Skip to content
கௌசல்யா முத்துவேல் ...
 
Share:
Notifications
Clear all

கௌசல்யா முத்துவேல் review for துஷ்யந்தா... ஏ... துஷ்யந்தா

1 Posts
1 Users
0 Reactions
175 Views
Site-Admin
(@veenaraj)
Member Author Access Registered
Joined: 2 years ago
Posts: 466
Topic starter  

விமர்சனம் வழங்கியவர்: கௌசல்யா முத்துவேல்

#Gowsireviews
 
துஷ்யந்தா... ஏ... துஷ்யந்தா
பிரவீணா தங்கராஜ் 
 
திருமணத்தில் தொடங்கி மறுமணத்தில் முடியும் கதை!!.. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பெரிய கதை படிச்சேன்!!.. ஆனால் முடியும் போது இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுட்டேன்னு ஃபீல் கொடுத்த கதை!!!... ஆரம்பத்தில் இறுதி வரை அடுத்த என்ன அப்படின்ற சுவாரஸ்யமும், எதிர்பார்ப்பும் குறையவே இல்லை!!!.. கற்பு ஆணுக்கும் உண்டுன்னு கொடுத்த விளக்கம், மறுமணம் பன்னிக்கோன்னு சொன்னப்போ அவன் கேட்ட வார்த்தை, இயல்பா வரும் கோவம், ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லைன்னு போடும் சண்டை, ஆனாலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பது!!.. இது எல்லாமே ரொம்ப இயல்பா, அழகா கதையோட்டத்தோட பொருந்தி போயிடுச்சு!!.. முக்கியமா தாத்தா கடந்த காலத்தை சொன்னது எனக்கு ரொம்ப பிடித்தது!!.. ரொம்ப இயல்பா இருந்தது!!.. ஒவ்வொரு முரணான செயல்களும், அதற்கான விளக்கமும், அதை கொடுத்த இடமும், விதமும் அசத்தல்!!.. விளக்கம் கொடுத்து புரிய வைக்குறது விட தானா புரிஞ்சுக்கனும்னு நினைச்ச காதல், அவனோட கன்னியம் ரொம்பவே மனதை கவர்ந்தது!!.. எதிர்பாரா நேரத்தில் கொஞ்சம் கூட யூகிக்கவே முடியாத ட்விஸ்ட்!!!.. இது எப்போடா நடந்ததுன்னு ஷாக்கான மொமென்ட்!!.. நிஜமாவே நீங்க யோசித்து கொடுத்த விதம் வேற லெவல்!!.. அவளோட தைரியமும், மன அழுத்தமும் ரொம்ப ரொம்ப பிடித்தது!!.. ஒவ்வொருத்தருக்கும் பார்த்து பார்த்து செய்யும் அவனோட குணம் அவ்வளவு பிடித்தது!!.. மியா பார்ட் சூப்பர் சூப்பர்!!.. விக்னேஷ், தர்மாவோட பார்ட் நான் ரொம்பவே என்ஜாய் பன்னேன் கா😂😂!!.. அதுவும் ரெண்டு பேரும் சேர்ந்து இன்பாவை கடைசில வச்சு செய்யுறது குபீர் சிரிப்பு மொமென்ட்!!.. விதுரகதி யோட நிமிர்வு ரொம்ப பிடித்தது!!!.. மொத்தத்தில் ரொம்ப ரொம்ப என்ஜாய் பன்னி படிச்சேன்!!.. அருமையான கதை!!.. வாழ்த்துகள் கா💖!!!.. 
 
 
 

   
ReplyQuote

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved