Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்சுமியே 51

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 51

மகிழ் சாப்பிட்டுவிட்டு கை துடைக்க போகும் வேளையில் துடைக்காதே என்று  எழில் சொன்னவுடன் மகிழ் திரும்பி எழிலை முறைத்து பார்த்தான் வீட்டில் உள்ள அனைவருமே இவன்  ஏன் அவ்வாறு சொல்கிறான் என்று அவனையே பார்த்தார்கள் அப்போது பாண்டியம்மா பாட்டி தான்  டேய் எழில் அவன் அவன் பொண்டாட்டி முந்தானையில் கை துடைக்கிறான் உனக்கு என்னடா வந்தது அவனை ஏன் துடைக்க வேண்டாம் என்று சொல்கிறாய் என்று கேட்டார்

அப்பொழுது எழில் தான் அவள் இன்று தான் முதல் நாள் கல்லூரிக்கு செல்ல இருக்கிறாள் அப்படி இருக்கும் பட்சத்தில் நீ அவளது முந்தியில் கை துடைக்கிறாய் ஏன் உன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் கர்சிப் இல்லையா அதை எடுத்து துடைத்துக் கொள்ள வேண்டியதுதானே என்றான் அவன் அவ்வளவு தூரம் சொல்லியும் மகிழ் எழிலை பார்த்து சிரித்துக் கொண்டே அமைதியாக நின்றான்

மகா தனது புடவை முந்தியை மகிழுக்கு கொடுத்தால் மகிழும் எழிலைப் பார்த்துக் கொண்டே தனது கையை துடைத்துக் கொண்டு இருந்தான் எழில் இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு அவனது அறைக்குச் சென்றான் அப்பொழுது அனைவரும் இது அவர்களது பிரச்சனை அவர்கள் எப்படியோ முட்டிக்கொள்கிறார்கள் என்று என்னை விட்டு அனைவரும் அவர்கள் வேலைக்கு செல்லவோ கல்லூரிக்கு செல்லவும் என்னென்ன தேவையோ அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்புவதற்கு அவர்கள் அறைக்கு சென்றார்கள்

அப்பொழுது மகா அவளது அறைக்குச் சென்று வேறொரு புடவை அணிந்து கொண்டு வந்தால் வீட்டில் உள்ள அனைவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அந்த புடவையில் மகா அவ்வளவு அழகாக இருந்தால் வளையல் செயின் என்று அனைத்தும் போட்டு இருந்தால் பார்ப்பதற்கு தேவதை போல் இருந்தால் மகிழ் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தான்

எழில் தான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் நிலா எழிலின் கையில் கிள்ளினாள்   அதன் பிறகு தான் எழில் உணர்வு பெற்றான் என்னடி என்றான்  நிலவைப் பார்த்து என் அக்கா இந்த புடவையில்  அழகா தான் இருக்கா என்றான் அதுக்காக இப்படி வாயை திறந்து விட்டு பார்க்காத என்றால்  எழில் நிலாவைப் பார்த்து சிரித்து விட்டு பொறாமையா என்றான்

அவள் என்னுடைய அக்கா அவளை பார்த்து நான் ஏன் பொறாமை பட போகிறேன் அவளுக்கு இந்த புடவை நன்றாகத்தான் இருக்கிறது என்று விட்டு அக்கா இது என்ன புதுப் புடவை எப்போது எடுத்தது சூப்பரா இருக்கு என்றால் ஆமாம் புது புடவை தான் என்றால் மகா எப்போது எடுத்தது நான் இது வரை இந்த புடவை பார்த்ததில்லையே என்றாள் நிலா

வீட்டில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கிறது என்றார்கள் இது இனி வளைகாப்பின் போது எடுத்த புடவை என்றால் மகா அவ்வாறு சொன்னவுடன் உதிரன் எழில் இருவரும் அவர்களுக்குள் பார்த்துக் கொண்டு விட்டு இறுதியாக மகாவை   பார்த்தார்கள் நிலா தான் ஏன் அப்பொழுது கட்டவில்லை என்னிடம் காட்டவும் இல்லை என்று கேட்டாள் அப்போது கட்ட வேண்டும் என்று தோன்றவில்லை

இது மகிழ் மாமா எடுத்து கொடுத்த புடவை என்றாள் நன்றாக இருக்கிறது அக்கா இனி வளைகாப்பின் போதே கட்டி இருக்கலாம் அல்லவா என்று விட்டு சரி நேரம் ஆகிறது அனைவரும் கிளம்பலாமா என்று கேட்டாள்  வீட்டில் உள்ள அனைவரும் எங்கே நிலா தனக்கு எடுத்து தரவில்லை என்று கேட்பாள் என்று எண்ணினார்கள் ஆனால் அவள் அது போல் எதுவும் கேட்காமல் நன்றாக இருக்கிறது என்று மட்டும் சொல்லி அமைதியாகி விட்டாள்

மகா சொல்வது  போல் நிலாவுக்கு பக்குவம் நிறையவே இருக்கிறது தன்னுடைய மாமா எனக்கு மாமாவாக எடுத்து தருவதற்கும் மகாவிற்கு கணவனாக எடுத்து தருவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறாள் என்று எண்ணி மகிழ்ந்தார்கள் அப்பொழுது எழில் தான் சரி சரி நேரமாகிறது என்று சொன்னான்

பெரியவர்கள் அனைவரும் சரி நீங்கள் இருவரும் வந்து சாமி கும்பிட்டு கல்லூரிக்கு கிளம்புங்கள் என்று மகா வேணி  இருவரையும் அழைத்தார்கள் அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு பூஜை அறையில் இருந்து வெளியில் வந்தார்கள் மகிழ் மகா என்று விட்டு உள்ளே அவனது அறைக்கு சென்றான் மகாவும் வரேன் என்று விட்டு அவளது அறைக்குள் சென்றால்

இந்த புடவையில் செமையா இருக்க டி என்றான் அவளை பின் பக்கம் இருந்து கட்டி அணைத்துக் கொண்டே உனக்கு வருத்தமாக இல்லையா மாமா என்றால் எதுக்குடி என்றால் இல்லை நான் இனி வளைகாப்பின் போது இந்த புடவை வேண்டாம் என்று சொன்னேன் இல்ல என்றாள் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நீ சொன்ன போது வருத்தம் இருக்க தான் செய்தது இல்லை என்று சொல்ல மாட்டேன்

ஆனால் நீ முதலில் இருந்து உனக்கு என்று கொடுப்பதை கூட கயல் கேட்டாலும் இனி கேட்டாலும் நிலா கேட்டாலும் கொடுத்துவிடும் பழக்கம் உள்ளவள் தானே அப்படி இருக்கும்போது உனக்கு மட்டும் தனியாக எடுத்ததால் அவ்வாறு சொல்லகிறாய் என்று அமைதியாக விட்டுவிட்டேன் என்றான் சரி இத்தனை நாட்களாக இந்த புடவை எங்கே இருந்தது என்றாள்

இந்த புடவை இன்று தான் கட்டிலின் மீது இருந்தது இத்தனை நாட்களாக எங்கே இருந்தது என்றால் நான் இந்த புடவையை இத்தனை நாட்களாக நம் அறையில் முழுவதும் தேடினேன் என்னுடைய அறையில் கூட சென்று தேடினேன் எங்குமே இல்லையே எங்க வைத்திருந்தீர்கள் என்றால் எனக்கு நீ எங்கு எல்லாம் தேடுவாய் என்று தெரியும் அதனால் தான் பெட்டுக்கு அடியில் வைத்து இருந்தேன் என்றான்


படவா இத்தனை நாட்களாக இந்த புடவையை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா என்றான் தெரிந்து தானே இதை நான் பெட்டுக்கு அடியில் வைத்து இருந்தேன் என்று அவளது கழுத்தில் ஒரு முத்தம் கொடுத்தான் காதலாக அப்பொழுது இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களது அரை கதவு தட்டப்பட்டது எப்படியும் எழிலாக தான் இருப்பான் என்று எண்ணிக்கொண்டு மகிழ் பூஜை வேளையில் கரடி கதவை தட்டுகிறது என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்தான்


மகிழ் என்னவோ எழிலை அங்கு  எதிர் பார்த்தான் அதனால் தான் அவனை வெறுப்பு ஏற்றுவதற்காக என்று எண்ணி அவ்வாறு சொன்னான் ஆனால் அங்கு  நின்னதோ என்னவோ வேணி அண்ணா சாரி நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா என்றாள் மகா சிரித்துக் கொண்டே இல்லை வேணி நீ வா உங்க அண்ணன்  எழில் என்று நினைத்துக் கொண்டு வேண்டும் என்றே அவனை வெறுபேற்றுவதற்காக  தான்  அவ்வாறு சொல்லி இருக்கிறார் என்றால்

அவன் என்று நினைத்து தான் கதவைத் திறந்து கொண்டே அவர் அவ்வாறு சொல்லிவிட்டார் என்றாள் அப்போது மகிழ்  நீ என்று எனக்கு தெரியாது வேணி நான் அவன் என்று நினைத்தேன் நீ தவறாக எடுத்துக் கொள்ளாதே என்றான் எழில் என்று நினைத்து என்று அவர்கள் சொல்லி வாயை மூடவில்லை எழில் அங்கு வந்து நின்றான்

அப்போது வேணி தான் அண்ணா உங்களுக்கு நூறு ஆயுசு இப்போது தான்  உங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம் என்றால் என்னைப் பற்றிய என்னவென்று கேட்டான்  ஒன்றும் இல்லையே என்று மகா  வேணி  இருவரும் சொன்னார்கள் அப்பொழுது மகிழ் தான் என்ன ஒன்றும் இல்லை என்று சொல்லி சிரித்து விட்டு எப்பொழுதுமே நீதானே பூஜை வேலை கரடியாக வருவாய் நீ என்று நினைத்து வேணியை கரடி என்று சொல்லிவிட்டேன் என்றான்

மகிழ் அவ்வாறு சொன்ன உடன் எழில் தனது அண்ணனை முறைத்து  கொண்டு நின்றான் அப்பொழுது எழில்  தான் என்னடா இவர்கள் அரறைப்பக்கம் நின்று கொண்டிருக்கிறாய் ஏதாவது முக்கியமான விஷயமா என்று கேட்டான் அப்பொழுது தான் மகா மகிழ்  இருவரும் வேணி  எதற்காக வேண்டி வந்திருக்கிறாய் என்று கூட கேட்காமல் நாங்கள் வேறு உன்னிடம் இவனைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்று மகா கேட்டால்

அண்ணா கல்லூரி செல்வதைப் பற்றி உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசுவதற்கு என்று விட்டு அமைதியாக கையை பிசைந்து கொண்டு நின்றாள் மகிழ் சிரித்துக் கொண்டே ஒன்றும் பிரச்சனை இல்லை நீ என்னுடன் வண்டியில் வந்து விடு நிலாவை முகில் அழைத்துக் கொள்வான் என்றான் அப்போது எழில்  தான் ஏன் முகில்  உன்னுடைய கணவன் தானே அவன் வழியில் சென்றாள் என்ன என்று கேட்டுக் கொண்டே எழில் வேணியின் தோலில்  கை போட்டுக் கொண்டே கேட்டான்

வேணி ஒரு நிமிடம் பதறி விலகினாள் சாரி வேணி என்றான் எழில் இல்லை அண்ணா நீங்கள் ஒன்றும் தவறாக செய்யவில்லையே என்றால் அப்பொழுது நிலா தான் சிரித்துக்கொண்டே வந்தால் ஒன்னும் இல்ல வேணி எழில் மாமா எங்கள் அனைவரிடமும் எப்பொழுதும் போல் பேசிய பழகியதால் மாமா உன்னிடம் தெரியாமல் தோளில் கை போட்டு விட்டார் நீ தவறாக எடுத்துக் கொள்ளாதே என்றாள்

நிலா நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் எனக்கு புதிது அல்லவா அதான் என்றால் நிலா சிரித்துக் கொண்டே இனிமேல் பழகிக் கொள் என்றால்  அப்போது எழில்தான்   சரி நேரமாகிறது என்று விட்டு அவனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒன்றை எடுத்து மகிழ் அருகில் உள்ள மேசையின் மீது அதை வைத்தான் அது மகாவிற்காக என்று எழில் தருவது என்று அங்குள்ள அனைவருக்கும் தெரிந்தது

உடனே நிலா அது என்ன என்று பார்த்தால் ஐ வாட்ச் சூப்பராக இருக்கிறது அக்கா இதை நான் எடுத்துக் கொள்ளட்டா நன்றாக இருக்கிறது என்றால் எழில் நிலாவை பார்த்து விட்டு  மகாவையே பார்த்துக் கொண்டிருந்தான் மகா நிலாவிடம் இல்லை நிலா உனக்கு நான் இதே போல் மாலை வாங்கி தருகிறேன் இதை என்னிடம் கொடுத்துவிடு என்றால்

ஏன் உனக்கு இதே போல் மகிழ் மாமா வாங்கி தருவார் இது சூப்பராக இருக்கிறது இப்பொழுது நான் போட்டுக் கொள்கிறேன் என்றால் மகா வேகமாக நிலாவிடம் இருந்து அந்த வாட்ச்சை வாங்கிக் கொண்டு நான் தான் சொல்கிறேனே இதே போல் மாலை வாங்கி தருகிறேன் இல்லை என்றாலும் உன்னுடைய மாமா வாங்கி தருவார் என்று விட்டு அமைதியாக அதை தனது கையில் போட்டுக் கொண்டு வெளியே சென்றாள்

அவள் வெளியே சென்றவுடன் எழிலும் வெளியே சென்று விட்டான் நிலா போகும் மகாவையே பார்த்து சிரித்தாள் அப்பொழுது வேணி தான் என்ன நிலா நீ கேட்டு அண்ணி தர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள் ஆனால் சிரித்துக் கொண்டிருக்கிறாய் என்றால் அப்பொழுது மகிழ்  நிலா இருவரும் சிரித்துக்கொண்டே என்னுடைய மகிழ் மாமா வாங்கி கொடுத்து நான் கேட்டிருந்தால் கூட எனது அக்கா அதை கொடுத்திருப்பாள் திரும்பவும் மகிழ் மாமாவிடம் அதேபோல் வாங்கி இருப்பாள்

ஆனால் எழில் மாமா வாங்கி தரும் எதுவுமே அவளுக்கு ஸ்பெஷல் தான் அதுமட்டுமில்லாமல் இன்று அவள் முதல் நாள் வேலைக்கு செல்கிறாள் என்பதால் தான் எழில் மாமா அதை வாங்கி கொடுத்திருக்கிறார் என்று சொல்லிவிட்டு சரி வா நேரம் ஆகிறது என்று வேணியை அழைத்துக் கொண்டு வெளியில்  வந்தார்கள் அனைவரும் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு அவர்களது வேலைக்கு சென்றார்கள்

உதிரன் அனைவரும் சாமி கும்பிட்ட உடனே நேரமாகிறது என்று சொல்லி அவன் கம்பெனிக்கு சென்று விட்டான் இனி வளைகாப்பு முடிந்ததிலிருந்து வீட்டில் தான் இருக்கிறாள் அவளுக்கு சோர்வாக இருக்கிறது என்பதால் அவளது அறையில் இருந்தால் பெரியவர்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு சிறயவர்கள் அனைவரும் கல்லூரிக்கு சென்றார்கள்

எழிலும்ம் மகாவும் தனித்தனியாகவே முதலிலே கல்லூரிக்கு சென்று விட்டார்கள் முகில் வண்டியில் நிலாவும் மகிழ் வண்டியில் வேணியும் ஏறினாள் அப்பொழுது வேணி ஒரு பேக் வைத்திருந்தாள் நிலா தான் என்னடி பேக் ஏது என்று கேட்டாள் வேணி சிரித்துக் கொண்டே எழில் அண்ணன் தந்தாரு புது பேக் இதில் எனக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் இருக்கிறது என்றாள்

சாயங்காலம் வாங்கிக் கொள்ளலாம் என்று முகில் சொன்னானே என்றான் மகிழ் வேணி சிரித்துக் கொண்டே அண்ணா எழில் அண்ணன் நேற்று புக் ஆர்டர் செய்து இருந்திருக்கிறார் போல இன்று காலையிலேயே வந்துவிட்டது நான் உங்களது அறைக்கு வருவதற்கு முன்புதான் அவர் என்னிடம் கொடுத்தார் இதை அவர் என்னிடம் கொடுத்திருந்தாலும் அப்பொழுதே நிலாவுடைய அண்ணன் அதற்கு காசு கொடுத்துவிட்டார் என்றால்

மகிழ் முகிலை பார்த்து சிரித்தான் நிலாவும் முகிலையை பார்த்து சிரித்தால் பிறகு நால்வரும் கல்லூரிக்கு சென்றார்கள் சிரித்துக் கொண்டே கல்லூரி வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்கள் முகில் இளவேனில் திருமணத்தை பற்றி மகிழ் பேசுவதற்காக நிலா கல்லூரிக்கு வந்திருக்கிறான் கல்லூரியில் இருப்பவர்கள் இவர்கள் இருவரது திருமணத்தையும் ஏற்றுக் கொண்டு இளவேனிலை பழையபடி கல்லூரியில் சேர்த்துக் கொள்வார்களா…
இல்லை ஏதாவது சொல்வார்களா …

என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்

அன்புடன்

❣️ தனிமையின் காதலி❣️

3 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்சுமியே 51”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *