கானல் பொய்கை
கானல் பொய்கை - Mark 4
கதையை தொடங்கி முடிக்கும் வரைக்கும் வைக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பாக இருந்தது. இன்னைக்கு எத்தனையோ பேர் கானல் பொய்கைல தான் மூழ்கிட்டு இருகாங்க.
கதையை பொறுத்தவரை நிஜத்தில் நடப்பதை நச்சுனு சொல்லி இருகாங்க.
ஒரு தம்பதியர் சைக்கியாட்ரிஸ்ட்ட பாக்க போற சீன்தான் ஆரம்பம். நடப்புல அப்படி போனா பைத்தியம்னு முடிவு கட்டிருவாங்களே.
தன் மனைவி மேல அன்பா இருக்கும் பாலா அவளுக்கு இப்படி ஒரு மனநோய் இருப்பது தெரிய வரும் போது வெறுத்து ஒதுக்கி வார்த்தைகளை முள்ளாய் கடித்து துப்பும் போது கோவமும் கண்ணீரும் வந்தது. பாரதி பாவம் ஆனாலும் தன்னை மீட்டெடுக்க அவள் மேற்கொண்ட முயற்சிகள் சூப்பர். இருவரும் இணைந்தார்களா பிரிந்தார்களா என்பதை கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். சின்ன வருத்தம் அவன் அவ்வளவு பேசியதுக்கு இவள் பதிலடி கொடுக்கலேயேனு.
எக்ஸ்ட்ரீம் ரொமான்ஸ் கதைகளை எழுதினா சட்டப்படி ஆக்ஸன் எடுக்கலாம் மக்களே அதுக்கு சைபர்ல கம்ப்ளைண்ட் பண்ணா போதும் ( சைபர்ல கம்ப்ளைண்ட் பண்றதை பற்றி தீரா காதலே கதையில் இருக்கும் யூஸ் பண்ணிகோங்க) னு அருமையான தகவலை சொல்லி இருகாங்க கண்டிப்பா பியூச்சர்ல உபயோகபடும். எழுத்துலக அரசியலின் ஆழத்தை கண்டு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் தான்.
ஆணோ பெண்ணோ ஒழுக்க விதி ரெண்டு பேருக்கும் பொருந்தும். ஆண் என்றால் வயசு கோளாறு பெண் என்றால் ஒழுக்க கேடுனு சொல்ற சமுதாயம் எப்ப மாற போகிறதோ. இதுல பெண்களும் வீடியோஸ் பாக்ராங்கனு சோன்னது எனக்கு ஷாக் தான்.
எழுத்து நடை ரொம்ப நல்லா இருந்தது. தெளிவான விளக்கம் அழகான காதல் கதையுடன் நிறைவான முடிவு. போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Leave a reply
- 135 Forums
- 2,128 Topics
- 2,397 Posts
- 3 Online
- 1,445 Members