மனம் உன்னாலே பூப்பூக்குதே
மனம் உன்னாலே பூப்பூக்குதே கதை செம சூப்பர் கதையின் கரு கல்யாணம் ஆனப்பின்பு பின் பெண்களின் நிலை கணவனின் பொறுப்பு எல்லாவற்றையும் அழகாக எழுதியது ... கல்யாணம் ஆனதும் பெண்கள் கணவன் குடும்பத்தில் ஒத்து போக சில காலம் எடுக்கும் அவளின் நிலையை புரிந்துக் கொள்ளாமல் அவளுக்கு கஷ்டங்களை குடுக்கும் மாமியார் கணவன் அந்த பெண்னின் மனநிழமையை புரிந்து கொண்டு இருப்பது அவனின் ஓரு சிறு தவறுங்களால் அவள் படும் கஷ்டம் அழகாக கூறியது சூப்பர். .. கர்ப்பானதுக்கு அப்பறம் அவளின் ஹார்மோன் மாற்றம் அவளின் மனமாற்றங்களை புரிந்துக் கொள்ளாமல் இருப்பது அவளின் பிரசவ வலியை பார்த்து தன்னோட தவறுகளை புரிந்துக் கொண்டது சூப்பர்
இறுதியின் மாமியாரின் தவறுகளை புரிந்துக் கொண்டு அவரை மன்னித்து குடும்பம் உடையாமல் பார்த்துக் கொள்ளும் மருமகளாக ஆருத்ரா செம... இறுதியின் தன் தவறுகளை புரிந்துக்கொள்ளும் மாமியார் அருமை ...
மீராவின் அறிவுரை சிறந்த நட்புக்கு உதாரணம்... மனைவியின் நிலையை லேட்டாக புரித்துக் கொண்டாலும் அவளை எங்கேயுமே விட்டுக் கொடுக்காமல் இருக்கும் கோகுல் சூப்பர்
மருமகளை மகளாக பார்த்து தன் சொத்த மகனையும் மனைவியையும் கண்டிக்கும மாமனார் சூப்பர் ....
Leave a reply
- 143 Forums
- 2,637 Topics
- 3,146 Posts
- 5 Online
- 2,160 Members
