Skip to content
Home » தீரனின் தென்றல்-29

தீரனின் தென்றல்-29

தென்றல் சமையலை ரசித்து உண்ட தீரன் தன் மகளோடு சேர்ந்து விளையாட துவங்க “பாஸ்… இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு… நீங்க போயே ஆகனுமே…” என்று நினைவுறுத்த

Thank you for reading this post, don't forget to subscribe!

“ஸ்ஸ்… அப்படியா? சரி மதன் நீயே எனக்கு பதிலா அட்டென்ட் பண்ணிடு… நான் இன்னைக்கு முழுக்க பூர்வி குட்டியோட பிஸி…” என்று ஆதீரன் சாதாரணமாக சொல்ல மதன் அதிர்ந்தான்.

“ஐயோ பாஸ்… இது நம்ம ஆஃபிஸ் மீட்டிங் கிடையாது பாஸ்… பில்டர்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் மீட்டிங்… நம்ம கம்பெனி எம்.டி நீங்க தான் கலந்துக்கனும்…” என்று மதன் நினைவுறுத்த

“ஸ்ஸ்… ஆமா மதன் அசோசியேஷன் பிரசிடென்ட் தர்மலிங்கம் சார் கூட எனக்கு பர்சனலா கால் பண்ணி மீட்டிங்கை அட்டென்ட் பண்ண வரனும் னு கேட்டுக்கிட்டாரு…” என்று சொல்லிய ஆதீரன் தன்னோடு விளையாட ஆர்வமாக இருந்த அபூர்வாவை பார்க்க

“என்னாச்சு ச்சூப்பர் மேன்… வா விளாடலாம்…” என்று ஆசையாக அழைக்க எப்படி மறுப்பான். ஆனாலும் போயே ஆக வேண்டும்… வேறு வழியின்றி மகள் உயரத்திற்கு ஒரு காலை மடக்கி மண்டியிட்டு அமர மடங்கிய கால் மீது ஏறி அமர்ந்து கழுத்தை கட்டிக் கொண்டாள் அபூர்வா.

மதனுக்கு ஆச்சரியமாக போனது… எவரும் சொல்லவில்லை ஏன் அந்த குழந்தைக்கே தெரியாது இவன் தான் தன் தந்தை என்று… ஆனால் அவனை பார்த்த நொடி முதல் எப்படி ஒட்டிக் கொள்கிறாள் அவனையே…

ஆதீரன் நேற்று கூறினானே ‘என் பொண்ணு அப்படியே என் அம்மா மாதிரியே இருக்கா… என் அம்மா திரும்பி எனக்கு பொண்ணா பிறந்திருக்காங்க…’ என்று தாயின் உருவம் மட்டும் இன்றி குணமும் அப்படியே பூரணி போல காரணமே இல்லாமல் ஆதீரன் மீது பாசத்தை பொழிகிறாளோ என்று மதன் நினைத்துக் கொள்ள

ஆதீரன் மட்டுமே அறிந்தான் தன் தாயின் மறுபிறவி மட்டும் அல்ல தன் உயிரை விட ஆதீரனை அளவுக்கு அதிகமாக காதலித்த தென்றலின் உதிரத்தில் உருவான குழந்தை… இத்தனை நாட்கள் அவளின் வளர்ப்பில் வளர்ந்த குழந்தை..‌ அவளைப் போலவே காரணம் அறியாது தன்னை பாச வெள்ளத்தில் தத்தளிக்க வைக்கிறாள் என்று…

“வா… ச்சூப்பர் மேன் கண்ணாமூச்சி ஐஸ்பாய் யானை சவாரி.. எல்லாம் விளாடலாம்” என்று அபூர்வா கூற

அவளின் கன்னத்தை செல்லமாக கொஞ்சி தாடையை பிடித்த ஆதீரன் “பூர்வி குட்டி … உன் கூட நாள் பூராவும் விளையாட எனக்கும் ஆசை தான்… ஆனா முக்கியமான இடத்துக்கு போகனும்… போய்ட்டு மீட்டிங் முடிச்சிட்டு உடனே… உடனே ஓடி வந்திடுறேன் என் செல்லத்து கூட விளையாட… சரியா தங்கம்…” என்று கொஞ்சலாக கெஞ்சலாக அனுமதி கேட்க சட்டென்று வாடிப்போனது குழந்தையின் முகம்…

“போனுமா?” ஏக்கத்துடன் வாட்டமாக முகத்தை வைத்து அபூர்வா கேட்க

“ஆமா டா.. ஆனா மத்தியானம் வந்திடுவேன்… சரி சொல்லு நான் வரும் போது குட்டிமாக்கு என்ன வாங்கிட்டு வரனும்?” என்று ஆதீரன் வலிய வரவைத்த புன்னகையோடு கேட்க

“எனக்கு ஒன்னும் வேணாம்… நீ சீக்கிரம் வா…” என்று அபூர்வா கூறியது ஆதீரன் படிப்பை முடித்து முதல் முறை ஃபைனல் இன்டர்வியூவிற்காக ஆதீரன் சென்னை வர வேண்டி இருக்க அப்போது அவன் பிரிவை நினைத்து தென்றல் சோகமாக அவளை சமாதானம் செய்ய தென்றலிடம் ‘உனக்கு என்ன வேணும் னு சொல்லு வாங்கிட்டு வரேன்’ என்று தீரன் கேட்டதற்கு

“எனக்கு ஒன்னுமே வேணாம்… நீ மட்டும் பத்திரமா போயிட்டு சீக்கிரம் வா…” என்று கூறி அனுப்பிய தென்றல் கண் முன்னே நிழலாக தோன்ற சிலையாக அவள் நினைவுகளில் சிலாகித்து நின்றான் ஆதீரன்.

“பாஸ்…” என்று மதன் தோளை தொட நினைவு வந்தவன் “சரிடா தங்கம் நான் போய்ட்டு சீக்கிரம் வந்திடுறேன்…” என்று சொல்ல கையசைத்து விடைதந்தாள் அபூர்வா.

தங்கள் ஃப்ளாட்டில் இருந்து எதிர் ஃப்ளாட்டில் பொன்னியிடம் குழந்தையை விட்ட ஆதீரன் “மீட்டிங் போறேன் அத்தை…” என்று சொல்ல

“சரிங்க தம்பி…” என்று பொன்னி கூற மதனோடு சேர்ந்து கார் பார்க்கிங் வரை வந்த ஆதீரன் “மதன்.. இன்னைக்கு நீ சைட் விசிட் போறல்ல… கார் எடுத்திட்டு போ ஆஃபிஸ் போய் தென்றலையும் உன்கூட கூட்டிட்டு போ… நான் உன் பைக்ல போய் மீட்டிங் அட்டென்ட் பண்ணிட்டு வரேன்…” என்று ஆதீரன் சொல்ல வேறெதுவும் சொல்லாமல் “சரி” என்று கிளம்பினான் மதன்.

அலுவலகம் வந்த மதனை புன்னகை ததும்ப பார்த்த தென்றல் “வாங்க சூப்பர் மேன்… புவிக்குட்டி உங்களை ஓடி ஓடி கவனிச்சுக்கிறா… அப்படி என்ன தான் மேஜிக் பண்ணீங்க?” என்று கேட்க மதன் திருதிருவென விழிக்க சித்ரா மதனை வித்யாசமாக பார்த்து

“எது சூப்பர் மேனா? என்ன தென்றல் சொல்ற?” என்று கேட்க

“ஆமா சித்ரா… மதன் அண்ணாக்கு தான் புவிக்குட்டி சூப்பர் மேன் னு பெயர் வைச்சிருக்கா.. அவ மயங்கி விழுந்தப்போவும் அடுத்த நாள் சைக்கிள் ஓட்டும் போது விழாம பிடிச்சதாலேயும் அந்த பெயர் வைச்சாளாம்..” என்று தென்றல் சொல்ல சித்ராவிற்கு புரிந்து போனது குழந்தை யாரை சூப்பர் மேன் என்று அழைக்கிறாள் என்று..

ஆனால் இதை இவளிடம் விளக்கினால் ஒரு பூகம்பம் அல்லவா நடக்கும்.. என்று அமைதி காத்தாள் சித்ரா.

“ஆ! தென்றல்… நான் சைட் விசிட் போறேன்… நீயும் வா ம்மா… நாளைக்கு எம்.டிக்கு அசிஸ் பண்ணும் போது நீ போக வேண்டி இருக்கும். அதனால ஆஃபிஸ் வொர்க் மட்டும் இல்ல ஃபீல்ட் வொர்க்கும் கத்துக்கோ…” என்று மதன் சொல்ல

“சரி ண்ணா… நான் வரேன் அண்ணா” என்று சித்ராவிடம் “போய்ட்டு வரேன் சித்ரா நான் வர லேட் ஆனாலும் உங்களுக்கும் சேர்த்து லஞ்ச் கொண்டு வந்தேன் சாப்பிடுங்க…” என்று கூறிவிட்டு மதனோடு கிளம்பினாள் தென்றல்.

மீட்டிங் சென்ற ஆதீரன் என்றும் அல்லாத உற்சாகத்துடன் காணப்பட்டான். அசோசியேஷன் பிரசிடென்ட் மட்டுமல்லாது தன் திறமைக்கு மதிப்பளித்தவர் என்ற வகையிலும் தர்மலிங்கம் மீது தனி மரியாதை இருக்க அவரோடு சில நிமிடங்கள் பேசிக் கொண்டு இருந்த ஆதீரனை ஆராய்ச்சி பார்வை பார்த்தார் தர்மலிங்கம்.

“என்னாச்சு சார்?” ஆதீரன் கேட்க

“ஒன்னும் இல்ல ப்பா… ஆறு வருஷமா உன்னை எனக்கு தெரியும்.. ஆனா இந்த ஆறு வருஷத்துல உன் முகத்துல இல்லாத சிரிப்பு சந்தோஷம்… பார்க்க எனக்கும் சந்தோஷமா தான் இருக்கு… ஆனா என்ன காரணம் னு தெரிஞ்சுக்கலாமா?” என்று தர்மலிங்கம் கேட்க

“ஐயோ சார்.. என்ன இப்படி கேட்டீங்க… என் வாழ்க்கைல நீங்க ரொம்ப முக்கியமான ஆள் சார்… இன்னும் எல்லாம் முழுசா சரியாகலை… எல்லாமே சரியான அப்பறம் உங்ககிட்ட நானே சொல்ல நினைச்சேன் சார்…” ஆதீரன் சொல்ல

“அப்படியா? அப்படி என்னப்பா சந்தோஷமான விஷயம்?”

“எனக்கு இனி கிடைக்கவே கிடைக்காது னு நினைச்ச பொக்கிஷம் திரும்ப கிடைச்சிடுச்சு சார்… நான் சொல்லிருந்தேனே… என் மனைவியும் நானும் சில கருத்து வேறுபாடு காரணமா பிரிஞ்சு இருக்கோம் னு… எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கா.. ஆனா பிறந்ததுல இருந்து அவளை நான் பார்த்ததே இல்லை… அந்த வருத்தம் தான் என்னை கொன்னுட்டு இருந்துச்சு சார்.

இப்போ என் மனைவியும் மகளும் கொஞ்சம் நெருங்கி வந்திட்டாங்க… என் மனைவி என்னை இன்னும் ஏத்துக்கல இன்ஃபேக்ட் அவ என்னை பார்க்க கூட இல்ல. பட் நான் அவங்களை தினமும் பார்க்குறேன்… இவ்வளவு நேரம் என் பொண்ணு கூட விளையாடிட்டு தான் வந்தேன்… என் ஃப்ரண்ட் அவனோட வொய்ஃப் என் மாமியார் னு எல்லாரும் என்னையும் என் மனைவியையும் சேர்த்து வைக்க உதவுறேன் னு சொல்லி எனக்கு ஆதரவா இருக்காங்க… அந்த சந்தோஷம் தான் சார்..” என்று ஆதீரன் சொல்ல சொல்ல உண்மையாகவே அகமகிழ்ந்தார் தர்மலிங்கம்.

“ரொம்ப சந்தோஷம் தான் ஆதீரன்… உனக்கு ஆதரவு தருபவங்க லிஸ்ட் ல என்னையும் சேர்த்துக்கோ ப்பா… உனக்காக உன் மனைவி கிட்ட பேசனும் னா சொல்லு… நான் பேசுறேன்… சரியா ஆதீரன்..” என்று தர்மலிங்கம் கேட்க

“ரொம்ப தேங்க்ஸ் சார்…” என்றான் பணிவு மாறாமல்..

“சரிப்பா சீக்கிரம் உன் வொய்ஃப் சமாதானம் பண்ணி மனைவி மகளோட நிறைவான குடும்பமா நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வரனும்.. சரியா?” என்று தர்மலிங்கம் கேட்க

“கண்டிப்பா சார்… சரிங்க சார் எனக்கு லேட் ஆகுது… என் பொண்ணு எனக்காக வெய்ட் பண்ணுவா…” என்று விடை பெற்று செல்லும் வழியில் தன் தென்றலுக்கு பிடித்த இனிப்பு வகைகளை வாங்கி வைத்துக் கொண்டான் மகளுக்கும் அது தான் பிடிக்கும் என்ற அனுமானத்தில்…

மகிழ்வாக சென்ற ஆதீரனையே பார்த்து கொண்டு இருந்த தர்மலிங்கம் ‘இந்த ஷ்ரதா பொண்ணு கட்டுனா ஆதீரனை மட்டும் தான் கட்டுவேன் னு வெறி பிடிச்ச மாதிரி திரியுறா…  இத்தனை நாள் இந்த தம்பி தனியா இருந்துச்சு சரி நல்ல பையன் நம்ம பொண்ணை கல்யாணம் பண்ணாலும் நல்லா பார்த்துப்பான் னு அவ ஆடுன ஆட்டத்துக்கு பொறுமையா இருந்தோம்.

இந்த பையன் இப்போதான் மனைவி சமாதானம் ஆகி வரா மகளோட சந்தோஷமா விளையாடுறேன் னு சொல்லுது… ம்ஹூம் என்ன இருந்தாலும் ஆதீரன் நல்லவன்… நம்ம பொண்ணு ஆசைக்காக அவன் வாழ்க்கையை அழிக்க நினைக்க கூடாது…

அந்த ஆதீரன் அவன் பொண்டாட்டி பிள்ளையோட சந்தோஷமா இருக்கட்டும்… நாம இனி நம்ம பொண்ணை அடக்கி வைப்போம்…’ என்ற முடிவோடு தன் வீட்டிற்கு கிளம்பினார் தர்மலிங்கம்.

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

1 thought on “தீரனின் தென்றல்-29”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *