Skip to content
Home » MM 19

MM 19

நம்ம யாரை நெருக்கமானவங்களா நினைக்குறோமோ அவங்க கிட்ட சில காரியங்களைச் செய்ய நம்ம அனுமதி கேக்குறதில்ல… உரிமை எடுத்துக்கத் தயங்குறதில்ல.. இப்ப எனக்கு அம்மா மடில படுத்துக்கணும் போல இருந்தா நான் போய் பெர்மிசன் கேட்டுட்டு இருக்கமாட்டேன்… அதே போல நினைச்சு தான் எங்க ஹனிமூன் வ்ளாகை மேகாவோட பெர்மிசன் இல்லாம அப்ளோட் பண்ணுனேன்… அதுல காசு பாக்கணும், ட்ரெண்ட் ஆகணும்னு நான் நினைக்கல… என்னையும் மேகாவையும் பத்தி யாரும் தப்பா பேசக்கூடாதுனு தான் செஞ்சேன்… இப்ப அதுவே பேக்ஃபயர் ஆகிடுச்சு.

                                                       -முகில், தி க்ளவுட்மேன்

முகிலனின் நடவடிக்கையில் உண்டான அதிருப்தியால் அவனிடம் விலகலைக் கடைபிடித்தாள் மேகவர்ஷிணி. முன்பு போல அவனிடம் பேசத் தோன்றவில்லை. ஒருவேளை முகிலன் செய்தது தவறு என்று மனம் வருந்தியிருந்தால் இந்நிலை வந்திருக்காதோ என்னவோ?

முகிலனோ தனது நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ளாமல் தந்தையைப் போல மேகாவும் ஒருதலைபட்சமாகத் தன்னைக் குற்றம் சாட்டியதாகவே எண்ணினான்.

தேனிலவு வ்ளாகை யூடியூப் சேனலில் இருந்து எடுத்துவிடும்படி மேகவர்ஷிணி எத்தனையோ முறை கேட்டும் அவன் மறுத்துவிட்டான்.

“நான் ரிமூவ் பண்ணுனேன்னா அதையும் கண்டெண்ட் ஆக்குவானுங்க… அந்த வ்ளாக் என் சேனல்ல தான் இருக்கும்… இனிமே உன்னை வச்சு எந்த வீடியோவும் என் சேனல்ல வராது… இனாஃப்” என்று கத்திவிட்டுப் போனவன் அவனது ஆண்பிள்ளைத்திமிரைக் காட்டாமல் வழக்கம் போல அவளுடன் பேச வந்தாலும் மேகவர்ஷிணி ஒதுங்கிப்போகவும் ஒரு கட்டத்தில் எரிச்சலுற்றான்.

கோபத்திலும் அக்கறை காட்டுவது எப்படியென அவனது மனைவி அறிந்து வைத்திருந்தாள். அந்த அக்கறையை அருகிலிருந்து காட்டியிருந்தாள் என்றால் முகிலனின் எரிச்சலுக்கு அவசியம் வந்திருக்காது.

அவன் வ்ளாக் எடுக்க துபாய் செல்ல தயாரான போது அவனது உடைமைகளைப் பெட்டியில் அடுக்கி வ்ளாக் உபகரணங்கள் மற்றும் விமான பயணத்திற்கு தேவையான சான்றுகளை எடுத்து வைத்தவள் முகிலனோடு செல்ல மறுத்துவிட்டாள்.

“உனக்கு ட்ராவல் பண்ண பிடிக்கும்ல… எக்சாமுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்குல்ல மேகா… ஃபாரீன் ட்ரிப் போற சான்ஸ் மறுபடி எப்ப கிடைக்குமோ? இந்தத் தடவை தப்பு நடக்காதுடி” என்று பணிந்து கேட்டுப் பார்த்தான்.

மேகவர்ஷிணி அவனை ஏறிட்டுப் பார்த்தவள் “அடுத்தவங்க பேச்சால ஈசியா மேனிபுலேட் ஆகி மறுபடியும் நீ நம்மளோட அழகான மொமண்ட்சை வ்ளாக் ஆக்கமாட்டனு ப்ராமிஸ் பண்ணு” என்றதும் அவனுக்குக் கோபமானது.

“அப்பிடி நீ வரணும்னு எந்தக் கட்டாயமும் இல்லடி… எப்பவும் போல நானும் ராமும் மட்டும் போறோம்… ஐயோ பாவமேனு கூப்பிட்டா ஓவரா சீன் போடுறா”

கடுகடுத்துவிட்டுப் பிரயாணத்துக்குத் தயாரானான்.

மருமகள் தனியாய் இருக்க மகன் மட்டும் வெளிநாடு போவதில் பாரிவேந்தனுக்கு உடன்பாடு இல்லை. தனது விருப்பமின்மையை மகன் – மருமகள் இருவரிடமும் வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்.

“என்னால முகில் இல்லாம சமாளிச்சிக்க முடியும் மாமா” என்று மேகவர்ஷிணி சொல்லிவிட

“இவளுக்காக நான் என் வ்ளாகிங்கை விடமுடியாதுப்பா… அவளுக்கு என் கூட வர விருப்பமில்ல… அதுக்காக நானும் போகாம இருக்க முடியுமா?”

இருவரும் ஆளுக்கொரு திக்கில் போனால் அவரால் என்ன செய்யமுடியும்?

முடிவில் முகிலன் இல்லாத நாட்களில் மேகவர்ஷிணியோடு ரஞ்சனா தங்குவதாக ஏற்பாடானது.

முகிலன் துபாய் சென்ற நாள் முதல் காலையில் வீட்டில் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டுப் புத்தகங்களோடு பாரிவேந்தனின் வீட்டுக்குப் போய்விடுவாள் மேகவர்ஷிணி.

முகிலனின் ஈடன் நந்தவனத்தைப் பராமரிக்க சில தோட்டப்பணியாளர்களை அவன் நியமித்திருந்தான். அவர்கள் வேலை செய்வதைப் பார்த்தபடி தோட்டத்தில் அமர்ந்து படிப்பாள்.

சில நேரங்களில் மாமனார் மாமியார் தந்தையை அங்கே இழுத்து உட்கார வைத்து பேசுவதுமுண்டு.

முகிலனின் ராஜ்ஜியமாக இருக்கும் ஈடன் தோட்டத்துக்குள் செல்ல பாரிவேந்தனும் ரஞ்சனாவும் தயங்குவார்கள். மகனது இடம் அது என்ற எண்ணம்.

“வீடே உங்களோடது தானே மாமா… இந்தத் தோட்டமும் வீட்டோட ஒரு பார்ட் தான்… முகில் இதுக்காக உழைச்சிருக்கான்… அதை நீங்களும் பாக்க வேண்டாமா? வாங்க”

கையைப் பிடித்து இழுக்காத குறையாக தோட்டத்திற்கு அழைத்துச் செல்வாள் மேகவர்ஷிணி.

இரவு நேரங்களில் மாமியாரும் மருமகளும் மணக்க மணக்க சமைத்த இரவுணவை தோட்டத்தில் மெல்லிய வெளிச்சத்தில் அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிடுவது எல்லாம் அற்புதமான அனுபவமாக இருந்தது.

“ஆண் பிள்ளைங்க வாழ்க்கைய வாழ கத்துப்பாங்க… ஆனா பெண் பிள்ளைங்க தான் அதை ரசிச்சு வாழ கத்துக்கிட்டு நம்மளையும் ரசிக்க வைப்பாங்க… இதுக்குத் தான் வீட்டுக்கு ஒரு பொண்குழந்தை வேணுங்கிறது” என்பார் பாரிவேந்தன் மோகனரங்கத்திடம்.

அவரும் அதை ஆமோதிப்பார்.

“அனு எப்பவும் சைலண்ட் ரகம்… நல்லா படிக்கவும் செய்வா… மேகா அவளுக்கு அப்பிடியே ஆப்போசிட்… அவ இருக்குற இடம் எப்பவும் கலகலப்பா இருக்கும்… கொஞ்சம் சரசு என்ன திட்டுனாலும் காதுல போட்டுக்கமாட்டா” என இரவு நேரத்தில் மலர்வனத்தில் மெல்லிய வெளிச்சத்தில் குடும்பமாக அமர்ந்து சாப்பிடுகையில் மலரும் நினைவுகளில் ஆழ்ந்து போவதற்கு மோகனரங்கத்திற்கும் பிடித்துப்போய்விட்டது.

மேகவர்ஷிணிக்கு முகிலன் இல்லாத தனிமை முதல் நாள் தெரியவில்லை. ஆனால் ஒரு வாரம் கடந்த பின்னரும் அவனிடமிருந்து எந்த செய்தியும் வாட்சப்பில் வரவில்லை என்றதும் அவனது யூடியூப் சேனலை நோட்டமிட ஆரம்பித்தவள் அவனது ட்ராவல் வ்ளாகைப் பார்த்து வாயைப் பிளந்தாள்.

முதல் வ்ளாகில் ‘புர்ஜ் கலிஃபா’வின் பின்னணியில் நின்று ‘தி க்ளவுட்மேன் முகில்’ என்ற பெயர் அதில் வண்ண விளக்குகளால் பெரிய எழுத்துகளில் ஒளிர்வதைக் காட்டியிருந்தான் முகிலன்.

அடுத்தது, அவனும் ராமும் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பிட்டபடி துபாயிலிருக்கும் பிரபலமான யூடியூபர் ஒருவரிடம் கலந்துரையாடும் ‘கொலாப் வ்ளாக்’ (collab vlog).

பிறகு வந்த வ்ளாகில் க்ரூஸ் எனப்படும் சொகுசு கப்பலில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அவனும் ராமும் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள். பின்னணியில் மேற்கத்திய நாகரிக உடைகளுடன் எண்ணற்ற பெண்கள், ஆண்கள் கூட்டத்தைக் காண காண மேகாவுக்கு வயிறு காந்தியது.

அதிலும் முகிலன் இடம் வலமாக நின்ற அழகுப்பெண்கள் அவளது காதில் புகைவர வைத்தது.

துபாய் ஃபவுண்டெய்ன் எனப்படும் நீரூற்று நடனம், ஸ்கை ரிசார்ட் எனப்படும் செயற்கை பனிப்பொழிவு மற்றும் பனிச்சறுக்கு விளையாட்டு போன்ற அரங்கத்தில் குளிரில் முகிலன் விளையாடிய வ்ளாக் எல்லாம் பார்த்ததும் நாமும் அங்கே போயிருக்கலாமோ என்று ஏங்கிப்போனாள் மேகவர்ஷிணி.

 ஒவ்வொரு வ்ளாகும் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து இன்னும் ட்ரெண்டிங்கில் இருந்தது.

அவளது வயிற்றெரிச்சலின் வீரியம் துபாயை எட்டிவிட்டதோ என்னவோ! முகிலனிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

கடுப்போடு அழைப்பை ஏற்றவள் “சொல்லுடா” என்றாள் அவள்.

மறுமுனையில் முகிலனோ சத்தமாக நகைத்தாள்.

“என்ன மேகா, ஸ்டொமக் பர்னிங்கா? உனக்கு ஆகணும்டி” என்றான் சிரிப்பை அடக்க முடியாமல்.

“சீ சிரிக்காத!”

“அப்பிடி தான் சிரிப்பேன்… உன்னைக் கூப்பிட்டப்ப நீ வந்தியா? நீ அப்பிடி வ்ளாக் போடுவ, இப்பிடி வ்ளாக் போடுவனு எவ்ளோ சீன் போட்ட… இப்ப என்னாச்சு? செம ட்ரிப்பை மிஸ் பண்ணிட்டிங்களே, மிசஸ் வாண்டர்லஸ்ட் சோல் மிஸ் பண்ணிட்டிங்களே”

சிவாஜி கணேசன் பாணியில் அவன் பேசவும் மேகாவின் கோபம் இன்னும் அதிகமானது.

“போடா! உன் கிட்ட பேச எனக்குப் பிடிக்கல”

“அச்சோ! அப்பிடிலாம் சொல்லப்படாது… உனக்குப் பிடிக்கலனாலும் எனக்குப் பிடிக்கலனாலும் உன் மூஞ்சிய நானும் என் மூஞ்சிய நீயும் குறைஞ்சது எழுவது வயசு வரைக்கும் பொறுத்து தான் ஆகணும் லிட்டில் மன்ச்கின்… ஒழுங்கா அடுத்த தடவை நான் ஃபாரீன் ட்ரிப் போறப்ப என் கூட வர்ற… இப்ப என்ன பண்ணுற, உன் புண்பட்ட மனசை புளிக்குழம்பு சாப்பிட்டு ஆத்திக்க… பை”

மேகவர்ஷிணியின் வயிறு இவ்வளவு நேரம் சாதாரணமாகத் தான் எரிந்தது. ஆனால் முகிலன் துபாயிலிருந்து பேச்சு மூலம் ஊற்றிய பெட்ரோல் அதை இன்னும் அதீதமாகப் பற்றி எரிய வைத்தது.

“என்னாச்சு மேகாம்மா? முகில் பேசுனானா?” என்று விசாரித்த மாமனாரிடம் முகிலன் தன்னிடம் பேசியதைக் கூறினாள் அவள்.

“துரை எப்ப ஊருக்கு வருவாராம்?”

“அதை பத்தி கேக்கல மாமா… பட் இன்னும் ஒன் வீக் அங்க தான் இருப்பான்னு தோணுது”

பாரிவேந்தன் அதோடு நிறுத்தவில்லை. யூடியூபில் மைந்தனின் துபாய் வ்ளாகைப் பார்க்கவும் செய்தார்.

பார்த்த பிறகோ “இனிமே இவன் தனியா வெளிநாடு போகக்கூடாது… நீயும் அவன் கூட போ மேகாம்மா… இங்க பாரு, துரை கையில என்ன வச்சிருக்கார்னு” என்று ஸ்காட்ச் பாட்டிலும் கையுமாக குரூஸ் பயணத்தில் முகிலன் நிற்கும் வீடியோவைக் காட்டினார்.

மேகாவும் அதைப் பார்த்து தலையாட்டி வைத்தாள்.

“ரஞ்சி இந்த வீடியோவ பாத்தானா பதபதைச்சு போயிடுவா” என்று சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிட்டார்.

இப்படியாக முகிலன் இல்லாத ஒன்றரை மாதத்தை எப்படியோ வெற்றிகரமாக வாழ்ந்து முடித்தாள் அவள்.

ஒன்றரை மாத துபாய் வ்ளாகை முடித்துக்கொண்டு உதகமண்டலத்துக்குத் திரும்பிய முகிலன் அடுத்தடுத்து பிரபல யூடியூபர்களுடன் சேர்ந்து ‘கொலாப் வீடியோ’, நேர்க்காணல்கள், கலந்துரையாடல்களுக்கான அழைப்பு வந்த வண்ணம் இருக்கவும் அடுத்த பதினைந்து நாட்கள் சென்னையில் கழிக்க வேண்டிய சூழல்!

“அதை கொஞ்சம் தள்ளிப்போடு முகில்… ஒன்றரை மாசம் ஃபேமிலிய பிரிஞ்சு இருந்திருக்க… ஒரு மாசம் போகட்டும்… இந்த கொலாப் எல்லாம் அப்புறமா வச்சுக்கலாம்” என்ற ராமின் அறிவுரைக்குச் செவிமடுத்து உதகமண்டலத்திலேயே இருக்கும் முடிவை எடுத்தான்.

இந்தத் திட்டங்கள் எல்லாம் வீட்டு வாயிலை மிதிக்கும் வரை தான் மனதிற்குள் ஓடின. கதவு திறந்ததும் உறக்க கலக்கத்தோடு தெரிந்த மேகவர்ஷிணியின் வதனம் மற்ற அனைத்தையும் மறக்கடித்துவிட்டது.

துபாயில் அவள் இல்லாத தனிமையை அனுபவித்தவனுக்குப் பிரிவாற்றாமையால் உண்டான உந்துதல் அதீதமாக இருக்கவும் அவளைக் கடந்து உள்ளே வந்ததும் கதவை மூடும் முன்னர் மனைவியை அணைத்துக்கொண்டான்.

துபாயிலிருந்து திரும்பி வந்திருந்தவனைத் தள்ளிவிடாமல் முகம் திருப்பாமல் அமைதியாக நின்றாள் மேகவர்ஷிணி.

காரணம், அவளை அணைத்து அவன் சொன்ன வாக்கியம் “ஐ மிஸ் யூ டெரிப்ளி… முக்கியமா மூக்குல கோபத்தை வச்சுக்குட்டு உர்ருனு நீ நடமாடுற போஸை மிஸ் பண்ணுனேன்டி” என்பதே!

சொன்னதோடு சூடான மூச்சுக்காற்று கழுத்துவளைவில் மோத அவன் கொடுத்த மென்முத்தம் அவளைப் பித்து பிடிக்க வைத்து “மிஸ் பண்ணுனவன் தான் ஸ்காட்ச் பாட்டிலோட க்ரூஸ் ட்ரிப்ல மஜா பண்ணுனியாடா?” என்று கேட்கத் துடித்த நாவுக்கு அனஸ்தீசியா கொடுத்தது போல செயலிழக்க வைத்தது.

கழுத்திலிருந்து உடலெங்கும் பாய்ந்த மின்சாரம் இதயத்தில் பல்ப் எரிய செய்ய மேகவர்ஷிணி கண்களை மூடிக்கொண்டாள். முகிலனோ அவளது ‘காலர் போனில்’ பதிந்திருந்த உதடுகளை எடுக்க விருப்பமின்றி அப்படியே நின்றான்.

முதலில் மயிலிறகின் மென்மையாகத் தோன்றிய முகிலனின் அணைப்பு நொடிகள் செல்ல செல்ல இறுகி ஒரு கட்டத்தில் மேகாவுக்கு வலி கொடுக்கவும் சிணுங்கி விலக எத்தனித்தாள்.

“ப்ச்! இப்ப என்ன? அன்னைக்கு வ்ளாக் எடுத்ததுக்குத் தண்டனையா உன்னைக்  கட்டிப்பிடிக்காம விரதம் இருக்கணுமா? போடி, என்னால இருக்க முடியாது… சும்மா இருந்தவன் கிட்ட ஒட்டி உரசி உரிமை கொண்டாடிட்டு திடீர்னு விலகிப்போயிடுவ… உன்னோட ஸ்பரிசம் பழகிப்போன நான் அது இல்லாம கிறுக்கு பிடிச்சு அலையணுமா? முடியாது! குறைஞ்சது பத்து நிமிசம் நீ அசையாம நில்லு… நிக்கணும்”

இது என்ன பிடிவாதம்! சிலுப்பிக்கொண்டது மேகவர்ஷிணியின் மனம்!

சொன்னதை விட ஐந்து நிமிடங்கள் அவளை அணைத்து அவள் உணர்ந்த ஒட்டுமொத்த சிலிர்ப்பையும் உணர்ந்த பின்னரே விடுவித்தான் அவன்.

அணைப்பு விலகியதும் நாணத்தை மறைக்க விரும்பி விலகப்போனவளைக் கைப்பற்றி தடுத்தவன் “உன் பிடிவாதம் என் பிடிவாதம் ரெண்டையும் மூட்டை கட்டி அந்த ஜன்னல் வழியா தூர எறிஞ்சிடலாமா?” என்று கேட்டு மூட்டை கட்டுவது போல சைகை செய்யவும் மேகவர்ஷிணிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

அவனது செவிமடல்களை வலிக்கும் வண்ணம் பிடித்துக்கொண்டவள் “சிவாஜி கணேசன் மாடுலேசன்ல பேசி என்னை வயிறெரிய வச்சப்ப இந்த ஞானோதயம் வரலையா துரைக்கு?” என்று போலிக்கோபத்தோடு கேட்க, முகிலனோ காதுவலியில் கத்தினான்.

“வலிக்குதுடி இராட்சசி! ஒன் அண்ட் ஹாப் மன்த் கழிச்சு வீட்டுக்கு வந்த புருசன் கூட ரொமான்ஸ் பண்ணாம ஆக்சன் சீக்வன்சுக்கு ரெடியாகுற கல்நெஞ்சக்காரி!”

மேகவர்ஷிணி போலியாக முகம் சுளித்தவள் “ஐயே! இந்த மூஞ்சிக்கு ரொமான்ஸ் ஒன்னு தான் கேடு… க்ரூஸ் ட்ரிப்ல உனக்கு லெஃப்ட் அண்ட் ரைட்ல ரெண்டு பியூட்டிஸ் நின்னாங்களே.. அவங்க கூட ரொமான்ஸ் பண்ண வேண்டியது தானே… இதுக்கு மட்டும் நான் வேணுமா?” என்றதும்

“அவங்களுக்கு நான் தாலி கட்டலையே மை டியர் பொண்டாட்டி… முகிலோட ஃபைட், லவ், ரொமான்ஸ் எல்லாமே மேகா கூட மட்டும் தான்” என்றான் முகிலன்.

மேகவர்ஷிணி தலையைச் சரித்து “லவ்?” என்று விசமமாக அவனை ஏறிட

சட்டெனச் சமாளித்தவன் “அ…து இனிமே தான் வரும்… ஆனா வந்துடும்” என்றான்.

“வந்துடும்ங்கிறதுக்கு என்ன கேரண்டி?” சீண்டலாகக் கேட்டாள் மேகவர்ஷிணி.

“லவ்வுக்கான சிம்டம்ஸ் எனக்குள்ள தெரிய ஆரம்பிச்சிடுச்சு… ஃபர்ஸ்ட் சிம்டம் உன்னைத் தூரமா வச்சுப் பாக்காம இப்பிடி இழுத்தணைச்சுக்க தோணுறது தான்” என்றவன் மீண்டும் அவளை இறுக அணைத்துக்கொள்ள முதல் பிணக்கு நீங்கி ஆலிங்கனத்தில் ஆழ்ந்தார்கள் இருவரும்.

20 thoughts on “MM 19”

  1. M. Sarathi Rio

    மேகத்தின் மோனம்..!
    (அத்தியாயம் – 19)

    பரவாயில்லை… ரெண்டு பேருமே அதீத கோபத்தையோ, இல்லை ஈகோயிஸத்தையோ காட்டாமலே லைஃப் போற ஃப்ளோலயே போயிட்டிருக்கிறாங்கன்னு நல்லாவே தெரியுது. முக்கியமா ரெண்டு பேருமே, ஒருத்தரையொருத்தர் எந்த விஷயத்துக்காகவும் கட்டாயப் படுத்தலை. அது தான் இவங்களுக்குள்ள இருக்கிற ப்ளஸ் பாயிண்ட். ஸோ..ஸோ.. நைஸ் கப்பிள். இந்த புரிதல் இருந்துட்டாலே போதும், வாழ்க்கை ரொம்ப ஸ்மூத்தா போக ஆரம்பிச்சிடும்.
    மிஸ்டர் பாரி வேந்தன் பயந்த அளவுக்கு முகிலன் ரக்கட் பாய் எல்லாம் கிடையாது. அவன் பெயருக்குத் தகுந்த மாதிரியே அவனோட அதீத கோபமோ, இல்லை வருத்தமோ… எதுவா இருந்தாலும் கலைஞ்சு போகும் மேகங்கள் மாதிரி தான்.

    இதோ அவன் வாயாலேயே ஒத்துக்குறானே, ஃபைட், ரொமான்ஸ், லவ்… எல்லாமே
    அவனோட அருமை பொண்டாட்டி மேகாவோட மட்டும்தான்னு…. அப்ப லவ்வும் வந்திடுச்சு தானே. அப்படின்னா… இது போதும், இது போதும், இது போதுமே…
    வேறென்ன வேண்டும் இது போதுமே.

    இனி கூடிய சிக்கிரமே, ஃபாரின் வ்ளாக் மேகாவோட போக ஹண்ரட் பர்சென்ட் சான்ஸ் இருக்குது. அதுவும் ஹனிமூனுக்காக இருக்குமே தவிர, நிச்சயமா வ்ளாக் ஸூட்டையும், ஹேப்பி ஹனிமூனையும் சேர்த்து இந்தத் தடவை கன்ஃப்யூஸ்
    பண்ணிக்க மாட்டான்னு
    கன்ஃபார்மா தெரியுது.
    😃😃😃
    CRVS (or) CRVS 2797

  2. Avatar

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  3. Avatar

    Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr 👌👌👌👌👌👌👌

  4. Avatar

    பிரிவு காதலை உணர்த்திடுச்சு போல முகிலுக்கு ❤❤❤💐

  5. Priyarajan

    Spr going sis waiting for nxt epi😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  6. Avatar

    Super sis nice epi 👍👌😍 renduperum sandaiya continue pannama azhaga samadhanamayitanga super 😘🥰

  7. Avatar

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *