பிரியமானவளின் நேசன்
பிரியமானவளின் நேசன்
கதை கருநாய்களை வெறுக்கும் நாயகன் அவற்றை பாசமாக பார்க்கும் நாயகி இருவருக்கும் நடக்கும் திருமணம் அவர்களின் புரிதல் இறுதியின் அவனின் நினைப்பை மாற்றுவது செம
நாயகனின் சில நடவடிக்கைகள் புதிராக இருக்க அவற்றை கண்டுபிடித்து அவன் எதனால் நாய்களை வெறுக்கிறான் என்பதை தெரிந்துக் கொண்டு அவனை மாற்றி இருவரும் இணைந்தது அவனுக்க அவற்றின் பாசத்தை புரிய வைத்து காதலிக்கிறாள் நாயகி செம சூப்பர். . அவளின் திறமைகளை நண்பர்களோட சேர்ந்து சாதிப்பது சூப்பர். ...
ருத்ரனின் நிலையை அழகாக கையாளும் போது பிரியவாகினி செம... அழகான குடும்பம் அருமையான வாழ்வு சூப்பர்
அனுஷா டேவிட் டின் பிரியமானவளின் நேசன் எனது பார்வையில். பிரியவாகினியின் மற்றும் நேசன் இருவரின் திருமணம் பெரியோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நடக்கிறது. பிரியாவிற்கு பிராணிகள் மீதான நேசம் தான் வளர்க்கும் நாய்களை குடும்பத்தினராக நேசிக்கிறாள். ஆனால் நேசன் நாய்களைக் மிகவும் வெறுக்கிறான். இந்தக் கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் சில பிரச்சினைகள் வருகிறது. உயிரினங்களின் மீது பாசம் வைத்திருக்கும் பிரியா நேசனின் பிராணிகளின் மீதான வெறுப்பிற்கான காரணங்களை கண்டறிந்தாளா அவனை மாற்ற முடிந்ததா என்பதை விறுவிறுப்பாகத் தந்திருக்கிறார். அனுஷாவிற்கு நாய்கள் மீதான நேசத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறார். வாழ்த்துகள் மா.
Leave a reply
- 143 Forums
- 2,637 Topics
- 3,146 Posts
- 6 Online
- 2,160 Members
