பண்பில் சிறக்க பாங்காய் நடந்திட
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
பாரில் செழிக்க வேண்டுவது கல்வி
இருளில் முழுகும் இந்தியாவை
இனிதாய் மாற்ற வேண்டுவது கல்வி
தன்னிலை உணர்ந்த மனிதராய்
தன் காலில் நிற்க வேண்டுவது கல்வி
சமுதாய இன்னலை களைந்திட
சரித்திர நூலை கற்றிட வேண்டுவது கல்வி
முட் போன்ற வாழ்க்கை பாதையை
முழுவதும் ரோஜாவனமாக மாற்றபடுவது கல்வி
— பிரவீணா தங்கராஜ் .
*ஜூன் 2009 மாத ” மங்கையர் மலரில்” பிரசுரிக்கப்பட்டவை .

