Skip to content
Home » தென்றல் நீ தானே-13 (முடிவுற்றது)

தென்றல் நீ தானே-13 (முடிவுற்றது)

அத்தியாயம்-13

Thank you for reading this post, don't forget to subscribe!

மலைப்பாக இருக்குமென்று துஷாரா அறிந்ததே… அது போலவே வீட்டுக்கு அழைத்து வரவும் வேடிக்கை பார்த்தபடி வந்தாள்.

அண்ணாமலையும் வள்ளியும் மகளை ஹர்ஷாவுக்கு மணமுடித்து கொடுத்து, நிறைவாக வந்தாலும், புது இடத்தில், வேறு நாட்டில் மகளை கட்டித் தந்ததில் தயக்கம் கொண்டே வந்தனர்.

ஹர்ஷா தான் வளவளவென்று பேசி அண்ணாமலையை இயல்பாக்கினான்.
நான்சியும் வள்ளியிடம் இடத்தின் சிறப்பை கைகாட்டி கூறியபடி வந்தார். நான்சி படித்த இடம், கல்லூரி, ஹர்ஷா பிறந்த மருத்துவமனை, அவன் படிக்க சென்ற பள்ளியின் வழி, கல்லூரி, இத்யாதியின் சாலை வழியை கையை நீட்டி சுட்டிகாட்டினார்.

துஷாராவோ கதை கேட்டு சிரித்து ஹர்ஷாவை பார்த்து நிறைவாய் உணர்ந்தாள். அதுவும் தமிழிற்கு தனி வகுப்பு சென்றதெல்லாம் தாமோதரன் உரைக்க, சிரிப்பாக இருக்கும்.
இப்படியாக கதை பேசி தங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்தார்கள். வீட்டின் மின்கதவை காரிலிருந்து, ரிமோட் பட்டனால் தட்டி திறந்தான்.

வீட்டின் உள்பகுதி வந்ததும், காரிலிருந்து அனைவரும் இறங்கியப்பின், காரை அதன் தரிப்பிடத்தில் வைத்துவிட்டு வந்தான்.

துஷாரா தோளில் கைபோட்டு, “இந்த கார்டன் நல்லாயிருக்கா? இங்க தான் நாளைக்கு பார்ட்டி டைம்மா மாத்த போறேன். அதுக்கான அரேன்ஜ்மெண்ட் பார்க்கணும்.” என்று கூற, அதை தான் இவ்வளவு நேரம் தாமோதரன், தந்தை அண்ணாமலையிடம் கூறியிருந்தார்.

அதை கேட்டதால், ஹர்ஷா வேறு  கூறியதும் “அமைதியான இடம், அகலமான இடம். கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு” என்றாள் துஷாரா.

வீட்டுக்கு வந்து டின் பழச்சாற்றை ஊற்றினான்.

“டேய் டின் கோக்கா.. சம்பந்திக்கு நான் காபி போட்டு தருவேன். இந்த டின்ல இருக்கற பழச்சாறு ஒன்னும் வேண்டாம். என்னங்க சம்பந்தி” என்று தாமோதரன் கேட்க அண்ணாமலையும் “வாஸ்தவம் பழச்சாறு எல்லாம் ஃப்ரிட்ஜிலயிருந்து அப்படியே குடிச்சா ஒத்துக்காது. காபி கிடைச்சா அமிர்தம்” என்றதும் தாமோதரன் காபி தயாரித்தார்.

நான்சியோ “மாமனார் மருமகள் ஒரே நாடுன்னு ஓவரா செட்டு சேர்ந்துடப் போறாங்க மை சன்.” என்று இத்தனை நாள் தமிழ், தமிழ்நாடு என்று அலட்டாதவர் இன்று மருமகள் தமிழ்நாடு என்றதும் தாமோதரன் துள்ளுவதை வைத்து கேலி செய்தார்.

காபி சூடாக பருக தரவும் வள்ளியுமே “இங்க காபி, டீ, சாப்பாடு எல்லாம் எப்படிங்க அண்ணி?” என்று கேட்டார்.

மகள் நன்றாக நொறுக்கு தீனியெல்லாம் திண்று வளர்ந்தவள். இந்த பீட்சா பர்க்கர் பக்கம் செல்லாதவள். அதனால் அறிந்து வைத்திட கேட்டார்.

ஹர்ஷா முந்திக்கொண்டு “அத்தை… எல்லா ஊரிலும் எல்லாம் கிடைக்கும். இங்க தமிழர்களுக்கான ஹோட்டல், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஏன் தமிழர்கள் ஒன்றிணைந்த சங்கம் எல்லாம் இருக்கு. துஷாராவுக்கு பேச பழக அங்கிருப்பவர்கள் சரி வருவாங்க.
நீங்க இங்க பயப்பட தேவையேயில்லை. சொல்லப்போனா ‘வேர்கடலை தேன்மிட்டாய்… அதென்னப்பா.. கமறு கமுறு கட்டு..?” என்று திணற, “கமர்கட்டு மிட்டாய் டா.” என்றார்.

“ஆங் அதுல்லாம் கூட பேக்கிங் இருக்கு.” என்று தகவல் தந்தான்.

வள்ளிக்கு ஓரளவு நிறைவாக நினைத்தாலும் தூரம் என்றது ஒருபக்கம் கவலையை தந்தது.
ஆனால் இனி இதுவொரு காரணம் என்று புலம்ப முடியுமா?

ஒரே விஷயத்தை சுட்டிக்காட்டினால் எரிச்சலடையலாம். அதனால் துரத்தை பற்றி அண்ணாமலை வள்ளி இருவருமே, மகள் திருமணம் முடிவானபோதே அப்பேச்சை தவிர்க்க முடிவெடுத்தனர். அதோடு துஷாரா ஹர்ஷா தனது ரிட்டேயர்மேண்ட் ஆனதும் அங்கு வந்தால் ஆறுமாதம் வரை இருக்க வைத்தே அனுப்புவோம் என்றனரே. இருவரின் பிடிவாதம் அறிந்ததால் அதை பிறகு யோசிக்கலாமென்று விட்டுவிட்டார். ஹர்ஷா அறியாததா… துஷாராவுக்கு அவள் தந்தை என்றால் உயிர் என்று. நிச்சயம் பாதி வருடம் ஆஸ்திரேலியாவில் தங்க வைத்திடும் காரியக்காரன்.

அத்தை மாமாவிற்கு சற்று ஓய்வு எடுத்தப்பின் வீட்டை சுற்றிக்காட்ட அழைத்து சென்றான். கீழே இரண்டு அறை, மேலே இரண்டு அறை, கொண்ட தனி வீடு. என்ன அறைகள் ஒவ்வொன்றும் வசதியாக அமைந்தது.

அதன் பின் ஹர்ஷா போனும் கையுமாக தனது வரவேற்பிற்கு அதற்குண்டான ஆட்களிடம் பேச ஆரம்பித்தான்.

செலவெல்லாம் ஹர்ஷா தான் பார்த்துக்கொண்டான். சென்னையில் நடந்த திருமண செலவு எல்லாம் அண்ணாமலை பார்த்துக்கொண்டார்.
அன்று ஹர்ஷாவிடம் பணம் வாங்க மறுத்துவிட்டார்.

அடுத்த நாள் நடக்கவிருக்கும் விழாவில், துஷாராவுக்கு, நான்சி வாங்கி வைத்த உடைகள், நகைகளை அண்ணாமலையிடமும் வள்ளியிடமும் பார்ப்பதற்கு காட்டினார்.

சில நேரம் தங்கள் இயலாமை கண்ணில் வந்து கவலை தந்துவிட தாமோதரனிடம் அண்ணாமலை  அதை கூறி வருந்தினார்.

” இது காதல் திருமணம் சம்பந்தி. வசதி குறைச்சலாகவோ, கூடுதலோ அமைவது எல்லாம் இந்த காதல் திருமணத்தில் பார்க்க முடியாது‌. ஏன் சிலர் காதல் கல்யாணம் செய்யுங்க என்று மனமுவந்து ஏற்கறாங்க?!
சமத்துவம் வளரும். ஏழை-பணக்காரன், அந்த சாதி-இந்த சாதி என்ற வரையறைகள் உடைக்கப்படணும்.

ஏன் இந்த திருமணத்தையே எடுத்துக்கோங்க. உன் நாடு என்‌நாடு, உன் பழக்க வழக்கம், என் பழக்க வழக்கம், சாதி மதம், மிடில்கிளாஸ்-ஹை கிளாஸ் என்ற கோட்பாட்டை உடைச்சிட்டு மனசுல காதல் நிரம்புது. காதல் சக்தி வாய்ந்தது அண்ணாமலை.

மனிதர்களின் மனமும் குணமும் வைரத்தை விட விலைமதிப்பானது. உண்மையில் உங்களோட குணம் தான், என் பையன் ஹர்ஷாவுக்கு ரொம்ப பிடிச்சிருக்காம்.

எனக்குமே என் தாய் நாட்டு பந்தம், அடுத்த தலைமுறைக்கு இல்லையேன்னு தவிச்சப்ப, குத்துவிளக்கு போல தமிழ்நாட்டு பொண்ணு மருமகளா கிடைச்சிட்டா.” என்று பெருமையாக உணர வைத்தார்.

மேலும் ‘நான்சியை மணந்தப்போது நானுமே இதெல்லாம் யோசித்திருக்கேன். இப்ப பணம், பகட்டு, ஆடம்பரம் என்றதை தாண்டி காதல், அன்பு, நேசம், இதுக்கு தான் முன்னுரிமையாக பார்க்கறோம்‌.” என்றார் தாமோதரன்.

பெரியவர்கள் ஒருபக்கம் உரையாட, ஹர்ஷாவோ துஷாராவை சத்தமில்லாமல் தனது அறைக்கு அழைத்து வந்தவன், முத்தங்களை வள்ளலாய் வாறி வழங்கிக் கொண்டிருந்தான்.

  நீண்ட நெடிய நேரத்தை முத்தங்களால் விழுங்கி, வையகத்தை மறந்து திளைத்தனர்.

  அழைப்பு மணியோசை கேட்டதும் இருவரும் விலகினார்கள்.

துஷாரா ஹர்ஷாவை பார்க்க தயங்க, அவனோ, அவளிடம் பேச வந்தவன், அலைப்பேசி அடிக்க அதை முதலில் எடுத்தான்.

கீழே தோட்டத்தில் அலங்காரம் செய்வதற்கான ஆட்கள் வந்திருப்பதாக தாமோதரன் அழைக்க, “ஷாரா… இப்ப கீழே போறேன். நாளைக்கு கண்டினியூ பண்ணலாம்” என்று கன்னத்தில் அவசர முத்தம் வைத்து ஓடினான்.

துஷாராவுக்காக முதலிரவை ஒரு வாரத்திற்கு தள்ளி நிறுத்தி காத்திருப்பவன், அந்த  நாளுக்காக காத்திருந்தான் ஹார்ஷா.

கீழே வந்து நான்சியுடன் கதையளக்க, வெளியே தோட்டத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்க, தனிதனியாக சேரும் பலூனும், மலர் பாதையாக அமைப்பது பற்றி பேசி முடித்திருந்தான்.

இரவில் கூட துஷாரா அன்னை மடியில் தலைசாய்த்து, தந்தை அவரது மடியில் மகள் காலை வைத்து பிடித்து விட்டார். அதெல்லாம் நான்சிக்கு மருமகள் செல்லமாக வளர்ந்து அன்பாய் பார்த்து கொள்ளும் சூழ்நிலைகளை எடுத்துக்காட்டியது.

அடுத்த நாள் வீடே பரபரப்பாக மாற, துஷாரா கண்ணை கசக்கி வரவும் தோட்டம் முழுக்க வெள்ளை சேரும், மேலே வண்ண பந்தல்கள், ரெட் கார்பெட், செயற்கை மலர்களால் அலங்கரிப்பு, செயற்கை நீர் ஊற்று, என்று அலங்கரித்திருந்தனர்.

  “எப்படி” என்று கேட்டு அவள் தோளில் அவன் தாடை பதித்து கேட்க, “ரொம்ப மிரட்சியா இருக்கு ஹர்ஷா.” என்றாள்.

  “மிரளாத… ஆஹ்.. நைட்டு கலர் லைட்ஸ் ஸ்டேஜ் இப்படி இருக்கும். நீ இப்பயிருந்தே ரெடியாகு போ” என்று அனுப்பினான்.
 
  நான்சி ஆடை அலங்காரம் செய்வதற்கும் ஆள் ஏற்பாடு செய்திருக்க அவரிடம் மருகளை ஒப்படைத்து தெரிந்தவரை தேடி வரவேற்க சென்றார்.

நேரங்கள் ஜெட் வேகத்தில் சென்றது.

  மாலையில் ஹர்ஷாவுக்கு வேஷ்டி கட்டிவிட்ட அண்ணாமலைக்கு, தற்போது கோர்ட் சூட் அணிவித்து பாக்கெட்டில் கர்ச்சீப்பை வித்தியாசமான முறையில் மடித்து வைத்து அழகு பார்த்தான் நாயகன்.

   வள்ளி மட்டும் பட்டு சேலையை தவிர்த்து பேன்ஸி சேரிஸ் உபயோகப்படுத்தினார்.

துஷாரா வெண்ணிறத்தில் வெட்டிங் கவுன் அணிந்து தலையில் கீரிடம் அணிந்திருந்தாள்.‌

தாலி அழகாக மற்றவர் பார்வைக்கு தெரியாத வகையில் அந்த உடைக்கு ஏற்றவாறு உள்ளே பதுக்கி முடித்து, அழகான சின்ன டைமண்ட் செட் நகைமட்டும் அணிந்து காட்சியளித்தாள்‌‌.

  சிவப்பு கம்பளத்தில் துஷாரா நடந்து வர, ஹர்ஷா அவள் கைப்பற்றி, அந்த நாட்டு மக்களில், அவனின் உற்றார் உறவினர், அண்டை அயலார்களுக்கு துஷாராவை தன்னில் பாதியாக ‘பெட்டர் ஆஃப்’ என்று அறிமுகப்படுத்தி விருந்து உபசரித்தான்.‌

   நான்சி தாமோதரன் அந்த விஷயத்தில் பொறுப்பை ஏற்றவராக மற்றவர்களை உபசரிக்க வள்ளி அண்ணாமலை மகளின் தேவை ஏதேனும் உள்ளதா என்று மட்டும் அடிக்கடி கவனித்து கொண்டார்கள்.

   ஹர்ஷாவும் கோர்ட்சூட் என்று துஷாரா அருகே நின்று தன்னவளை ரசித்து மற்றவரிடம் கைகுலுக்கி பேசி கட்டியணைத்தான்.

  துஷாராவுக்கு வருபவர் எல்லாம் ஆங்கிலத்தில் வாழ்த்தும் பேச்சும் கேட்டு தலைசுற்றியது. அவளுக்கு ஆங்கிலம் தெரியும்‌. ஆனால் இங்கே நுனிநாக்கில் பேசப்படுவதில் லேசாக தலை சுற்றலே வந்தது.

  தள்ளாடி ஹர்ஷா காலை மிதித்தாள்.

“ஏன் துஷாரா மறுபடியும் என் காலை மிதிக்கற” என்று வலியை பொறுத்துக்கொண்டு கேட்டான்.

  “சாரி..‌ சாரி ஹர்ஷா. எனக்கு இந்த ஹீல்ஸ் போட்டு பழக்கமேயில்லை. ஹில்ஸ் போடறப்ப எல்லாம் இப்படி ஸ்லிப் ஆகுது.” என்றுரைத்தாள்.

  “அப்ப… நீ உன் பிறந்த நாளுக்கும் ஹீல்ஸ் போட்டிருந்த தானே?” என்று கேட்க, “ஆமா பிறந்த நாள் என்றதாலும், கலை நிகழ்ச்சி என்றதாலும் ஹீல்ஸ் போட்டேன். அப்பறம் உன் காலை மிதிச்சதும் இனி ஹீல்ஸ் போடவே கூடாதுன்னு முடிவெடுத்தேன். இன்னிக்கு இந்த டிரஸுக்கு போட்டாக வேண்டியதா போச்சு” என்று கூறினாள்.
 
  “இட்ஸ் ஓகே துஷாரா. அதனால் தான் நீ என்னை மிதிச்ச. நான் உனக்கு கிடைச்சேன்” என்று பேச, “அன்னைக்கு மிதிச்சதுக்கும் சாரி.” என்றாள்.

அவனோ மோதிரம் மாற்றிய போது அவளுக்காக இதழ் முத்தம் மற்றவர்கள் அறிய கொடுக்காமல் தவிர்த்தவன், தற்போது நெற்றியில் முத்தமிட்டான். சட்டென்று கூச்சல்கள் வானளவு அதிர, மற்றவர் பார்க்க நெற்றியில் முத்தமிட்ட ஹர்ஷாவை கண்டு நாணி, என் ‘தென்றல் நீ தானே‘ என அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

அந்த ஊரில் அது இயல்பான ஒன்றாக பார்க்க, சந்தோஷமான தருணமாக அமைந்தது.

அன்றைய இரவே தன் துஷாராவை தன் மறுபதியாக உடலாலும் உள்ளத்தினாலும் சங்கமித்தான் ஹர்ஷா.

-சுபம்.
-பிரவீணா தங்கராஜ்.

    இந்த கதை ஒரு பக்கத்து நாட்டுல நடைப்பெற்ற கலைநிகழ்ச்சியில்(சர்ச்சை கூட ஆச்சு.) கலந்துக்கொண்டு நாயகன் தன் பாஸ்போர்ட் தொலைத்துவிட்டு, அங்கிருக்கும் நம் நாயகியோடு காதல் வயப்பட்டு, அவளை மணந்து தமிழகம் அழைத்து வருவதா எழுத நினைச்சேன்.‌

  என்னுடைய நாவலை திருட்டு தனமாக படிக்க pdf போட்டதும், சைட்ல பிளாக்ல படிக்காம அங்கே பிடிஎப் கேட்டதும் அந்த நாட்டு வாசகர் என்றது தெரிய வர, அந்நாட்டை சுற்றி கதை நகர்வதை மாற்றி விட்டேன். ஏன் நம்மூர்ல நடக்காத கலைநிகழ்ச்சியா? இங்க நேரு ஸ்டேடியம் பார்த்தா தெரியும் அதுவும் எவ்ளோ கூட்டத்தை கண்டு வந்ததுனு.
  சென்னை டூ ஆஸ்திரேலியாவா மாத்திட்டேன்.‌
  இங்க கூட இப்ப கூட நிறைய அந்த நாட்டு வாசகர் இருந்தும் கமுக்கமா படிக்க வருவாங்களே தவிர, மற்றபடி அவங்க நாட்டு ரைட்டருக்கு சப்போர்டா கருத்திடுவது போல நம்ம ரைட்டஸ்க்கு யாரும் சப்போர்ட் பண்ண மாட்டாங்க. இந்த குணம் அந்த நாட்டை பற்றி ‘என்னத்த எழுத’ என்ற நிலைக்கு தள்ளிடுச்சு. நல்ல அபிப்ராயம் போயிடுச்சு.

  ஆக இதுவும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுத முனைந்தது. பாதி உண்மை பாதி கற்பனை.  எப்படியும் என்ன எழுதினாலும் நம்ம நாட்டு ரைட்டர்ஸுக்கு இங்க வாசகர் ஆதரவு குறைவு.
  அதுக்காக எழுதாம இருக்க முடியுமா?
  நாளை முதல் ஐயங்காரு வீட்டு அழகே வரும்.

  எப்பவும் போல என்னுடை கதைகள் வாசித்து ஆதரவு தரும் வாசகர்களுக்கு மட்டும் மிக்க நன்றிகள். இந்த ஆதரவு மட்டும் போதும் என்ற மனநிலையில் வந்துட்டேன். சோ குமுதா ஹாப்பி அண்ணாச்சி.

15 thoughts on “தென்றல் நீ தானே-13 (முடிவுற்றது)”

    1. Super ending 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  1. #தென்றல்_நீ_தானே
    #பிரவீணா_தங்கராஜ்

    சுருங்கச்சொல்லிய
    சிறு காதல் கதை
    சாரலாய் காதலாய்
    சிறுகதை இது…..

    கலை நிகழ்ச்சியில்
    கண்டதும் காதலாக
    கடல் கடந்து வந்த
    காளையவன் ஹர்ஷா
    கண்களில் பதிந்த
    கன்னி இவள் துஷாரா

    பிறந்தநாளில்
    பெற்றோருடன்
    பார்க்க வந்த நிகழ்வில்
    பந்தம் ஒன்று உருவாக..

    காவல் துறையிலும்
    காதலி அப்பாவாகவும்
    கண்ணியமும்
    கனிவும் கொண்ட
    காவல்காரார் அண்ணாமலை

    வீட்டின் தலைவி
    வாழ்வை புரிந்து நல்
    வழிநடத்தி செல்லும்
    வள்ளி சிறந்த தாய்…

    கல்லூரியில் படிக்கும்
    கலகலப்புடன் வாய்ப் பேசினாலும்
    காதல் என்று வந்தபோது
    கவனமாகவும்,
    கல்யாண பேச்சிலும் நிதானமாகவும்
    கையாண்ட விதம் துஷாரா அருமை…

    இனம் மொழி மதம் மட்டும் அல்ல
    இவன் நாடு கடந்து வந்த
    இவர்களின் காதல்
    கைகூடிய காதல் கதை….

    நாம் ஒருவரை சந்தித்து
    பேசுவது என்பது
    நம் பூர்வ ஜென்ம பந்தம்….

    திடீர் நிகழ்வால்
    தன்னுடன் தங்க வைத்த விதியும்
    தன் வேலையை
    அழகாக செய்து விட்டது…

    பார்த்ததில் மனதில் பதிந்தாலும் பெற்றோர்களின் விருப்பத்திற்காக பாவை இவள் தள்ளி நிற்க

    காதலைச் சொல்லியும் தவிர்த்த
    காதலியை பார்த்து
    தவிக்கும் காதலன் பிரிந்து பறந்து செல்ல….

    பிரிந்த காதல் மறக்காமல் இருந்த நினைவுகள்
    மீண்டும் பார்க்கச் செய்தால்
    நினைவுகள் நிஜமாகும்….

    தென்றல் போல மனதை தினமும் காலை வேளை தீண்டிச் சென்றது எங்கள் உள்ளங்களில்…..

  2. Short and sweet story .
    Oru function la meet panni love spark start aagi appuram accident la avanga veetula thangi athu develop aagi atha express panni athuku positive response illa ma poi sondha nattuku yae poi again thirumbi varum pothu avan oda love um kedaichi athu kalyanathula yum mudinchi ippo husband and wife ah vum.aagita ga

    1. M. Sarathi Rio

      தென்றல் நீ தானே..!
      எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
      (அத்தியாயம் – 13)

      உண்மையிலேயே ஹர்ஷா ஒரு வித்தியாசமான கேரக்டர் தான். ஆஸ்திரேலியாவிலேயே பிறந்து வளர்ந்து இருந்தாலும், தமிழ் நாட்டுக்கு வந்தவுடனே அதோட கல்ச்சரை ஃபாலோ பண்ற மாதிரி அடக்கி வாசிச்சது ரொம்ப ரொம்பவே அழகா இருந்தது. அவனுக்கு எத்த மாதிரியே துஷாராவும் மேட் ஃபார் ஈச் அதர்ங்கிற மாதிரியே நடந்திக்கிட்டது இன்னும் அழகு.
      அதுலேயும் ரெண்டு வீட்டு பெத்தவங்களோட வளர்ப்பு அப்படிங்கிறதை கண்டிப்பா ஒத்திக்கிட்டே ஆகணும்.

      ஆனா ஒண்ணு தமிழ் நாட்டு தென்றல் தான் ஆஸ்திரேலியா போயிருக்குங்கிறச்ச ரொம்ப சந்தோஷமா இருக்கு. வழக்கம் போல கலக்கிட்டிங்க சிஸ்.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

  3. M. Sarathi Rio

    தென்றல் நீ தானே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 13 Final)

    உண்மையிலேயே ஹர்ஷா ஒரு வித்தியாசமான கேரக்டர் தான். ஆஸ்திரேலியாவிலேயே பிறந்து வளர்ந்து இருந்தாலும், தமிழ் நாட்டுக்கு வந்தவுடனே அதோட கல்ச்சரை ஃபாலோ பண்ற மாதிரி அடக்கி வாசிச்சது ரொம்ப ரொம்பவே அழகா இருந்தது. அவனுக்கு எத்த மாதிரியே துஷாராவும் மேட் ஃபார் ஈச் அதர்ங்கிற மாதிரியே நடந்திக்கிட்டது இன்னும் அழகு.
    அதுலேயும் ரெண்டு வீட்டு பெத்தவங்களோட வளர்ப்பு அப்படிங்கிறதை கண்டிப்பா ஒத்திக்கிட்டே ஆகணும்.

    ஆனா ஒண்ணு தமிழ் நாட்டு தென்றல் தான் ஆஸ்திரேலியா போயிருக்குங்கிறச்ச ரொம்ப சந்தோஷமா இருக்கு. வழக்கம் போல கலக்கிட்டிங்க சிஸ்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  4. Super ending 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  5. Dharshini

    Super sis very nice story 👍👌😍 birthday la meet panni kadaisila birthday gift ah avaney kedachachi semma pa 🥰 next story ku eagerly waiting sis 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *