தீயாகிய தீபம் 8
தீயாகிய தீபம் 8 விக்கியின் மனைவி என்னும் புதிய பதவியை ருத்ரா அடைந்துவிட்டாள். இந்த நொடிக்காக தானே எத்தனை எத்தனை ஆசை கனவுகளோடு காத்திருந்தாள். ஆனால் அவை அனைத்தும் மொத்தமாக இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டது. திருமண சடங்குகள் எதிலும் அவள் மனம் லயிக்கவில்லை. விக்கி மற்றொரு பெண்ணுடன் இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் உடனே கேள்வி கேட்டு திருமணத்தை நிறுத்தியிருக்கலாம். ஆனால் தான் ஏன் அப்படிச் செய்யவில்லை எனத் தன்னை தானே பலமுறை கேட்டுவிட்டாள். “நீ விக்கியை நேசிப்பதுதான் காரணம் வேறு என்ன? ” உள்ளம் உண்மையை உரைத்தது. சிறு வயது முதலே ருத்ராவிடம் ஒரு பழக்கம் உண்டு. தனக்கு வேண்டுமென்பதை எப்பொழுதும் யாருக்கும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டாள். அதை எப்படியும் தன் வசம் ஆக்கிக் கொண்டே தீருவாள். விக்கி தனக்கானவன்.… Read More »தீயாகிய தீபம் 8