Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்சுமியே 22

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 22

எதுடி சூழ்நிலை எது சூழ்நிலை சூழ்நிலை எதுவும் இல்லை இது எல்லாம் உன்னுடைய திமிரு இந்த குடும்பத்திற்காக என் அண்ணனையும் அவரின் காதலையும் தூக்கி எறிந்து விட்டாய் உனக்கு அவருடைய  காதல் அந்த அளவுக்கு  துச்சமாக போய்விட்டதா இந்த குடும்பத்திற்காக என் அண்ணனையும் அவருடைய காதலையும்  தூக்கி எறிந்தவள் தானே நீ என்றால் இனி மகா அழுது கொண்டிருந்தாள் அவளால் இனிக்கு எப்படி இதை புரிய வைப்பது என்று தெரியவில்லை அப்போது மகிழ் இனி உதிரன் அறைக்கு வந்து மகா என்று ஓரளவுக்கு வேகமாக கத்தினான் மூவருமே மகிழை அங்கு எதிர்பார்க்கவில்லை மூவருமே எழுந்து நின்று மகிழை பார்த்தார்கள் மகா மகிழை பார்த்தவுடன் தலையை கீழே குனிந்து கொண்டால் இனி தன் அண்ணனிடம் அண்ணா என்று கூப்பிட்டால் அப்பொழுது மகிழ் தான் கை காண்பித்து இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம் என்பது போல் கை காண்பித்து விட்டு மகாவின் கையை பிடித்து அவளை உதிரன்  அறையில் இருந்து வெளியில் அழைத்துக் கொண்டு வந்து விட்டான்பிறகு அவர்களது அறைக்கு அழைத்துச் சென்று விட்டு மகாவை முறைத்தான்.  மகா செல்லும் வரை அமைதியாக இருந்தவன் மகிழ் அழைத்துக் கொண்டு சென்றவுடன் உதிரன் தான் இனியிடம் பேச ஆரம்பித்தான் இனி நீ என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா என்றான் ஏன் தெரியாமல் தான் பேசுகிறேனா நான் ஏன் உன் தங்கையை பற்றி பேசிய உடன் உனக்கு வலிக்கிறதாஇப்பொழுது கூட எனது அண்ணனுக்கு மகாவை தவறாக சொன்னவுடன் கோவம் வந்து தானே அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான் என்றால் அப்பொழுது இதற்கு முழு முதல் காரணமும் மகா மட்டும் என்று தான் நீ சொல்கிறாய் அப்படித்தானே என்று உதிரன் கேட்டான் இனி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் சொல்லு நீ மகா மட்டும்தான் காரணம் என்று சொல்கிறாய் அப்படி தானே அப்போது உன் அண்ணன் இதற்கு காரணம் இல்லை  சரி மகா தான் இந்த குடும்பத்திற்காக அவளுடைய காதலை சொல்லாமல் இருந்தால் உன் அண்ணனின் காதலை சொல்ல வேண்டாம் என்று  மகா  என்னுடைய கையை தானே பிடித்தால் உன் அண்ணனுடைய கையைப் பிடிக்கவில்லையே மகா   தான் இந்த வீட்டிற்காக காதலை சொல்ல வேண்டாம் என்று சொல்லாமல் இருந்தால் உன் அண்ணன் சொல்லி இருக்கலாமே  உன் அண்ணனுடைய காதல் உண்மைதானே அவன் சொல்லி இருக்க வேண்டியதுதானே என்றான் இனி எதுவும் பேசாமல் உதிரன் பார்த்து அழுது கொண்டு நின்றாள் அப்பொழுது நான் எனது அண்ணன் மேல் தவறு இல்லை மகா மேல் மட்டும்தான் தவறு என்று சொல்கிறேன் என்று அவள் மட்டும் தான் தவறு செய்தால்  என்று சொல்கிறேன் என்று சொல்கிறீர்களா மாமா என்று உதிரனை பார்த்து கேட்டா நான் என் அண்ணன் மேல் தவறு இருக்கிறது என்று சொல்லவில்லை என்று சொல்கிறீர்களா என்றாள்அதைப் பற்றி நாம் பேச வேண்டாம் இது அவர்கள் வாழ்க்கை அவர்கள் தான் இனி பார்த்துக் கொள்ள வேண்டும் நாம் அவர்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று எண்ணினோமா அது வரை சரி இப்பொழுது அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இனி அவர்கள் வாழ்க்கை அவர்கள் தான் பார்க்க வேண்டும் இதற்கு இடையில் நாம் பேச வேண்டாம்நான் உன்னை மகாவிடம் பேசு என்று சொல்லவில்லை நீ மகாவிடம் பேசு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன் நான் உன்னை தவறு சொல்லவில்லை நீ பேசுவதும் பேசாமல் இருப்பதும் உன்னுடைய விருப்பம் நீ உன்னுடைய அண்ணனிடம் கூட பேசவில்லை என்று எனக்கு தெரியும் நான் உன்னை ஏன் என்று கேட்கவில்லை அது உன்னுடைய விருப்பம் ஆனால் மகாவிடம் இப்படி பேசுவது நல்லதல்ல அவளுக்கு எந்த அளவுக்கு மனது கஷ்டமாக இருக்கும் என்று யோசிக்க மாட்டாயா? ஏற்கனவே குடும்பத்திற்காக தன்னுடைய காதலை விட்டுக் கொடுத்து விட்டோமே என்ற வருத்தம் அவளுக்கும் இருக்கு  அவர்களைப் பார்த்துக் கொண்டு இருக்கும் உனக்கே இருக்கும்பொழுது விட்டுக்கொடுத்த அவளுக்கு இருக்காது என்று நினைக்கின்றாயா இல்லை உன் அண்ணனை அவள் உண்மையாக விரும்பவில்லை என்று நினைக்கின்றாயாஇருவருமே உண்மையாக விரும்புகிறார்கள் இருவருமே இந்த வீட்டிற்காக தான் விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் இப்பொழுதும் இந்த வீட்டுக்காக தான் திருமணம் செய்து இருக்கிறார்கள் இனி அவர்கள் வாழ்க்கை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் இதில் நாம் தலையிடக்கூடாது என்றவுடன் இனி உதிரன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதாள்மாசமாக இருக்கின்றாள் இந்த நேரத்தில் எதையும் நினைத்துக் கொண்டிருக்க கூடாது   என்று எண்ணி விட்டு இனி எதையாவது நினைத்துக் கொண்டே இருக்காதே இப்பொழுது நீ மாசமாக இருக்கிறாய் அதை நினைவில் வைத்துக்கொள் என்று பிறகு அவனது நெஞ்சிலே சாய்ந்து கொண்டு தேம்மி கொண்டு இருந்தாள் அப்படியே அவனது நெஞ்சிலே தூங்கி விட்டாள்அவள் தூங்கி விட்டாள் என்று தெரிந்தவுடன் உதிரன் பிறகு அவளை தலையணையில் படுக்க வைத்துவிட்டு ஏசியை மிதமான குளிரில் வைத்துவிட்டு அவள் மேல் ஒரு போர்வையும் போர்த்துவிட்டு  அவனது அரை கதவை மெதுவாக மூடிவிட்டு வெளியில் வந்தான் இப்பொழுது நாம் மகாவை பார்க்க வேண்டும் என்று எஎண்ணினான் மகிழ் அறைக்கு சென்றான் அப்பொழுது மகிழ் மட்டும்தான் அறையில் இருந்தான் அதுவும் பால்கனியில் நின்று ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான் மகா எங்கே என்று சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு மகிழிடம் சென்றான் மகிழ் மகா எங்கே என்று கேட்டான் திரும்பி பார்த்துவிட்டு மகிழ் உதிரனை முறைத்து பார்த்துக் கொண்டே அவளது அறையில் இருப்பாள் அவள் இங்கு இல்லை வந்தவுடன் வெளியே சென்று விட்டாள் என்றான் உதிரன் மகிழை முறைத்து பார்த்தான் மகிழ் உதிரனை முறைத்துக் கொண்டே இனி அவ்வளவு பேசும் வரை நீ அமைதியாகவே இருக்கிறாய் என்றான் மகிழ் நான் என்ன பேச வேண்டும் அவள் சொல்வதெல்லாம் உண்மைதானே இருந்தாலும் இப்படி கேட்டிருக்க வேண்டாம் தான் திரும்பவும் உதிரன் மகா எங்கே என்று கேட்டான் அவள் இங்கே இல்லை அவளுடைய அறையில் இருப்பாள் என்ற உடன் லூசா நீ எந்த நேரத்தில் அவளை தனியாக விட்டு இருக்கிறாய் என்று எண்ணிவிட்டு மகாவின் அறைக்கு சென்றான் உதிரன்  பின்னாடியே மகிழும் சென்றான்அவளுடைய கதவு தாழ்ப்பாள் போடாமல் திறந்து இருந்தது கதவு திறந்தவுடன் அங்கு மகா இல்லை சுற்றி பார்த்துவிட்டு மகா இல்லையென்ற வுடன் உதிரன் வேகமாக மொட்டை மாடிக்கு சென்றான் மகிழும் ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டு வேகமாக மொட்டை மாடிக்கு சென்றான் இருவரும் மொட்டை மடிக்கு செல்லும் மகா மொட்டை மாடியில் தான் நிலவை வெறித்து பார்த்துக் கொண்டு மனதில் எது எதையோ அசைத்துப் போட்டு கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் உதிரன் வேகமாக சென்று மகா என்றவுடன் மகா திரும்புவதற்கும் மகிழ் மகாவின் கையை பிடித்து இழுத்துக் வைத்து அவளது தாடையில் ஓங்கி அறைந்திருந்தான் என்னடி நீ நெனச்சிட்டு இருக்க என்ன கொன்னது பத்தாது என்ன முழுசா சாவடிக்க முடிவு பண்ணிட்டியா இந்த நேரத்தில் உன்னை யாரு இங்கு வர சொன்னா என்ற உடன் மாமா என்று கேவி கொண்டே மகிழன் நெஞ்சில் சாய்ந்து அழுதால் மகிழக்கு இப்பொழுது என்ன செய்வது என்று தோன்றவில்லை அவளை தேற்றவும் தோன்றவில்லை அவளை ஒதுக்கவும் தோன்றவில்லை அவள் வேண்டும் ஆனால் தன்னுடைய காதலை வேண்டாம் என்று சொன்னவள் தனக்கு வேண்டாம் என்று இருகொல்லியாக புலம்பி கொண்டு இருந்தான் இப்பொழுது இதை எப்படி சமாளிப்பது  என்று தெரியாமல் தவித்தான்அப்போது உதிரன் தான் மச்சான் என்றான் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள் ஒரு சில நொடி கழித்து மகாவே அதிலிருந்து வெளியில் வந்து மகிழணை பார்த்து சாரி என்று விட்டு அவனை விட்டு பிரிந்து உதிரினையும் பார்த்துவிட்டு அமைதியாக அவளுடைய அறைக்கு கீழே இறங்கி சென்று விட்டாள் அவள் கீழே சென்றவுடன் மகிழன் அங்கேயே மண்டியிட்டு உட்கார்ந்து அழுதான் உதிரன் அவனது தோளில் தொட்டவுடன் எழுந்து நின்று உதிரனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதான் இன்னுமும் என் உயிரை வாங்கலாம் என்று இருக்கா போல டா எத்தனை டைம் சொல்லி இருக்கேன் இந்த நேரத்தில் இங்கு வரக்கூடாது என்று என்கிட்டையே சாரி கேட்டுட்டு போறா டா என்று அழுக அவள் சாரி கேட்கும் அளவிற்கு செய்திருப்பதற்கு காரணம் யார் நீ தானே என்றான்மகிழ்  உதிரனை பார்த்தான் நான் எதுவும் பேச விரும்பவில்லை ஆனால் இது அனைத்திலும் நீயும் அடங்கி இருக்கிறாய் என்பதை மறந்து விடாதே அவள் மேல் மட்டும் தப்பு இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாயா என்றவுடன் மகிழன் உதிரனின் சட்டையை பிடித்தான் இப்ப என்னடா என் மேல தப்பு இருக்குன்னு சொல்றியா எனக்கு தெரியாது மச்சான் என்று உதிரன் சொன்னவுடன் மகிழ் தன்  தலையிலே அடித்துக் கொண்டு அழுதான் டேய் என்ன பண்ற என்றவுடன் ஒன்றுமில்லை என்று விட்டு மகிழும் அவனது அறைக்கு சென்றான் இருவரையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று எண்ணி விட்டு உதிரனும் கீழே இறக்கி வந்தான்இருவரும் அவர்கள் அறையில் தான் இருக்கிறார்களா என்று அவர்கள் அறைக்கு சென்று எட்டிப் பார்த்தான் இருவரும் அவர்கள் அறையில் தான் இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் அவனது அறைக்கு சென்று விட்டான் மகா அமைதியாக கீழே பாய் விரித்து படுத்து விட்டாள் மகிழும்  அமைதியாக வந்து ஒரு நிமிடம் அவளை உற்றுப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அவனும் படுத்து விட்டான்மகிழ் மகா இருவரும் தாங்கள் காதலித்து காலத்திலிருந்து இப்பொழுது வரை நடந்த ஒவ்வொன்றையும் அசை போட்டு பார்த்துக் கொண்டே இருந்தார்கள் மகிழ் அசதியில் அப்படியே எதை எதையோ நினைத்து விட்டு தூங்கி. விட்டான் அவன் காலையில் இருந்து செய்த வேலையிலும் அலைந்து கொண்டிருந்ததில் அசதியிலும் துங்கி விட்டான்ஆனால் மகா விற்கு தான் தூக்கம் எட்டா கனியானது நேற்று மகிழின் தூக்கம் சென்றது இன்று மகாவின் தூக்கம் போனது மகா எதை எதையோ நினைத்துக் கொண்டு புரண்டு புரண்டு புரண்டு படுத்தாள் அப்படியே காலை  பொழுதும் விடிந்தது  காலை 5 மணி அளவில் எழுந்து குளித்துவிட்டு நேற்று அவளது ஒரு சிறு துணிமணிகளை மகிழ் அறைக்கு எடுத்து  கொண்டு இருந்தால் அதனால் மகிழ் அறையிலே இன்று குளித்துவிட்டு உடை அணிந்து கொண்டு வெளியில் சென்றால் அப்பொழுது பெண்கள் மூவரும் எழுந்திருந்தார்கள் மகா வெளியே சென்றவுடன் சுந்தரி தான் என்ன மகா எழுந்து விட்டாயா என்று கேட்டார்  எழுந்து விட்டேன் அத்தை தூக்கம் சரியாக இல்லை என்றவுடன் சுந்தரி சிரித்துக் கொண்டே நேற்று அவனுக்கு தூக்கமில்லை இன்று உனக்கு தூக்கம் இல்லையா என்று கேட்டார் அவரது சிரிப்பில் அதிக வலி இருந்தது அதை மகாவும் உணர்ந்தால் எதுவும் பேசாமல் ஒன்னும் இல்ல அத்தை என்று விட்டு சமையலறைக்கு சென்று டீ போட போனால் காவேரி ஏற்கனவே டீ போட்டு இருந்தார் அதை மகாவின் கையில் கொடுத்தார் என்ன பெரியம்மா காலையிலேயே நிறைய வேலைகளை முடித்து இருக்கிறீர்கள் என்று கேட்டால் நீ எங்கே மகா காலையிலே குளித்து இருக்கிறாய் என்றார்  காவேரி இல்லை பெரியம்மா ஐந்து நாட்கள் தான் லீவ் எடுத்து இருந்தேன் இல்ல என்று விட்டு ஒரு நிமிடம் அமைதியாக இருந்தால் காவேரி கோதை சுந்தரி மூவருமே மகாவையே பார்த்தார்கள் அப்போது சுந்தரி தான் என்ன மகா என்று கேட்டார்அத்தை என்னை மன்னித்து விடுங்கள் தவறாக நினைக்காதீர்கள் நான் திருமணத்திற்கு என்று ஐந்து நாட்கள் தான் விடுமுறை எடுத்திருந்தேன் அது நேற்றுடன் முடிந்து விட்டது இதற்கு மேல் அதிக லீவு எடுக்க முடியாது என்றால் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவளது சூழ்நிலையில் புரிந்தது திடீரென ஏற்பட்டு திருமணம் தானே அதனால் அதற்கு மேல் அவள்  லீவ் எடுக்க முடியாது என்று எண்ணி விட்டு அது மட்டும் இல்லாமல் மகிழ் மட்டும் என்ன வீட்டில் இருக்கிறான் எண்ணினார்கள்இருவரும் என்ன அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று எண்ணி விட்டு சரி மகா  நீ காலேஜுக்கு போ என்றார்கள் பிறகு காவேரி தான் உன்னிடம் சமையல் வேலையை ஒப்படைத்து விடலாம் என்று நினைத்திருந்தோம் என்றார் ஏன் பெரியம்மா என்று கேட்டாள் இல்ல மகா குலதெய்வ கோவிலுக்கு நீங்க தான் வரலைன்னு சொல்லிட்டீங்க நாங்க மட்டுமாவது போயிட்டு வரலாம்னு இருந்தோம்பெரியவங்க மட்டும் போலம் என்று நேற்று சொல்ல மறந்து விட்டோம் இரவு தான் முடிவு செய்தோம் என்றார்  சரி பெரியம்மா நீங்க போயிட்டு வாங்க என்றாள்  நாங்க காலைக்கு மட்டும் தாண்டா சமைச்சிருக்கோம் சாம்பார் மட்டும்தான் இப்பதான் காய்கறி அறியுரோம் என்றார் சரி நீங்க போய் கிளம்புங்க நான் பாத்துக்கிறேன்கோவிலுக்கு போவதற்கு தேவையானதை எடுத்து வைங்க  எனக்கு காலேஜுக்கு போக இன்னும் நேரம் நான் சமைத்துக் கொள்கிறேன் பெரியம்மா ஒண்ணும் பிரச்சினை இல்லை எங்களுக்கு மட்டும் தானே இருக்கிறதை வைத்து நான் பார்த்துக் கொள்கிறேன் ஒன்னும் பிரச்சனை இல்ல என்று அவள் சொல்லிக் கொண்டே வெளியில் வந்தால் அப்பொழுது பாண்டியம்மா பாட்டி வெளியே வந்தார் அவரது அறையில் இருந்து என்னடி கிளம்பலாமா என்று கேட்டுக் கொண்டு வந்தார் கிளம்பலாமா என்று சொன்னவுடன் மகா கோவிலுக்கு செல்வதற்கு எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் பாட்டி காலை சாப்பாடு இதோ சமைத்து விடுகிறேன் ஓரளவுக்கு முடிந்துவிட்டது என்றால் என்னடி காலேஜ் என்று கேட்டது என்றார் இல்ல பார்ட்டி என்று விட்டு நான் காலேஜுக்கு லீவு எடுத்து இருந்தது முடிந்து விட்டது இன்று நான் காலேஜுக்கு போக வேண்டும் என்றால் என்ன என்று பாண்டியம்மா கேட்டார்  அதெல்லாம் ஒன்றும் நீ காலேஜுக்கு போக வேண்டாம் என்றார் அப்பொழுது மகிழ் அவனது அறையில் இருந்து வந்தான் அவனும் ஒரு நிமிடம் காலேஜ் கா என்று கேட்டான் வீட்டில் உள்ள அனைவரும் வெளியில் வரவேற்பு அறையில் வந்து உட்கார்ந்து இருந்தார்கள் மகிழ் காலேஜுக்கா என்று கேட்டவுடன் வீட்டில் உள்ள அனைவரும் மகிழனையே பார்த்தார்கள் மகிழும் மகாவை போக வேண்டாம் என்று சொல்லிவிடுவானோ என்று வீட்டில் உள்ள அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்..மகிழும் மகாவை போக வேண்டாம் என்று சொல்லிவிடுவானா ..என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் அன்புடன்❣️ தனிமையின் காதலி❣️

3 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்சுமியே 22”

  1. Kalidevi

    Yen magizh apadi kekura Yen mrg aeita college poga kudatha nee apadi solra aal illaye . Nalaiku varai wait pannama ok wait panrom ena solra pakalam

  2. CRVS 2797

    அட… படிக்கிற பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு, காலேஜ்க்கு அனுப்பாமா,..
    கிச்சனுக்கா அனுப்ப போறாங்க..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *