Post Views: 27
- ஆசை வெட்கமறியாது.
- ஆசைக்கு அக்காவைக் கட்டி கொஞ்சுறதுக்கு கொழுந்தியாவைக் கட்டிக்கிட்டானாம்..
- ஆட்டுக்கு வால் அளந்து வைத்திருக்கு.
- ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில மனுசனைக் கடிச்ச கதைமாதிரி..
- ஆடத் தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.
- ஆடத் தெரியாதவளுக்குக் கூடம் போதாதாம்.
- ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்
- ஆடு பகையாம். குட்டி உறவாம்.
- ஆபத்துக்குப் பாவமில்லை.
- ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
- ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன். (மருவி ஆயிரம் பேரைக் கொண்டவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றது)
- ஆரால் கேடு, வாயால் கேடு.
- ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
- ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
- ஆழமறியாமல் காலை இடாதே.
- ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
- ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
- ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
- ஆளைக் கண்டால் நரி ஆசனம் போடுமாம்.
- ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
- ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
- ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
- ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
- ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
- ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
- ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
- ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
- ஆனைக்கும் அடிசறுக்கும்.
- ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
- ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே, கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே.