நமக்குப் பிடிச்சவங்க பிரபலங்களா இருந்தாங்கனா அவங்களைத் தூரத்துல பாத்து ரசிக்குறதோட நிறுத்திக்கணும்… அவங்க கூட நெருங்கி பழக ஆசைப்பட்டு அதுக்கான வாய்ப்பு கிடைச்சுதுனா கூட ‘ஹாய்’, ’ஹலோ’ சொல்லி ஒதுங்கிடணும்… இதை நான் சொல்லுறதுக்குக் காரணம் இருக்கு… பிரபலங்கள் கூட நெருங்கிப் பழகிட்டோம்னா அவங்களோட பிரபலத்துவம் மேல நமக்கு இருந்த பிரமிப்பு காணாம போயிடும்… எந்த ஒரு ஃபேமஸான பெர்சனும் தன்னோட குறைகளை நம்ம கிட்ட காட்டமாட்டாங்க… ஆனா நெருங்கிப் பழகுறப்ப தான் அவங்களும் நம்மளை மாதிரி குற்றம் குறை உள்ள மனுசங்க தான், தலைக்குப் பின்னாடி வட்ட வெளிச்சம் வர்ற ‘பியாண்ட் ஹியூமன் பெர்சனாலிட்டீஸ்’ இல்லனு நமக்குத் தெரியவரும்.
-மேகா
திருமண வீட்டின் பரபரப்பு அடங்கி நள்ளிரவில் நித்திராதேவியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது பாரிவேந்தனின் வீடு. திருமணத்திற்கு இன்னும் ஒரே நாள் மட்டுமே மிச்சமுள்ளது.
நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து உதகமண்டலத்தின் பிரபல ஹோட்டத்தில் முகூர்த்தம் மற்றும் அதை சார்ந்த வைபவங்கள், மாலையில் வரவேற்பு நடத்திக்கொள்ளலாமென்பது பாரிவேந்தன் மற்றும் மோகனரங்கம் இருவரின் ஏற்பாடு.
மோகனரங்கத்தின் தரப்பில் சரஸ்வதியின் தமையனும் சகோதேரியும் அவர்கள் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். மோகனரங்கத்துக்கு உடன்பிறந்தார் யாருமில்லை. மூத்த மகள், மனைவியின் இறப்பு குறித்து விசாரிக்க வராத தன் வகையறா உறவுகளை அழைக்கும் எண்ணமும் அவருக்கு இல்லை.
பாரிவேந்தனின் உறவுக்காரர்கள் நிச்சயத்துக்கு வந்தவர்களே திருமணத்திற்கும் சேர்த்து தங்களது விடுப்புகளை நீட்டித்துக்கொண்டார்கள்.
உறவுக்காரர்களால் வீடே ‘ஜேஜே’ என்று இருந்தது எனலாம்.
முகிலன் மேகவர்ஷிணியிடம் சவால் விட்டபடி வீட்டை விட்டு வெளியேற தருணம் பார்த்துக் காத்திருந்தான். எங்கே? பன்னிரண்டு மணி வரை பழங்கால கதைகளைப் பேசித் தீர்த்தவர்கள் சற்று முன்னர் தான் உறங்கியிருந்தார்கள்.
அனைவரும் உறங்கியதை உறுதி செய்துகொண்டவன் தனது உடைமைகள், மடிக்கணினிகள், வங்கிக்கணக்கு விவரங்கள் அடங்கிய பேக்கைத் தோளில் போட்டுக்கொண்டான். இன்னொரு கையில் அவனது வ்ளாகிங் உபகரணங்கள் அடங்கிய ரோலர் சூட்கேஸ்.
சத்தம் வராமல் தன்னிடமுள்ள மாற்றுச்சாவியைப் போட்டுக் கதவைத் திறந்து வெளியேறி தோட்டத்திற்கு வந்தவன் நுழைவுவாயில் கேட்டை அடையும் முன்னர் “முகில்” என்று அவனுக்குப் பின்னே ஒலித்தது மேகவர்ஷிணியின் குரல்.
அலட்சியபாவனையோடு திரும்பியவன் “என்னடி?” என்றான் சற்று திமிராக.
மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவனை நோக்கி வந்தவளோ “நான் இன்னும் உன் ஒய்ப் ஆகல… இந்த டி எல்லாம் போட்டுக் கூப்பிடுற வேலை வச்சிக்காத” என்று வெறுப்போடு பேசவும் முதல் முறையாக முகிலன் தடுமாறினான்.
என்ன சொன்னாலும் அவன் காலைச் சுற்றும் நாய்க்குட்டி போலவே மேகாவைப் பார்த்துப் பழகியிருந்தவனுக்கு அவளது வெறுப்பு இழையோடிய பேச்சு அதிர்ச்சியைக் கொடுத்து தடுமாற்றம் உண்டாக்கியது.
“நீ விளையாட்டுக்குச் சொல்லுறனு நினைச்சேன் முகில்… ஆனா நீ உண்மையாவே வீட்டை விட்டு ஓடுற ப்ளான்ல தான் இருந்திருக்கல்ல?”
முகிலனின் தடுமாற்றம் அவளது குற்றம் சாட்டும் தொனியில் நின்று போனது.
“எனக்கு விருப்பமே இல்லாத கல்யாணத்துல என்னைச் சிக்க வைக்க நீங்க எல்லாரும் திட்டம் போடுவிங்க… இதெல்லாம் பாத்துட்டு நான் சும்மா இருக்கணுமா? நான் எடுத்த முடிவை மாத்திக்கமாட்டேன்.. உன் கண்ணு முன்னாடியே வீட்டை விட்டுப் போகப்போறேன்… முடிஞ்சா என்னைத் தடுத்துப் பாரு”
“என்னால உன்னைத் தடுக்க முடியாதுனே வச்சுப்போம்… ஆனா மாமா சொன்னா நீ நின்னு தானே ஆகணும்?”
புருவத்தை உயர்த்திக் கேட்டு வில்லிச்சிரிப்பு சிரித்தாள் மேகவர்ஷிணி.
முகிலனிடம் அதற்கும் அலட்சியமே பதிலாக வந்தது.
“கூப்பிடு உன் மாமாவ… அவர் கிட்ட சொல்லிட்டுப் போறேன்” என்று அவன் சொல்ல
“நான் சொல்லி கேக்கலனா நீங்க வர்றதா சொன்னிங்களே மாமா… வந்து முகில் கிட்ட பேசுங்க” என்று மெல்லியக் குரலில் மேகவர்ஷிணி கூறவும் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார் பாரிவேந்தன். முகம் இறுகிப்போயிருந்தது.
அவரைப் பார்த்ததும் முகிலனுக்கு உள்ளுக்குள் உதறல் தான்! ஆனால் சமாளித்துக்கொண்டவன்
“நீங்க நினைச்சாலும் என்னைத் தடுத்து நிறுத்த முடியாதுப்பா” என்றான்.
பாரிவேந்தன் அலட்டிக்கொள்ளாமல் அவனை ஏறிட்டவர் “போறதுக்கு முன்னாடி நீ செய்ய வேண்டிய ஒரு சடங்கை செஞ்சுட்டுப் போயிடு” என்றார்.
முகிலன் ஏளனமாகச் சிரித்தான்.
“நான் உங்க மகனே கிடையாதுனு தலை முழுக போறிங்களா? செய்யுங்க அதை நான் பாத்துட்டே போறேன்” என்றான்.
மேகவர்ஷிணி அவனைக் கண்டிப்புப்பார்வை பார்க்க “சரி தான் போடி” என்று கண்களால் அவளையும் ஒதுக்கினான்.
பாரிவேந்தன் நிதானமாக “போறதுக்கு முன்னாடி நான் செத்துட்டதா நினைச்சு கொள்ளிக்குடம் உடைச்சிட்டுப்போயிடு… இதுக்கு அப்புறம் நான் செத்தா கூட நீ இந்த வீட்டுப்பக்கம் வரக்கூடாது” என்றதும் முகிலன் கலங்கிப்போனான்.
தந்தை கத்துவார், சண்டை போடுவார் என அவன் நினைத்தான். தந்தை உயிரோடு இருக்கையில் அவருக்குக் கொள்ளிக்குடம் உடைக்க எந்த மைந்தனுக்கு மனம் வரும்?
அவனை விட கதிகலங்கிப்போனவள் மேகவர்ஷிணியே! தந்தைக்கும் மகனுக்குமிடையே வாக்குவாதம் வளர்ந்து இன்று வார்த்தைப்போராகி உறவையே முறித்துக்கொள்ளும் நிலைக்கு வந்ததற்கு காரணம் நீ தானேன அவளது மனசாட்சி குத்திக் காட்டியது.
கண் கலங்கி பாரிவேந்தனின் கையைப் பற்றியவள் “ஏன் மாமா இப்பிடி பேசுறிங்க? இவ்ளோ பிரச்சனைக்கும் இந்தக் கல்யாணம் தானே காரணம்… இதை நிறுத்திடலாம் மாமா… அப்பாக்கு மட்டும் இது தெரிஞ்சுதுனா வருத்தப்படுவார்” என்றதும் பாரிவேந்தனின் கண்கள் அனிச்சையாக மைந்தனிடம் ‘பார்த்தாயா இந்தப் பெண்ணின் நல்ல மனதை’ என்று செய்தி பரிமாறத் தவறவில்லை.
“இவன் நான் சொன்னதைச் செஞ்சுட்டுப் போனதும் கல்யாணம் நிக்க தானே போகுது மேகாம்மா… என்னடா பாக்குற? சொன்னதை செய்”
பாரிவேந்தன் இளக்கமின்றி உரைக்கவும் முகிலனுக்குள் இருந்த பிடிவாதம் நொறுங்கியது. தந்தையிடம் சண்டை போட அவனுக்குத் திராணி உண்டு. அவன் பக்க நியாயத்தை விளக்க கூட பொறுமை உண்டு. ஆனால் தந்தை சொல்லும் அந்திம சடங்கை அவர் உயிரோடிருக்கையில் செய்யும் அளவுக்கு மனதைரியமோ, இந்த வீட்டுடனான உறவை ஒரேயடியாக வெட்டிக்கொள்ளும் எண்ணமோ அவனுக்குக் கிடையாது.
சில மாதங்கள் வட இந்தியாவுக்குச் சென்றுவிட்டால் புத்திர பாசத்தால் பாரிவேந்தன் அவரது பிடிவாதத்தை மாற்றி இறங்கிவருவார் என்றே எண்ணி திட்டம் போட்டான். இங்கோ தந்தை ஒரேயடியாக உறவை வெட்டிக்கொள்ளும் முடிவை எடுத்துவிட்டாரே!
அவரது பேச்சில் கலங்கி மேகவர்ஷிணி கூட திருமணத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டாள். நான் இன்னும் என் பிடிவாதத்தில் உறுதியாக இருந்தேன் என்றால் பந்தபாசத்திற்கு அர்த்தம் புரியாத காட்டுமிராண்டியாக அல்லவா போய்விடுவேன்!
தடுமாறிப்போனான் முகிலன். அவனது தடுமாற்றம் உடல்மொழியில் பிரதிபலிக்க சூட்கேஸ் தரையில் தொப்பென விழுந்தது.
“நான் எங்கயும் போகலப்பா… கல்யாணம் பண்ணிக்குறேன்”
தலையைக் குனிந்தபடி சொன்னவனை நம்பாத பார்வை பார்த்தார் பாரிவேந்தன்.
“இப்ப இப்பிடி சொல்லிட்டு நான் தூங்குனதும் ஓடுற ஐடியா வச்சிருக்கியா?”
“இல்லப்பா… நான் நிஜமா தான் சொல்லுறேன்”
பாரிவேந்தன் பட்டென கையைக் குவித்து வேண்டுவது போல நின்றார்.
“ஒரே புள்ளைனு நீ எந்தப் பிரச்சனைல மாட்டுனாலும் ஓடி ஓடி உன்னைப் பிரச்சனைல இருந்து வெளிய கொண்டு வந்து நான் களைச்சுப் போயிட்டேன்டா… நீ இவ்ளோ துணிச்சல்காரன்னு தெரிஞ்சிருந்தா இந்தப் பொண்ணு மனசை மாத்தி சென்னைக்கு அனுப்பி வைச்சிருப்பேன்… ஓடிப்போற ஐடியா இருந்தா நான் சொன்னதை செஞ்சிட்டு ஓடிடு முகில்… எனக்கும் ரஞ்சுக்கும் பிள்ளையே பிறக்கலனு நினைச்சுக்குறோம்… என்னை நம்பி பொண்ணை உனக்குக் கல்யாணம் பண்ணிவைக்க நினைச்சானே என் ஃப்ரெண்ட் மோகன்… அவன் ஆல்ரெடி மனைவி, மகளை இழந்த துக்கத்தை மறைச்சிட்டு நடமாடுறான்… அவனை இன்னும் நோகடிச்சிடாத… போகணும்னா இப்பவே கிளம்பு”
தளர்ந்து போனக் குரலில் அவர் கூற முகிலன் இயலாமையோடு அவரை ஏறிட்டான். பின்னர் எதுவும் பேசாமல் தனது உடைமைகளைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் போய்விட்டான்.
அவன் போவதை அவநம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருந்த பாரிவேந்தன் வருங்கால மருமகளாக நிச்சயிக்கப்பட்டவளிடம் கரங்குவித்தார்.
“என் புள்ளை திருந்தணும்னு உன் வாழ்க்கைய பணயம் வச்சிட்டேனோனு பயமா இருக்கும்மா… அவன் ஓடிப்போக ப்ளான் பண்ணுனதா நீ சொன்னப்ப கூட நான் நம்பலடா… இதுக்குத் துணிஞ்சவன் உன்னைக் காலம் முழுக்க வச்சு எப்பிடி காப்பாத்தப்போறான்னு.. ப்ச்… அவன் கூட காலம் முழுக்க நீ எப்பிடி அல்லாடப் போறனு எனக்குப் பயமா இருக்கு… என் புள்ளையோட புத்தி தெரிஞ்சு ஊர்ல இருந்து வந்த உனக்கு அட்வைஸ் பண்ணி சென்னைக்கே அனுப்பி வைச்சிருக்கணும்… என் சுயநலத்துக்காக உன் மனசுல ஆசைய வளர்த்துவிட்டு, மோகனுக்குப் பொய்யான நம்பிக்கைய வேற குடுத்துட்டேனே இந்தப் பாவி”
தளர்ந்த உடல் குலுங்கியபோது தான் பாரிவேந்தன் அழுவதையே மேகவர்ஷிணி கண்டுகொண்டாள்.
“அழாதிங்க மாமா… என் லவ், என் பிடிவாதம்னு நானும் கொஞ்சம் சுயநலமா இருந்துட்டேன்” என்றாள் அவள் உடைந்த குரலில்.
பாரிவேந்தன் வேகமாகத் தனது கண்ணீரைத் துடைத்துக்கொண்டவர் மருமகளின் உள்ளங்கையைப் பற்றி சத்தியம் செய்தார்.
“உன்னையும் முகிலையும் நல்லபடியா வாழ வைக்க வேண்டியது என் பொறுப்பு மேகாம்மா… அவனால நீ எந்த வகைலயும் காயப்படாம, என் நண்பன் கஷ்டப்படாம நான் பாத்துப்பேன்.. நீ என்னை நம்புறல்ல மேகாம்மா?”
மேகவர்ஷிணி நம்பிக்கையோடு தலையாட்டினாள்.
பின்னர் எல்லாம் நல்லவிதமாக நடந்தேறியது.
திட்டமிட்ட முகூர்த்தத்தில் முகிலன் மேகவர்ஷிணியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி அவளைத் தன் மனையாளாக ஆக்கிக்கொண்டான்.
பாரிவேந்தனின் தீர்மானம் அவனது பிடிவாதத்தை அசைத்துவிட்டது. ராம் கொடுத்த அறிவுரை நடக்கவிருந்த திருமணத்தை நேர்மறை நோக்கில் பார்க்கக் கற்றுக்கொடுத்தது.
“கொஞ்சம் யோசி மச்சி! இவ்ளோ பிரச்சனை வந்தும் அங்கிள் உன்னை இன்ஃப்ளூயன்சரா இருக்காதனு நெருக்கடி குடுக்கல… நீ ஈசி கோயிங் டைப்பா இருக்குற… கல்யாணம் பண்ணுனா அது மாறிடும்னு அவர் நினைக்குறார்டா… உன் அப்பா இடத்துல என் அப்பா இருந்திருந்தார்னா அந்த வீடியோ லீக் மேட்டருக்கு அப்புறம் என்னை வீட்டை விட்டுத் துரத்திருப்பார்… அங்கிள் உனக்குச் சப்போர்ட்டா இருந்திருக்கார்… உனக்காக கண்ணுல கலக்கத்தோட லாயர் சார் கிட்ட அவர் பேசுனதை நேருல பாத்தவன்டா நான்… எப்பிடி இருந்தாலும் கல்யாணம்னு ஒன்னு எல்லாரோட வாழ்க்கைலயும் நடக்கத் தானே செய்யும்… உனக்குக் கொஞ்சம் சீக்கிரம் நடக்குது… மேகா மத்த பொண்ணுங்க மாதிரி இல்லடா… நீ யாரையும் நேசிக்கவே பயமா இருக்குனு சொன்ன ஒரே வார்த்தைக்காக உன் பயத்தைப் போக்கி உன் வாழ்க்கைலயும் காதல் வரணும்னு நினைக்குறவ… நீ வச்சிருக்குற கார், பணம் இது மேலல்லாம் அவளுக்கு நாட்டமில்லடா… கொஞ்சம் பாசிட்டிவா யோசி… யூ ஹேவ் தி க்ரெட் ஃபாதர்… காதல்லயும் நீ லக்கி… உன் மனசுல காதல் இல்ல… அது வர்றப்ப மேகா எவ்ளோ அற்புதமான பொண்ணுனு நீ புரிஞ்சிப்ப… நான் உனக்குக் கெட்டது நினைக்கமாட்டேன்னு நம்புறனா சந்தோசமா கல்யாணம் பண்ணிக்க மச்சி.. எதையோ இழந்தது மாதிரி நடமாடாத… வாழ்க்கை நல்லவிதமா மாறி நீ மேகாவோட சந்தோசமா வாழ ஆரம்பிச்சதுக்கு அப்புறம் உன் கல்யாண மெமரிய திருப்பி பாத்தா அதுல நீ சந்தோசமா இருக்கணும் மச்சி… அழுது வடியக்கூடாது.. சியர் அப் மேன்”
அட்சரம் பிசகாமல் இந்த அறிவுரையை முகிலன் பின்பற்ற அதிசயித்துப்போனார்கள் மேகாவும் பாரிவேந்தனும்.
திருமணத்தை தந்தை பொறுப்பெடுத்துக்கொண்டதால் தேனிலவுக்கான செலவைத் தானே பார்த்துக்கொள்வதாக அவன் சொன்ன கணத்தில் பாரிவேந்தனின் முகத்தில் நம்பிக்கை வெளிச்சம் தெரிந்தது.
முகிலனுக்கு ஒரு வகையில் அறிவுரை நடந்தேறியது என்றால் சித்தி, தோழி, அத்தை, அத்தை பெண்களென்று மேகவர்ஷிணிக்கு ஒரு படையே அறிவுரை கூறியது.
“கல்யாணம் தான் அவசரமா நடக்குது… உடனே குழந்தை அது இதுனு இழுத்து விட்டுக்காத மேகா… லைஃபை கொஞ்சம் நாள் என்ஜாய் பண்ணு” இது சித்தியின் அறிவுரை!
“அதே தான்! அண்ணியும் உன் அக்காவும் தவறுன வீட்டுல நல்ல காரியம் நடக்கணும்னு உடனே கல்யாணம் வச்சது வரை சரி… இப்போதைக்குக் குழந்தை எல்லாம் வேண்டாம்… உன் உடம்பு அதுக்குத் தயாரா இருக்காது… எல்லாருக்கும் மாமியார் சைடுல இருந்து தான் குடைச்சல் வரும்… உனக்குத் தங்கமான மாமியார் அமைஞ்சிருக்காங்க… அதனால எதைப் பத்தியும் யோசிச்சு மனசைப் போட்டுக் குழப்பிக்காத” என்றார் அவளது அத்தை.
அத்தை பெண்களோ கணவனைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஐடியா கொடுத்தார்கள்.
“ஐயையே! இதுல்லாம் பூமர்த்தனமா இருக்கு” என்று ஒதுக்கித்தள்ளியவன் மாங்கல்யதாரணத்தின் போது முகிலனின் விரல்கள் கழுத்தோரம் உரசியபோது விதிர்விதிர்த்துப் போனாள்.
ஒரு நொடி உலகமே மங்கலானது போன்ற பிரமை! விரல் தீண்டலுக்கே கண்கள் மங்குகிறது என்றால் அவனது காதல் பார்வையும் இதமான ஸ்பரிசமும் நிச்சயம் தன்னை மெய்மறக்க செய்துவிடும் என்பதை புரிந்துகொண்டவள் ரம்யா கொடுத்த அறிவுரையை மனதில் நிறுத்திக்கொண்டாள்.
அந்த விதிர்விதிர்ப்பு என்னவோ மாலை வரவேற்பு வரை தொடர்ந்தது. அனைத்தும் முடிந்து இரவின் தனிமையில் அவன் அறைக்குள் இருக்க அவள் வெளியே நின்ற போதும் அது தீர்ந்தபாடில்லை.
முகிலன் என்ன தான் திருமணம் செய்துகொண்டாலும் ஆற்றாமை தீராத வண்ணம் தான் இருந்தான். தனிமையில் அவளைச் சந்தித்தபோது அவள் அறைக்கு வெளியே நிற்கையில் அந்த ஆற்றாமை வெடித்தது அவனிடம்.
“அங்கயே நிக்குறதுக்காகவா இவ்ளோ செலவு பண்ணி கல்யாணம் செஞ்சு வச்சாங்க? உள்ள வா… இல்லனா என் மருமகளை ரூம் வாசல்ல நிக்க வச்சு அவமானப்படுத்துறியாடானு அதுக்கும் உன் மாமனார் குதிப்பார்”
எரிச்சலை வெளிப்படுத்த முடியாத கையாலாகாத்தனத்தோடு கூறிய முகிலனை இன்னும் தயக்கம் அகலாத விழிகளோடு பார்த்தபடி வாயிலருகே நின்று கொண்டிருந்தாள் மேகவர்ஷிணி.
முகிலன் அவள் இன்னும் உள்ளே வரவில்லை என்றதும் இடுப்பில் கையூன்றி முறைத்தான்.
“என்ன பிரச்சனை உனக்கு?” என்று அவன் சலிப்பாய் கேட்டதும்
“அது… எனக்கு உள்ள வர பயமா இருக்கு முகில்” என்று சொல்லிவிட்டுத் தரையில் பெருவிரலால் கோலமிட்டாள் அவள்.
அதைப் பார்த்ததும் தலையிலடித்துக்கொண்டான் அவன்.
பட்டென கையெடுத்துக் கும்பிட்டான்.
“அம்மா தாயே! நீ என்ன வேணும்னாலும் பண்ணு… ஆனா வெக்கப்படுறதா இப்ப ஒன்னு செஞ்சியே… அதை மட்டும் செய்யாத… தாங்க முடியல… நீயே வந்து ‘டேக் மீ முகில்”னு ஹஸ்கி வாய்ஸ்ல கொஞ்சுனாலும் எனக்கு இன்னைக்கு ரொமான்ஸ் பண்ணுற ஐடியா இல்ல… ஆளை விடுங்கடானு நார்த் பக்கம் ஓடப்போனவனை இழுத்து வச்சு அடாவடித்தனமா கல்யாணம் பண்ணுறப்ப இல்லாத பயம் இப்ப மட்டும் இன்ஸ்டண்டா வந்து ஒட்டிக்கிச்சா? ஒழுங்கா உள்ள வந்துடு… இல்லனா நான் காதை பிடிச்சு இழுத்துட்டு வந்துடுவேன்”
இனியும் அறைக்கு வெளியே நின்றால் தன் செவிமடல்களுக்கு அபாயம் என்பதால் ரிசார்ட்டில் தங்களுக்காக புக் செய்யப்பட்ட அறைக்குள் பிரவேசித்தாள் மேகவர்ஷிணி.
புக் செய்தவன் முகிலன் தான்! எல்லாம் பாரிவேந்தனுக்குப் பயந்து செய்ததே தவிர மனைவி மீது கொண்ட ஆசையால் செய்ததில்லை.
முதலிரவைத் தொடர்ந்து ஒரு வார தேனிலவும் அங்கே தான் அவர்களுக்கு. இதைத் திட்டமிட்டவனும் முகிலன் தான்.
மேகவர்ஷிணி ரிசார்ட் சிப்பந்திகள் செய்திருந்த அலங்காரங்களை மானசீகமாக மெச்சிக்கொண்டிருக்கையில் முகிலன் குளியலறையில் உடைமாற்றிவிட்டு வந்தான்.
கண்கள் அகல அறையை ரசித்துக்கொண்டிருந்த மேகவர்ஷிணியை ஊன்றி கவனிக்க ஆரம்பித்தான்.
பத்து நாட்களுக்கு முன்பு வரை அவள் யாரென்றே தெரியாது. ஆனால் இன்றோ மனைவியென்ற ஸ்தானத்தில் அவனோடு ஒரே அறையில் நிற்கிறாள்.
பயம், வெட்கம் என அவள் பலவிதமாக கதை சொன்னாலும் அதில் ஒன்றை கூட அவளிடம் காணவில்லை முகிலன். அவளது இருபது வயதுக்குரிய துடுக்குத்தனம் மட்டுமே வதனத்தில் நிரம்பியிருந்தது.
அவன் தன்னைக் குறுகுறுவென பார்த்ததும் மேகவர்ஷிணியின் கவனம் கலைந்தது.
என்ன பார்வை என்ற ரீதியில் புருவங்களை உயர்த்தி வினவியவளிடம் அவன் தான் தடுமாறிப்போனான்.
அவனது பார்வையில் காதலோ காமமோ துளியும் இல்லை! இவ்வளவு ஏன்? பாலிஹவுசில் அவளது கன்னங்களைக் கையிலேந்த்ஹியபொது அவனது கண்களில் தெரிந்ததே இளமைக்கே உரித்தான வேட்கை, அது கூட இப்போது இல்லை!
அதற்கு மாறாக இப்படி கல்யாண பந்தத்தில் சிக்கிக்கொண்டேனே என்று நொந்து போன பாவனைதான் அவனது உடல்மொழியில் அவளுக்குத் தெரிந்தது.
ஆசைப்பட்டு முகிலனை வம்படியாக மணந்தவளுக்கு இப்படி அவன் நொந்து போவதைக் காண விருப்பமில்லை. எனவே அவனை இயல்புக்குக் கொண்டு வர பேச்சை ஆரம்பித்தாள்.
“கல்யாணத்துல விருப்பமேல்லனு சொல்லிட்டு பார்வை மட்டும் பலமா இருக்கு’
“பாக்குறதுக்கு ஜி.எஸ்.டி எதுவும் கட்டவேண்டாம்னு கேள்விப்பட்டேன்”
அவளைப் போலவே நக்கலாக முகிலனும் பதிலளிக்க முறுவலித்தாள் மேகவர்ஷிணி. அவளது சிரிப்பு எந்தவித கிளர்ச்சியையும் முகிலனுக்குள் விதைக்கவில்லை.
இயல்பான திருமணம் என்றால் புது மாப்பிள்ளைக்கே உரித்தான ஏக்கம், மனைவியைக் கண்டதும் எழும் தாபம் எல்லாம் அவனுக்கும் உண்டாகியிருக்குமோ என்னவோ? இப்போது அப்படி எதையும் அவன் உணரவில்லை.
ஆனால் இந்தப் பத்து நாட்களும் தன்னைப் பாடாய்ப்படுத்தி பம்பரமாகச் சுழலவிட்டவளைச் சீண்டத் தோண்டியது அவனுக்கு.
“புதுப்பொண்டாட்டியை பாக்குறதுக்கு மட்டும் இல்ல, அவளுக்கு முத்தா குடுக்கவும் ஜி.எஸ்.டி கிடையாது தெரியுமா?”
விசமமாகக் கேட்டபடி அவளை நெருங்கினான் அவன்.
இப்போது கொஞ்சம் அதிர்ந்தாள் மேகவர்ஷிணி.
அவன் நெருங்க அவள் விலக இறுதியில் சுவரில் இடித்து நின்றவளை இரு புறமும் அணையிட்டன முகிலனின் வலுவான கரங்கள்.
அவளுக்குப் பதற்றத்தில் வார்த்தை வரவில்லை. கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்தன. அவன் மீது மனமெங்கும் காதல் இருக்கிறது. ஆனால் முகிலனும் அதைப் பிரதிபலித்தால் தானே அவனது அருகாமையில் அவளால் புது மனைவியாய் நாணம் கொள்ள முடியும்.
அவனே வேண்டாவெறுப்பாய் திருமணம் செய்து கடனே என்று அழைத்து வந்திருக்கிறான்!
தொண்டையைச் செருமியவள் “உன் உடம்புல டெஸ்டோஸ்ட்ரான் வேலை செய்ய ஆரம்பிக்குதுனு புரியுது… சயின்ஸ் என்ன சொல்லுது தெரியுமா? ஒரு ஆண் விரும்பாத பொண்ணு கூடவும் இணையலாம்… பட் அது எல்லாம் டெஸ்டோஸ்ட்ரானோட விளையாட்டு மட்டும் தானாம்… அதுவே அவன் விரும்புன பொண்ணு கூட மனசார இணையுறப்ப தான் அவனுக்குள்ள ஆக்சிடோசின் சுரக்குமாம்… டெஸ்டோஸ்ட்ரான் சிம்பலைஸ் பண்ணுறது லஸ்டை மட்டும் தான்.. ஆனா ஆக்சிடோசின் தான் பியார், ப்ரேமா, காதலை உருவாக்கும்.. இப்ப சொல்லு… நீ டீம் டெஸ்டோஸ்ட்ரானா இல்ல டீம் ஆக்சிடோசினா?” என்று சாதுரியமாகக் கேட்டபடி அவனது கரத்தைத் தட்டிவிட்டாள்.
முகிலன் குறுஞ்சிரிப்போடு விலகிக்கொண்டவன் “ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல பயாலஜி க்ளாஸ் எடுத்த முதல் பொண்ணு நீயா தான் இருப்ப மேகா… டோண்ட் டேக் திஸ் சீரியஸ்… ஜஸ்ட் உன் கிட்ட விளையாடுனேன்… நீ எமோஷ்னலி ரொம்ப ஸ்ட்ராங்க்னு புரியுது… என்னால உன்னைக் காதலிக்க முடியுமானு தெரியல… பட் ஐயோ என் வாழ்க்கை இப்பிடி பாழுங்கிணத்துல விழுந்துடுச்சேனு புலம்புற நிலமைய நீ எனக்கு உருவாக்க மாட்டனு நம்புறேன்” என்று சொல்லிவிட்டுப் படுக்கைக்குப் போய்விட மேகவர்ஷிணி நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
“காலேஜ் முடியுற வரைக்கும் கண்ட்ரோலா இருக்கணும் மேகா… முதல்ல டிகிரி… அப்புறம் தான் குடும்பத்தலைவி போஸ்டிங்குக்குப் போகணும்… எப்பவும் இதை மறந்துடாத” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள் அவள்.
சொன்னதோடு அறைக்குள் போனவள் அடுத்த பதினைந்து நிமிடத்தில் அலங்காரங்களைக் கலைத்து இலகுவான பருத்தி இரவுடையில் இனிமையான உறக்கத்தில் ஆழ்ந்து போனாள்.
அவளருகே படுத்திருந்த முகிலனுக்கு மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் மேகவர்ஷிணியின் அண்மையில் அசௌகரியமாக உணரவில்லை அவன்! அவளைப் போல படுத்ததும் உறக்கம் வரவில்லை! மெல்லிய இரவு விளக்கின் ஒளியைப் பார்த்தபடியே இருந்தவன் முடிவில் நித்திராதேவியிடம் தோற்று தான் போனான்.
Good going ma 👍👍👍
Super
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Kalyanam mudinchalum ivan ipadi background la violin vadikirathu ah vida matan pola yae avan ah yum korai sollamudiyathu force panni marriage panni vacha ipadi nondhu pona reaction than varum
Good going 💐💐💐💐💐
Kattayapaduthi kalyanam pannitu avala ethum kodumai pannama kovamavum pesama just like that mari yathu pesotu vitane illa pesi kasta paduthuvanonu pathen
நைஸ்… சூப்பரா போகுது
Super and interesting epi😍👍👍👍
Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍
Spr going waiting for nxt epi😍😍😍
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
nice………………
அருமையான பதிவு
பேசாம இந்த மேகா டீச்சரா போயிருந்திருக்கலாம் எவ்வளவு அழகா கிளாஸ் எடுக்குற
Ena design ka ivan
Super ma