தீரனின் தென்றல் – 30
Thank you for reading this post, don't forget to subscribe!மதனின் கையொப்பம் வாங்க வேண்டிய கோப்புகளை எடுத்துக் கொண்டு அவனின் அறைக்குள் நுழைந்தாள் சித்ரா.
எப்போதும் இருப்பதை விட இன்னும் அதிக கோபத்தில் சித்ரா மதனை முறைத்துக் கொண்டு ஃபைலை நீட்ட உனக்கு நான் குறை இல்லை என்று மதனும் இன்று முறைத்து பார்த்தான்.
“சார்.. இந்த ஃபைல்ஸ் எல்லாம் ஆதீ சார் சைன் வேண்டும்… நீங்க ஒரு முறை செக் பண்ணிட்டு அவர்கிட்ட சைன் வாங்கிடுங்க…” என்று சொல்லி விட்டு முகத்தை திருப்பி கொள்ள
“ஓ… அவ்வளவு தானா சித்ரா… என்கிட்ட கேட்கவோ சொல்லவோ எதுவும் இல்லையா?” என்று புருவம் உயர்த்தி கேட்க
“நான் என்ன சொல்லனும்? உங்களுக்கு என்கிட்ட சொல்ல எதுவும் இல்லாதப்போ நான் மட்டும் ஏன் எல்லாத்தையும் சொல்லனும்?” என்று கோபமாக சித்ரா கேட்க
“ம்ம்… இப்போ என்ன? பாஸூக்கும் தென்றலுக்கும் இடையே நடந்த எதையும் நான் உன்கிட்ட ஷேர் பண்ணலை னு கோபமா… சித்து… ப்ளீஸ் உட்காரு முதல்ல… நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு அப்போ தான் எல்லாம் புரியும்…” என்று அமைதியான குரலில் மதன் சொல்ல இருக்கையில் அமர்ந்தாள் சித்ரா.
“இதோ பாரு சித்ரா… பாஸ் என் கூட நல்லா பழகினாலும் இதுவரை அவரோட லைஃப் ல பர்சனலா எதுவும் ஷேர் பண்ணதே இல்ல…
அன்னைக்கு தென்றல் இன்டர்வியூ வந்தப்போ வெளியே இருந்தபடியே ஃபோன்ல வேலை கொடுக்க சொல்லி இன்ஸ்ட்ரக்ட் பண்ணாரு. அடுத்து தென்றலோட வீட்டுப் ப்ராப்ளம் பத்தி அவரே தான் கேட்க சொல்லி நான் கேட்டு ஃப்ளாட்க்கு ஷிப்ட் பண்ண எல்லா ஹெல்ப் ம் பண்ணேன்..
இதெல்லாம் ஏன் எதுக்கு எதுவுமே எனக்கு புரியலை… அவர்கிட்ட அது பத்தி கேட்டா நான் தென்றலுக்கு துரோகம் பண்ணினேன் னு தான் சொல்லுவாரு… அப்பறம் தான் அவங்களுக்குள்ள நடந்த எல்லாம் எனக்கு சொன்னாரு…” என்று கூறிய மதன் சுருக்கமாக ஆதீரன் தென்றலுக்கு இடையே நடந்த அனைத்தையும் கூற அதிர்ந்து விழித்தாள் சித்ரா.
“இவ்வளவு நடந்திருக்கா… இதெல்லாம் மறைச்சுட்டு தென்றல் எப்படி இவ்வளவு கூலா நடந்துக்கிறா… ஆதீ சார் கூட இதுவரை அவரோட கஷ்டத்தை வெளியே காட்டினதே இல்லையே…” சித்ரா ஆச்சரியமாக கேட்க
“அதுதான் அவங்க குணமே சித்ரா… அப்பறம் இதெல்லாம் உன்கிட்ட சொல்லி பாஸ் கூட தென்றலை சேர்த்து வைக்க உதவி கேட்க தான் நினைச்சேன் சித்ரா… ஆனா எப்போதும் நீ தென்றல் கூடவே இருந்ததால தான் சொல்லலை சித்ரா” என்று மதன் சொல்லி முடிக்க இன்னும் ஆச்சரியம் தாளாமல் தான் அமர்ந்திருந்தாள் சித்ரா.
“இதுல ரெண்டு பேர் மேலயும் தனிதனியா தப்பு னு சொல்ல முடியாது… ஏதோ சூழ்நிலை… பிரிஞ்சிட்டாங்க நாம அவங்களை சேர்த்து வைக்கனும்… கண்டிப்பா நான் என்னால முடிஞ்ச உதவியை செய்றேன் மதன்..
பட் இருந்தாலும் தென்றல் தன்னோட ஹஸ்பண்ட் இறந்திட்டதா சொல்லிருக்க வேண்டாம்…” என்று அதற்காக சித்ரா வருந்த
“நாம ஒரு விஷயத்தை கவனிக்க மறந்திட்டோம் சித்ரா… தென்றல் தன்னோட ஹஸ்பண்ட் இறந்திட்டதாவோ இல்ல தான் ஒரு விடோ னு தன் வாயால சொல்லவே இல்ல… தன்னோட குழந்தை கருவில இருக்கும் போதே அதோட அப்பாவை இழந்திடுச்சு னு தான் சொன்னாங்க… அதாவது பாஸை ஏத்துக்க விருப்பம் இல்லாம அப்படி சொன்னாங்க.. அதை நாம தான் தப்பா புரிஞ்சுகிட்டோம்…” மதன் விளக்கம் தர சித்ரா அமைதியாக ஏதோ யோசனையில் அமர்ந்திருக்க
“ம்க்கும்…” குரலை செருமி கொண்டு “அப்பறம் சித்ரா… உங்களை பார்க்க புதுசா சொந்தங்கள் உங்களை தேடி ஆஃபிஸ் வரைக்கும் வருது போல…” என்று புருவம் உயர்த்தி மதன் கேட்க யோசனையில் இருந்து தெளிந்த சித்ரா முறைத்தபடி
“ஏன் சார் எனக்கெல்லாம் சொந்தங்கள் இருக்கக் கூடாதா?” என்று கேட்க
“ஐயோ… அப்படி நான் ஒன்னும் சொல்லலை… ஆனா இத்தனை நாள் இல்லாம…” என்று மதன் இழுக்க
“என் தம்பி ஏற்கனவே என்னை பார்க்க அடிக்கடி வருவானே சார்… ஏதோ கொஞ்ச நாள் காலேஜ் எக்ஸாம் னு பிஸி ஆகிட்டான்… ஆமா என் தம்பி என்னை தேடி வந்தா உங்களுக்கு என்ன?” சிறு கோபம் துளிர்விட சித்ரா கேட்க
“உன் தம்பி வரதுல எனக்கு பிரச்சனையே இல்லை சித்ரா… என்ன விஷயமா உன்னை பார்க்க வந்தான்?”
“ம்ம்… என் சின்ன தங்கச்சிக்கு கல்யாணம் ஏற்பாடாகி இருக்கு… அதுக்கு கொஞ்சம் பணம் தேவை… என்கிட்டே இருக்குமா னு கேட்டு பார்க்க வந்தான்… இதுல என்ன தப்பு இருக்கு சார்…” என்று படபடவென்று பொரிந்து தள்ள
“ஓ… இத்தனை வருஷம் நீ இங்க தனியா கஷ்டப்படுறது எதுவும் அவங்களுக்கு தெரியலை… இப்போ பணம் வேணும் னு உன்கிட்ட கேட்க மட்டும் கண்ணு தெரியுதா? என்ன… உன் தம்பி கேட்ட உடனே பணத்தை தரேன் னு ஒத்துக்கிட்டயா?” என்று கோபமாக மதன் மாற
“அது என் பர்சனல்… அதுல ஏன் சார் நீங்க தலையிடுறீங்க?” பட்டென்று கேட்டு விட்டாள் சித்ரா.
“ஓ… ஆமா ல்ல.. நான் யாரு உங்களுக்கு.. நான் யாரோ தானே… உன்னை வாழ்க்கையா நினைச்சு உன்னை ஏத்துக்க மாட்டேன் னு சொன்ன என் குடும்பத்தை வேண்டாம் னு ஒத்துக்கிட்டு உன் ஒருத்தி பார்வை என் மேல படாதா னு ஏங்கிட்டு நாய் மாதிரி உன் பின்னாடி சுத்துறேன் ல… நான் யாரோ தான்…” என்று மதன் வேதனையோடு சொல்ல சொல்ல சித்ராவிற்கு கண்கள் கலங்க மதனின் அறைக்குள் நுழைய வந்த தென்றலை கூட கவனிக்காமல் அழுது கொண்டே ஓடி விட்டாள் சித்ரா.
அவளை பார்த்து கொண்டே உள்ளே வந்த தென்றல் மதனின் முகமும் ஏதோ மாதிரி இருக்க “அண்ணா… என்னாச்சு? சித்ராக்கும் உங்களுக்கும் எதாவது சண்டையா அவங்க அழுதுட்டே போறாங்க…” என்று கேட்க
“ஒன்னும் இல்ல மா…” தலை குனிந்தபடி மதன் சொல்ல
“அண்ணா…. நான் இங்கே வேலைக்கு சேர்ந்த அன்னைக்கு இருந்து பார்க்குறேன்.. நீங்களும் சித்ராவும் சிரிச்சு பேசிக்காட்டியும் கூட உங்களுக்குள்ள ஏதோ ஒரு பிடித்தம் இருக்கு னு எனக்கு தெரியும். ஆனா ஒரு நாள் கூட சித்ரா கண்கலங்கி பார்த்ததே இல்ல… இன்னைக்கு அழுதுட்டே போறாங்க என்னாச்சு அண்ணா?” தென்றல் மீண்டும் கேட்க
“அவளை வேண்டாம் னு சொன்னதுக்காக என் சொந்தங்களை ஒதுக்கி வைச்சேன்… இன்னைக்கு என்னோட பர்சனல் விஷயத்துல தலையிட நீ யாரு னு கேட்டு போறா ம்மா…” மதன் வேதனையோடு சொல்ல
“அண்ணா உங்களுக்கு யாருமே இல்லை னு சொன்னீங்க… சித்ராவை அக்சப்ட் பண்ணலைனு ஒதுங்கி வந்தாங்களா? என்ன காரணம் அண்ணா.. சித்ரா ஏன் இவ்வளவு ஹார்ஸா பேசுனாங்க?” தென்றல் கேள்வியை அடுக்க
“எல்லாரும் இருக்காங்க மா… அம்மா அண்ணன் அண்ணி அக்கா அக்கா கணவர் அவங்க குழந்தை னு பெரிய குடும்பம் தான்… ஆனா யாருக்கும் பெரிய மனசு தான் இல்லை… “
“என்ன அண்ணா சொல்றீங்க? எதுவுமே புரியலை…” தென்றல் விழிக்க
“கழுத்துல தாலி ஏறுன அன்னைக்கே விதவை ஆகிட்டா சித்ரா… அவளை கல்யாணம் பண்ணா எனக்கும் அதே மாதிரி ஆகிடும் னு மூட நம்பிக்கைல ஊறிப்போன அம்மா பயந்துட்டு சம்மதம் தர மறுத்திட்டாங்க… அம்மா சம்மதம் இல்லாம என்னை ஏத்துக்க மாட்டேன் னு சித்ரா பிடிவாதம் பண்றா…” என்று விரக்தி சிரிப்போடு மதன் சொல்ல
“அண்ணா சித்ராக்கு மேரேஜ் ஆகி அவங்க கணவர் இறந்துட்டாரா? என்ன அண்ணா என்ன சொல்றீங்க?” அதிர்ந்து போய் கேட்டாள் தென்றல்.
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
Sema twist. Bhuva kutty super. Intresting