அத்தியாயம்-2
Thank you for reading this post, don't forget to subscribe!ராவணேஸ்வரன் தான் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டி, “ஏ… காரு என்ன நினைவில்லையா?” என்று கேட்க, “ராவணா… நான் காரும் இல்லை பஸ்ஸும் இல்லை” என்று கோபத்தை காட்டினாள்.
ராவணேஸ்வரனோ முத்துபல் தெரிய மனம் விட்டு சிரித்தான். காருண்யாவுக்கு தன்னை அடையாளம் உள்ளதென்ற மகிழ்ச்சியில்…
“டயலாக் கூட மாத்தலை. எப்படியிருக்க?” என்றான் ராவணன்.
“ராவணா... நேக்கு டயலாக் எல்லாம் மாத்தா தெரியாது. ஆனா நீ என்னை கூப்பிடறதை செத்த மாத்து, கேட்கவே அபச்சாரமா இருக்கு.” என்று அதிகாரமாக பேசினாள்.
“அதெப்படி… என்னுடைய சைல்ட்-வுட் பிரெண்ட் நீ. உன்னிடம் அப்ப எப்படி பேசினேனோ, இப்பவும் அப்படி தானே பழக முடியும்” என்று மாறாத புன்னகையுடன் பதில் தந்தான்.
காருண்யா சுற்றிமுற்றி இடத்தை பார்த்து, “முடியும்.. முடியணும். சின்ன வயசு சினேகிதவளா இருக்கலாம். அதுக்காக..? இடம் பொருள் இல்லை? இங்க நான் உத்தியோகத்தில இருக்கேனாக்கும். இங்க வந்து என்னை கேலி செய்யறவா மாதிரி பேசறேள்.
நோக்கு என்னை பத்தி தெரிந்தும் ‘காரு’னு சொல்லறேள்.
இங்க இருக்கறவா, என்னை என்ன நினைப்பா? நான் ஒன்னும் குழந்தப்பிள்ளையில்ல” என்று காரமாக பேசவும், ராவணானும் தன் அணிய வேண்டிய கண்ணாடியை மாட்டி, பேசாமல் அவளை தாண்டி சென்றான்.
‘என்னயிவா? பதில் பேசாம போயிட்டா. நான் தப்பா பேசலையே. எம்பெருமாளே… ஏன் என் பிராணனை வாங்கற மாதிரி இவாளை அனுப்பி வச்ச? இங்கிருக்கறவாளே வச்சி பிராஜக்ட் முடிச்சியிருக்க மாட்டோம்.’ என்று ரோஸ்லினை தேட, அவளோ ராவணனின் முன் பல்லை பல்லை காட்டி சிரித்து வழிவதை கண்டு சலிப்படைந்தாள்.
ராவணனும் காருண்யாவும் சிறு வயதில் நட்பானவர்கள். ஐந்தாம் வகுப்பு வரை காஞ்சிபுரத்தில் இருந்த பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.
பக்கத்து பக்கத்து வீடு என்பதாலும், காருண்யா பாட்டி அமிர்தா, ராவணேஸ்வரனின் தாயார் ரோகிணியுடன் நன்றாக பழகுவதாலும், அவனோடு விளையாட, பேச, படிக்க அனுமதித்திருந்தார்.
வீட்டில் அதிகபட்ச கட்டுக்கோப்புகள் இருந்ததால், நேரம் கிடைத்தால் ராவணனின் வீட்டுக்கு சென்று விளையாடுவாள்.
அங்கே ரோகிணி சுவையாக முறுக்கு, சீவல் நெய்யால் செய்த அல்வா என்று தரவும் விளையாடிக் கொண்டே விழுங்குவாள்.
காருண்யாவின் சிறுவயதில் வீடியோ கேம் பிரபலம். அமிர்தம் வீடியோ கேம் எல்லாம் வாங்க தடை விதித்திருக்க, ராவணேஸ்வரன் வீட்டில் வீடியோ கேம் விளையாடுவதற்காகவே செல்வாள்.
மின்சாரம் தடையானால் செஸ், கேரம்போர்ட், லூடோ, டென்னிஸ், என்று இருவரும் சேர்ந்து விளையாடுவார்கள்.
இரண்டாவது படிக்கும் பொழுதே காருண்யாவை ‘காரு’ என்று தான் அழைப்பான். முதலிலிருந்தே அவ்வாறு கூப்பிட்டால் அழுதழுது ‘என்னை அப்படி கூப்பிடாதேள். நான் ஒன்னும் காரும் இல்லை பஸ்ஸும் இல்லை. உன்னால என் பிரெண்ட்ஸும் காரு காருனு கூப்பிடறாள்’ என்று திட்டுவாள்.
‘மத்தவங்களை கூப்பிட வேண்டாம்னு ஸ்ட்ரிட்டா சொல்லிடு. பட் நான் அப்படி தான் கூப்பிடுவேன். பிகாஸ்… நான் உன்னோட ஒன் அண்ட் ஒன்லி நெய்பர், அண்ட் திக்கஸ்ட் பிரெண்ட்’ என்பான்.
காருண்யா அந்த சிறுவயதில் சொல்லி சொல்லி பார்த்து மாய்ந்து சலித்துலிட்டாள். சிறுவயதில் சீதா ராமன் கதை கேட்டு வளர்ந்தவளுக்கு ‘ராவணனு பேரு வச்சிண்டுயிருக்கறவா பேட் பாய். அவாளை எல்லாம் திருத்த முடியாது’ என்று அவளுமே அதன்பிறகு அவன் கூப்பிட்டால் மட்டும் சலுகை காட்டிக் கொண்டாள்.
அன்றிலிருந்து ராவணனின் ‘காரு’ என்ற அழைப்பு காருண்யாவுக்கு பழகிவிட்டது.
ரோகிணி அன்னை இல்லாத பெண் என்று சலுகை தருவார். கூடுதலாக பெண் பிள்ளை இல்லாத வீடு என்பதாலும் சின்ன சின்னதாய் கடை வீதிக்கு சென்றால் வளையல், கம்பள், பிந்தி, க்ளிப் என்று ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று வாங்கி வந்து நீட்டுவார். சிறுமிக்கு அந்த வயதில் அன்பை விதைத்தவர்களை பிடிக்காமல் போகுமா? பாட்டி அமிர்தத்தை காட்டிலும் ரோகிணியிடம் நன்றாகவே பழகினாள்.
அதெல்லாம் கொஞ்ச காலமே…. காருண்யா ஆறாம் வகுப்பு மாறும் நேரம், பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கூடத்தில் அமிர்தம் சேர்த்துவிட்டார். அதனால் ராவணனுடன் படிக்கும் வாய்ப்பு குறைந்தது. அதோடு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். அப்படியிருந்தும் என்றாவது கண்ணாம்பூச்சி விளையாடுவாள்.
சில சம்பவம் நடந்தப்பிறகு அவனை சந்திப்பதை அடியோடு தவிர்த்துக் கொண்டாள். அவனும் விலகி விட்டான்.
கல்லூரியுமே பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் காருண்யா படித்தாள்.
வெளியே எங்காவது காருண்யாவை பார்க்க நேர்ந்தால் சன்னமான சிரிப்பை ராவணன் உதிர்ப்பான். காருண்யாவோ ராவணன் தலை தெரிந்தால் அந்த பக்கமே திரும்ப மாட்டாள். இப்படி தான் சந்திப்பு எதார்த்தமாக அமைந்தது.
அதோடு ராவணா ஏதோ பெங்களூரில் உள்ள கல்லூரியில் படிக்க சென்றான். வேலையும் அங்கு தான் தொடர்ந்தான்.
அவன் காஞ்சிபுரம் வருவதை கைவிட்டு எண்ணிவிடலாம். அதற்கு பதிலாக ரோகிணியும், அவன் தந்தை சிவராமனும் பெங்களூர் சென்று பார்த்து வருவார்கள். காருண்யா தந்தை பாட்டியிடம் மல்லுக்கு நின்று, சென்னையில் வேலைக்கு வந்து சேர்ந்தாள். அவள் பாட்டியையும் தந்தையும் காண செல்லும் நேரம் ரோகிணியிடம் மட்டும் பேசுவாள். நலன்விசாரிப்பு மட்டும் அதில் இருக்கும் மற்றபடி ராவணனின் நலத்தை கூட கேட்டுக்கொள்ள மாட்டாள்.
அவனை இங்கு காண நேரும் என்று நினைத்ததுமில்லை.
இதில் தன்னிடம் ‘காரு’ என்று கொஞ்சல் மொழிகள் வேறு.
ரோஸ்லின் எல்லாம் ‘காரு’ என்ற அழைப்பை கேட்டுவிட்டால் அவ்வளவு தான்.
என்ன ஏதென விசாரிப்புகள் படையெடுக்கும்.
“ஏ கேன்டின் வரலை?” என்று ஷாலினி கேட்க, “ஆஹ்… கொஞ்சம் தலைவலி பின்னியெடுக்கு ஷாலு செத்த நாழி கழிச்சு..” என்றவளது கையில் தேநீரை வைத்தான் ராவணன்.
“இஞ்சி டீ தலைவலியை நீக்கும்” என்று கொடுக்க, டீயையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள். ஷாலினி வாய் பிளந்து குறுகுறுவென பார்த்து கடந்தாள். இன்று வந்தவன் டீயை நீட்ட காருண்யா முகம் மறுக்காமல் ஷாலினியை பார்க்க மார்க்கமாய் தான் கடந்தாள்.
“உன்னை உரிமையா கூப்பிட்டதும் சிடுசிடுனு இருக்க. உனக்காக நானே வாங்கிட்டு வந்துட்டேன்.” என்று காரணம் உரைத்திட, “யாரை கேட்டுண்டு எனக்கு டீயை கொண்டாந்தேள். இப்ப நான் கேட்டேனா? நீங்க நேக்கு கொண்டு வந்து நீட்டறதை மத்தவா பார்த்தா சகட்ட மேனிக்கு புரளி பேசுவா. இப்பவே ஷாலினி குறுகுறுன்னுட்டு பார்த்துட்டு போறாள்” என்று கூறி முடிக்க, ரோஸ்லின் அவர்கள் பக்கம் வந்தாள்.
“ஏய்.. ராவணன் உங்களுக்கு காருண்யாவை முன்னவே தெரியுமா?” என்றாள்.
“சைல்ட்வுட் பிரெண்ட்ங்க” என்றான் ராவணன்.
“இல்…” இல்லை என்று கூறவந்தவள் ராவணனின் பதிலில் பல்லை கடித்து இளித்து வைத்தாள்.
“சொல்லவேயில்லை காருண்யா” என்று ஆச்சரியப்பட, “நேக்கு இவாளை எங்கயோ பாத்த நினைப்பு வந்துச்சு. ஆனா எங்கன்னு சட்டு புத்திக்கு பளிச்சிடலை. ராவணன் என்னை நினைவுவச்சிண்டு சரியா சொல்லிட்டார். எனக்கும் செத்த யோசிக்கவும் இவாளை அடையாளம் தெரிந்திடுச்சு” என்று சமாளித்தாள்.
“பார்த்தியா… புது ஆட்கள் வர்றாங்க. என் பிளேஸுக்கு பக்கத்தில் உட்கார போறாங்க. என் ஃப்ரீடம் முழுசா போச்சுனு புலம்பின. கடைசில உன் பிரெண்ட் தான் உன் பக்கத்துல வந்திருக்கார்.” என்று புகழாரம் பேச, காருண்யாவுக்கு மறுத்து பேச வழியின்றி நின்றாள்.
உண்மையில் தெரியாதவரிடம் கூட பழகிவிடலாம். தெரிந்தவனிடம் பழகியதை மறந்து, யாரோ ஒருத்தியாக மாறியப்பின், மீண்டும் நட்பு பாராட்டுவது எல்லாம் கடினமான விஷயமே.
“எனிவே ராவணன் புதுசா இருந்தாலும் நமக்கு பிரச்சனையில்லை. ரொம்ப நல்லா பழகறார்.” என்று ரோஸ்லின் கூற, “டீ ஆறுது குடி” என்றான்.
நல்லவேளை ‘காரு’ என்று அழைக்காமல் மொட்டையாக சொல்லவும், வேறு வழியின்றி டீயை வாங்கி பருகினாள்.
“ஓகே டச்ல இருப்போம் ராவணன். இதானே உங்க நம்பர் சேவ் பண்ணிட்டேன்.” என்று சென்றாள் ரோஸ்லின்.
கேண்டீனில் இருந்த சமயம் நம்பரை வாங்கியிருப்பதை காருண்யா யூகித்தாள்.
‘அடிப்பாவி… பத்து நிமிஷம் கூட ஆகியிருக்காது. போன் நம்பரை வாங்கியிருக்காளே’ என்று மனதில் குறைப்பட்டு கொண்டு திட்டி தீர்த்தாள்.
டீ குடித்து பேப்பர் கப்பை குப்பையில் போட்டவள், அவளது பணியிடத்தில் வந்து அமர்ந்தாள்.
“ஏன்.. என் மேல என்ன கோபம். புதுசா அறிமுகமானவங்க கூட என்னிடம் அதிகம் பேசிட்டாங்க. ஆனா நீ பேச யோசிக்கற. வாட் ஹாப்பன் காரு” என்றான் ராவணன்.
தன் கேபினில் அமர்ந்து “அதெல்லாம் இல்லையே. நான் நன்னா தானே பேசிண்டு இருந்தேன்.” என்றாள்.
“எங்க அப்பா அம்மாவை பத்தி கேட்கலை.” என்று கேட்டதும் தான், ‘சே மாமி எப்ப ஊருக்கு போனாலும் சேமத்தை விசாரிப்பா. அவாளை பத்தி கூட விசாரிக்கலையே’ என்று மனதாங்கல் ஏற்பட்டு, “அதுவந்து.. நேக்கு காரு’ கூப்பிட்டா பிடிக்காதேனோ. நீங்க வந்ததிலிருந்து காரு சொன்னதும் கோபத்தை காட்டின்டேன். அதுல மாமியை பத்தி விசாரிக்க மறந்துட்டேன். அவாளாம் உங்காத்துல சௌக்கியமா இருக்காளா? உங்க தோப்பனார் எப்படியிருக்கார்?” என்று கேட்டாள்.
“ஏய்… நீ இந்த பாஷையை சென்னை வந்தும் விடலையா?” என்று கேட்டதும், நெற்றி சுருக்கி, “ஏன் இந்த பாஷைக்கு என்ன? அவா அவா அவாளோட பழக்க வழக்கத்தை ஏன் மாத்திக்கணும். இது எங்க பாட்டி சொல்லிக் கொடுத்தது. எங்க போனாலும் நம்ம ஆச்சாரம் அனுஷ்காரம், எதையும் மாத்திக்க கூடாதுனு சொல்லி சொல்லி வளர்த்திருக்கா. நான் என் பாட்டி சொல்படி வளர்ந்து ஆளானவ. அவா சொன்னதை வேதவாக்கா பிடிச்சிக்கறேன். நோக்கு என்ன பிரச்சனை வந்திடுது.” என்றாள். எத்தனை பேரிடம் அவள் இதை கூறியிருக்க வேண்டுமென்று அவள் போச்சிலே தெரிந்தது.
ராவணன் அவளது பேச்சும் முகபாவணையும் கண்டு, “உண்மை தான். பெரியவங்க சொல்லி கொடுத்து வளர்த்தது. நீ மாறாம இருக்கறது ஆச்சரியமா இருக்கு. ஆனா இந்த சென்னை சிட்டில நிறைய கிண்டல் கேலிக்கு பலியாகியிருப்பியே.” என்று பாராட்டி நிதர்சனத்தை கூறினான்.
அவன் பாராட்டுதலில் உச்சி குளிர்ந்தவள், “மாமா மாமி எப்படி இருக்காள்னு கேட்டேன். நீங்க அதுக்கு பதிலே சொல்லலை.
கேலி கிண்டல் பண்ணறவா பண்ணிட்டு தான் இருப்பா. அதுக்காக ஒவ்வொருத்தரோட பழக்கவழக்கத்தை மாத்திக்கனுமோனோ?” என்று நினைவுப்படுத்த, ”யா… இரண்டு பேரும் நல்லாயிருக்காங்க. பெங்களூருக்கு வாங்கன்னு சொன்னேன். குளிர் ஒத்துக்காதுனு மறுத்துட்டாங்க. இப்ப சென்னையில வேலை மாறுதல் இங்கயாவது வாங்கன்னு சொல்லிட்டேன். ஆனா அவங்க காஞ்சிபுரத்துலயே இருக்கோம்னு சொல்லிட்டாங்க. சொந்தவூரு, சொந்த வீட்டை விட்டு வரத்தோணலை. நீ சொன்னியே பழக்கவழக்கத்துல அதுவும் ஊறிப்போனதா இருக்கலாம்.” என்றான்.
“பாட்டியும் இதே தான் சொல்லுவா. என்னை சென்னையில உத்தியோகம் என்றதும் என்னை அனுப்பவே தலைகீழே நின்னேன். எல்லாம் விவாஹம் நடக்கறச்சவரை சுதந்திரம்னு சொல்லி அனுப்பியிருக்கா” என்றதும், அதன்பின்னே திருமணத்தை பத்தி பேச்சு செல்லவும், “சரி வந்த நாளே நீங்கோ என்னான்ட பேசிட்டு இருக்கேள். உத்தியோகத்தை பாருங்கோ.” என்று நழுவிக்கொள்ள, ராவணன் உதட்டில் சிரிப்போடு தலையாட்டி, வேலையில் மூழ்கினான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
வாசிக்கும் அன்பான எனது ரீடர்ஸுக்கு நன்றிகள்.தேங்க்யூ சோ மச் கீப் சப்போர்டிங்
அன்புள்ள பார்ஷியாலிட்டி பெர்சனுக்கு,
தான் ஒரு எழுத்தாளரை தூக்கி நிறுத்தும் தூண் என்று நினைச்சிட்டு சில விஷ பார்ஷியாலிட்டி அனகோண்டா, சைட்ல நாம என்ன செய்தாலும் அதை மற்றொரு ரைட்டருக்கு சொல்லி தருது. தானா செய்ய தோன்றுவது தான் அறிவு ஏன்மா… வயசானா அறிவு என்ன கழுதை மேய்க்க போயிடுமா. மற்றவர் அறிவை வழிமுறையை பின்பற்றாதீர்கள்.
என் தோழிகளும் நாங்களும் செய்யும் விஷயம் மற்றவர் இன்ஸ்பிரேஷன் என்று உருட்டும் ஒருத்தருக்கு இந்த குறிப்பு. எங்க சைட்ல பழியா கிடக்கறது. எங்க கதைக்கு மூச்சுவிடாம அங்க போய் இதை செய் அதை செய்னு கூஜா தூக்கறது. மரியாதை போச்சே…
Spr going waiting for nxt epi 😍
அருமை ஐயங்கார் வீட்டு அழகே
ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 2)
இந்த காரு ஏன் ராவணா மேலே சும்மாவே எரிஞ்சு எரிஞ்சு விழறான்னே தெரியலை. அவன் சைல்ட்வுட் ஃப்ரெண்ட்டுன்னு எப்பவும் போல தானே பேசறான். இவ மட்டும் ஏன் மூஞ்சியை காட்டுறா. முன்னாடியே மூக்கறுப்பட்ட காரணம் ஏதாவது இருக்குமோ…?
எனிஹவ், அவ என்ன சொன்னாலும் நான் கேட்கப் போறதில்லை, நானும் காரு’ன்னு தான் கூப்பிட போறேன். அப்படி என்ன பண்ணிடுவான்னு பார்க்கிறேன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super ma
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 endha iyyer slang romba nalla eruku sis😘 therinjavanga kita romba naal kazhichu marubadium pazhaguradhu konjam kashtam dhan parpom renduperum enna pandranga nu🧐
காருக்கு இராவணனுக்கும் முன்னாடி என்ன நடந்துச்சு தெரியல காரு மூஞ்சி தூக்கி வெச்சிட்டு சுத்தறாளே.
சின்ன வயசுல அவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருந்துட்டு இப்ப பேசக்கூட தயங்கராளே
👌👌
Whatever she says s correct in the point of not loosing ur individuality but have to think on the practicality also.