Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்சுமியே 47

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 47

மகா நிலா படிக்கும் கல்லூரிக்கு வேலைக்கு செல்ல ஒத்துக் கொண்டால் என்றவுடன் வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள் சரி நாங்கள் ஓய்வு எடுக்கிறோம் என்று பெரியவர்கள் அனைவரும் கிளம்பினார்கள் அப்பொழுது காவேரி மகா என்று அழைத்தார் என்ன பெரியம்மா என்று கேட்டால்

உன் உடன் தான் அவளுக்கு திருமணம் ஆகியது அவள் இப்பொழுது மாசமாக இருக்கிறாள் என்று விட்டு அமைதியாக இருந்தார் வேறு எதுவும் பேசவில்லை அப்பொழுது எழில் தான் வேகமாக அத்தை என்றவன் அவள் மாசமாக இருந்தால் இவளும் அப்படி இருக்க வேண்டும் என்று என்ன சட்டம் என்றான் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று அவளுக்கும் புரியும்டா நான் சொல்வதை நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று மட்டும் சொல்லிவிட்டு அவரது அறைக்கு சென்றுவிட்டார்

வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவருக்குமே அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியும் அதனால் வேறு எதுவும் சொல்லாமல் அமைதியாக அவர்களது அறை நோக்கி சென்று விட்டார்கள் மகிழ் எழிலுக்கு  தான் சிறிது வருத்தமாக இருந்தது மகா எழிலின்  அருகில் போய் நின்று பெரியம்மா எந்த தவறான நோக்கத்திலும் இந்த விஷயத்தை சொல்லவில்லை என்றால்

அது எனக்கும் தெரியும்டி இருந்தாலும் இத்தனை பேர் முன்பும் சொல்கிராறே என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் அவனது அறைக்கு சென்று விட்டான் உதிரனும் இனியை அழைத்துக் கொண்டு அவள் காலையிலே எழுந்தால் என்பதால் அவர்களது அரைக்கு அழைத்துச் சென்றான் மகிழும் அவனது அறைக்கு சென்று விட்டான் அவன் தவறாக எண்ணவில்லை

ஆனால் சிறிது வருத்தத்தில் இருந்தான் அதனால் யாரையும் பார்க்காமல் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக அவனது அறைக்குச் சென்று விட்டான் நிலாவும் அவளுடைய அறைக்கு சென்று விட்டால் மகா வேனியின் அருகில் சென்று வேணி வா என்று அவளை அழைத்துக் கொண்டு முகிலுடைய அறைக்கு  அழைத்து சென்றால் வேணி மகாவிடம் அண்ணி அத்தை அப்படி சொல்லிவிட்டார்கள் என்று வருந்துகிறீர்களா என்று கேட்டால்

மகா சிரித்துக்கொண்டே பெரியம்மா எந்த தப்பான நோக்கத்திலும் அப்படி சொல்லவில்லை நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும்தான் சொன்னார்கள் இப்போதே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் சொல்லவில்லை அதை வீட்டில் உள்ள பெரியவர்கள் மட்டுமில்லை சிறியவர்களுக்கு கூட தெரியும் இருந்தாலும் அவர் அனைவரின் முன்பும் அவ்வாறு சொல்லிவிட்டார் என்ற வருத்தம் தான் அனைவருக்கும்


மற்றபடி பெரிதாக ஒன்றும் இல்லை என்றால் சரி அண்ணி  நீங்கள் இப்பொழுது அண்ணன் உடன் இருக்கலாமே அவர் வருந்த மாட்டாரா என்றாள்  மகா சிரித்துக்கொண்டே ஒன்றும் பிரச்சனை இல்லை வேணி மாமா எதுவும் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்றால் பிறகு நீ சுடிதார் மாற்றிக் கொள் வேணி என்றால் அண்ணி என்று அழைத்தால் என்னடா என்று கேட்டால்

அண்ணி நான் ஒன்று சொன்னால் என்னை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே என்றாள் நான் ஏன் உன்னை தவறாக நினைத்துக் கொள்ளப் போகிறேன் என்ன என்று சொல் என்று கேட்டால் அண்ணி நாளை நான் கல்லூரிக்கு செல்ல என்னுடைய புத்தகங்கள் எல்லாம் வீட்டில் இருக்கிறது என்றால் சரி வேணி நாம் நாளை வீட்டிற்குச் சென்று எடுத்துக் கொண்டு வந்து விடலாம் இல்லையென்றாலும் மாலை சென்று எடுத்துக் கொள்ளலாம் என்றால்

இல்லை வேண்டாம் அண்ணி என்றால் மகா அமைதியாக வேணியை பார்த்துக் கொண்டிருந்தாள் பிறகு வேனியே ப்ளீஸ் அண்ணி  என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்னை யார் கையிலாவது பிடித்துக் கொடுத்தால் போதும் என்று தானே என்னை பெற்றவர்கள் எண்ணினார்கள் அவர்கள் ஒரு துளி கூட என்னுடைய வாழ்வை பற்றி என்ன வில்லையே அவன் அயோக்கியன் என்று தெரிந்தும் என்னை அவனுக்கு கட்டி வைக்க தான் நினைத்தார்கள்

அவர்கள் முகத்தில் முழிக்க எனக்கு விருப்பமில்லை அது மட்டும் இல்லாமல் அங்கு இருந்து எந்த பொருட்களும் எனக்கு வேண்டாம் என்றால் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டே முகில் அவனது அறைக்குள் வந்தான் அண்ணா விட்டு மகா அமைதியாக நின்றாள் முகில் வேணி மகா இருவரையும் பார்த்துவிட்டு அவனது பீரோவை திறந்து ஐந்து ஆறு துணிகளை எடுத்து மகா கையில் கொடுத்தான்

மகா என்ன அண்ணா என்று கேட்டால் மகா இது இனி திருமணத்தின் போதும் உங்களது திருமணத்தின் போதும் இப்பொழுது இனி உடைய வளைகாப்பின் போதும் எடுத்த துணிகள் என்றான் ஆனால் யாருக்கு என்றால் வீட்டில் உள்ள அனைவருக்கும் எடுக்கும் போது அவளுக்கும் எடுக்க தோன்றியது அதனால் அவளுக்கும் சேர்ந்து எடுத்தேன் என்றால்

சரி அண்ணா அதை ஏன் என்னிடம் தருகிறாய் என்று விட்டு அந்த துணிகளை வேணி கையில் கொடுத்துவிட்டு மகா இருவரையும் பார்த்து தலையை மட்டும் ஆட்டி விட்டு அவர்கள் அறையில் இருந்து வெளியில் சென்று விட்டாள் இருவருக்குமே தங்கள் இருவரையும் தனியாக இருப்பதற்காக விட்டு செல்கிறார் என்று உணர்ந்து அமைதியாக இருந்தார்கள் பிறகு முகில் தான் உனக்கு இந்த துணிகள் எல்லாம் பிடித்திருக்கிறதா

இன்னும் வேறு என்னென்ன வேண்டும் என்று சொல்  நாம் மாலை சென்று வாங்கி வரலாம் என்றான் வேணி ஒரு நிமிடம் முகிலை பார்த்துவிட்டு தாங்கள் பேசியதை இவர் கேட்டிருப்பார் என்பதையும் உணர்ந்து விட்டு மாலை வேண்டாமே இன்று தானே திருமணமாகி இருக்கிறது வீட்டில் ஏதாவது சொல்வார்கள் என்றால்  நீ சொல்வதும் சரிதான் நாளை கல்லூரி சென்று விட்டு மாலை வரும்பொழுது வாங்கிக்கொள்ளலாம்

நாளை ஒருநாள் நிலாவுடைய புக்கோ இல்லை உன்னுடைய மற்ற தோழிகளது  புக்கோ பார்த்துக் கொள் நாளை மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வரும்போது உனக்கு தேவையான அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் எதைப் பற்றியும் யோசித்துக்கொண்டு இருக்காதே என்றான் உனக்கு என்னென்ன தேவையோ அதை என்னிடம் கேள் என்றான்

வேணி ஒரு நிமிடம் முகிலை உற்றுப் பார்த்துவிட்டு இது எனக்கு தலை குளிக்கும் நேரம் என்று விட்டு அமைதியாகிவிட்டாள் அப்போது அவர்கள் அரைக்கதவு திறந்துதான் இருந்தது இருந்தாலும் தட்டப்பட்டது இருவரும் யார் என்று பார்த்தார்கள் மகா தான் நின்று கொண்டிருந்தால் அண்ணா உள்ளே வரலாமா என்றால் முகில் சிரித்துக் கொண்டே என்ன மகா என்றான்

இல்லை அண்ணா நான் முதலில் அறைக்குள் அழைத்து வரும்போது வேணி இது அவள் தலை குளிக்கும் தேதி வரும் நாள் வரும் என்றால் அதனால் தான் என்று விட்டு அவளது கையில் பீரியட் நேரங்களில் உபயோகிக்கும் சானிடரிஸ் வைத்துவிட்டு இதை இப்பொழுது உபயோகித்துக் கொள் அப்படி அவசரம் என்றால் நாளை அண்ணன் வாங்கி தருவார் என்று விட்டு அமைதியாக சென்று விட்டாள்

பிறகு முகில் உனக்கு என்னென்ன வேண்டும் என்று எழுதி வை நாளை மாலை வாங்கிக் கொள்ளலாம் என்றான் வேணியும் சரி என்று தலையாட்டினாள் பிறகு நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றால் என்ன என்று கேட்டான் இல்லை அண்ணன் ஸ்கூட்டி வாங்கி தருகிறேன் என்று சொன்னார்கள் என்றாள் ஒன்றும் பிரச்சனை இல்லை நான் வாங்கி தர வேண்டும் என்றாலும் வாங்கித் தருகிறேன்

ஒன்று பிரச்சனை இல்லை ஆனால் இதுவரை வீட்டில் அனைத்தையும் மகிழ் தான்  பார்த்துக் கொண்டான் அப்படி இருக்கும் நிலையில் நான் தனியாக இதுவரை எதுவும் செய்தது இல்லை உனக்கு செய்யலாம் தான் பிரச்சனை இல்லை உனக்கு நான் தான் வாங்கி தர வேண்டும் என்று நினைத்தால் சொல் நாம் நாளையே வாங்கி விடலாம் சரி வேணி நீ இப்போது துணி மாற்றிக்கொள் என்று விட்டு முகில் வெளியே சென்றான்

இப்படியே மாலைப் பொழுதும் வந்தது முகில் அப்போது தான் அவனது அறைக்குள் வந்தான் வேனியும் வேறு ஒரு சுடிதாருக்கு மாறி இருந்தால் அப்பொழுது முகில் வந்தவுடன் முகிலிடம் நான் உங்களை எப்படி அழைப்பது என்று கேட்டால் அவர்களது அரை கதவு திறந்து தான் இருந்தது அப்போது இனி சிரித்துக் கொண்டே வந்து எப்படி அழைப்பது என்றால் மாமா என்றுதான் அழைக்க வேண்டும் என்றால்

என்ன மாமாவா என்று முகில் வேணி இருவரும் ஒரே போல் கேட்டார்கள் இனி சிரித்துக் கொண்டே பிறகு எப்படி கூப்பிடுவது? கணவனை என்றால் உன்னுடைய விருப்பம் வேணி நீ இவரை மாமா என்று அழைத்தாலும் சரி இல்லை உனது விருப்பம் போல் அவரை வாங்க போங்க என்று அழைத்தாலும் சரி எப்படி வேண்டுமானாலும் கூப்பிடு ஏன் பெயர் சொல்லி கூட அழைத்துக் கொள்ளலாம் வீட்டில் உள்ளவர்கள் முன்பும் வெளி ஆட்கள் முன்போ மரியாதை ஓடு அழைத்தால் மட்டும் போதும்

மற்றபடி ஒன்றும் பிரச்சினை இல்லை என்றால் அப்பொழுது நிலாவும் அங்கு வந்தாலும் என்ன அண்ணி என்று கேட்டுக் கொண்டே வந்து இனியின் தோளில் கைப்போட்டால் இனியும் ஒன்னும் இல்லை டி முகிலை எப்படி கூப்பிடுவது என்று கேட்டால் அப்பொழுது உதிரன் அந்த அறைக்கு வந்தான் வேகமாக உதிரனை வேணி வாங்க மாமா என்று அழைத்தால் உதிரன் தனது நெஞ்சில் கை வைத்துக் கொண்டு என்ன மாமா வா என்றான்

இனி நிலா முகில்  மூவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது வேணி தான் என்னாச்சு நான் எதுவும் தவறாக சொல்லிவிட்டேனா என்று கேட்டால் அப்போது மகா எழில் மகிழ் மூவருமே அங்கு வந்தார்கள் எழில் தான் சிரித்துக் கொண்டே ஒன்னும் ஆகவில்லை வேணி இதுவரை உதிரன் மாமாவை பெரிதாக பெண்கள் யாரும் மாமா என்று அழைத்தது இல்லை இனி மட்டும்தான் அழைத்து இருக்கிறாள் அப்படி இருக்கும்போது நீ மாமா என்று அழைத்தவுடன் அவர் தனது நெஞ்சில் கை வைத்து விட்டார் என்றான்

மாமா வை மாமா என்று தானே அழைக்க முடியும்  அண்ணன் என்றா  அழைக்க முடியும் என்று எழிலிடம் கேட்டால் எழில் சார் என்று விட்டு அமைதியாகி விட்டாள் வேறு எதுவும் பேசாமல் அப்பொழுது எழில் தான் என்னை நீ வீட்டில் அண்ணா என்று அழைக்கலாம் கல்லூரியில் மட்டும் சார் என்று அழைத்தால் போதும் வேணி என்றான் அவளும் சரி என்று தலையாட்டினாள் பிறகு சிறியவர்கள் அனைவரும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து முகில் அறையிலேயே பேசிக் கொண்டிருந்தார்கள்

அப்படியே  இரவு 7 மணியம் ஆகியது இரவு உணவும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சமைத்துவிட்டு சீக்கிரமாகவே சாப்பிட்டுவிட்டு அவர்களது அறைக்கு தூங்க சென்றார்கள் மகிழ் சாப்பிட்டவுடன் மொட்டை மாடிக்கு சென்றான் பின்னாடியே மகாவும் சென்றால் ரொம்ப நாட்களுக்குப் பிறகு மொட்டை மாடிக்கு செல்லலாம் என்று சிறியவர்கள் அனைவரும் எண்ணினார்கள் அதனால் அனைவரும் மொட்டை மாடிக்குச் சென்றார்கள்

இனி வேணியை நீயும் வா என்று அழைத்துக் கொண்டு சென்றாள் அனைவரும் செல்லும் வேளையில் மகாவும் மகிழும் தீவிரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள் அப்போது மகா நிலா தான் வேகமாக அக்கா என்று அழைத்தால் மகா மகிழ் இருவரும் திரும்பி பார்த்தார்கள்  மகா மகிழ் இருவரின் முகமும் ஒரு மாதிரி இருந்தது என்ன என்று மகா கேட்டால் 

இந்த வீட்டிற்க்காக என்று உங்களது காதலை தியாகம் செய்தவரை போதும் இப்போது இருவரும் நினைத்துக் கொண்டிருப்பதை செய்ய வேண்டும் என்று எண்ணினால் இருவரையும் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்றால் இருவரது முகத்திலும் வேர்வை துளிகள் பூத்து நின்றது அதை பார்த்தவுடன் சிறியவர்கள் அனைவரும் அப்படி இவர்கள் இருவரும் மனதில் என்ன நினைத்தார்கள் என்று எண்ணினார்கள் ..

நிலா கூறியது போல் அவர்கள் இருவரும் நிலா  சொன்ன விஷயத்தை தான் மனதில் எண்ணினார்களா ..

அப்படி அவர்கள் இருவரும் என்ன மனதில் நினைத்தார்கள் அதை நிலா எப்படி யூகித்தால் …

அப்படி என்ன விஷயம் அது என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

கதையின் நகர்வு எப்படி உள்ளது என்று படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சைலன்ட் லீடர்ஸ் ப்ளீஸ்…

3 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்சுமியே 47”

  1. CRVS 2797

    திரும்ப, திரும்ப ஒரே விஷயத்தையே பேசுறது ரொம்ப அறுக்கற மாதிரி இருக்குது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *