அத்தியாயம் – 85
Thank you for reading this post, don't forget to subscribe!அருந்ததி கேட்டதும் அவள் பக்கம் திரும்பி புன்னகைத்தவன்
“நான் இன்டியா விட்டு போகும்போதே அவ பொய பேசலைனு ப்ரூவ் ஆகிடுச்சு ஆனா அவ சின்ன வயசுல இருந்தே என்னை லவ் பன்றது எனக்கு தெரிய வந்தது அவளோட டைரிய படிச்ச அப்புறம்தான்.
“மேதாவோட டைரி உங்களுக்கு எப்படி கிடைச்சது?” என்று நிதின் கேட்க
“அது என்னோட திங்க்ஸ் இங்க பேக் பண்ணும்போது மேதா ஜாப்பனீஸ்ல எழுதி இருந்த டைரிய என்னோடதுனு நினைச்சு என் பேக்கிங்ஓட வெச்சுட்டீங்க அதை படிச்சுதான் தெரிஞ்சுக்கிட்டேன்.
அன்றைய நாள் நிதினிடம் பேசுவதற்கு முன்தினம் உறக்கம் வராமல் தவித்தவன் மேதாவிடம் மன்னிப்பு கேட்க அவளை கண்டுபிடிக்க வேண்டும் அதற்கு அவளது நண்பர்கள் குடும்ப நண்பர்கள் தவிர்த்து வேறு யாரிடம் விசாரிப்பது என்று எண்ணியபடி உடைமாற்ற அவனது பீரோவை திறக்க அவளை அன்று முத்தமிடும்போது அவன் உடுத்தி இருந்த உடை கீழே வந்து விழுந்தது.
ஏதோ தோன்ற அந்த உடையை மட்டும் அவன் துவைக்காமலே எடுத்து வைத்து இருந்தான்.
அதை எடுத்து பார்த்தவனுக்கு அன்றைய சம்பவம் நினைவில் வர அவன் முதன்முதலாய் முத்தமிட்ட பெண் அவள் மட்டுமே ஏன் அவள் நான் தேடும் பெண்தான் என தெரியாமல் போனது விதி தன் வாழ்வில் இவ்வளவு மோசமாக விளையாடி இருக்க வேண்டாம் என எண்ணியவன் அந்த துணியை எடுத்து அதை வாசம் பிடித்தான் அப்போது கூட அவளது வாசம் அதில் நிறைந்து இருப்பதாக தோன்றியது.
அவளை முதன்முதலில் புடவையில் பார்த்ததும் கன்னத்தில் முத்தமிட்டான் அது அவளை வெறுப்பேற்ற என எண்ணி அவனே அவளில் மயங்கி போய் அவனையறியாமல் அவளது கன்னத்தில் முத்தமிட்டது நினைவு வர அவனுக்கு வெட்கமும் சேர்ந்து வந்துவிட்டது.
தனது இதழ்களை கடித்துக்கொண்டான்.
அதன்பின் அவளை அன்று அந்த புடவையில் பார்த்ததும் அவன் அவளை நயவஞ்சகமாக பேசி அவளது நாடகத்தை வெளியே கொண்டு வர்றேன் பேர்வழினு அவளை வலிய உதட்டில் முத்தமிட்டதும் நினைவு வர எவ்வளவு அழகாக அமைய வேண்டிய தருணத்தை நானே என் அவசர புத்தியால் கெடுத்துவிட்டேனே என எண்ணி வருந்த அந்த உடையை அப்படியே அந்த லாக்கரில் வைக்க அப்போது தான் அவளது அந்த டைரி கண்ணுக்கு பட அதை எடுத்தவன் அதை முதல் பக்கத்தை பார்த்தான்
அதில்
“என் சாமுராயுடன்(ஆராஷி) என் பயணம்”
என்று ஜாப்பனீஸில் எழுதி இருந்தாள்.
“ஓஓ என் பேருக்கு மீனிங் கூட இவளுக்கு தெரியுமா?” என்றபடி அதை படிக்க ஆரம்பித்தான்.
ஆனால் அதில் அவள் அவனுடன் வேலை துவங்கிய நாட்களை மட்டுமே எழுதி இருந்தாள்.
நடுநடுவே அவனை அவள் ஜாப்பனீஸில் பக்கத்திலேயே இருந்து அவனுக்கு தெரியாமல் அவனை பார்த்தது எப்படி அவனையே எண்ணியபடி அவள் வாழ்ந்து வந்தாள் அண்ட் ரியோட்டோவுடன் நடந்த உரையாடல்கள் கூடவே இங்கு அவனுக்கு அவள் வேலை செய்ய நிதின் சண்டை போட்டது அதன்பின் எல்லாரும் ஒத்துக்கொண்டது என்று கடைசி இரண்டு நாட்களை தவிர மீதியெல்லாம் நடந்ததை எழுதி இருந்தாள் அதை படிக்க படிக்க அவனுக்கு அவன்மேலேயே கோவம் கோவமாக வந்தது.
தன்மேல் உயிராய் இருந்தவளை உயிரோடு கொன்றுவிட்டோமே என அவன் மனம் அவனை குற்றம் சாட்டியது.
கடைசியாக அவளது தந்தையின் நினைவு வாட்டியதால் அன்று அவர் அவளுக்கு கடைசியாக வாங்கிய புடவையை அணிந்து ஹாஸ்பிடலுக்கு செல்வதாக எழுதி இருந்தாள். கூடவே தந்தை இறப்பதற்கு முன்பு அவருடன் நடந்த உரையாடல்களையும் நினைவு படுத்தி எழுதி இருந்தாள்.
அதில் அவனைப்பற்றிதான் பேசி இருந்தனர் இருவரும்.
“மேதாமா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் உட்காரு” என்றார் சரத்ஶ்ரீ
அவரது அருகில் வந்து அமர்ந்தவள் சலுகையாக அவரது தோளில் சாய்ந்து கொண்டு
“சொல்லுங்கப்பா” என்று கேட்க
அவளது கன்னத்தை தடவியவர்
“வரவர உன்னை பார்க்குறதே அதிசயமா இருக்குடா? நான் நாடுநாடா சுத்துறேன் இந்த சின்ன வயசுலேயே உன் தலையில பெரிய பெரிய பொறுப்புலாம் கட்டிட்டேன்ல?” என்று அவர் கேட்க
“ப்பா என்ன நீங்க? நம்ம ஃபேமிலி பொறுப்ப நான் எடுத்து செய்யுறது பெரிய விஷயமா? அப்புறம் எப்படித்தான் நான் மெச்சுர்ட் பொண்ணா மாறுவேனாம்? நீங்க இப்படிலாம் யோசிக்கிறதை முதல்ல நிறுத்துங்கப்பா.
உங்களுக்கு இருக்குற வொர்க் ப்ரஷர் எனக்கு தெரியாத அக்காவையும் பேபியையும் ஹாண்டில் பன்றதுலாம் எனக்கு பெரிய வேலையா என்ன?” என்று அவள் கேட்க
“உங்க அக்காவோட வாழ்க்கையை நினைச்சு நான் வருந்தாத நாளே இல்லடா ஒருநாள் ஃபோன் பண்ணி நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன் ஆனா அவரை பத்தின விவரம்லாம் அப்புறம் சொல்றேன்னு சொன்னா அப்போவே அவளை பார்க்க போனா அவ அங்க இல்லை சரினு அவளை தேட முயற்சி செஞ்சா அவளோட அடையாளம் எல்லாம் மாத்திட்டா போல விவரமே தெரியலை அவ புருஷனோட சந்தோஷமா வாழுறானு நினைச்சா எங்கேயோ ஹோட்டல்ல வேலை செஞ்சுட்டு இருக்கா வயித்துல பிள்ளையோட அப்பவும் அவ புருஷன பத்தி எதையுமே அவ பேச தயாரா இல்ல
அவ வாழ்க்கையை எப்படி சரி செய்ய போறேனோ?” என்று அவர் புலம்ப
“சீக்கிரமே சரி பண்ணிடலாம்பா. அவ கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறிட்டு இருக்கா அவகிட்ட மாமாவ பத்தி விசாரிச்சு ரெண்டு பேரையும் நான் சேர்த்து வைப்பேன்பா. என்னை நம்புங்க நீங்க கவலைபடாம இருங்க” என்று அவள் ஆறுதல் கூற
“சரிடா அவளை பத்தி நான் கவலை படலை அவளோட லைஃப்ப நீ சரி செஞ்சுடுவனு நம்பிக்கை இருக்கு.
ஆனா உன் லவ் அதை எப்போ சரி பண்ண போற?” என்று அவர் கேட்க அவ்வளவு நேரம் பேசியவள் மெளனமாகிவிட்டாள்.
அவளது தலையை கோதியவர்
“இன்னும் எவ்ளோ நாள்டா உன் லவ்வ மறைச்சு வெச்சுட்டு இருக்க போற? இந்த நாட்டோட கல்ச்சர் உனக்கு தெரியும்ல என்னால முடிஞ்சவரை அவரோட ப்ரண்ட் ஆகி அவரை இதுவரைக்கும் எந்த பொண்ணுகூடயும் டேட்டிங் பண்ணாத மாதிரி கான்ட்ராக்ட் போட்டு தடுத்து வெச்சு இருக்கேன் ஆனா அவருக்கு இந்த நாட்டு ரூல்ஸ் படி அவர் டேட்டிங் போகுற வயசு வந்துட்டுச்சு ஆனாலும் கான்ட்ராக்ட் படி அவர் டேட்டிங் போகாம இருக்காரு நானும் எவ்ளோ நாள்தான் தூரமாவே இருந்து பழகுறது எனக்கும் உன் கல்யாணத்தை செஞ்சு பார்க்கனும்னு ஆசை இருக்காதா? நீயா போய் லவ்வ சொல்ல மாட்ட சரி நான் வேணா உனக்கு அவரை மேரேஜ் செய்ய கேட்கட்டுமா அரேஞ்ச் மேரேஜ்ஜா” என்று அவர் கேட்க.
“நீங்க மட்டும் லவ் பண்ணி மேரேஜ் செய்வீங்க நாங்க செய்ய மாட்டோமா?
அதும் இல்லாம அவர் எத்தனை பொண்ணுங்க கிட்ட பேசலாம் பழகலாம் ஆனா யாரையும் அவர் வாழ்க்கைக்குள்ள வர விட மாட்டார் அது எனக்கு கண்டிப்பா தெரியும் அதனால் அவர் டேட்டிங்கே போனா கூட எனக்கு கவலை இல்ல அவரை பக்கத்தில இருந்து பார்த்து இருக்கேன் எனக்கு அவரைபத்தி நல்லாவே தெரியும்.
கொஞ்சம் டைம் கொடுங்கப்பா அவரோட மனநலம் பத்தி உங்களுக்கு தெரியும்ல அவரோட சித்தி செஞ்ச கொடுமைல இருந்து அவர் முதல்ல வெளியே வரணும்பா அதுவரை அவர் எந்த பெண்ணையும் கிட்ட சேர்க்கவே மாட்டார் இப்போ நீங்க போய் மேரேஜ்னு நின்னா அது லவ்ல நடக்குறதா இருக்காதுபா அது நீங்க அவருக்கு செஞ்ச உதவிக்கு நன்றிகடனா தான் இருக்கும்.
அந்த எண்ணம் எங்க ரெண்டு பேரோட லைஃப்பையும் ஸ்பாயில் பண்ணிடும்பா அவர் என்னை புரிஞ்சு என் லவ்வ புரிஞ்சு கண்டிப்பா என்னை தேடுவாரு அப்போ அவர் முன்ன நான் போவேன் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோங்கப்பா எனக்கு என் லவ் மேல நம்பிக்கை இருக்கு” என்று அவள் கூற
“இதையேதான் வருஷக்கணக்கா சொல்றடா ஆனா அந்த பையன் உன்ன தேடுறமாதிரியே தெரியலையே நானும் எப்படி எப்படியோ பேசி பார்க்கிறேன் அவன் வாய தொறக்கவே மாட்டேங்கிறானே?” என்று அவர் சலித்துக்கொள்ள
“அப்பா” என்று அவரை அவள் முறைக்க
“சரிமா அவர் போதுமா?” என்று அவர் கூற சிரித்து விட்டாள் அவள்
“உனக்கு இன்னும் ஆறு மாசம் டைம் தர்றேன் அதுக்குள்ள அந்த பையன் ஓஓ நோ அவர் உன்ன தேடி வரலைனா நான் அவருக்கு மேரேஜ் ப்ரப்போஸ் அனுப்பிடுவேன் ஜாக்கிரதை கல்யாணம் பண்ணிட்டு லவ்வ பண்ணுங்க அவ்ளோதான் சொல்லிட்டேன்” என்று அவர் திட்ட்வட்டமாக கூற
அவளோ முகத்தை தொங்க போட்டுக்கொண்டாள்.
“உங்க அண்ணன் கல்யாணத்தை பார்த்துட்டேன் உங்க அக்கா கல்யாணத்தை பார்க்க ஏன் அவளோட புருஷனை பார்க்க கூட எனக்கு இன்னும் நேரம் வரலை அட்லீஸ்ட் உன் கல்யாணத்தையாவது பார்க்கனும்னு ஆசையா இருக்குடா அதான் சொல்றேன் உனக்கு உன் லவ்க்கு ஆறுமாசம் டைம் அதுக்குள்ள அவர் உன்னை தேடலைனா நான் மாப்பிள்ளை கேட்டு போய் நிப்பேன் சொல்லிட்டேன்” என்று அவர் கராறாய்கேட்க
“ஓகேப்பா” என்றுவிட்டு அவள் கிளம்பினாள்.
சோகமாக மகள் செல்வது பிடிக்காமல்
“மேதாக்குட்டி” என்று அவர் அழைக்க நின்று திரும்பியவளை அணைத்தவர்
“அப்பா உன் நல்லதுக்குத்தான்டா சொல்றேன் புரிஞ்சுக்க. லவ் பண்ணி மேரேஜ் ஆகலைனாலும் அட்லீஸ்ட் லவ் பண்ண பையனை மேரேஜ் பண்ணனு ஒரு திருப்தி இருக்கும்ல ஆஃப்ட்ட்ர் மேரேஜ் லவ் இன்னும் ஸ்டார்ங் பாண்டிங்கா இருக்கும்டா.
அப்பாக்கும் வயசாகிட்டே போகுதுல.
உங்க அண்ணன் பிள்ளைய பார்த்துட்டேன் உன் அக்கா பிள்ளைய பார்த்துட்டேன் என் செல்லமான பொண்ணு உன் பிள்ளையை நான் பார்க்கனும்ல?
உன் அண்ணன்மேலேயே இன்னும் எவ்ளோ பாரம் சுமத்த முடியும் சொல்லு? இன்னும் எவ்ளோ நாள் அப்பா உங்கள பிஸினஸ் வேர்ல்ட்க்கு காட்டாம இருக்க நானும் என் பிள்ளைங்கள காட்டணும்ல” என்று அவர் கூற சரியென மண்டையை ஆட்டியவள்
“உங்க இஷ்டப்படியே செய்யலாம்ப்பா அவர் ஆறு மாசம்ல என்னை தேடலைனா கண்டிப்பா நீங்க மேரேஜ் ப்ரோபஸலை அனுப்புங்க” என்றுவிட்டு
தந்தையிடம் சிரித்த முகத்தோடு விடைப்பெற்று சென்றாள்.
அதுதான் அவர்கள் பேசிய கடைசி பேச்சு அதை அவள் எழுதி வைத்து இருந்தாள்.
அதை படித்த
ஆராஷிக்கு கண்கள் கலங்கியது.
அதன்பின்தான் அவளுக்கு ரெஸ்ட்டே இல்லாமல் சுழட்டியடித்தானே ஆராஷி அதனால் அதற்கு மேல் அவள் எழுதி இருக்கவில்லை.
‘எவ்வளவு நம்பி இருக்கிறாள் என்னை தான் அவளை தேடுவேன் என அவள் காதல்மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்தவள் அதை கொஞ்சமாவது நான் உணரும்படி செய்து இருக்கலாமே? அவளது முகத்தை அவளது காதலை என் ஈகோ என்னும் திரையால் நான் உணராமலே அவளது உணர்வுகளை கொன்றுவிட்டேனே? எவ்வளவு துடித்து இருப்பாள் ஆறுதலாய் நான் இருப்பேன் என எண்ணியவளை நானே அலைகழித்துவிட்டேனே பாவி பாவி பெரும்பாவி நான்’ என்று தன்னையே நொந்தவன் கண்கள் நீரை வடித்தது அவளுக்காக.
இனி தன் வாழ்வில் அவள் மட்டுமே என்று எண்ணி அவளை தேட ஆரம்பித்தான்.
அன்று முதல் அவளது டைரியில் அவன் எழுத ஆரம்பித்து இருந்தான் அவளைப்பற்றி.
அவர்களை பற்றி.
இனியும் தாமதிக்காமல் அவளை தேட வேண்டும் அவளை கஷ்டப்படுத்திய காலத்திற்கும் சேர்த்து அவளை காதல் செய்ய வேண்டும் என முடிவெடுத்தவன்.
நாளெல்லாம் யோசித்து முதலில் இந்த குடும்பத்தில் கலக்க வேண்டும் அதற்கு தன் சகோதரன் வாழ்வை சரி செய்ய வேண்டும் என முடிவெடுத்து மேனேஜரை பிடித்து உலுக்கி எப்படியாவது இண்டியாவிற்கு அதும் நிதின் குடும்பத்திற்குள் செல்ல வேண்டும் எனக்கு என்ன செய்வீங்களோ தெரியாது ஏதாவது ஐடியா செய்ங்க’ என்று கூறியவன் அப்போது தான் சரத்ஶ்ரீ சர் போட்ட கான்ட்ராக்ட் நியாபகம் வர அதை எடுத்து படித்தவனுக்கு இதுதான் ஒரே வழி என்று புரிய இதோ இங்கு வந்துவிட்டான்.
என்று அவன் கூறி முடிக்க.
அவனை ஆவென பார்த்தனர் அனைவரும்.
மீண்டும் அவன் தன்னிடம் அன்று அண்ணனுக்காக பேசிய பின் அவன் தனக்காக பேசியதை நினைவு கூர்ந்தான் நிதின்
“மிஸ்டர் நிதின் உங்களுக்கு என்மேல கோவம் இருக்கலாம் தப்பில்லை ஆனா அப்படியே கொஞ்சம் என்னையும் நம்புங்க ப்ளீஸ் நான் சினிமாக்காரன் தான் ஆனா அதுக்காக மத்தவங்கள மாதிரி நான் இல்ல என்னை நம்பி உங்க தங்கச்சியை கொடுங்க அவளை கண்டிப்பா நான் நல்லா பார்த்துப்பேன். தெரியாம ஒருமுறை அவளை காயப்படுத்தின பாவம்க்கு தான் அவளை பிரிஞ்சு கஷ்டப்படுறேன் இன்னும் இன்னும் எனக்கு பெரிய தண்டனை கொடுத்திடாதீங்க? பிரிஞ்சதுக்கெல்லாம் சேர்த்து அவளை நான் காதலிக்கனும் அவளோட கண்ணசைவில நான் வாழணும் ப்ளீஸ்” என்று அவன் கெஞ்ச
இதுவரை அவன் யாரிடமும் கெஞ்சியது இல்லை என தெரிந்தவன் முதன்முதலாக தன் தங்கைக்காக கெஞ்சி நிற்பது கண்டு திகைத்தான்.
“உங்களுக்கு எங்களை பத்தி என்ன தெரியும்னு நீங்க பாட்டுக்கு இன்டியா வரணும் பிஸினஸ் பாட்னர்ஸ் ஆகணும்னு கேட்கறீங்க? இதுக்கு நாங்க ஒத்துப்போம்னு எந்த நம்பிக்கையில கேட்கறீங்க?” என்று நிதின் கேட்க
“உங்களை பத்தி மட்டும் இல்ல என் அஷ்ஷுவ பத்தி தெரிஞ்சுக்கத்தான் நான் இன்டியா வரணும்னு கேட்கிறேன். கூட இருந்தா தானே எல்லாம் தெரிஞ்சுக்க முடியும் பாஸ்? என் காதல்மேல எனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ ஆனா மேதா என்மேல வெச்சு இருக்க லவ் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.
அவ நம்ம எல்லாரையும் விட்டு ஒளிஞ்சு வாழுறது வெறும் நான் அவளை மிஸ் அண்டர்ஸ்டான்ட் பண்ணி பேசினதால மட்டும் இல்லனு எனக்கு தோணுது இதுல வேற ஏதோ இருக்கு அதை நான் கண்டுபிடிச்சு சரி பண்ணி என் அஷ்ஷுவ என்கிட்டயே வெச்சுப்பேன் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க” என்று ஆராஷி மடக்க அவனை ஆச்சர்யமாய் பார்த்தான் நிதின்.
‘இவர்கள்ஒருவரையொருவர் சரியாக கூட பார்த்தது இல்லை காதலோடு கதைகள் பேசியது இல்லை கைகோர்த்து நடந்தது இல்லை நடந்தது அனைத்தும் மனவருத்தம் தந்த சம்பவங்கள்தான் ஆனாலும் இவர்களது அந்த பார்க்காத காதல்மேல் இருவருக்கும் எவ்வளவு நம்பிக்கை.
இது ஒன்றும் சினிமா இல்லையே பார்த்து காதல் பார்க்காமலே காதல் என்று இருக்க.
ஆனால் இவர்கள் காதல் இப்படியும் காதல் வருமா? என்றல்லவா எல்லோரையும் மலைக்க வைக்கிறது.
இது உணர்வால் உண்டான காதல் பார்த்து வரும் காதலைவிட உணர்வால் வரும் காதலுக்கு ஆயுளும் அதிகம் கஷ்டங்களும் அதிகம் அதில் கஷ்டத்தை கடந்துவிட்டால் அதன்பின் மகிழ்ச்சியும் அதிகம்’ என்று உணர்ந்தவன்
அதனால்தான் ஆராஷியை இங்கே வர சம்மதித்தான் அவளை பற்றி அறிய சம்மதித்தான்.
அவளுக்காக போராட சம்மதித்தான்.
இதோ இப்போது அவன் வாயாலேயே அவர்களது காதலை உணர்ந்தவனுக்கு தான் செய்தது சரியே என்ற எண்ணமும் கூடிய சீக்கிரமே இவர்கள் இணைய வேண்டும் என்ற வேண்டுதலும் அதிகமாகவே இருந்தது.