நிழல் தேடும் நிலவே
நிழல் தேடும் நிலவே கதையின் கரு எளிமையானதும் யதார்த்தமானதும்
அலுவலகத்தில் பெண்களின் மேல நடக்கும் தவறை தட்டிக் கேட்டதனால் வேலையை இழந்து காதல் வாழ்க்கை இரண்டையும் இழக்கும் நாயகன் கார்த்திக்
பணம் இல்லாததால் காதலை இழக்கும் நாயகி மகா பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் கல்யாணம் பண்ணிட்டு அந்த பெண்ணுடன் வாழாமல் தன்னுடைய காதலை நினைத்து வாழும் சித்தார்த் ஒரு விதமாக பார்த்தால் அவன் தவறு பண்ணறான் தோனும் ஆனால் பணம் வேலை இல்லை என்று நடக்க இருந்த கல்யானத்தை நிறுத்தி பணத்திற்காக சித்தார்தை கல்யாணம் பண்ண ரஞ்சனிக்கு சரியான தண்டனை வாழவெட்டி
மகாஸகார்த்திக் இருவரும் இறுதியில் இணைந்தது அருமை நல்ல வேலை திருப்பி கார்த்திக் வாழ்க்கையில் ரஞ்சனி வரலை சுயநல பிசாச
பணத்திற்காக தன் பெற்ற பையனின் வாழ்க்கையை அழித்த சித்தார்தின் அம்மாவிற்கு அவர்களின் கண் முன்னே அவள் வாழாமல் இருப்பது தான் தண்டனை
தற்போது எல்லா வீட்டிலும் பணம் மட்டும் தான் பெரிசா இருக்கு ஆனாலும் சில வீடுகள் பணத்தை விட பாசம் உணர்வுகள் காதல் இது போன்றவைகளை பார்க்கிறார்கள் ஆழகாகவும் எளிமையாகவும் சொன்னது செம
Leave a reply
- 143 Forums
- 2,524 Topics
- 3,007 Posts
- 1 Online
- 2,067 Members
