தீரனின் தென்றல் – 41
Thank you for reading this post, don't forget to subscribe!“சார்… சத்தியமா தென்றல் அந்த ஷ்ரதாகிட்ட இப்படி கோபமா நடப்பா னு நான் எதிர்பார்க்கவே இல்ல…” சித்ரா ஆச்சரியமாக சொல்ல
“ஷ்ரதா பத்தி அவகிட்ட இதுக்கு முன்னாடி எதுவும் சொல்லிருக்கீங்களா சித்ரா?” ஆதீரன் கேட்க
“இதுக்கு முன்னாடி… தர்மலிங்கம் சார் பத்தி தான் சொல்லிருக்கேன் சார்… ஷ்ரதாவை பத்தி சொன்னதில்லை.. ஆனா இப்போ ஷ்ரதா வந்து நான் யாருனு சொல்லு னு சொன்னப்போ லைட்டா… எங்க சாரை விடாம துரத்துர பசை னு ஹஸ்கி வாய்ஸ்ல தென்றலுக்கு மட்டும் கேட்குற மாதிரி சொன்னேன்” என்று சொல்லி விட்டு சமாளிக்க தலையை குனிந்து கொண்டாள் சித்ரா.
அழகான புன்னகையை அதரங்களில் தவழ விட்டான் ஆதீரன். அதை பார்த்த மதன் “பாஸ்… தென்றல் எமோஷனுக்கும் உங்க ரியாக்ஷனுக்கும் எதாவது கனெக்டிவிட்டி இருக்கா?” என்று சந்தேகமாக கேட்க
“ம்ம்… ஆமா மதன்… ஊர்ல ஒரு பொண்ணு… குமாருக்கு தூரத்து ரிலேட்டிவ் அதனால அவன்கிட்ட பேசுற மாதிரி அப்பப்போ என்னை சைட் அடிப்பா.. நான் அதை பெருசா எடுத்துக்கிட்டது கிடையாது. ஆனா தென்றல் விளையாட்டா தோப்புல மாங்காய் அடிக்கிற மாதிரி அந்த பொண்ணுக்கு குறி வச்சு அந்த பொண்ணு தலையில காயமாகிடுச்சு… நல்லவேளை பெருசா ஒன்னும் ஆகலை. அத்தை தான் அவளை திட்டி தீர்த்துட்டாங்க.
சரி தெரியாம செய்துடுட்டா அந்த பொண்ணு எப்படி இருக்கு னு பார்த்துட்டு அப்படியே மன்னிப்பு கேட்டு வரலாம் னு மாமா அத்தையை சமாதானம் பண்ணி தென்றலையும் சேர்த்து கூட்டிட்டு போனா அந்த பொண்ணு நலம் விசாரிக்கிற மாதிரி பக்கத்துல உட்கார்ந்து ‘இனிமே என் தீரனை பார்க்க கூடாது’ னு மிரட்டல் வேற…
அதுக்கு அப்புறம் அந்த பொண்ணு மட்டும் இல்ல… ஊர்ல எந்த பொண்ணும் என் பக்கம் கூட திரும்பினதே இல்ல… இது அவ ஸ்கூல் படிக்கும் போது நடந்தது.. அப்போவே அவளுக்கு அவளை தவிர என்னை யாரும் பார்க்க கூடாது” என்று சிறு சிரிப்போடு ஆதீரன் சொல்லி முடிக்க தென்றலா இப்படி? என்று வாய் பிளந்து நின்றனர் சித்ராவும் மதனும்….
அதன் பின்பு வேலைகள் இவர்கள் நேரத்தை விழுங்கிக் கொள்ள யாரும் யாரோடும் தேவையின்றி பேசாமல் பொழுதை கழித்தனர்.
மறுநாள் அபூர்வா முதல் நாள் பள்ளிக்கு செல்கிறாள். அதற்காக தென்றல் அவளை தயார் செய்து கொண்டு இருக்க ஆதீரன் தன் மகளை காண வந்தான். “அப்பா…” என்று ஓடிச் சென்று அவனை கட்டிக் கொண்டு தன் மகளை கைகளில் தூக்கிக் கொண்டான் ஆதீரன்.
“அப்பா… இன்னிக்கு நீயும் என்னை ஸ்கூல் விட வாப்பா..” என்று ஆசையாக கேட்ட மகளை பார்த்து ஆதீரன் சிரிக்க
“புவிக்குட்டி அப்போ நான் வேணாமா உனக்கு? நான் வந்து உன்னை ஸ்கூல்ல விடுறேன் னு சொன்னேன் ல..” ஏமாற்ற பாவத்தோடு தென்றல் கேட்க
“அச்சோ தெட்டு… நீயும் தான் வா.. அப்பாவும் நீயும் நானும்… கார்ல ஸ்கூல் போலாம்…” என்று மகள் போட்ட திட்டத்தை ஆதீரனே எதிர்பார்க்கவில்லை. குழந்தையிடம் என்ன சொல்லி எப்படி மறுப்பது என்று தென்றல் விழிக்க
“அதான் இன்னும் ரெண்டு நாள்ல நான் போய்டுவேனே.. ஒரு நாள் குழந்தை ஆசைக்காக தானே…” ஆதீரன் ஓரக்கண்ணால் தென்றலை பார்த்து கூற
“ஆசைக்காக னு சொல்லி அதுவே பழக்கமா ஆகிடுச்சு னா?” எங்கோ பார்த்து கேள்வியை ஆதீரன் முன்பு வைக்க
“நான் சத்தியமா பேச்சு மாறமாட்டேன் தென்றல்… என்னை நீ நம்பலாம்” என்று ஆதீரன் சொல்ல
“ஏற்கனவே நம்பினதுக்கு தான் நல்ல பலனா கொடுத்தீங்களே…” உதட்டை வளைத்து தென்றல் கூற ஆதீரனுக்கு சுறுக்கென்று நெஞ்சில் வலி தைத்தது.
“என் குழந்தை மேல சத்தியம் தென்றல்… இனி உன் விருப்பம் இல்லாம நான் இங்க இருக்க மாட்டேன்” என்று அபூர்வா தலை மீது கை வைத்து சொல்ல சட்டென்று குழந்தையை வாங்கிக் கொண்டாள் தென்றல்.
“அன்னைக்கு நான் குழந்தை மேல சத்தியம் பண்ணி தான் குழந்தை பிறக்கும் போது சிக்கல் வந்துச்சு னு அம்மா சொல்லுச்சு.. இப்போ திரும்ப நீ சத்தியம் பண்ணி குழந்தைக்கு எதுவும் ஆக வேண்டாம்…” என்றவள் “சொன்ன வார்த்தையை சொன்னபடி காப்பாத்தினா போதும்..” என்று சொல்லி விட்டு அகன்று விட்டாள் அங்கிருந்து.
அபூர்வா ஆசைப்படி தீரன் காரில் தென்றலோடு முதல் நாள் பள்ளிக்கு செல்ல கிளம்ப அதை பார்த்து ஆனந்த நீர் சுரந்தார் பொன்னி. சித்ரா ஆதரவாக அவர் தோள் தொட
“இந்த பொண்ணு கொஞ்சம் மனசு இறங்கி மாப்ளையை ஏத்துக்கிட்டா எவ்வளவு நல்லா இருக்கும். அவளும் குழந்தையும் கடைசி வரைக்கும் நல்லா இருப்பாங்க… ஏன் புரிஞ்சுக்க மாடடேங்குறா?” என்று அவர் வருந்த
“அவகிட்ட பேசி பார்த்ததுல கோபத்தை விட குற்றவுணர்ச்சி தான் அதிகமா இருக்கு மா தென்றலுக்கு… கொஞ்சம் நேரம் கொடுப்போம் அவளே கண்டிப்பா மாறுவா…” என்று சித்ரா ஆறுதல் சொல்லி விட்டு அலுவலகம் கிளம்பினாள்.
அபூர்வா காரில் முன் பக்கம் அமர்ந்து கொள்ள தென்றல் பின்னால் அமர்ந்து கொண்டாள். ரியர்வியூ மிரரில் தன் புருவத்தை உயர்த்தி பார்த்துக் கொண்டான் ஆதீரன். கண்ணாடி வழியே அபூர்வா வேடிக்கை பார்த்துக் கொண்டு உற்சாகமாக வர “செல்லம்..” என்று அழைத்தான் ஆதீரன்.
“என்னப்பா?” விழியை வெளியே வைத்து குரலை தந்தைக்கு கொடுக்க
“உனக்கு ஸ்கூல் போக பிடிச்சிருக்கா?” என்று கேட்க
“ம்ம்… சத்தி மாதி நானூ பார்பி பொம்மை பேக் வாங்கிட்டேனே… ச்சூப்பரா ஈக்குப்பா…” என்று தத்தை மொழி பேச
“இந்த பேக்குக்காக தான் ஸ்கூல் போறியா செல்லக்குட்டி?” சிரிப்போடு ஆதீரன் கேட்க
“இல்ல… சத்தி கூட வெளாட போதேன்… எனக்கு நெரியா ( நிறைய) பிரெண்ச் கிடப்பாங்க…” என்று பள்ளி பற்றிய தன் எதிர்பார்ப்பை கூற ஆவலாக கேட்டான் ஆதீரன். தென்றல் வெளியே வேடிக்கை பார்ப்பது போல இருந்தாலும் அவளின் கவனம் மொத்தமும் இவர்கள் பேச்சில் தான் நிலைத்திருந்தது.
வகுப்பில் கொண்டு அபூர்வாவை விட்டு விட்டு இருவரும் மாத்தி மாத்தி மகளின் கன்னத்தில் முத்தமிட்டு பதில் முத்தம் வாங்கி விட்டு சற்று இறுக்கம் தவிர்த்த முகத்தோடு வெளியே வர நீண்ட காலம் கழித்து தென்றலின் புன்னகையை தீரன் ரசிக்க மீண்டும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாள் தென்றல்.
“சரி… ஆஃபீஸ் தானே… நானும் அங்கே தான் போறேன் வா…” என்று ஆதீரன் சொல்ல
“தேவை இல்ல… நானே போய்ப்பேன்..” என்று தவிர்த்து விட்டு ஆட்டோ பிடித்து சென்ற தென்றலை ஏக்கமாக பார்த்து நின்றான் ஆதீரன்.
ஒன்றாக வீட்டில் இருந்து கிளம்பிய தென்றலும் ஆதீரனும் தனித்தனியாக வருவதை பார்த்த சித்ரா தென்றலிடம் விசாரிக்க
“பாப்பா ஆசைக்காக தானே அவனோட கார்ல ஏறினேன். பாப்பாவை ஸ்கூல்ல விட்டாச்சு இனி அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? வேலை நேரத்துல இதை பத்தி அவசியம் டிஸ்கஸ் பண்ணனுமா சித்ரா” என்று கடுப்பாக தென்றல் கேட்க அமைதியாக வேலையை கவனித்தாள் சித்ரா.
மாலை வீடு திரும்பிய அபூர்வா அப்பா மடியில் அமர்ந்து முதல்நாள் பள்ளி அனுபவத்தை கிள்ளை மொழியில் சொல்ல அழகிய இசையை கேட்பது போல அனுபவித்துக் கொண்டு மகளுக்கு தான் வாங்கி வைத்த திண்பண்டங்களை ஊட்டிக் கொண்டு இருந்தான் ஆதீரன்.
தன்னை விடுத்து ஆதீரனிடம் இத்தனை உரிமை கொள்ளும் மகளை முறைத்துக் கொண்டு தென்றல் நின்றிருக்க அவளின் கோபமும் அவனுக்கானது என்று ரசித்தான் ஆதீரன்.
இன்னும் இரண்டு நாட்கள் இதே நிலையில் கழிய சனிக்கிழமை காலை ஆதீரன் கிளம்ப வேண்டி அனைத்து ஏற்பாடுகளும் நடந்தேறி இருக்க வெள்ளிக்கிழமை இரவு தன் மகளை தன்னோடு அழைத்துச் சென்று மதன் வீட்டில் உறங்க வைத்த ஆதீரன் அபூர்வா உறங்கியதும் அவளை தூக்கிக்கொண்டு தென்றல் வீட்டிற்கு வந்து கதவை தட்ட பொன்னி தான் கதவை திறந்தார்.
“என்ன மாப்ளை என்னாச்சு?” என்று புரியாமல் விழிக்க
“அத்தை ஒரு நிமிஷம் தென்றலை கூப்பிடுறீங்களா?” என்றிட இன்னும் தூங்காமல் தான் இருந்திருப்பாள் போல சட்டென்று கதவை திறந்தாள் தென்றல்.
ஆதீரன் அபூர்வாவை அவள் கையில் தர வாங்கிக் கொண்டு அவளும் புரியாமல் விழிக்க
“நாளைக்கு காலையில எனக்கு ஃப்ளைட்… பாப்பா முழிச்சிருந்தா அவ என்னை விட மாட்டா.. எனக்கும் குழந்தைகிட்ட பொய் சொல்லிட்டு போக கஷ்டம் தான்… சரி நான் கிளம்பறேன்… போய்ட்டு வரேன் அத்தை..” என்று சொல்லி விட்டு நிற்காமல் ஆதீரன் சென்றுவிட தென்றலை சில நொடிகள் முறைத்து விட்டு பொன்னி உள்ளே சென்று விட குழந்தையை கொண்டு படுக்கையில் நேர படுக்க வைத்த தென்றல் அவளை அணைத்துக் கொண்டு அருகில் படுத்துக் கொண்டாள்.
உறங்கிக் கொண்டிருந்த அபூர்வா திடீரென எழுந்து தன் தந்தையை தேடியவள் காணாமல் அழவும் அந்த சத்தத்தில் எழுந்த தென்றல் “என்னமா என்னாச்சு?” என்று சமாதானம் செய்ய முயல
“எனக்கு அப்பா வேணும் இப்போவே வேணும்” என்று விடாமல் கேவி கேவி அழுத குழந்தைக்கு மூச்சு வாங்க அவளை ஆசுவாசப்படுத்த தென்றல் எவ்வளவு முயன்றும் முடியவில்லை… பொன்னி பயந்து போய் மதனையும் சித்ராவையும் அழைத்துக் கொண்டு வர அபூர்வா மயங்கி விழ அனைவரும் சேர்ந்து அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
Omg what happened to appu kutty? Intresting