Skip to content
Home » தீரனின் தென்றல் – 17

தீரனின் தென்றல் – 17

“தென்றல்…” தீரன் குரல் அதிர கத்த அதிர்ந்து பார்த்த தென்றல் தான் செய்து கொண்டு இருந்த வேலையை நிறுத்தினாள்.

“கதவை திறந்து உள்ளே வந்த தீரன் ஏய்… என்னடி பண்ற?” வேதனையோடு கேட்டவன் குரலும் உடைந்திருக்க

“நான் வேண்டாம் தீரா… நான் அழுக்கு தீரா… அசிங்கம் உனக்கு வேண்டாம் தீரா..” அழுகையில் பாதி வார்த்தைகள் விழுங்கி கூறி இருக்க அருகில் நெருங்கி அவள் கன்னத்தை கையில் ஏந்தியவன்

“ஏய் லூசு… ஏன்டி… எவனோ ஒருத்தன் உன் உடம்பு மேல கை வச்சா நீ அழுக்காகிடுவியா? அப்போ இத்தனை வருஷம் என் மேல வச்ச காதல் எங்கடி போச்சு.. ம்ம்?” மென்மையாக கேட்டான் தீரன்.. இப்போதைக்கு கோபம் சரியில்லையே…

“என்னால முடியல தீரா… அந்த நாய் என்னை.. என்னை எங்கெல்லாம் தொட்டான் தெரியுமா? ஐய்யோ… அப்படியே ஏதோ கரப்பான் பூச்சி கம்பளி புழு எல்லாம் மேல ஊறுன மாதிரி… இன்னும் இன்னும் என்னால சகிச்சுக்க முடியலை தீரா…” ஒவ்வாமை முகத்தில் தெரிய தென்றல் கூற சட்டென்று அவளை அணைத்துக் கொண்டு தன் இதழோடு இதழ் சேர்த்திருந்தான் ஆதீரன்…

முதலில் மிரண்ட தென்றல் முத்தத்தில் மூழ்க இத்தனை நாள் தன்னிடம் பிரச்சனையை கூறாத கோபம்… இப்போது தன்னை விட்டு செல்ல முடிவெடுத்த கோபம் என்று வன்மையாக இதழை கொய்த தீரன் பெண்மையின் மென்மையில் கரைந்து தன் வேகத்தை குறைக்க தென்றல் தன் மனதின் வெம்மையை கண்ணீராக வெளியேற்ற

“இப்போ என்ன டி பிரச்சினை உனக்கு… உன்னை அவன் தொட்டது உன்னை காயப்படுத்துது.. அப்படி தானே…” என்று பேசியபடி அவளின் தாவணியை உருவிய தீரன்

இனிமே என் வாசனை தான் உன் மேல இருக்கனும் என்று கை கழுத்து என்று அவன் தொட்ட இடத்தில் எல்லாம் முத்தமிட்ட தீரன் தன்னையே மறந்து சில நொடிகள் செயல்பட தென்றல் எதிர்வினையாக அமைதியை மட்டுமே தந்தாள்.

சற்று நேரம் தன்னை இழந்த ஆதீரன் தென்றலிடம் இருந்து விடுபட முயல இப்போது அவன் இதழை சிறை பிடித்தாள் தென்றல்.

அதன் பின்னர் நிகழ்ந்தது யாவும் அவ்விருவரின் அதிக பட்ச காதலை காட்ட வழியின்றி ஒருவரை ஒருவர் தன் உயிரில் தாங்கி ஒன்று பட்டிருக்க நடு நிசியில் தீரனை அணைத்து உறங்கிக் கொண்டிருந்த தென்றலின் நெற்றியில் முத்தமிட்டு தன் காதலின் உச்சத்தை உணர்த்தினான் தீரன்.

திட்டமிட்டு எதுவும் நிகழவில்லை… நிகழும் போது இருவரும் தடுக்கவும் இல்லை… அதிகாலை தீரன் தென்றல் இருவரும் கண்விழித்து இருந்தாலும் ஒருவரை ஒருவர் நிமிர்ந்து பார்க்க இயலாது தென்றல் தீரனின் மார்பில் முகம் புதைத்து படுத்திருக்க தீரன் முகத்தில் சொல்ல தெரியாத குழப்பம்…

நீண்ட மௌனத்தை தன் செருமல் மூலம் கலைத்தான் தீரன். “தென்றல்…” மென்மையாக அழைக்க

என்றுமில்லாத வெட்கத்தில் அவளின் குரல் அவளுக்கே கேட்காத அளவுக்கு “என்ன தீரா…” தென்றல் கேட்க

“தென்னூ…. நாம.. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா…?” ஏதோ பதட்டம் குழப்பம் தீரனின் குரலில்…

அவனை நிமிர்ந்து பார்த்தாள் தென்றல். “என்னாச்சு தீரா… ஏன் இப்படி கேட்குற?” தென்றல் புரியாமல் கேட்க எழுந்து அமர்ந்தான் ஆதீரன்.

“ஏய் என்னடி இது… நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாமா?” அதிர்ந்து கேட்க

“பண்ணிக்கலாம் தீரா… நீ சொன்னா நாளைக்கே உனக்கு கழுத்தை நீட்ட நான் தயார்… ஆனா உன் குரல்… எதுவோ சரியில்லை தீரா.. என்னாச்சு? ஏன் நமக்குள்ள இப்படி நடந்தது உனக்கு தப்பா படுதா? “

“பின்ன… என்னடி கேட்குற.. கல்யாணம் ஆகாம நான்.. நான் கொஞ்சம் அவசரப் பட்டேன் சாரி தென்றல்..‌” தீரன் வருந்த

“இதுல உன் மேல மட்டும் தப்பு இல்ல தீரா… எனக்கு நினைவு தெரிந்த நாளா நான் உன் பொண்டாட்டின்ற நினைப்புல தான் வாழ்ந்துட்டு இருக்கேன்… இப்போ உடலளவுல உன் பொண்டாட்டி ஆகிட்டேன்.. எனக்கு தப்பாவே தோணலை தீரா… ஏன் தீரா நான் இப்படி பேசுறதால என்னை நீ தப்பா நினைப்பியா என்ன?” தென்றல் எதார்த்தமாக கேட்க

“ச்ச்… தென்னுக்குட்டி நான் சொல்றதை கேட்பியா? என்னை எப்பவும் தப்பா நினைக்க மாட்டியே… எப்பவும் நான் என்ன முடிவு எடுத்தாலும் என்னை விட்டு போய்ட மாட்டியே…” ஏதோ ஒரு பயம் கண்ணில் தெரிய சம்பந்த சம்பந்தமே இல்லாமல் கேட்ட தீரனை வித்யாசமாக பார்த்த தென்றல்,

“தீரா… டீவி ல படத்துலலாம் இப்படி ஒரு சீன் நடந்தா அந்த ஹீரோயின் ஹீரோ கிட்ட இதே மாதிரி தான் கேட்பாங்க… ஆனா, இங்க நீ என்கிட்ட கேட்குற…” என்று அவனை கேலி செய்து விட்டு பின்னர் அவன் கண்ணை நோக்கி

“தீரா… நான் உன்னோட மனைவி டா… என்ன நடந்தாலும் உன்னையும் என்னையும் மரணத்தை தவிர வேற எதாலயும் பிரிக்க முடியாது தீரா…” என்று உறுதி அளிக்க சிறு புன்னகை தீரன் முகத்தில்…

“ம்ம்… சரி நான் காலேஜ் கிளம்பறேன். நீயும் கிளம்பு தீரா…” என்று எழுந்து சென்றாள் தென்றல்.

அதன் பின் வந்த நாட்களில் தென்றல் தன் குறும்புகளை குறைத்தாலும் எப்போதும் போல தான் இருந்தாள். ஆனால் ஆதீரன் ஏதோ ஒன்று மனதில் உறுத்த சற்று இறுக்கமாக குழப்பமாகவே இருந்தான்.

ஒருவழியாக தென்றல் ரூபிணிக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் முடிய அவளை பார்க்க வந்த அவளின் தாய் “இது இவளுக்கு மாசகணக்கு பார்த்தா ஏழாவது மாசம்.. வளைகாப்பு போட்டு மதுரைக்கு கூட்டிட்டு போய் நான் பார்த்துக்கிறேன்… மாப்ளையும் அடிக்கடி இங்கேயும் மதுரைக்கும் அலைஞ்சுட்டு இருக்காரு…. ரூபி மதுரையில இருந்தா மாப்ளையும் கூடவே இருந்து பார்த்துப்பாரு.‌.” என்று சொல்ல

“அம்மா… அத்தை தனியா இருப்பாங்க மா.. அவங்களுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை தனியா விட வேண்டாம் னு டாக்டர் சொல்லிருக்காரு…” ரூபிணி சொல்ல

“அப்போ சம்மந்தி அம்மாவும் வரட்டும்… மாப்ளை ஒரு வீடு பார்க்குற வரைக்கும் நம்ம வீட்ல ஒன்னா இருக்கலாம் ரூபி…” ரூபி அம்மா சொல்ல அதுவும் சரிதான் என்று குமாரின் அம்மா ஒப்புக் கொண்டார்.

ரூபிக்கு வளைகாப்பு வேலைக்கு நடக்க தென்றலுக்கு தோழியை பிரிந்து இருக்கும் வருத்தம் முகத்தில் தெரிய “தென்றல் அண்ணே உன்னை அடிக்கடி வந்து ஊருக்கு கூட்டிட்டு போறேன் டா குழந்தை பிறந்த அப்பறம் இங்க அவளை கூட்டிட்டு வரேன்…” என்று குமார் சமாதானம் செய்தான்.

ரூபிணி வளைகாப்பு முடிந்து அவள் அன்னை வீட்டுக்கு செல்ல அன்று அவளோடு செல்லக்கூடாது என்று மறுநாள் காலை தன் தாயையும் கிளப்பிக் கொண்டு மதுரை சென்று விட்டான் குமார்.

சில நாட்கள் செல்ல சோர்வாக இருந்த தென்றல் அருகில் வந்து அமர்ந்த ரங்கநாதன் அவள் தலை கோத “அப்பா… அத்தை வீட்டுக்கு போய் எனக்கும் தீரனுக்கும் கல்யாணத்துக்கு பேசுறியா ப்பா…” என்று கேட்ட மகளை கூர்ந்து பார்த்தார் ரங்கநாதன்.

எதுவும் பேசாமல் “சரி மா..” என்று மட்டும் சொல்லி விட

“என்னங்க அவ எது கேட்டாலும் இப்படி சரி சரி னு தலையாட்டிகிட்டு இருக்கீங்க…” பொன்னி கடிந்து கொள்ள

“வீட்ல வெத்தலை பாக்கு இருக்கு ல பொன்னி… நல்ல புடவை எடுத்து கட்டிக்கோ..‌ என் தங்கச்சி வீடா இருந்தாலும் மாப்பிள்ளை கேட்க போகணுமே…” என்று ரங்கநாதன் பேசிக் கொண்டே போக

“அப்பா… நானும் வரட்டுமா?” ஆசையாக கேட்டாள் தென்றல்.

“அடியே… சும்மா இரு… உனக்கு கல்யாணம் பேச பொம்பளை பிள்ளை நீயே வருவியா? ஏங்க இவ சொல்றா னு அவசரமா எதுவும் செய்ய வேண்டாம் ங்க.. அந்த தம்பி ஆதீரனை கூப்பிட்டு பேசுங்க முதல்ல…” பொன்னி அறிவுறுத்த

“ஏற்கனவே பூரணி இவங்களுக்கு கல்யாணம் பண்றது பத்தி பேசுனா மா… வா இன்னைக்கு மாப்ளை வீட்ல தான் இருப்பாப்ல… ஓரெட்டு போய் பேசிட்டு வந்திடலாம்…” அங்கு தனக்கு நடக்க இருக்கும் அவமரியாதை பற்றி தெரியாமல் மகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு தீரன் இல்லம் நோக்கி கிளம்பினார் ரங்கநாதன்…

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *