Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்சுமியே 3

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 3

அக மகிழன் சாப்பிட்டு முடித்துவிட்டு தனது ஈரக் கையை தனக்கு பின்பு கை கழுவி கொண்டு வந்த மகாலட்சுமியின் முந்தியில் துடைத்தான் வீட்டில் உள்ள அனைவரும் அவனை ஒரு முறை பார்த்து விட்டு சிரித்துக் கொண்டே இளைஞர்கள்  அனைவரும் தனது குடும்பத்தினர் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள்

மகாவும் எதுவும் கூறாமல் அமைதியாகச் சென்றாள் இது எப்பொழுதும் நடக்கும் ஒன்றுதான் புதிதாக ஒன்றும்  மகிழ் செய்யவில்லை அதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு இது பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எப்பொழுதுமே அவன் சாப்பிட்டுவிட்டு மகாவின் சுடிதார் போட்டிருந்தால் ஷாலிலோ சேரி கட்டிருந்தால் அவளது முந்தியிலே துடைப்பது வழக்கம் தான்

அதிக நேரங்களில் மகா சேரிதான் அணிந்திருப்பாள் ஏனென்றால் அவள் கல்லூரியில் ப்ரொபஷராக  இருக்கிறாள் ஆகையால் அவள் தினமும் கல்லூரி செல்வதால் அதிக நேரம் சேலையில்தான் இருப்பாள் ஒரு சில நாட்களில் இரவு வேலையில் மட்டும் தான் சுடிதார் அணிந்திருப்பாள் அந்த நேரங்களிலும் ஷால் போட்டு இருப்பதால் அந்த ஷாலில் துடைத்து விடுவான் மற்ற நேரங்களில் வீட்டில் உள்ள துணிகளில் துடைத்துக் கொள்வான்

இது எப்பொழுது நடக்கும் என்று என்பதால் வீட்டில் உள்ளவர்கள் இதை எப்பொழுதுமே தப்புக்காக எடுத்துக் கொள்வதில்லை பிறகு அனைவரும் ஒன்றாக வந்து அமர்ந்தவுடன் மகிழ் இதழினி தனது கோதை அத்தை மடியில் படுத்து இருப்பதை பார்த்துவிட்டு இதழு என்று அழைத்துக் கொண்டே அவ்வளது அருகில் வந்து உட்கார்ந்தான்

என்னன்னா என்று கேட்டுக் கொண்டே தனது அத்தையின் மடியில் இருந்து எழுந்தால் நீ பேசியது சரியா என்று உனக்கே தோன்றுகிறதா அதுவும் மாப்பிள்ளையை வைத்துக் கொண்டு பேசுகிறாய் அவர் என்ன நினைப்பார் அவரது மனது எந்த அளவு கஷ்டப்படும் என்று யோசிக்க மாட்டாயா என்றான் இதழ் நிமிர்ந்து உதிரனை பார்த்தால் அவன் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான்

வீட்டில் உள்ளவர்களும் அதன் பிறகு பேச ஆரம்பித்தார்கள் மகிழ் சொல்வது உண்மைதானே இதழ் நீ நினைப்பது போலோ நீ சொல்வது போல அவனால் எல்லா நேரங்களிலும் எல்லா சூழ்நிலையிலும்  உன்னுடன் இருக்க முடியும் என்று எல்லாம் சொல்ல முடியாது வீட்டில் உள்ள யாருமே உன்னுடன் எப்போதும் இருப்பார்கள் என்றெல்லாம் இல்லை

அவர்களுக்கு என்று  ஒரு சூழ்நிலை இருக்கும் அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் உன்னுடனே எப்பொழுதும் இருப்பார்கள் என்று இல்லை என்றார்கள் அப்போது மகா இதழக்கு அருகில் உட்கருந்து கொண்டு இதழினியின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டு இதழ் நாங்க யாரும் அப்படி சொல்லல அது மட்டும் இல்லாம மாமாவும் எதும் தப்பா சொல்லல

மாமா எப்பயும் உன் கூட வந்து இருப்பார் யாரும் இருக்க மாட்டாங்கன்னு சொல்லல ஆனா எல்லா நேரங்களிலும் நீ நினைப்பது தப்பு அது உனக்கு ஊட்டி விடுவதற்கு மாமா வரும் என்று நினைப்பது ரொம்ப தப்பு இனிமே நீ அண்ணனுக்கு பொண்டாட்டி அதுக்காக  மாமாவுக்கு தங்கச்சி இல்லனு நான் சொல்ல வரல உனக்கு ஒரு சில ஆசைகள் இருக்கிறது போல உதிரன் அண்ணாவுக்கும் ஒரு சில ஆசைகள் இருக்கும்

அதையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ அவரைப் பக்கத்துல வச்சிக்கிட்டு நீ மகிழ் மாமாவை தேடுறது தப்பு இனிமேல் நிறுத்திக்கோ இதை மட்டும் தான் சொல்ல விரும்புறேன் இதை நான் உன் நாத்தனாரா சொல்றேன் எடுத்துக்கிட்டாலும் சரி உன் அத்தை மகளா சொல்றேன்னு எடுத்துக்கிட்டாலும் சரி இல்ல உன்னோட ஃப்ரண்டா சொல்றேன்னு நினைச்சு எடுத்துக்கிட்டாலும் சரி ஆனா நாங்க எல்லாருமே உன் நல்லதுக்கு மட்டும்தான் சொல்லுவோம் என்று கூறிவிட்டு வேறு எதுவும் பேசாமல் அவளது அரை நோக்கி சென்றுவிட்டால்

அவள் இவ்வாறு கூறியவுடன் அவள் எழுந்துவதற்கு முன்பாகவே உதிரன் அவனது அறைக்குச் சென்று விட்டான் உதிரன் சென்றவுடன் அவனது அறைக்கு தான் மகா சென்றாள் அவள் அங்கு செல்லும் வேலையில் உதிரன் அமைதியாக அவனது கட்டிலில் உட்கார்ந்து இருந்தான்  அண்ணா என்று கூறிக்கொண்டே அவனது கட்டிலில் சென்று உட்கார்ந்தால்

மகா அமர்ந்தவுடன் உதிரன் அவளது மடியில் தலை சாய்த்தான் அண்ணா நீ இதழ தவற நினைத்து விட்டாயா என்றால் தவறாக நினைக்கலடா லேசா வருத்தம் இருக்கு மச்சான் சொன்ன மாதிரி நீ சொன்ன மாதிரி நான் பக்கத்தில் இருக்கும் போது அவள் மகிழை தேடியது  எனக்கு லைட்டா வருத்தமாக இருக்கிறது அவ சொல்ற மாதிரி அவன் எல்லா நேரத்திலும் வந்து நிற்க முடியாது இல்ல அது கூடவா அவளுக்கு தெரியாது அவள் ஒன்றும்  சின்ன குழந்தை இல்லையே என்று கூறிக் கொண்டிருந்தான்

அப்பொழுது மகிழும் அங்கு வந்தான் மச்சான் இதழ் சின்ன புள்ளத்தனமா நடந்துக்கிறாள் என்றான் மகிழ் அதற்கு உதிரனும் ஒன்னும் இல்லடா மாப்ள லேசா வருத்தம் தான் மத்தபடி ஒன்னும் இல்ல என்றான் சரி மாப்ள எதையும் நினைத்து கொண்டு இருக்காத கல்யாண மாப்பிள்ளை கலகலன்னு இரு என்று சொல்லிவிட்டு அவன் வெளியே சென்று விட்டான் அவன் சென்றவுடன் மகா தனது அண்ணனை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தால்

பிறகு வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள் அப்போது எங்கடா போற கொஞ்ச நேரம் உட்காரு  என்று பாண்டியம்மா பாட்டி கூப்பிட்டார் இல்ல பாட்டி அனைத்தையும் கொஞ்சம் ஒதுங்க வைக்க வேண்டி இருக்கிறது முடித்துவிட்டு வருகிறேன் என்றான்  அதெல்லாம் ஒதுங்க வைக்கணும் என்றவுடன் எழில் தான் அண்ணா அது தான் ஒதுங்க வைக்க இத்தனை ஆட்கள் இருக்கிறார்கள் அல்லவா அப்படி இல்லையென்றால் நானும் முகிலும் இருக்கிறோம்

நாங்கள் இருவரும் பார்த்துக்கொள்கிறோம் கொஞ்ச நேரம் அமைதியாக உட்காருங்கள் என்று கூறிவிட்டு அவர்கள் இருவரும் சென்றார்கள் பிறகு மகிழனும் தனது குடும்பத்தினருடன் உட்கார்ந்திருந்தான் பிறகு அவன் தனது தங்கை படுத்திருக்கும் தனது கோதை அத்தை மடியில் அவனும் சென்று படுத்தான் அவன் படுத்தவுடன் இதழ் எழுந்து கொண்டால்

எனது அண்ணன் ஒழுங்காக படுக்க வேண்டும் என்பதற்காக பிறகு அவனது தலையை கோதை கோதிக் கொண்டே இருந்தார் அவன் ஒரு பத்து நிமிடம் அசதியில் தூங்கிவிட்டான் வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக இருங்கள் அவன் தூங்கிட்டான் என்றவுடன் அமைதியாக இருந்தார்கள் சரியாக ஒரு 10 15 நிமிடம் தான் இருக்கும் எழுந்து விட்டான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குடா என்று சொன்னார் கோதை

இல்ல அத்தை அவ்வளவுதான் கொஞ்ச நேரம் நிம்மதியாக இருந்த்தால் கண் அயர்ந்து விட்டேன் தூக்கம்லாம் இல்ல என்று கூறிவிட்டு எழுந்தான் பிறகு அனைத்தையும் ஒதுங்க வைத்து விட்டார்களா என்று பார்க்க அவனது வேலையை பார்க்க சென்று விட்டான் பிறகு வீட்டில் உள்ளவர்களும் அனைத்தும் ஒதுங்க வைத்துவிட்டு எல்லாம் எடுத்துக் வைத்து கொண்டிருந்தார்கள் இப்படியே மாலையும் ஓடியது

மாலை வீட்டில் அனைவருக்கும் மகாகவும் கயலும் டீ போட்டு  எடுத்து கொண்டு வந்து கொடுத்தார்கள் அனைவரும் குடித்துக் கொண்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள் அப்பொழுது உதிரனை தவிர இந்த தலைமுறைகள் அதாவது அகமகிழன்  எழில் வேந்தன் கார்முகிலன் மூவரும் வெளியில் சென்று அப்போதுதான் வந்தார்கள் மூவருக்கும் கையில் எடுத்துக் கொண்டு டீ கொடுத்தவுடன் மூவரும் குடித்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்

அப்போது கருப்பையா தாத்தா தான் தனது பேரன் மகிழனை பார்த்து இன்று நலங்கு நன்றாக முடிந்தது டா  அடுத்தடுத்து வேலைகள் எல்லாம் பார்த்தாகி விட்டதா எல்லாம் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்று கேட்டார் எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்றான்

என்னன்ன முடிந்தது என்று அனைத்தையும் பேசிக் கொண்டிருந்தார்கள் டேய் ஏன்டா இப்படி ஓடிக்கிட்டே இருக்க என்று தாத்தா கேட்டார் என்ன தாத்தா நம்ம வீட்டு கல்யாணம் என்றான் அதுக்கு நீ இப்படி எல்லாம் நீ மட்டும் தான் ஓடிட்டு இருக்க என் தங்கச்சி கல்யாணம் என் மாப்பிள்ளை கல்யாணம் நான் ஓடாமல் வேற யாரு ஓடுவார்கள் என்றான்

என்னடா நான் தான் ஓடுவேன் என்று நீ மட்டும் அனைத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறாய், நாங்க இத்தனை பேர் இருக்கிறோம் அல்லவா எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் வேலை கொடுக்கலாம் ஆனால் அதை விட்டுட்டு நீ மட்டுமே மொத்த வேலையும் செஞ்சுட்டு இருக்க என்றார்

என்ன பேசுற தாத்தா நீ நானு என்று கேட்டேன் அப்புறம் என்னடா இந்த கல்யாணத்தை முடிவு பண்ணது மட்டும்தான் நாங்க அதுவும் நாங்க மூணு வருஷத்துக்கு முன்னாடி முடிவு பண்ணனும் தப்பான ஒரு முடிவு எடுத்தோம் அப்ப வந்து என்கிட்ட சொன்னதும் நீ தான் அவங்க ரெண்டு பேருக்கும் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு திருமணம் வச்சுக்கலாம்

அவங்க ரெண்டு பேரும் அவங்கள விருப்பப்பட்ட வேலையில்  நல்ல நிலைமையில் வந்து நிற்கட்டும் என்று சொன்ன அப்ப கூட நாங்க இல்லைன்னு தடுக்க வந்தப்ப நான் சொல்றது கொஞ்சம் முழுசா கேளுங்கன்னு சொல்லிட்டு நீதான சொன்ன அவர்கள் இருவரும் அவர்களுக்கு என்று அவர்களுக்கு பிடித்த வேலையில் ஒரு நிலையில் வந்து உட்கார்ந்து பிறகு திருமணம் செய்து வைத்தால் அவர்கள் நன்றாக இருப்பார்கள்

இப்பொழுது திருமணம் செய்து வைத்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதைப் பற்றி யோசித்தால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை இருவருக்குமே கசந்துவிடும் என்று சொன்ன வாழ்ந்து அனுபவித்து எங்களுக்கு கூட அந்த யோசனை வரவில்லை பிறகு நீ சொன்ன பிறகு நாங்கள் அவர்களைப் பற்றி கேட்கும் போது நாங்களே இதை உங்களிடம் சொல்ல தான் வந்தோம் என்று சொன்னார்கள்

பிறகு அவர்களாக தானே இப்பொழுது வந்து எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் நாங்கள் எங்களுடைய வேலையில் முன்னேறி இருக்கிறோம் என்று சொன்ன பிறகு தானே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தோம் அதுவும் இந்த திருமண பேச்சை எடுத்ததிலிருந்து இப்பொழுது வரை நிச்சயதார்த்தம் முதற்கொண்டு  அனைத்தையும் நீ தானே இழுத்து போட்டு செய்து கொண்டிருக்கிறாய் என்றார்

நீ நிச்சயதார்த்தத்திற்கு கல்யாணத்திற்கு புடவை எடுக்க மட்டும் தானே நாங்கள் சென்றோம் எங்களுக்கு அழைத்து கொண்டு சென்றது கூப்பிட்டுக்கொண்டு கொண்டு வந்தது மற்றபடி அனைத்தையும் நீ தானே செய்து கொண்டிருக்கிறாய் பத்திரிக்கை வைப்பது பத்திரிக்கை அடிப்பது நகை வாங்க துணி எடுக்க என்று ஒவ்வொன்றையும் ஒன்று விடாமல் நீ தானே செய்து கொண்டிருக்கிறாய்  கொஞ்ச நேரம் உட்காருடா என்றார்

பையா கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் பிறகு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்கருகிறேன் இப்பொழுது வேலை இருக்கிறது இது நம்ம வீட்டுக்கு கல்யாணம் நம்மளே உக்காந்துட்டா எப்படி என்றான் அதுக்கு நீ மட்டும் தான் செய்வேன் என்று ஓடிக் கொண்டிருக்கிறாயே சரியா என்றார் அதற்கும் மகிழன்  நான் மட்டும் எங்கு ஓடி கொண்டு தனியாக செய்கிறேன் அதான் இவனுங்க ரெண்டு பேரும் இருக்காங்க இன்னும் நிறைய பேர் இருக்காங்க இல்ல நான் மட்டும் தனியா செய்யல

நீ ஏன் இப்படி புலம்புற என்று தனது தாத்தாவை சொல்லிவிட்டு அவரது  தாடையில் முத்தம் ஒன்றை வைத்தான் உனக்கு பாண்டியம்மா முத்தம் கொடுத்தால் மட்டும்தான் பிடிக்குமா என்று அவரது காதில் சொல்லிவிட்டு அவனது வேலையை பார்க்க சென்றான் இவ்வளவு நேரம் அவன் தனது தாத்தாவின் காதில் பேசியதையும் அவன் செய்ததையும் பார்த்துக் கொண்டு  அருகில் உள்ள அந்த மூன்று வானரங்களும் கேட்க நேரிட்டது

தாத்தா மாமாவுக்கு குசும்பு பாத்தியா என்றார்கள்  ஆமாண்டி உங்களுக்கு இருக்க குசும்ப விடவா  அவனுக்கு குசும்பு அதிகமாக இருந்திர போது போங்கடி என்று தனது பேத்திகளை பார்த்து சிரித்தார் அந்த மூன்று வானரங்களும் தனது தாத்தாவுக்கு பழுப்பு காட்டி விட்டு சென்றார்கள் இப்படியே அனைவரும் பேசிக்கொண்டோம் ஒதுங்க வைத்துக் கொள்ளும் சமையல் செய்து கொண்டும் மாலை பொழுது ஓடி இரவு வந்தது

இரவு வேலைக்கு அனைத்து உணவு பதார்த்தங்களை எடுத்துக்  கொண்டு வந்து வைத்தார்கள் அப்போது மகா தான் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்து இன்னைக்கு மொட்டை மாடியில் உட்கார்ந்து நிலவைப் பார்த்துக் கொண்டே சாப்பிடலாமா என்று கேட்டால் வீட்டில் உள்ள அனைவரும் அவள் அவ்வாறு கூறியவுடன் அமைதியாக இருந்தார்கள்

அப்போது மகிழ் தான் அமைதியா இங்கே உட்கார்ந்து சாப்பிடற மாதிரி எண்ணம் இருந்தால் சாப்பிடுங்க இல்லை வேற ஏதாவது எண்ணம் இருந்தால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது எங்கேயும் சென்று சாப்பிடக்கூடாது என்று மகாவை முறைத்துவிட்டு அமைதியாக வந்து உணவு மேசையில் உட்கார்ந்தான்

அப்போது அவள் மகிழை முறைத்துக்கொண்டு நின்றாள் என்ன மாமா சொல்ற ரொம்ப நாள் கழிச்சு சாப்பிடணும்னு ஆசையா இருக்கு என்று கேட்டாள் அவனும் அமைதியா போய்டு என்றான் மகா தனது மாமனை முறைத்துக் கொண்டு உதிரனிடம் சென்று நின்றால் நாம் எல்லாம் மேலே போய் சாப்பிடலாமா அண்ணா ப்ளீஸ் என்றால்

உனக்கு தான் என்ன நடந்துச்சுன்னு தெரியுமில்ல அப்படி இருந்தும் நீ இப்ப திரும்பவும் மொட்டை மாடிக்கு சாப்பிட போலாம்னு சொல்றது சரியா என்ன நடந்துச்சு அப்படி அதையே நினைச்சுட்டு இருக்கீங்க என்றால் உதிரனும் அதையே நினைச்சுட்டு இருக்காங்கமா வேற என்ன நினைப்பாங்க அன்னைக்கு ஒரு நிமிஷம் உன் உயிரே போயிருக்கும்

உன் உயிர் போயிருந்தால் என்ன செய்வோம்  என்றான் மகாவும் விடாமல் போகி தானே இருந்திருக்கும் போகல இல்ல உயிரோடு தானே இருக்கேன் செத்தா போயிட்டேன் என்றால் அவள் அவ்வாறு கூறியவுடன் உதிரன் அவளை அடிக்க வந்தான் அதற்கு முன்பாகவே வேறொரு கரம் அவளது தாடையை பதம் பார்த்து இருந்தது

இதற்கு முன்பு ஒரு நாள் அனைவரும் மொட்டை மாடியில் சாப்பிடும் பொழுது என்ன நடந்தது எதற்காக இப்பொழுது  மொட்டைமாடிக்கு சாப்பிட செல்ல வேண்டாம் என்று உதிரனும் மகிழனும் சொல்கிறார்கள்..

இப்பொழுது மகாவை அறைந்த கரம் யாருடையது…???

என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..

அன்புடன்

❣️தனிமையின் காதலி ❣️

மயிலாய் வருடும் மகாலட்சுமியே …!!!

கதையின் நகர்வு எப்படி உள்ளது என்பதை என்று உங்களின் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

மிக்க நன்றி🙏

மகாவை அடித்தது யார் என்று நீங்கள் நினைத்தால் யார் என்று கமெண்டில் சொல்லுங்கள்..

3 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்சுமியே 3”

  1. CRVS2797

    மகாவை அறைஞ்சது மனிதன் தானே.. தெரிஞ்சுப்போச்சு.
    மொட்டை மாடியில நிலாச்சோறு சாப்பிடறப்ப தென்னம் மட்டை (அ) தென்னங் குலை ஏதாவது பெருசா தலையில் விழுந்திருக்கும் அப்படித் தானே…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *