Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-13

ஐயங்காரு வீட்டு அழகே-13

அத்தியாயம்-13

Thank you for reading this post, don't forget to subscribe!

   மதியம் சாப்பிடும் நேரம் காருண்யா தனியாக செல்பவளை ”தனியா ஒடினா எப்படி? அனவுன்ஸ் பண்ண வேண்டாம். அப்பறம் ஏன் தனியானு கேள்வி வரும்.” என்று நிற்க வைக்க, சிலை போல அசையாமல் நின்றாள்.

  “ஹேய் காய்ஸ்.. உங்களுக்கு எல்லாம் ஒரு விஷயம் சொல்லணும். எனக்கும் காருண்யாவுக்கும் இருபது நாள்ல மேரேஜ். கொஞ்சம் கிரிட்டிகல் சிட்டுவேஷன், மேரேஜ் டிக்ளர் ஆகிடுச்சு. இது எங்க கல்யாண பத்திரிக்கை. மறக்காம வந்துடுங்க” என்று அங்கிருந்தவர்களிடம் கூறி, இருவரும் பத்திரிக்கையை தந்தார்கள்.
 
  கைக்குள் அடங்கும் வகையில் சிறிதாக அழகாக வடிவமைக்கப்பட்ட பத்திரிக்கையை தர, ஆளாளுக்கு வாய் பிளந்து, பேச்சிழந்து வாங்கினார்கள்.

  ரோஸ்லினோ “காருண்யா… சொல்லவேயில்லை” என்றாள்.
  “ஏற்கனவே மேரேஜ் டிராப்பாகி ராவணனோட பேசப்பட்டது சொன்னேனே.” என்றாள்.
“அடியேய்… அது வேற. ராவணனோட மேரேஜ் ஆகறதை சொல்லலையே.” என்று ஆச்சரியப்பட்டாளும் கட்டியணைத்து வாழ்த்தினாள்.

“நான் சைட் அடிச்சது எல்லாம் பெரிய மேட்டரா எடுத்துக்காதே. ராவணன் குட் பெர்ஸன்” என்று பெருமை பேச, காருண்யாவுக்கு எரிச்சலாக இருந்தது.

  ஆளாளுக்கு “ஏய் அப்ப ட்ரீட் எப்போ?” ”ப்ரோ… பேட்சுலர் பார்ட்டி எப்போ?” என்று கத்த, பேட்சுலர் பார்ட்டி என்றதும் காருண்யா ராவணனை குறுகுறுவென பார்த்தாள்.

“காய்ஸ் காய்ஸ்… நாளைக்கு ஆப்டர்நூன் லஞ்ச் என்னுடையது. உங்களுக்கு என்ன மெனு வேண்டுமோ என் வாட்சப் மெஸேஜுக்கு செண்ட் பண்ணுங்க. நாளைக்கு எல்லாம் ஆர்டர் பண்ணிடலாம்.” என்றான்.
 
என்னவோ செய்து தொலை என்பது போல சாப்பிட அமர்ந்தாள். ஷாலினியோ மெதுவாக கண்ணீரை துடைத்து, ”நான் உன்னிடம் பிரப்போஸ் பண்ணலாம்னு நினைச்சேன். மை பேட் லக். எனிவே கங்கிராட்ஸ்” என்று ராவணனை பார்த்து ஏக்கமாகவும், காருண்யாவை பார்த்து பெருமூச்சை வெளியிட்டு நகர்ந்தாள்.

“மூதேவி மூதேவி அன்னிக்கு கூடவே இருந்திருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது. நைஸா அன்னிக்கு ஓடிட்டு பிரப்போஸ் பண்ணலாம்னு நினைச்சாளாம்.” என்று ஷாலினி சென்றதும் முனங்க காருண்யா செவியில் எட்டியது. லேசாக சிரிப்பு வந்தாலும் ராவணன் ஷாலினியை ‘மூதேவி’ என்று திட்டும் போது சிரித்து விடாதே என்று கட்டுப்படுத்திக் கொண்டாள்.

  விரைவாக சாப்பிட்டு எழுந்து விட்டு நடந்தாள். முன்பாவது இங்கிருப்பவர்களுக்கு யாருக்கும் தங்களுக்கு நடந்த விஷயம் தெரியாது. அதனால் ஆளுக்கொரு திசையில் சென்றால் கண்டுக்கொள்ள மாட்டார்கள். இனி அப்படியா? இவன் சாப்பிட்டு முடிக்கும் முன் அவள் செல்கின்றாளே?

  ரோஸ்லின் எழுந்துக்கொள்ளாமல், “ரொம்ப பெரிய பிரச்சனையா ஆகிடுச்சா ராவணன். முகம் தூக்கிட்டு போறா” என்று கேட்டாள்.

  காருண்யாவை பார்த்தபடி “உங்களுக்கு தெரியாததா. அந்த ஹரன் அரைமண்டையன் அவனோட மாமானு ஒருத்தன். இரண்டு பேரும் அங்க ஊர்ல இஷ்டத்துக்கு லவ் பண்ணி ஒன்னா இருந்ததா கதை திருச்சி விட்டாச்சு. எனக்கே கில்டி பீலிங்க்ஸ் ஆகுது ரோஸ்லின். என்னவோ எங்களை இந்த நிலைக்கு இப்ப தள்ளிடுச்சு” என்று டிபன் பாக்ஸை மூடி குப்பையில் போட்டான்.‌

     அதற்குபின் வந்த நாட்கள் எல்லாம் காருண்யா ராவணன் பேசுவது கிடையாது. ஆனால் இருவரின் விழிகளும் சந்திக்கும் போது ஒரு அவஸ்தை உண்டானது.
  
  அதிலும் பக்கத்தில் வேறு அமர்ந்திருந்தவன், காருண்யாவகன் கண் காது மூக்கு என்று அளவெடுத்து பார்வையிட, நட்பை தாண்டி வேறொரு கோணத்தில் அவனால் பார்க்க முடியவில்லை‌.

  காருண்யாவுக்கு எப்படியோ முதுகை துளைக்கும் பார்வையை ஊர்ந்துவிட்டாள் திரும்பி பார்க்க ராவணன் எப்பவும் போல மறுபக்கம் திரும்பினான்.

  காருண்யாவுக்கே இடத்தை மாற்றினால் நல்லதென்று தோன்றியது. ஆனால் யார் மாற்றுவது.
 
  ஏதோ திருமண நாள் வருவதால் விடுமுறையை கூறிவிட்டு செல்ல தயாரானாள். அவள் மட்டும் செல்கின்றாள். அவன் கல்யாணத்திற்கு இரண்டு நாளுக்கு முன் வருவதாக கூறினான்

    அவளை பொறுப்பாக வழியனுப்ப ரோகிணி உரைத்திருக்க, ராவணனும் ஹாஸ்டலுக்கு வெளியே காத்திருந்தான்.

  “சாராதக்கா… எங்கல்யாணத்துக்கு வந்துடுங்கோ. மறந்துடாதேள்… ராகவி நோக்கும் தான்‌. மறந்தே போச்சுடின்னு காரணத்தை சொல்லாதேள். இந்து நீயும் வந்துடு.” என்று வாசலுக்கு சென்றாள்.

அங்கே கடிகாரத்தை பார்த்து பார்த்து, ராவணன் சலித்துக் கொண்டிருந்தான்.

  “இது தான் ராவணனா?” என்று ராகவி சுட்டிக்காட்டி கேட்க, “ம்ம்” என்றாள் சோகமாக.

“ஆள் நல்லா வாட்டசாட்டமா தான் இருக்கான். அதான் ஹரனுக்கு அள்ளுவிட்டிருக்கு.” என்று இந்து கூற, காருண்யா முறைக்கவும், சாராதக்காவோ, பின்னாலே வந்தார்.

“அம்மாடி வீட்ல கொழுக்கட்டை செய்தேன். போறப்ப பசிச்சா சாப்பிடு” என்று தந்தார். சாராதாவிடம் ராவணனை அறிமுகப்படுத்தும் இக்கட்டில் காருண்யா இருந்தாள்.

   சாரதாவிடம் “அக்கா… ராவணன்.” என்று சுட்டிக் காட்ட, “இந்த தம்பி தானா… ரொம்ப நல்லா இருக்கார்.” என்று சிரிக்க, அவனும் பதிலுக்கு புன்னகைத்தான்.

  “கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடுங்க அக்கா” என்று அவனும் கூறி விடைப்பெற்றனர்.

   கேப்பில் முன்பக்கம் ராவணனும் பின்னால் காருண்யாவும் இருந்தார்கள். காருண்யாவுக்கு ஓவென்று அழலாம் போலயிருந்தது. ஆனால் அடிக்கடி தன்னை கண்ணாடியில் சலனமின்றி பார்க்கும் ராவணன் இவள் அழுதால், ஏன்? என்ன? என்று எரிச்சலோடு கத்த ஆரம்பிக்கலாம்.
   
  ஏற்கனவே ஹரனோடு நின்று போன திருமணம் போல,  மீண்டும் ராவணனோடு திருமணம் தடைப்பட்டால், தந்தையின் நெஞ்சு வெடித்து விடும். அவளுக்கு திருமணம் என்றதும் தந்தைக்கும் பாட்டிக்கும் நிறைவாய் கடமை முடியட்டும் என்று எண்ணினாள்.
ஹரனிடம் பேசும் போது ஏதோ நிறைவாக தான் சென்றது.
ஹரனோடு திருமணம் நின்று போனதும் உடனடியாக அதே திருமண முகூர்த்ததில் ராவணனோடு பேசி முடித்ததில் தான் கலங்கிவிட்டாள்.
  இப்படி தான் வாழ்க்கை அமைய வேண்டுமா? என்று மனம் கணத்தது.

  “காருண்யா.. இறங்கு” என்று தோளை தீண்ட, நினைவு களைந்து காரிலிருந்து இறங்கினாள். அவன் தீண்டிய கையை கர்ச்சீப் கொண்டு துடைத்தாள்‌. 

   பணத்தை தர வேகமாய் பர்ஸை எடுக்க, அதற்குள் கார் கிளம்ப ஆயத்தமானது.
  “நான் அப்பவே பே பண்ணிட்டேன்.” என்று ராவணன் உரைக்க, “நேக்கு எதுக்கு நீங்க தர்றேள்” என்று சிடுசிடுவென கேட்டாள்.‌

  “ம்ம்ம் வேண்டுதல்… தயவு செய்து எதுவும் பேசாம பஸ்ல ஏறுறியா?” என்று எரிந்து விழுந்தபடி, பேருந்து ஒன்று நின்றிருக்க கைகாட்டினான்.

  அவள் செல்ல வேண்டி பேருந்து என்றதும், அவனையும் பேருந்தையும் பார்த்து மெதுவாக நடந்தாள்.

  என்ன நினைத்தாளோ, “நீ எப்ப வர்ற?” என்று கேட்க, வானத்தை பார்த்து ”மழை வரும் போல… நார்மலா ஏதோ கடமைக்கு பேசறதை தாண்டி முத்து மாதிரி வார்த்தை உதிர்த்துட்ட” என்றான் எள்ளலாய்.

காருண்யா முறைக்கவும், “உனக்கு தான் சாஸ்திரம் சம்பிரதாயம் என்று உங்க பாட்டி கூப்பிட்டாங்க. எனக்கு என்ன வேலை இருக்கு? பேட்சுலர் பார்ட்டி முடிந்ததும் வருவேன்” என்றான் சாதாரணமாய்.

  “பேட்சுலர்.. பார்ட்டினா… குடிப்பேளா?” என்று கேட்டாள்.
 
  ராவணனோ இடையில் கை வைத்து முறைக்க, படிக்கட்டில் ஏறினாள்.

முன்பு வந்தது போலவே ஏசி பஸ், ஜன்னல் பக்கம் கண்ணாடி டோரும் திரைசீலையும் இருக்க அங்கு வந்தாள்.
  ஏசி இன்னமும் ஆன் செய்யாமல் இருப்பதை அறிந்து, கதவை திறந்து ராவணனை தேடினாள்.

‘இங்க தான் இருக்கேன்’ என்பது போல வந்தான். அவன் உயரத்திற்கு அவள் விழியில் அகப்பட்டான்.

   அதற்குள் காருண்யா பக்கம் யாரோ ஒரு இளைஞன் பையை வைத்து செல்ல, “பக்கத்துல ஆம்பளையா” என்று தலையில் கைவைத்தாள்.

  அவளது முனகலில் “ஏ… எந்த காலத்துல இருக்க? பஸ்ல தனியா வர்றப்ப இதெல்லாம் நடக்கறது தான். பொண்ணு பக்கத்துல பொண்ணு, ஆம்பள பக்கத்துல ஆம்பளனு சீட் புக் பண்ணும் போது இருந்தாகணும்னு அவசியமில்லை. சட்டுனு நீ
புக் பண்ணும் போது என்ன பண்ணறதாம்? அதோட பசங்க எப்பவும் பொண்ணு பக்கத்துல உட்கார்ந்தா தப்புன்னு நினைக்கறதும், ஏதாவது அசம்பாவிதம் நடக்குமானு பயப்படறதை நிறுத்து.

  உண்மையில பசங்க பக்கத்துல வயசு பொண்ணு இருந்தா, கை பட்டுடும்னு உங்களை விட பயந்து பயந்து ஒதுங்கி போறது நாங்க தான். லேசா ஏதாச்சமா கை உரசினாலும் ‘பொறுக்கி பட்டம்’ தந்துடுவிங்களோனா பகிர்னு இருக்கும். அதனால ஓவரா ரியாக்ட ஆகாம நார்மலா இரு.” என்றுரைக்க, காருண்யா அதிருப்தியாய் தலையாட்டினாள்.

  அதே நேரம் பக்கத்தில் அந்த பையனும் வர, “பாஸ்… இவங்க வாமிட் கேஸ்… ஜன்னல்ல உட்கார வைக்கறிங்களா” என்று ராவணன் கேட்டான்.

“ஓகே ப்ரோ” என்றான் அவனும்.

  “தேங்க்ஸ் ப்ரோ… காரு… வாமிட் வந்தா அன்னைக்கு மாதிரி பஸ்ல இருந்து ஓடி வந்து எடுக்காத. இது யூஸ் பண்ணு’ என்று கவர் பை ஒன்றை தந்தான்.
  அதோட “இது சாண்ட் வெஜ் கூல் டிரிங்க்ஸ், வாட்டர் பாட்டில்‌” என்று தரவும் பெற்றுக்கொண்டாள்.

   ராவணன் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு, “அங்க ரீச் ஆனதும் மெஸேஜ் பண்ணு. நீ சொல்லலைன்னாலும் எங்கம்மா சொல்லிடுவாங்க” என்றவன், ‘இன்னும் ஒரு வாரத்தில் இவள் என் மனைவி’ என்று மெதுவாக ஏறிட்டான்.
 
  அவளுமே, ‘அடுத்த வாரம் எல்லாம் கல்யாணமாகிடும்மா?’ என்று அவனை கவனிக்க, இருவரது பார்வையும் முதல்முறை கலந்துக் கொண்டிருக்கும் தருணம், “ஜன்னல் எல்லாம் லாக் பண்ணுங்க. ஏசி ஆன்‌பண்ணி விடணும்.” என்று குரல் கேட்க, ஜன்னல் கதவை தாழிட்டாள்.
  ராவணனோ கஷ்டப்பட்டு மென்புன்னகை சிந்தி கையாட்டினான். அடுத்த வினாடியே பஸ் புறப்பட்டது.

   காருண்யா தலையை நன்றாக சாய்த்து ரோட்டை வெறித்தாள். லேசாக கண்ணீர் வழிய, கைக்குட்டையால் துடைத்தாள்.

   பக்கத்தில் வேறு ஆடவன் என்றதும் திரும்பவே யோசித்தாள்.
  இதுபோல தானே ராவணன் அன்று இருந்தான் என்றதும் தன்தலைவிதியை நொந்தபடி மெதுவாக திரும்பினாள்.

“என்ன சிஸ்டர் கம்பர்டபிளா இல்லையா?” என்று கேட்டான் ஆந்த ஆடவன்.
 
  “அதெல்லாம் ஒன்னுமில்லை.” என்றவள் திரும்பினாள்.  

  “அவர் உங்க லவ்வரா?” என்று கேட்டான். காருண்யா உடனடியாக மறுக்கும் விதமாக, “சேசே இல்லை. நேக்கும் அவருக்கும் அடுத்த வாரம் விவாஹம் நடக்க போகுது.” என்றாள்.

  ”ஓ… சூப்பர்ங்க.. வாழ்த்துகள். ரொம்ப நல்ல கேரக்டரா தெரியறார்.
சாரிங்க.. அவர் பேசியதை எதச்சையமா கேட்டேன். உங்க பயம் கரெக்ட். யாரோ ஒருத்தர் பக்கத்துல உட்காரணும். ஆனா பாய்ஸ் நாங்க ஒரு பொண்ணு பக்கத்துல இருந்தா கூடுமானளவு கண்ணியமா தான் இருப்போம்‌. சபல கேஸுங்க வேண்டுமின்னா தப்பா நடக்கலாம். நீங்க கல்யாணம் செய்யற பையன் ரியலி குட் சாய்ஸுங்க” என்று ராவணனின் பேச்சை வைத்து பாராட்டினான்.

  “அவா நல்லவா தான்.” என்றவள், பேச்சடைத்தது. அதனால் தானே ஹரனோடு நின்ற திருமணத்திற்கு ராவணன் வாழ்வும் பலியாகின்றாது.‌

“உங்க பேச்சு ஐயர் பாஷையா இருக்கு. அவர் பார்க்க ஐயரா தெரியலை. இதுல லவ் மேரேஜ் இல்லைன்னு சொல்லறிங்க” என்று கேட்டுவிட்டு, “சாரி சிஸ்டர்… ஏதோ ஆர்வகோளாறுல கேட்டுட்டேன்” என்றான்.‌

“அவா எங்க பக்கத்து ஆத்துல இருக்கறவா. நாங்க காதலிக்கலை. ஆனா… சூழ்நிலை என் தோப்பனாரும் அவா தோப்பனாரும் விவாஹம் பேசி சேர்த்து வைக்குறாங்க.” என்றவள் உடனடியாக கண்ணீர் ததும்ப, முகத்தை திருப்பி கொண்டாள்‌.

   அதன் பின் அழுவதை நிறுத்தி, கண்ணாடி ஜன்னலில் வேடிக்கையில் பார்த்தாள்.

  அருகிலிருந்தவனோ, காதில் ஹெட்செட் வைத்து பாடலை கேட்டான். நடுவில் போனில் கிரிக்கெட் பார்த்தான். எதையும் காருண்யா கவனமின்றி திரும்பி
இருந்தாள்.

பஸ் நடுவே நின்ற நேரம் பக்கத்திலிருந்த பையன் இறங்கிட, ராவணன் தந்த சாண்ட்வெச் எடுத்து சுவைத்தாள்.

  தண்ணீரை குடித்துவிட்டு கண்ணாடி ஜன்னல் பக்கம் சாய்ந்துவிட்டாள்.
    ராவணன்… அவன் தான் எனக்கானவனா?’ என்று நிதர்சனத்தை ஏற்க பிரம்மாயத்தம் செய்துக்கொண்டிருந்தாள். 

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

11 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-13”

  1. Dharshini

    Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 kaiya thotadhukey thodaikurala🙄 appo marriage aanadhuku apparam enna pannuvalo kadavuley evanga renduperaium onnu serthidu pa🙏🙏🙏

  2. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 13)

    அந்த ஹரனும் அவனோட பெரியப்பாவும் பண்ண கிறுக்குத்தனத்துக்கு, இந்த ராவணன் என்ன பண்ணுனான். யார் மேலேயோ இருக்கிற கோபத்தை, யார் மேலேயோ காட்டிற மாதிரி இருக்குது. ஒருவேளை, இந்த ராவணன் தான் இந்த ஜன்மத்துல இவளுக்கு ஏத்த மணாளனோ என்னவோ..?
    அதான், எல்லாம் எழுதி வைச்சான் மாதிரி நடக்குது.
    எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்கலைன்னா, கிடைச்ச வாழ்க்கையை வாழ்ந்துட்டு போக வேண்டியது தான்.
    அதைவிட்டு, இப்படி ரெண்டாங் கெட்டத்தனமா தவிச்சிட்டேயிருந்தா… வாழ் வாழ்க்கைக்கும், வாழறதுக்குமே அர்த்தமில்லாம போயிடும்.

    Think before you to live Karunya.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Kalidevi

    ena ninachi feel panra karu vidu mathavanga sonnatha vachi mudivu edukuran un kitta ena achi nu kekala avana pathi ethuku yosikura periyavanga sonnatha thana ethukitta un life nalla irukum ivana eppadi ethir padrathunu yosikama ravanan kuda nalla vazhvom ninai karu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *