Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 43

பூவிதழில் பூத்த புன்னகையே 43

” நான் நீ தேவாவிற்கு காட்ட வேண்டிய பாசத்தை தடுத்தேன் என்பதற்காக தான் நீயாகவே ஆதுவை அவனிடம் விட்டு விட்டாயா ? நீ  தேவாவிற்கு கொடுக்காத பாசத்தை ஆதுவிற்கு கொடுக்கக் கூடாது என்று எண்ணினாயா?..”அது எப்பொழுதுமே உன் மனதை உருத்தி கொண்டு இருந்திருக்கும் அல்லவா ?என்ன இருந்தாலும் நானே கூட நாளை ஒரு வார்த்தை சொல்வேன் என்று யோசித்திருப்பாய்” . “நீ பெற்ற பிள்ளையாக இருந்திருந்தால் தேவாவிற்கும் அந்த பாசத்தை கொடுத்து இருப்பாய் என்று சொல்வேன் என்பதற்காகவே ஆதுவை உன்னிடம் இருந்து ஒதுக்கி வைத்து விட்டாயா ? “என்றார் .”அரசி அதிர்ச்சியாகி தனது கணவனை பார்த்தார் தூங்கிக் கொண்டிருந்த ஆது தனது தாயை பற்றி தந்தை பேசியவுடன்  ஆது எழுந்தான்”..”தனது தந்தை பேசியதை கேட்டு கண்ணீர் மல்க எழுந்து உட்கார்ந்து விட்டான் ஆது.””அப்பா இப்போது நீங்கள் கேட்ட அனைத்தும்  தான் உண்மை அதை நான் எப்போதும் புரிந்து கொண்டேன் என்று விட்டு தனது தாயின் மடியில் படுத்துக்கொண்டான்”..” அரசிக்கு மேல் கண்ணீர் வந்தது ஆதுவின் தலையை கோதியவர் டேய் ஒன்றும் இல்லை இது எதைப் பற்றியும் யோசிக்காமல் உன்னுடைய முழு கவனத்தையும் படிப்பில் வை என்றார் “..”ஆது தனது தாயின் இடுப்பை கட்டிக்கொண்டு நானும் அப்பாவும் தான்  அம்மா உன்னை தவறாக புரிந்து கொண்டோம் அண்ணன் உங்களை சரியாக புரிந்து இருக்கிறார்” “அண்ணனின் வாழ்க்கை நன்றாக தான் இருக்கும் இதுவரையும் நன்றாக தான் இருந்தார் சந்தோஷமாகத்தான் இருந்தார் நாங்கள் தான் அவர் சந்தோஷமாக இல்லை என்று நினைத்துக் கொண்டோம்”..” எனக்கு தெரிந்தது அவருக்கு ஒரே ஒரு வலி தான் அதுவும் நீங்கள் அவரிடம் பேசவில்லை என்று தானே தவிர “நீங்கள் அவர் மீது அன்பாகவும் அக்கறையும் அவரைப்பற்றி யோசிக்காமல் இல்லை என்று இல்லை என்று அவருக்கு தெரிந்திருக்கிறது “..”நீங்கள் அவரைப் பற்றி யோசிக்கிறீர்கள் என்று நீங்கள் அவரிடம் பேசாத வலி க்கூட அவருக்கு தெரியக்கூடாது என்பதற்காக தான் அவரை முழு நேரமும் வேலையிலும் என்னை பார்த்து கொள்ளும் பொறுப்பிலும் ஆழ்த்தி இருக்கிறீர்கள் “..ஆனால் “உங்களை அண்ணனிடம் பேச இந்த நிமிடம் வரை ஏதோ ஒன்று தடுக்கிறது அதற்கு காரணம் அப்பாவாக கூட இருக்கலாம் அப்பா பேசிய வார்த்தையாக கூட இருக்கலாம் இந்த நிமிடம் வரை உங்கள் மனதில் அப்பா பேசிய வார்த்தை ஆணிவேராக பதிந்திருக்கிறது”..”இதுவே நீ பெற்ற மகனாக இருந்திருந்தால் என்று அப்பா  கேட்டிருக்கிறார்” என்ன தான் பாரு பெரியம்மா 5 மாதம் அண்ணனுடன் இருந்திருந்தாலும் அண்ணனை வளர்த்தது அந்த ஐந்து மாதமும் அப்பா தான் “..”அப்பொழுது தாய் பால் கூட பாரு பெரியம்மா கொடுக்கவில்லை என்று அப்பா சொல்லி இருக்கிறார்கள் அப்போது முழுக்க முழுக்க அண்ணனின் தாய் நீங்கள் மட்டும் தான் அதை அவரே மாற்ற மாட்டார்”..”பாரு பெரியம்மா  அப்பாவிற்கு மட்டுமில்லை அண்ணனுக்கும் இறந்த காலம் தான் நீங்கள் மட்டும் தான் அண்ணனின் நிகழ் காலம் எதிர்காலம் அனைத்தும் ஆனால் எனக்கு ஒன்று உண்மையாகவே புரியவில்லை “..”அண்ணன் மீது உங்களுக்கு என்ன கோபம் அதையும் தாண்டி அண்ணன்   ஏதோ ஒன்று தவறு செய்திருக்கிறார் ஏதோ ஓரிடத்தில் தவறி இருக்கிறார் அது அண்ணன் எப்பொழுது புரிந்து கொள்வார் என்று தெரியவில்லை”..” அண்ணனே நிறைய நாட்கள் புலம்பி கொண்டு தவித்து இருக்கிறார்  நான் எங்கோ தவறி இருக்கிறேன் ஆனால் எது என்று எனக்கு புரியவில்லை என்று சொல்லி இருக்கிறார்”. இப்பொழுதுதான் எனக்கும் அது தோன்றுகிறது “நீங்கள் அப்பாவிற்காக என்று மட்டும் எண்ணி அண்ணனிடம் இருந்து இந்த அளவிற்கு ஒதுக்கும் காமிக்கவில்லை அண்ணனும் உங்களிடம் ஏதோ ஒரு இடத்தில் தவறி இருக்கிறார் “”அது எந்த இடம் என்று அண்ணன் புரிந்து கொள்ளும் நாள் அண்ணனுக்கு நீங்கள் அவசியமாக இருப்பீர்கள் என்று மட்டும் சொல்லி விட்டு ஆது தனது தாயின்  நெற்றியில் இதழ் பதித்துவிட்டு படுத்தான்”” அவன் தன் மனதில் இருக்கும் வலிகளை கொட்டியவுடன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தான்”. “அவன் தங்கிய பிறகு அரசி ஆதுவை தனது மடியில் இருந்து தலையனையில் படுக்க வைத்துவிட்டு தீரனைப் பார்த்தார் தீரன் அரசியை பார்த்துக் கொண்டிருந்த உடன் தோலுக்கு மேல வளர்ந்து புள்ளைய வச்சிட்டு எதுக்கு இப்படி குறுகுறுன்னு பாத்துட்டு இருக்கீங்க என்று சிரித்தார் “…”தீரனுக்குமே சிரிப்பு வந்துவிட்டது தன்னை சிரிக்க வைப்பதற்கு இவ்வாறெல்லாம் பேசுகிறாள் என்று எண்ணி விட்டு வயசான காலத்துல உனக்கு குசும்பு தாண்டி இன்னும் பத்து மாசம் ஆனா உன் மருமகள் பேரப்பிள்ளை பெத்து கொடுத்துடுவ போல என்றார் “..”உங்கள் மருமகள் ஜட் வேகத்துல போய் எட்டு மாசத்துல கூட பெத்து கொடுப்பாங்க படுங்க என்று விட்டு படுத்தார்  தீரனுமே வருவின் செய்கையை  எண்ணி சிரித்து விட்டு என் மகனின் பாடு தான் பாவம் என்று விட்டு படுத்தார்”..” தனது கணவன் சொல்லிய பேச்சில்  அரசிக்குமே சிரிப்பு வந்து சிரித்துக் கொண்டே படுத்தார் அனைவரும் நல்ல உறங்கிருந்தார்கள் இவர்கள் வீட்டில் இப்பொழுது இருக்கும் சந்தோஷம் எப்பொழுதும் இருக்கும் வேண்டும் இருக்குமா ?”..மறுநாள் பொழுது நன்றாக விடிந்தது அரசி  தான் முதலில் எழுந்து வரவேற்பு அறையில் உட்கார்ந்திருந்தார் வாசல் தெளித்து கோலம் மட்டும் போட்டுவிட்டு உட்கார்ந்து இருந்தார்”..”அதை தினமுமே அந்த ஒரு வேலையை மட்டும் அவர்தான் செய்வார் எப்பொழுதும் போல் அதை மட்டும் செய்துவிட்டு உட்கார்ந்து இருந்தார் தேவா அப்பொழுதுதான் எழுந்தான்”..”தேவா எழுந்தவன் தன் நெஞ்சில் உறங்கிக் கொண்டிருக்கும் தனது மனைவியை பார்த்தான் அவளைப் பார்த்துவிட்டு லேசாக அவனது முகத்தில் முருவல் வந்தது “..”இவள் தன் கை சேர எத்தனை வலிகள் என்று யோசித்தான் ஆனால் அத்தனையும் தவுடு பொடி ஆக்கி விட்டாள் இவள் தன் வாழ்வில் வருவதற்கு இவளுக்கு தான் அனைத்து வலிகளும்”..” எத்தனை சிரமப்பட்டு இருக்கிறாள் என்று யோசித்தான் இவளை போல ஒரு மனைவி கிடைக்க தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று லேசாக வாய் விட்டு முனகி விட்டு அவளது நெற்றியில் இருக்கும் ஒரு சில முடிகளை ஒதுக்கிவிட்டு அவளது நெற்றியில் இதழ் பதித்தான்”..பிறகு  “அவளது  தாடையில் லேசாக தட்டிவிட்டு அவளை தலையணையில் படுக்க வைத்துவிட்டு செல்ல ராட்சசி என்ன பேச்சு பேசினாலும் என்னை விட்டு விலகாமல் இன்று என்னுடைய மனைவியாக என் நெஞ்சில் படுத்து இருக்கிறாள்” என்று எண்ணிக் கொண்டு சிரித்துக்கொண்டே குளியல் அறைக்குள் புகுந்தான்…” குளித்துவிட்டு வேறு ஒரு உடை அணிந்து கொண்டு அவனது அறையில் இருந்து வெளியில் வந்தான்அப்போது அரசி உணவு மேசையில் உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு நேரத்தை பார்த்தான்”..” அது காலை 7.30 என்று காட்டிய உடன் நேரம் ஆகிவிட்டதா ?இன்னும் ஒரு ஐந்து நிமிடத்தில் டீ எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன் அம்மா என்று விட்டு வேகமாக சமையல் அறைக்குள் சென்றான் “..”போகும் தேவாவை அமைதியாக பார்த்தார்  அரசி வேறு எதுவும் பேசவில்லை தேவாவின் குரல் கேட்டு அறையில் இருந்து ஆதுவும் தீரனும் வெளியில் வந்தார்கள் இருவருமே எப்பொழுதும் போல் எழுந்து விட்டார்கள்”..”தேவா தான் சந்தோஷத்தில் உறங்கி இருந்தான் ரொம்ப நேரம் பிறகு வேகமாக டீ போட்டுக் கொண்டு இருந்தான் அப்பொழுது இத்தனை மணி நேரம் தேவாவின் நெஞ்சு சூட்டில் தூங்கிக் கொண்டிருந்த வரு கதகதப்பு தன்மை குறைந்த உடன் எழுந்து விட்டாள்”..”வரு எழந்து விட்டு அறையை சுற்றிப் பார்த்தாள் தேவா இல்லை என்றவுடன் எப்படியும் எழுந்து வெளியே தான் சென்று இருப்பார். என்று எண்ணி விட்டு வெளியில் வந்தாள் ஆனால் அவள் ஒன்றை கவனிக்க தவறி விட்டாள்”..”தன் உடைகளை சரி செய்யவும் இல்லை குளிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவளுக்கு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும் அப்படியே கலைந்த ஓவியமாக வெளியில் வந்தாள்”..” கதவு திறக்கும் சத்தம் கேட்டு வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த  ஆது ,அரசி, தீரன் மூவரும் வருவைப் பார்த்தார்கள் வரு இருந்த கோலத்தை பார்த்தவுடன் ஆது பக்கு என்று சிரித்து விட்டான்”..” தீரனுக்கு ஒரு மாதிரியாக இருந்தவுடன் கீழே குனிந்து கொண்டார் அரசி தான் ஒரு நிமிடம் இவள் வந்து நின்ற கோலத்தை பார்த்துவிட்டு போய் பிரஷ் ஆகி கொண்டு வா முகம் கழிவு கொண்டு வா என்றார் “..சரி அத்தை என்று விட்டு உள்ளே சென்றாள் ஆது சிரித்தவுடன் என்ன என்று தெரியாமல் தேவா சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்தவன் வரு வந்து நின்று கோலத்தை பார்த்துவிட்டு “என் மானத்தை மொத்தமா வாங்கிட்டா “என்று தலையில் தட்டிக் கொண்டு சமையலறைக்குள் புகுந்து டீ எடுத்துக் கொண்டு வந்தான் “..அவன் டீ எடுத்துக் கொண்டு வந்த கேப்பில் வரு அவளது அறைக்குள் சென்று தன்னை கண்ணாடி முன் நின்று ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டாள் அவளை யோசிக்க வைத்தது ஆதுவின் சிரிப்பல்ல தீரனின் தலை குணிவு எதற்காக மாமா தன்னை பார்த்து விட்டு தலை குனிந்தார்” என்று எண்ணி தான் வந்தாள்…அதன் பிறகு தான் “அரசி எதற்காக தன்னை பிரஸ் ஆகி கொண்டு வர சொன்னார் என்பதை உணர்ந்து விட்டு தன் தலையிலே தட்டிக் கொண்டு பிறகு குளிக்க எல்லாம் அவளுக்கு தோன்றவில்லை முகம் கழுவிக்கொண்டு பிரஷ் பண்ணிவிட்டு வேறொரு உடை அணிந்துகொண்டு அவளது அறையில் இருந்து வெளியில் வந்தாள் “..”தேவா அப்பொழுதுதான் மூவருக்கும் டீ கொடுத்துக் கொண்டிருந்தான் வருவும் தனக்கொரு டீ காப்பை எடுத்துக் கொண்டு ஆதுவின் அருகில் உட்கார்ந்தாள் ஆது பள்ளிக்கு கிளம்பவில்லையா ?நேரம் ஆகிறதே என்று கேட்டாள்”..”ஆது இல்லை அண்ணி லீவ் என்று சொல்லிவிட்டு அண்ணி நான் ஒன்று கேட்பேன் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்களே உங்களுக்கு புடவை கட்ட தெரியாதா? என்றான் சிரித்து முகத்துடன் ஆது.”.”வருவும் சிரித்துவிட்டு லைட்டா என்றாள் நீங்கள் வந்த கோலத்தை பார்த்தால் லைட்டா என்பது போல் தெரியவில்லையே என்றவுடன் சிரித்தாள் தீரன் தான் ஆதுவை அமைதியாக இருடா என்றார்”..” மாமா சாரி நான் எழுந்தவுடன் அப்படியே வெளியே வந்து விட்டேன் புடவை கட்டியிருப்பதை யோசிக்கவில்லை வேறொரு உடையாக இருந்தால் எப்பொழுதும் போல் இருந்திருப்பேன்”..” அந்த ஞாபகத்தில் வந்து விட்டேன்  இந்த அளவிற்கு உங்களுக்கு அசோவுகரியத்தை கொடுத்திருக்க மாட்டேன் என்று விட்டு அமைதியாக இருந்தாள் தீரன் நிமிர்ந்து ஒன்றும் இல்ல டா அப்பா மாதிரி நினைத்தால் எதுவும் தவறில்லை “..இருந்தாலும் “எதற்கும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்.  நம் வீடு தானே உனக்கு கம்ஃபர்டபிலா இருக்கும் உடைய வீட்டில் இருக்கும் பொழுது அணிந்து கொள்.வெளியில் செல்லவோ கோவிலுக்கோ இல்லை வேறு ஏதாவது ஃபங்ஷனுக்கு செல்லும் போது மட்டும் புடவை அணிந்து கொண்டால் போதும் என்றார் “..”அரசி தனது கணவனை முறைத்து பார்த்தார்   வரு அதை பார்த்து விட்டு சிரித்தாள் தேவா தனக்கும் ஒரு கப் எடுத்துக்கொண்டு வந்து அவளது அருகில் அவளை இடித்துக் கொண்டே உட்கார்ந்து அவளது காதில் முதன் நாளே மானத்தை வாங்கிட்டியா டி என்று கேட்டான்”..”வரு அவனைப் பார்த்து சிரித்துவிட்டு பழுப்பு காண்பித்தாள் தேவா தன் தலையிலே அடித்துக் கொண்டு டீ குடித்தான் அவன் என்ன பேசினான் என்று மற்ற  மூவருக்கும் கேட்கவில்லை என்றாலும் தனது தேவா பேசியதற்கு வருவின் எதிர்வினையை பார்த்து அனைவரும் சிரித்தார்கள்”..பிறகு “திரும்பவும் வரு தான் பள்ளி கிளம்பவில்லையா? என்று கேட்டதற்கு அண்ணி நேற்று தானே திருமணம் ஆகியது என்றான் டேய் எங்கள் இருவருக்கும் தான் திருமணம் ஆகியது உனக்கில்லை எனவும் “உனக்கு தான் திருமணம் ஆகியது போல் விடுமுறை எடுத்துக் கொண்டிருக்கிறாய்! .என்று கேட்டாள்…”ஆது தான் பாவமாக தனது அண்ணியை பார்த்தான் தீரன், அரசி இருவரும் பக் என்று சிரித்து விட்டார்கள் தேவா தனது மனைவியை முறைத்துக் கொண்டு இருந்தான்”.. வரு அனைவரையும் அமைதியாக பார்த்துவிட்டு ஆதுவின்   தோளில் கை போட்டுக் கொண்டு சிரிக்க செய்தாள்”..இந்த குடும்பம் இப்பொழுது போல் எப்போதும் சந்தோஷமாக ஒற்றுமையாக இருக்குமா? என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..அன்புடன் தனிமையின் காதலி

3 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 43”

  1. CRVS2797

    அட.. அவங்க ஒத்துமையா இருந்தா கூட, இவங்க உத்து உத்தி பார்த்தே இருக்க விடாம பண்ணிடுவாங்க போலயிருக்கே..???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *