Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-9

ஐயங்காரு வீட்டு அழகே-9

அத்தியாயம்-9

Thank you for reading this post, don't forget to subscribe!

இப்பொழுது எல்லாம் காருண்யா ராவணன் அதிகம் பேசுவதில்லை. பேசுவதை காட்டிலும், ஒரு முகத்தை ஒருவர் பார்த்து கடப்பதை கூட தவிர்த்தனர்.
இத்தனைக்கும் பக்கத்து பக்கத்து கேபின்.
இவர்களை கண்ட ரோஸ்லின் ஐந்தாம் நாள் கவனித்தாள்.

உணவருந்தும் நேரம் ராவணன் ஜெயந்த் கூட அமர்ந்து சாப்பிட, “ஆமா உன் சைல்வுட் பிரண்ட் ஏன் உன் கூட சாப்பிடாம தவிர்க்கறார்? எனி ரீசன்?” என்று கேட்டாள்.

“நோக்கு அவாளோட ஈசிண்டு சாப்பிடணும்னா நீயும் போ. சும்மா சைல்வுட் பிரெண்ட் என்று படுத்தி எடுக்காதேள்‌” என்றாள் காருண்யா.

“என்னப்பா ஆச்சி? ஏன் கோபப்படற? நானும் பார்த்துட்டு இருக்கேன் இந்த நாலு நாளா நீயும் அவரும் சிடுசிடுன்னு கடுகடுன்னு சுந்தறிங்க. பக்கத்துல இருந்தும் பேசாம திரும்பிக்கறிங்க. இதுல சாப்பிடவும் ஜெயந்த் கூட போயிட்டாரேனு
கேட்டேன். நான் அவரை ஜொள்ளு விடுவேன் தான். அதுக்காக என் கிளோஸ் பிரெண்ட் நீ, உம்முனு இருக்க. என்ன காரணம்? உங்களுக்குள் சண்டையா?” என்று ரோஸ்லின் பரிவாய் கேட்டாள்.

காருண்யா நடந்ததை எல்லாம் வரிசையாக கூறினாள்.

“இதுல ராவணன் மேல என்ன தப்பு காருண்யா. நீ தான் என்னிடம் சிடுசிடுன்னு பேசற மாதிரி அவரிடமும் பேசியிருக்க. சரி அதை விடு. ஹரன் என்ன சொன்னார்.
அவங்க மாமாவை கன்வின்ஸ் பண்ணிட்டாரா?” என்று கேட்டாள் ரோஸ்லின்.

”எப்பவும் ஹரன் தான் போன் பண்ணி பேசுவா. சம்பவம் நடந்த மறுநாள், அடுத்த நாள் கூட வீட்ல உனக்காக மாமாவிடம் பேசினேன்னு சொன்னார். கன்வின்ஸ் பண்ணி சாரி கேட்க சொல்லறேன்னு பிராமிஸ் செய்தார்.
இப்ப இரண்டு நாள் ஆகுது. ஏன்னு தெரியலை போன்‌பண்ணலை‌. சாட் பண்ணலை.” என்றாள் காருண்யா.

“அவர் பண்ணலைனா என்ன? நீ கால் பண்ணு.” என்று ஊக்குவிக்க, “இதுவரை நானா ஹரனிடம் பேசியதில்லையே” என்று மறுத்தாள்.

“சரி ராவணனிடம் பேசு. உன் பிரெண்ட் தானே?” என்று கூற, “இல்லை.. நேக்கு இப்படி ஒரு பிரெண்ட் தேவையில்லை. முரடன்… இப்பன்னு இல்லை. காலேஜ் படிக்கறச்ச இரண்டு முறை சஸ்பெண்ட் வாங்கிட்டு வந்து வீட்ல ஹாயா டிவி பார்த்துண்டு காஞ்சிபுரத்துல ஊரை சுத்திண்டு இருந்தான்.
ஹரனை பார்த்து அரை மண்டையன் சொல்லறா.” என்று அவனிடம் பேச போவதாக இல்லை என்று முடிவுக்கட்டினாள்

“வீட்ல என்ன சொல்லறாங்க” என்று ரோஸ்லின் கேட்டதும் முகம் வாடி “பாட்டியும் அப்பாவும் எதுவும் சொல்லலை. ஆனா இந்த வாரம் அங்க போய் அவாளை நேர்ல பார்த்து பேசிடலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.” என்றாள்.

“ம்ம்ம்.. பெட்டர்.” என்றவள் ராவணனை பார்த்து, “ஓகே நான் போய் ராவணனிடம் பேசிட்டு வர்றேன். இல்லைன்னா இந்த நாள் இனிய நாளாக போகாது” என்று நடக்க, “ஏதாவது நீயா அவனிடம் என்னை பத்தி பேசாதே. அவனா கேட்க மாட்டான்.” என்று இழுத்தாள்.

“புரியுது புரியுது. நான் ஒன்னும் லூசு இல்லை.” என்று சென்றாள். அவள் சென்றதும் எதையோ இழந்தவளாக இருந்தாள் காருண்யா.

காருண்யாவுக்கு பாட்டி அப்பாவை காணும் வரை இந்த எண்ணம் நெஞ்சை அரிக்கும் என்று புரிந்தது.

இவளுக்கு இப்படியென்றால் அங்கோ ராவணனுக்கு மீண்டும் தன்னிடம் பேசாமல் முகம் திருப்பும் காருண்யா மீது கோபம் அதிகமானது.

இப்படி தான் வயசுக்கு வந்தப்பிறகு தள்ளி சென்றாள். அன்றாவது தன்னிடமிருந்து தள்ளி செல்லும் காரணத்தை ஏற்றுக்கொண்டான்.
இன்று தள்ளி சென்று முகத்திருப்புதலை தாங்கயியலாதவனாக தவித்தான்.

நான் என்ன செய்தேன். அந்த அரை மண்டையன் ஏதாவது சொன்னா அதுக்கு நான் தான் காரணமா? என்று மனதோடு போராடி களைத்தான். அவனுமே காஞ்சிபுரத்திற்கு செல்ல ஏசி பஸ்ஸில் டிக்கெட் எடுத்திருந்தான்.

இங்கு வந்ததிலிருந்து அன்னையை காணாதது‌ம், இப்பொழுது இவ்வாறு நடக்க, அன்னையை ஒரு முறை பார்த்து பேசி வந்தால் நன்றாக இருக்குமென்று புறப்பட்டான்.

இருவருமே மேலதிகாரியிடம் லீவை அப்ளை செய்திருந்தார். ஏற்கனவே ஜவஹரிடம் வேலை விஷயமாக ஜெயந்த் ஷாலினி காருண்யாவோடு நேரம் செலவழித்து, காருண்யாவின் பியான்ஸி வந்து சென்று தவறாக எடுத்துக் கொண்டார் என்பதை மேலோட்டமாக விவரித்து இருக்க, மட்டும் லீவ் அப்ளை செய்து செல்வதை புரிந்துக்கொண்டார். என்ன இருவரிடமும் ஒரு நாளில் கிளம்புகின்றீரா? என்று கேட்கவில்லை.

அவருக்கு இருந்த ஆயிரம் வேலையில் கேட்கவும் மறந்திருக்கலாம். அதன் பலன் காருண்யா ஏசி பஸ்ஸில் தனக்கான இடத்தை பார்த்து வந்து சேர்ந்தாள்.
அங்கே முகத்தில் ஐ-மாஸ்க் அணிந்திருந்த இளைஞனை கண்டு, டிரைவரை தேடினாள்.

“சார்… என் பக்கத்துல ஒரு ஜென்ஸ் இருக்கார். ஆள் மாத்தி உட்கார வைக்க முடியுமா?” என்று கோரிக்கையாக கேட்டாள்.

“அதெல்லாம் முடியாது மேடம். இப்படி சொல்லறாங்கன்னு மாற்றி உட்கார வச்சா, ‘கொடுத்த நம்பர்ல உட்கார வைக்காம வேற சீட்ல உட்காருவதுக்கு மாத்தறாங்க’னு ரேட்டிங்க்ஸ் கம்மியா தட்டி விடறாங்க பசங்க.
இதுல கமெண்ட்ஸுலயும் கழுவி ஊத்தறாங்க. பெயர் கெட்டுடுதும்மா. நாலு ஐந்து மணி நேரம் தானே பழகிக்கோங்க,” என்றார் அவர்.

காருண்யாவுக்கு எரிச்சல் வந்தாலும் இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமான விஷயங்களே என்று விட்டாள்.‌

பக்கத்து இருக்கையில் ஆண் அமர்ந்தால் வேறு என்ன செய்ய இயலும்.

இப்படி நினைத்து அமர்ந்து விட்டாள். ஆனால் வண்டி புறப்பட்டு இருபது நிமிடம் கழிந்தன.

பட்டும் படாமலும் தள்ளி அமர்ந்தவளுக்கு, பக்கத்தில் உள்ளவன் உறங்கியபடி, அவனிடம் விரைவில் வந்து இறங்கிவிட்டால் நல்லதென பகவானை வேண்டினாள். ஏனோ இம்முறை பகவான் அவளது பிரார்த்தனைக்கு செவி சாய்க்க மறுத்துவிட்டார்.
அதோடு ஐ மாஸ்கை கழட்டி, ஜன்னலில் எந்த இடம் வந்தது என்று ஏசியின் திரை சீலையை தள்ளி, கண்ணாடி கதவு வழியாக வெளியே பார்த்து, ‘இன்னமும் இங்கயே தான் சுத்திட்டு இருக்கான்.’ என்று பக்கத்திலிருந்தவளை பார்க்க, அவளும் அந்த நேரம் திரும்பினாள்.

கண்கள் தெறித்து விடும் அளவிற்கு, விழியை விரித்து ‘நீயா’ என்ற அதிர்ச்சிக்குள்ளானாள் காருண்யா.

அங்கிருந்த ராவணனோ, ‘இவளா’ என்று அதிர்ந்தாலும் சட்டென அதிர்ச்சியை மறைத்து கொண்டு ஜன்னல் புறம் திரும்பினான்.

அவளிடம் பேசாமலேயே, அவளும் காஞ்சிபுரம் செல்ல தான் பஸ்ஸில் வருவதை அறிந்துக் கொண்டான்.

இதே மற்ற நேரம் இவ்வாறான சந்திப்பு என்றால் அலுவலகத்தில் பேசுவது போல பேசிக்கொண்டே வந்திருப்பான். ஆனால் நடந்த நிகழ்வுகள், அவள் காட்டும் முகத்திருப்புதல் என்று பேசுவதை தவிர்த்தான்.

காருண்யாவோ அவஸ்தையுடன் தலையில் கை வைத்து, மறுபக்கம் திரும்பினாள். மனசாட்சியோ, ‘நேக்கே நன்னா இருக்கா? உன் பால்ய சிநேகிதன். இப்ப உத்தியோகத்துலயும் கூட வேலை பார்க்கறான். இப்ப பஸ்ல பார்த்தும் பேசாம முகத்திருப்பிட்டு இருக்கே. ஏதாவது பேசிண்டு வரலாம். அப்படியென்ன கோபமோ’ என்று திட்டியது.

ஒருவேளை அவனாக பேசினால் பேசலாமென்று நினைத்தாள்.
ராவணனோ ‘இவளுக்கு எதுக்கோ என்னை பிடிக்கலை. அப்படியிருக்க நானா வலிய பேசறது நல்லாயிருக்காது. காஞ்சிபுரம் வர்ற வரை ஐ மாஸ்க் போட்டு படுத்துட வேண்டியது தான்’ என்று முடிவெடுத்தான்.

ஒருவிதத்தில் ஐ-மாஸ்க் இருவரின் பார்வைகளை தவிர்த்து, சங்கோஜத்தை களைந்தது.

இரண்டு மணி நேரம் பயணம் செல்ல, காருண்யாவுக்கும் உறக்கம் வந்தது. ஆனால் உறங்கினால் அவள் பக்கத்தில் உள்ளவர் மீது சாய நேரலாம். எப்பொழுதும் போனில் ஏதாவது நோண்டிக்கொண்டும், அல்லது கண்ணாடி ஜன்னல பக்கம் பார்வையை வீசியபடி வருவாள். இங்கே கண்ணாடி பக்கம் ராவணன் இருக்கின்றான். அவனை பக்கத்தில் வைத்து கொண்டு போனில் எதையுமா நோண்ட பிடிக்காமல் நெடுநேரம் கழுத்தை வேறு வலது புறமே திரும்பியிருந்தாள்.

ஏசி பஸ்ஸில் அங்குள்ளவர்களின் சுவாசம் அவ்விடத்திலேயே சுழல, காருண்யாவுக்கு அங்கே சுவாசிக்கவே பிரச்சனையானது. வயிற்றுக்கும் தொண்டைக்கும் ரசவாதம் நிகழ்ந்தது.

“பதினைந்து நிமிடம் வண்டி நிற்கும்” என்று டிரைவர் சொல்லிவிட்டு செல்ல ஆளாளுக்கு எழுந்து கீழேயிறங்கினார்கள்.

ராவணனும் எழுந்து கீழே சென்றான். அவன் செல்வதற்கு, எழுந்து வழியை விட்டாள்.

கண்ணாடி திரை சீலை நகர்த்தியிருக்க, ராவணன் ஒரு கடையில் நிற்க, கடைக்காரரிடம் ஏதோ கேட்டான்.

கண்ணாடி வழியாக பார்க்காதது போல அவனை நோட்டமிட, கடைக்காரர் சிகரெட்டை எடுத்து வைத்தார். ‘அபிஷ்டு… ஸ்மோக் பண்ணுவானா?’ என்று விழியை பெரிதாக்க, ராவணன் அதை எடுக்கவில்லை. அவனுக்கு பின்னாலிருந்தவரோ சிகரெட்டை எடுத்தார்.
கடைக்காரர் அதன் பின் தண்ணீர் பாட்டிலை எடுத்து வைத்தார். ராவணன் அதற்குண்டான பணத்தை ஜிபே செய்துக் கொண்டிருந்தான். காருண்யாவுக்கு ஏசி பஸ்ஸில் வாந்தியுணர்வை தர, அடக்கமாட்டாமல் வேக வேகமாய் பஸ்ஸிலிருந்து இறங்கி, ஓரமாய் வாந்தியை எடுத்தாள்.

அவள் அவசரமாக பஸ்ஸிலிருந்து ஓடிவருவதை கண்டவன், அவள் தனியாக வாந்தி எடுக்கவும், மனம் கேளாமல், அவன் வாங்கிய வாட்டர் பாட்டிலை கொண்டு வந்து நீட்டினான்.

வாங்க மறுத்து நின்றவளிடம், “பேக்கேஜ் ஓபன் பண்ணாத சுத்தமா வாட்டர் பாட்டில் தான் குடிக்கலாம்” என்று திறந்து நீட்ட, வாங்கி பருகி வாயை கொப்பளித்தாள்.

முகத்தை கழுவி தாகம் தீர குடித்தாள்.

“இப்ப ஓகேவா?” என்று கேட்டதும் தலையாட்டினாள்‌. வாட்டர் பாட்டிலை தந்துவிட்டு பஸ்ஸில் ஏறினாள்.

ராவணன் மட்டும் இன்னொரு வாட்டர் பாட்டிலை வாங்கிவிட்டு வந்தான்.
“காலையில காபி மட்டும் குடிச்சிட்டு வேற எதுவும் சாப்பிடாம வந்தியா?” என்று கேட்டான். அவள் காபியை தான் வாந்தியெடுத்திருந்தாள்.

“மெஸ்ல காபி மட்டும் தான் இருந்தது. உப்புமா ரெடியாகலை.” என்றாள்.

”சாண்ட்வெஜ் சாப்பிடு. வயிறு காலியா இருக்கும்” என்று கொடுக்க மறுக்க பார்த்தாள். ஆனால் வாந்தி எடுத்து தண்ணீர் பாட்டிலை நீட்டியவனிடம் மீண்டும் முகத்திருப்புதலை காட்ட மனமின்றி வாங்கி கொண்டாள்.

“வாட்டர் பாட்டில்” என்று கொடுக்க, “இல்ல. என்னிடம் இருக்கு” என்று எடுத்து காட்டினாள்.

“ஓகே.” என்று சாய்ந்து படுத்து கொண்டான். ஐ மாஸ்க் போடும் நேரம், “நேக்கு ஜன்னல் சீட் தர முடியுமா? நீங்க தூங்க தானே போறேள். முடியாதுன்னா விட்டுடுங்கோ” என்று கூற, எழுந்து நின்று அவளை மறுபக்கம் போக கூறி கைகாட்டினான்.

அவளும் லேசாக புன்னகைத்து, மாறிக்கொண்டாள்.

அதன்பின் பயணம் ஆரம்பிக்க, ராவணன் ஐ-மாஸ்கை போட்டு இமை மூடிக்கொண்டான். காருண்யா மெதுவாக சாண்ட்வெஜ் சாப்பிட்டு தண்ணீரை குடித்து கண்ணாடி ஜன்னல் புறம் திரும்பி வேடிக்கை பார்த்தாள்.‌

வேடிக்கை பார்த்ததால் காஞ்சிபுரம் வந்ததே தெரியவில்லை. இருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள்.
ஆட்டோ ஸ்டாண்ட் வந்து, தனிதனியாக ஒரே தெருவிற்கு செல்ல ஆட்டோவை கேட்க, ஆட்டோக்காரனோ, “எல்லாம் ஸ்கூல் கிராக்கி போயாச்சு. இரண்டு பேரும் ஒரே இடத்துக்கு போக ஆட்டோ கேட்கறிங்க. நான் ஒருத்தன் தான். இரண்டு பேருமே என் ஆட்டோல வாங்க இரண்டு பேரும் பார்த்து போட்டு கொடுங்க” என்றார்.

ஆட்டோ ஸ்டாண்டிற்கு முதலில் வந்தது என்னவோ ராவணன் என்பதால், “எனக்கு பிரச்சனையில்லை அண்ணா.” என்று காருண்யாவை பார்த்தான்.

அவளோ தலையாட்டி ஆட்டோவில் ஏறினாள். ராவணன் ஆட்டோ டிரைவரோடு முன்னிருக்கையில் அமர்ந்துக் கொண்டான்.

ஆட்டோ அவ்விடம் விட்டு நகர, ”பஸ்ஸில் பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்துட்டு வந்தா. இங்க ஆட்டோ ஏறியதும் முன்னால போய் நல்லவாளா உட்கார்ந்துக்கறான். ஏன்டா அம்பி ஆபிஸிலயும் இப்படி தானா? தனியா இருக்கறச்ச ஒரு மாதிரியும், மத்தவா பார்க்கறப்ப ஒரு மாதிரியும் நடிப்பா போல. இதை தான் மாமா அன்னிக்கு புலம்பினா. நாமளும் கண்ணால பார்த்ததை அவாளுக்கு போட்டோ அனுப்பி சொல்லியாச்சு. இதுக்கு மேல அவா விருப்பம்.” என்று ஹரனின் மாமா உபயத்தால் அறிந்தவர் தெரிந்தவருக்கு வதந்தி தந்தியாக பாவித்து பரவியது.

-தொடரும்.

7 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-9”

  1. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 9)

    அடேய் போங்கடா கூறுகெட்ட முட்டா பசங்களா..? விட்டா ஒரு
    ஈ உட்கார்ந்தா கூட காருண்யாவுக்கும் ஈக்கும் கனெக் ஷன் இருக்குன்னு சொல்லிபூடுவாங்க போலயிருக்கு. இதை சொல்றதுக்கு இன்டர்நேஷனல் லெவலுக்கு ஒரு ஸ்பை வேற செட் பண்ணியிருக்காங்க பாருங்களேன்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    ada pavingala ithu ethachaiya nadanthathu rendu perum ore us la vanthanga athuku etha mari pakathulaye seat ena panuvanga itha pathutu athaium oru mari potu koduthutangle nalla irukuravangalaium intha mari aalunga iruka vida matanga

  3. Dharshini

    Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 endha mama sariyana kooru keta cooker ah erupaaru polaye🙄 edha ketu endha hari um pesuvaan polaye parpom 🤔🧐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *