நாட்கள் இரண்டு கடந்து சென்றிருந்தது. தீரன் தன் முடிவை சொல்லி… இரண்டு நாளும் அறையிலேயே முடங்கி கிடந்தாள் தென்றல். பொன்னி பேசுவது இல்லை அபூர்வாவிற்கு புதிதாக கிடைத்த தந்தை பாசத்தில் தாயை கவனிக்க நேரமில்லை…
Thank you for reading this post, don't forget to subscribe!ரூபிணி கூட தோழி செய்த தவறை உணர்த்த தென்றலோடு பேசுவதை தவிர்க்க அவ்வப்போது ஏதோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியை பார்த்துச் செல்ல வரும் உறவினர்கள் போல சித்ராவும் குமாரும் வந்து கரிசனமாக
“என்ன செய்ற சாப்பிட்டியா?” என்று கேட்டுவிட்டு செல்ல உண்மையாகவே ஒரு நோயாளி போல தன்னை உணர துவங்கிய தென்றல் இன்னும் ஒரு நாள் கூடுதலாக வீட்டில் முடங்கினால் பைத்தியம் பிடித்து விடும் என்று தோன்ற வேலைக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தாள்.
எங்கே செல்வது? மீண்டும் வேறு வேலை தேடி செல்வதா?… இங்கிருந்து கொண்டு வேறு இடத்தில் வேலை செய்வது இயலாதே… சரி, இந்த வீடு ஆதீரன் தந்த சலுகை யாவும் வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு செல்லவும் இனி முடியாது. தான் இங்கு இருக்க வேண்டும் என்று தானே அவன் இங்கிருந்து செல்ல முடிவு எடுத்தான்.
ஒருவேளை எல்லாம் வேண்டாம் என்று சென்றாலும் முன்பு வேலை செய்த கம்பெனி போல ஒரு காம கழுகு இருக்காது என்று என்ன உத்திரவாதம்… என்று தான் மீண்டும் வேலைக்கு செல்ல முடிவு செய்து கிளம்பி விட்டாள் தென்றல்.
சித்ரா கிளம்பி வெளியேறிய நேரம் தென்றலும் கிளம்பி வந்திட ஆச்சரியமாக பார்த்த சித்ரா “நல்ல முடிவுதான் தென்றல்… இதே மாதிரி எல்லா விஷயத்திலும் மாறினா நல்லா இருக்கும்.” என்று சித்ரா சொல்ல
“தேவையில்லாத எதுவும் பேச வேண்டாம் சித்ரா… ஏற்கனவே இதே விஷயத்தை யோசிச்சு யோசிச்சு பைத்தியம் பிடிக்குது…” என்று தென்றல் வெட்டுவது போல பேச “சரி” என்று அமைதியாகிப் போனாள் சித்ரா.
மதன் ஏற்கனவே அலுவலகம் வந்திருந்தான். ஆதீரன் தன் வக்கீலிடம் மதனை பார்ட்னர் ஆக்கி பொறுப்புகளை அவனிடம் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் தயார் செய்ய சொல்லிவிட்டு மகளோடு நேரம் கழிக்க ஆதீரன் இல்லாத காரணத்தால் தென்றல் கொஞ்சம் இயல்பாக வேலையில் ஈடுபட்டாள். தன் முதலாளி மீது இருந்த அலாதி ப்ரியத்தால் தென்றல் மீது சற்று வருத்தம் ஏற்பட தென்றலோடு நேரடி பேச்சு வார்த்தையை தவிர்த்தான் மதன்.
ஆதீரன் தான் ஊருக்கு செல்ல வேண்டிய ஏற்பாடுகளை கவனித்தபடி அன்று அலுவலகம் வந்தான். தென்றல் வேலையில் சேர்ந்த பிறகு முதல் முறை அவள் இருக்கும் நேரத்தில் அலுவலகம் வந்தான். அலுவலகத்தில் தன் சொந்த வெறுப்பை காட்ட இயலாது முதலாளி என்று ஒட்டவும் இல்லாமல் வெட்டவும் இல்லாமல் இருந்தாள் தென்றல்.
ஆதீரன் அன்று அலுவலகம் வந்த முக்கிய காரணமே தன் மற்ற தொழிலாளிகள் மற்றும் இப்போது எடுத்து நடத்தும் ப்ராஜெக்ட் கிளையண்ட்களுக்கும் இனி மதன் தான் அனைத்து பொறுப்புகளையும் முறையாக கவனிப்பான் என்று எடுத்து சொல்லவே…
அது சம்பந்தமான மீட்டிங்கில் ஆதீரன் மற்றும் மதன் இருக்க பல நாள் கழித்து ஆதீரன் அலுவலகம் வந்துள்ளான் என்று தெரிந்து அவனை தேடி வந்தாள் ஷ்ரதா.
வழக்கம் போல ரிசப்ஷனிஸ்ட் லிசி தடுத்தும் கேட்காமல் உள்ளே வந்து கொண்டு இருக்க லிசி பின்னாலேயே “மேடம்… மேடம் நில்லுங்க மேடம்…” என்று கத்திக் கொண்டே வேகமாக வர அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் வந்து கொண்டிருந்த ஷ்ரதா எதிரில் ஒரு கேபினில் இருந்து வெளி வந்த தென்றல் மீது மோதி விட்டு கண்டு கொள்ளாமல் சென்று கொண்டே இருக்க பின்னால் லிசி பதட்டமாக வர கண்ட தென்றல்
“ஹலோ மேடம்…” என்று சொடுக்கிட்டு அழைக்க நின்றாள் ஷ்ரதா… அலட்சியமாக திரும்பி பார்க்க சித்ரா வேகமாக தென்றல் அருகில் வந்து நிற்க
“என்ன? யார் நீ… என்னை சொடுக்கு போட்டு கூப்பிடுற?” என்று அற்பமாக தென்றலை பார்த்து அடுத்து சித்ராவை பார்த்த ஷ்ரதா “ஏய்… நான் யாரு னு சொல்லு… சாரி கேட்க சொல்லு என்கிட்ட…” என்று அலட்சியமாக கூறிபடி கை கட்டி திமிராக பார்க்க
“தென்றல், ஆதீரன் சார் இவங்க அப்பா கம்பெனில தான் முதல்ல வொர்க் பண்ணாரு. இவங்க அப்பா மேல அவருக்கு ரொம்ப மரியாதை இருக்கு..” என்று சொல்லி கொண்டு இருக்க
“ஏய்… என் அப்பா பெருமை இருக்கட்டும்… நான் ஆதீக்கு யாரு னு சொல்லு…” என்று மிதப்பாக பார்க்க
“ம்கூம்… அவரோட திறமைக்காக அவரை வளைச்சு போட பசை மாதிரி ஒட்டிக்க பின்னாடியே திரியுற னு சொல்லவா முடியும்?” தென்றலுக்கு மட்டும் கேட்கும் படியாக சித்ரா முணுமுணுக்க… தென்றல் புரிந்து கொண்டாள்.
“என்ன… என்ன சொல்ற?” என்று ஷ்ரதா கேட்க
“லிசி.. நான் பார்த்துக்கிறேன் நீங்க போங்க” என்று அனுப்பி வைத்த தென்றல் “இதோ பாருங்க மேடம்… கண்ணை முதுகுல வைச்சுட்டு வந்து மோதினது நீங்க… இதுல என்னை சாரி கேட்க சொன்னா எந்த விதத்துல நியாயம்? சோ, இரண்டுக்கும் சேர்த்து என்கிட்ட ஒரே ஒரு சாரி நீங்க கேட்டுட்டு எதுக்காக இந்த ஆஃபிஸ் வந்தீங்களோ அதை பார்க்க போங்க…” சிரித்த முகமாக வைத்துக் கொண்டு வார்த்தையில் அழுத்தம் தந்து தென்றல் கூற சித்ரா வாய் திறந்து தென்றலை ஆச்சரியமாக பார்க்க மற்றவர்களும் சற்று அதிர்ச்சியாக தான் பார்த்தனர்.
“ஏய்… என்னடி சொன்ன? நான் உன்கிட்ட சாரி சொல்லனுமா? டூ யூ நோ ஹூ ஐ அம்… ஆமா யார் நீ என்கிட்ட இவ்வளவு திமிரா பேசுற? ஆதீகிட்ட சொல்லி உன்னை என்ன பண்றேன் பாரு…” என்று சீறிக்கொண்டு நிற்க நக்கலாக சிரித்து இன்னும் கொஞ்சம் வெறுப்பேற்றினாள் தென்றல்.
“நான் இந்த ஆஃபிஸ் ஸ்டாஃப் தான் மேடம்… என் பெயர் தென்றல்..” என்று நிமிர்வாக சொல்ல அதுவரை இவளை எங்கேயோ பார்த்திருக்கிறோமே யார் இவள் என்று குழம்பி நின்ற ஷ்ரதா தென்றல் என்றதும் ஆதீ கூறிய அவனின் காதல் மனைவி என்று புரிந்து கொண்டு
“ஓ…” என்று இளக்காரமாக இழுக்க சரியாக அந்த நேரம் மீட்டிங்கில் இருந்து வந்தனர் ஆதீரனும் மதனும். தென்றலோடு ஷ்ரதா இருப்பது பார்த்து மதன் வேகமாக அருகில் செல்ல போக அவனை கைப்பிடித்து தடுத்தான் ஆதீரன். இருவரும் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்க்க
“ஓ.. யா… நவ் ஐ கேன் ரிமைண்ட் யுவர் ஃபேஸ்… ஆதீயோட பர்ஸ்ல இருந்த அந்த கண்ட்ரி வில்லேஜ் கேர்ள்.. நீதானே…” அலட்சியமாக உதட்டை சுழிக்க
“இப்போ வரைக்கும் நான் உங்களை வாங்க போங்க மேடம் னு தான் கூப்பிடுறேன்… அதே மரியாதையை நீங்களும் ஃபாலோவ் பண்ணா நல்லா இருக்கும்… மேடம்…” மேடம் என்ற வார்த்தையை அழுத்தி சொன்னாள் தென்றல்.
“ஹூம்…” ஏளன சிரிப்பை தந்த ஷ்ரதா “உனக்கு மரியாதை வேணுமா? யா… ஆதீ சொல்லிருக்காரு.. உனக்கும் அவருக்கும் சம் மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் யூ வேர் செப்பரேட்டட் னு.. இப்போ எப்படி இங்க? ஓ.. புரியுது பணம் இல்லனு சொல்லி ஆதீயை தூக்கி எறிஞ்சுட்டு போயிருப்ப… இப்போ பணம் இருக்கு னு தெரிஞ்சு திரும்ப வந்து ஒட்டிக்கிட்டயா?” என்று கொச்சையாக கேட்க எதைப் பற்றியும் யோசிக்காமல் ஷ்ரதா கன்னத்தில் அறைந்திருந்தாள் தென்றல்.
ஆதீரனோடு சேர்த்து யாருமே இதை எதிர்பார்க்கவில்லை… அனைவரும் அதிர்ந்து பார்க்க அவமானத்தில் “ஏய்” என்று தென்றலை ஆட்காட்டி விரலை நீட்டி ஷ்ரதா சீற
“ஏய்.. ம்ம்..” என்று உறுமலாக கையை இறக்கு என்று ஆட்காட்டி விரலை அசைத்து சைகையில் விழிகளை உருட்டி தென்றல் கூற மிரண்டு போனாள் ஷ்ரதா.
“மைண்ட் யுவர் டங்க்… நீ யாரா வேணும்னாலும் இரு.. யாரை வேணும்னாலும் பாரு… ஆனா என்னைப் பத்தி இப்படி எதாவது பேசுன… தொலைச்சு கட்டிடுவேன்… பார்த்துக்கோ” என்று மிரட்டிய தென்றல்
“உன்னை இங்க யாரு மதிச்சா ரிசப்ஷனிஸ்ட் ல இருந்து ஒரு ப்யூன் கூட மதிச்ச மாதிரி தெரியலை… இங்க வந்து நான் யாரு தெரியுமா யாரு தெரியுமா னு கேட்டுக்கிட்டு… இங்க பாரு.. இனிமே இப்படி உன்னை இந்த ஆஃபிஸ் ல பார்த்தேன் அவ்வளவு தான் பார்த்துக்கோ” என்று விரல் நீட்டி தென்றல் எச்சரிக்க
“ஏய்.. என்னடி பெரிய இவளா நீ? உன்னை என்ன பண்றேன் பாரு…” என்று வாய் ஜம்பம் பேசிவிட்டு இவளை கேவலமாக பார்த்துக் கொண்டு இருந்த அனைவரையும் முறைத்து விட்டு அங்கிருந்து ஓடாத குறையாக சென்றுவிட்டாள் ஷ்ரதா.
“ஸ்.. ஸப்பா… இப்போ நடந்தது எல்லாம் உண்மையா தென்றல்? ச்சே இப்படி ஒரு காட்சி நம்ம ஆயுள் ல பார்த்திட மாட்டோமா னு ஏங்கிட்டு இருந்தேன்..” என்று சித்ரா தென்றலை பாராட்ட இத்தனை நாட்கள் ஒதுங்கி இருந்த மதன் கூட
“சூப்பர் தென்றல் மா.. செம போல்ட் தான் நீ… நான் கூட இவங்க அப்பா மேல இருந்த மரியாதையில இவங்களை எதிர்க்க முடியாம அமைதியா இருந்திருக்கேன்… ஆனா… நீ சான்ஸே இல்ல சூப்பர்…” என்று மதன் பாராட்ட தென்றலை ஆதீரன் கர்வமாக பார்த்தபடி விழுங்கிக் கொண்டு இருந்தான் விழிகளில்..
“யாருமே அவங்க அவங்க நடந்துக்கிறதை பொறுத்து தான் அண்ணா இந்த தென்றல் மரியாதை கொடுப்பா… அப்பா அம்மாவுக்காக பாசம் வைக்க பழிவாங்க மரியாதை கொடுக்க எல்லாம் எனக்கு தெரியாது…” ஆதீரனை ஏற இறங்க ஓரக்கண்ணால் பார்த்தபடி கூறிவிட்டு தனது இடத்திற்கு சென்று விட்டாள் தென்றல்
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
super thendral intha boldness ella ponungalukum irukanum . aathi eh oru nimisham shock agitan
Super thendral. Very intresting