அபூர்வா கேட்கும் சூப்பர் மேன் என்று கூறிய பொன்னி “அவரு தானே இந்த குழந்தைக்கு அப்பா அப்போ அவரோட விளையாடினது என்ன தப்பு…?” என்று கேட்க தென்றல் அதிர்ந்து போய் நின்றாள்.
“அம்மா… என்னமா சொல்றே? அவன் எனக்கு செஞ்ச துரோகம் எல்லாம் மறந்துட்டியா? ரூபி அண்ணா… பாருங்க அம்மா என்ன சொல்லுது?” என்று ரூபிணி குமாரை பார்க்க அவர்களும் அமைதியாக தலை கவிழ்ந்து நிற்க
“ஓ… அப்போ நீங்களும் அவன் பக்கம் சேர்ந்துட்டீங்க… இல்லையா அண்ணா… என்ன இருந்தாலும் அவன் உன்னோட ஆருயிர் தோழன்… இதோ இவளோட பாசத்துக்குரிய அண்ணன்… அப்போ நான் தனி இல்லையா?” தென்றல் கேட்க
“ஏய் ஏன்டி இப்படி எல்லாம் பேசுற? தென்றல் வேண்டாம் டி… அண்ணா மேல நீ எவ்வளவு பாசம் வச்சிருந்துந்த யோசிடி…” ரூபி சொல்ல
“ஆமாண்டி… பாசம் வைச்சேன் தான்… ஆனா என்னைக்கு என் அப்பாவை பழிவாங்க என்னோட காதலை பயன்படுத்தினதா அவனே சொன்னானோ அன்னைக்கே அந்த தென்றல் செத்துப் போய்ட்டா… இப்போ இருக்கிறது முழுக்க முழுக்க அவனை வெறுத்திட்டு நொடி கூட அவனை நினைச்சிட கூடாது னு வாழ்றவ தான்..” என்று தென்றல் சொல்ல
“தென்றல்… புரிஞ்சுக்கோ மா… அந்த தம்பி ஏதோ தெரியாம தப்பு பண்ணிடுச்சு… அதுக்கு இத்தனை நாள் அதை தனியா இருக்க விட்டு தந்த தண்டையே போதும் ம்மா.. நீயும் ஒரு பொம்பளை பிள்ளைய பெத்து வைச்சிருக்க… அதோட எதிர்காலம் என்ன ஆகும்? அதுக்காகவாவது அந்த தம்பியை மன்னிச்சு ஏத்துக்க தென்றல்…” பொன்னி கரகரப்பான குரலில் சொல்லி முடிக்க
“அம்மா… நீ எப்படி ம்மா.. இப்படி பேசுற? நம்ம அப்பா ம்மா.. அவரு இப்போ நம்ம கூட இல்லை.. அதுக்கு காரணமே அவன் தானே… அவனை நீ எப்படி ம்மா மன்னிச்ச?” தென்றல் ஆச்சரியம் போல கேட்க
“ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ தென்றல்.. உன் அப்பா அந்த ஆதீரனாலேயோ இல்ல உன்னாலேயோ சாகலை.. அவருக்கு ஏற்கனவே பிரச்சினை இருந்திருக்கு தென்றல்… ஆனா நாம வருந்துவோம் னு அவர் நம்மகிட்ட சொல்லாம மறைச்சது தான் உங்கப்பாவை காப்பாத்த முடியாம போனதுக்கு காரணம்.. பாவம் டி ஆதீ தம்பியும்.. நீயும் அவரை புரிஞ்சுக்கலை பூரணி அண்ணியும் நீ இல்லாம அவரை ஏத்துக்க தயாரா இல்ல.. சின்னதுல இருந்து கூடவே இருந்த குமாரும் உனக்காக அந்த தம்பியை விட்டு வந்திடுச்சு…
இத்தனை நாளா யாரும் இல்லாம தனியா தவிச்சிட்டு இருந்துருக்கு… நீயும் சந்தோஷமாவா இருந்த… இனியாவது நீயும் அந்த தம்பியும் சேர்ந்து பாப்பாவை நல்லபடியா வளர்க்கனும் டி… பாப்பாக்கு உங்க ரெண்டு பேரோட அன்பும் அரவணைப்பும் தேவை தென்றல்..” பொறுமையாக எடுத்துக் கூறும் வகையில் பொன்னி கூற அமைதியாக நின்ற தென்றலின் மனநிலை யாருக்கும் புரியவில்லை.
பொன்னி ஆதீரன் தான் அபூர்வா கேட்கும் சூப்பர் மேன் என்று அது பற்றி சொல்லத் துவங்கிய போதே மதன் மற்றவர்கள் அறியாமல் ஆதீரனுக்கு செய்தி அனுப்பி விட ஆதீரன் வேகமாக கிளம்பினான் இங்கு வந்து சேர…
“ஓ.. அவன் என் நம்பிக்கையை கொன்னு என் அப்பாவை அவமானப்படுத்தி இவ்வளவும் செய்வான்… ஆனா நான் அவனை எல்லாத்தையும் மன்னிச்சு மறந்து ஏத்துக்கனும்.. கேட்டா எல்லாம் குழந்தைக்காக அவ எதிர்காலத்துக்கு னு சாக்கு சொல்லுவீங்க? அம்மா… இத்தனை வருஷம் நான் தானே வளர்த்தேன் இனியும் என் பொண்ணை நானே பார்த்துப்பேன்…
எனக்கு அந்த திறமையும் தன்னம்பிக்கையும் இருக்கு ம்மா.. அப்பறம் இனியும் எனக்காக யாரும் அவனை பிரிஞ்சு கஷ்டப்பட வேண்டாம்… அவங்க அவங்க இஷ்டப்படி இருங்க… நான் என் குழந்தையை பார்த்துப்பேன்.. நானும் என் குழந்தையும் எங்காவது போயிடுறோம்…” என்று தென்றல் ஆவேசமாக பேசிக் கொண்டு இருக்க வந்து சேர்ந்தான் ஆதீரன்.
இதுவரை நடந்ததில் அபூர்வாவிற்கு ஏதோ சண்டை என்று மட்டும் புரிய மலங்க மலங்க விழித்து பயந்து போய் நிற்க சக்திக்கு மட்டும் ‘ஆதீ தானே உன் குழந்தையோட அப்பா’ என்று பொன்னி கேட்டது புரிந்து விட ஆதீரன் வந்ததும்
“ச்சூப்பர் மேன்..” என்று அபூர்வா ஓட
“ஆதீ மாமா… நீங்க தான் அப்புக்குட்டி அப்பாவா?” என்று கேட்டு நின்றாள் சக்திஸ்ரீ…
“எங்க போன நீ? உன்னை பார்க்கனும் னு சொன்னா தெட்டு சண்டை போடுறா… ஆமா… நீ என் அப்பா வா?” என்று அபூர்வா விழி விரிக்க
கண்கள் கலங்க தன் மகளின் கன்னத்தை கையில் ஏந்த கையை அருகில் கொண்டு செல்ல சட்டென்று அவளை இழுத்து தன் பின்னால் நிறுத்திக் கொண்டாள் தென்றல்.
தென்றலை நிமிர்ந்து பார்த்த ஆதீரன் “ஏன்டி.. அவ என் பொண்ணு…” என்று குரல் கமற வேதனையோடு சொல்ல
“அபூர்வா எனக்கு மட்டும் தான் பொண்ணு… இதோ பாரு உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது னு எப்போவோ சொல்லிட்டேன் நான்… திரும்ப வந்து எல்லார் மனசையும் மாத்தி என் பொண்ணையும் உன் பக்கம் இழுக்க பாக்குறியா?” என்று அவனிடம் தென்றல் கோபமாக கேட்க
“போதும் தென்றல்… நான் ஒன்னும் நீயும் குழந்தையும் வேண்டாம் னு சொல்லிட்டு உங்களை விட்டு போகலையே... இனி என்னை தேடி வரக்கூடாது னு பூமிக்கே வராத சிசு மேல சத்தியம் பண்ணி.. அதுவும் நீயா தானே சொன்ன.. அதைக்கூட நான் எனக்கு நானே பண்ண சத்தியமா எடுத்திட்டு இத்தனை நாள் உங்களை தேடி வரலையே…
ஏன்டி இந்த உலகத்துல எந்த மூளையில நீ போய் ஒளிஞ்சாலும் உன்னை ஒரு நொடியில கண்டு பிடிச்சிருப்பேன் டி… அந்த அளவுக்கு நான் உன் மேல அன்பு வைச்சுருக்கேன். ஆனாலும் இத்தனை வருஷம் உன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து தான் அமைதியா இருந்தேன். இப்போ கூட நீ எங்க இருக்க னு நான் தேடி வரலை தென்றல்…
நீயா தான் ஆஃபிஸ் க்கு இன்டர்வியூ வந்த.. அப்போ கூட உன் கண்ல நான் பட்டுட கூடாது உனக்கு கஷ்டம் தரக்கூடாது னு தானே டி இத்தனை நாள் ஓடி ஒளிஞ்சிட்டு இருந்தேன்.
ஆனா என் பொண்ணை பிரிஞ்சு என்னால இருக்க முடியல… நான் ஏன் இருக்கனும்? அபூர்வா என் பொண்ணு…” என்று ஆதீரன் தன் பக்க நியாயத்தை எடுத்து சொல்லிக் கொண்டு இருக்க கை நீட்டி தடுத்து இடை மறித்தாள் தென்றல்.
“இதோ பாரு.. அதை நினைச்சு தான் என்னையே நான் வெறுத்து அருவருப்பு பட்டிட்டு இருக்கேன்… உன்னை நம்பின எனக்கு துரோகம் பண்ணிட்டு இப்போ வந்து உன்னை நினைச்சுட்டு இருக்கேன் உனக்காக இருக்கேன் இவ என் பொண்ணு னு சொல்ற.. வெக்கமா இல்ல உனக்கு?” முகத்தை சுழித்து தென்றல் கேட்க மற்றவர்கள் இவர்கள் பேச்சில் கலக்க வேண்டாம் இவர்களே பேசி தெளியட்டும் என்று அமைதி காத்து நிற்க தென்றலின் பேச்சு அனைவருக்கும் கோபம் வரச்செய்தது.
“நான் ஏன் டி வெட்கப்படனும்? சொல்லு… நான் என்ன உன்னோட வாழ்ந்துட்டு இல்லவே இல்லை னு ஏமாத்துனேனா… ஆஹ்… அப்படி என்ன துரோகம் பண்ணினேன் உனக்கு? உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் னு சொன்னேனா? ம்கூம்..” என்று அலட்சியமாக தோளை குலுக்கி இடுப்பில் கை வைத்து மூச்சை இழுத்து விட்டான் ஆதீரன்.
“உனக்கே தெரியும் தென்றல்… நாம ஒன்னு சேர்ந்தது நாமளே எதிர்பார்க்காம நடந்த நிகழ்வு… அது விபத்து கூட கிடையாது. நான் நிகழ்வு னு தான் சொல்றேன்… ஆனா நம்மையே அறியாம நம்மோட காதல் எல்லை மீறின அடுத்த நொடி.. நீ பயந்தியோ இல்லையோ… ஆனா நான் பயந்தேன். உன்னை இந்த ஊரோ இல்ல நம்ம சொந்தமோ எதுவும் சொல்லிட கூடாது னு நான் பயந்தேன் டி… அதனால தான் அன்னைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம் னு கேட்டேன்…
ஆனா நீ தான் உன்னை நம்பறேன் உன் லட்சியத்துல தெளிவா இரு அது இதுன்னு பேசி என்னை குழப்பின… ஏய் தென்றல்… என் அப்பா பத்தி எனக்கு தெரியாது டி உன் அப்பா பத்தி என் அப்பா சாகும் போது தப்பு தப்பா சொல்லிட்டு செத்தாரு… அந்த வயசுல நான் அப்பா இல்லாம தவிக்க காரணம் மாமா னு மனசுல பதிஞ்சு அவரை பழிவாங்க கிறுக்கு தனமா பண்ணிட்டேன்.
ஆனா புரிஞ்சுக்கோ தென்றல் என் பொண்ணுக்கு நல்ல அப்பாவா நான் இருக்கனும்… என்னை இருக்க விடு தென்றல்..” வார்த்தைக்கு ஏற்ப உணர்வு தந்து கடைசியில் கையெடுத்து கும்பிட்டு மன்றாடி நின்றான் ஆதீரன்.
“ம்கூம்… உன்னை மாதிரி ஒருத்தன் என் குழந்தைக்கு அப்பா னு சொல்லறதுக்கு என் பொண்ணு அப்பன் பெயர் தெரியாதவனாவே இருந்திட்டு போகட்டும்… அலட்சியமாக தென்றல் கூறி இருக்க அந்த வார்த்தை தந்த கோபத்தை அடக்க வழியின்றி ஆக்ரோஷமாக தென்றல்…” என்று கத்திய ஆதீரன் அவளை அடிக்க கை ஓங்கி இருந்தான்.
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
Omg Sema twist. Intresting