அத்தியாயம்-3
நீண்ட நேரமாக அங்கும் இங்கும் பரந்து ஒளிவீசிய வண்ண விளக்குகள் அடிக்கடி நம் கதையின் நாயகன் நாயகியான ஹர்ஷா- துஷாரா முகத்திலும் வீசியது.
ஹர்ஷாவுக்கு பெரிதாக சினிமா நடிகையின் நடனத்தில் மனம் ஒன்றவில்லை. என்னயிருந்தாலும் ஆஸ்திரேலிய மனிதன் அல்லவா.?! நண்பனுக்காக வந்திருப்பவன், அதன் காரணம் இவ்வளவு கூட்டத்தை இப்ப தான் பார்க்கின்றான். ‘ஸப்ப்பா தமிழ்நாட்டு மக்களிடம் சினிமாக்காரர்களுக்கு தனி க்ரேஸ் இருக்கு’ என்று வியந்தான் ஹர்ஷவர்தன்.
அவன் தூரப்பார்வை வீசி, பின்னர் மெதுமெதுவாய் தன் வலதுப்பக்கமிருக்கும் பெண்ணை காண, கன்னத்தில் வலது கையை தாங்கி சுவாரசியமாக நிகழ்ச்சியை கண்டாள்.
இடது கையில் கர்ச்சீப் கெட்டியா பிடித்திருந்திருந்தாள்.
அந்த நேரம் ஹர்ஷாவின் மனதில் அவன் வலது கையால் பெண்ணவளின் இடது கையை பிணைத்து, அவன் நெஞ்சோடு கையை வைத்து ‘பெர்த்டே பேபிக்கு கோபமா ஐ அம் ரியலி சாரி’ என்று பேசுவது போல் நினைத்து பார்த்தான்.
திடீரென பலத்த கைதட்டல் கேட்டதும் சுதாரித்தான். ‘ஏன் இப்படி நினைச்சு பார்க்கறேன்’ என்று குழம்பினான்.
‘என்னவோ அவன் அவள் காலை மிதித்தது போல அல்லவா மன்னிப்பு கேட்டது’ நல்லவேளை நினைத்து பார்த்தான். ஏதோவொரு ஆர்வக்கோளாறில் கையை தீண்டவில்லை, இல்லையேல் கூட்டத்தில் ஒரு பெண்ணின் கையை தொட்டதாக மொத்தி எடுத்துயிருப்பார்கள்.
எண்ணங்கள் தறிக்கெட்டு போக அவளை தான் ரசித்து கொண்டிருந்தான்.
பிறந்த நாளென்று துஷாரா தன்னை அழுகுப்படுத்தி வந்தாலும், சாதாரணமாகவே திகட்டாத பேரழுகு கொண்டவளே.
துஷாராவோ வெள்ளித்திரை நடிகர் நடிகையான ‘ப்ரனித் விருஷா’ நடித்த படப்பாடல் ஒன்றில் வந்த ‘அனுதினமும் நீயென்னை ரசிக்க, முட்டி மோதி சண்டைகள் பிடிக்க, யாவும் நீயாக வேண்டும் வேண்டும்.. என் காதல் இயமானி நீயாக’ என்று கேட்டு ரசித்து கொண்டிருந்தவள் பார்வையும் பக்கத்திலிருந்தவனை காண, பாடலும் சூழலும் கேட்டு மீண்டும் முகம் திருப்பி கொண்டாள்.
‘என்னயிது என்னவோ காதல் வரிகள் கேட்கறப்ப இவன் பார்வை வேற, இடத்தை மாத்தி உட்காரலாமா? நளினியை எழுப்பலாம் என்றெண்ணினாள்.
பாவம் அவளுக்கும் இவனை பார்த்து ஏதாவது தோணலாம். நான் தப்பிச்சு அவளை மாட்டி விடற மாதிரி செல்ஃப்பிஷ்ஷா இருக்கும். அம்மாவை மாறி உட்கார சொல்லலாம். ஆனா இந்த அம்மா என்னவோ ஏதோனு பயந்து கேள்வி மேல கேள்வி கேட்பாங்க. இந்த பிறந்த நாளை அப்பறம் சோககீதமா மாத்திடுவாங்க.’ என்று அமைதியாக மேடையை கவனித்தாள்.
புது நடிகன் அம்ரிஷ் வந்து விருது பெற்று பேசவும் அதில் கவனம் சென்றது. சில நாட்களுக்கு முன் தான் முதல் மனைவியை விவாகரத்து கொடுத்துவிட்டு, மிருதுளா என்ற தோழியை மணந்தான். அதன் பின் சினிமாவில் கிடைத்த விருது இது. அவனை பார்த்தாளே ஒழிய அருகேயிருந்தவனை நினைக்கவில்லை.
அரை மணி நேரம் தாண்டி நடிகை விருஷா பிரபல தொழிலதிபர் ஒருவரை மணப்பதாகவும் இனி சினிமாவில் நடிப்பது இதுவே கடைசி படம்’ என்றும் கூற, அரங்கத்தில் இருந்த இளைஞர்கள் கத்தி கூச்சலிட்டனர்.
அந்த சத்தத்தை தாண்டி அருகே ஹர்ஷாவின் போன் ஆங்கில பாடலை இசைக்கவிட்டு ஒலித்தது. துஷாரா அவனை கவனித்தாள்.
‘Daddy’ என்றிருக்க அதனை எடுத்து குனிந்து, “சொல்லுங்க டேட்” என்று கேட்டான்.
துஷாரா ‘இந்த சத்தத்துல போன்ல பேசினா கேட்குமா?’ என்று நினைத்தாள்.
அவனோ நகைத்து “லேம்போஸ்ட் கணக்கா நல்லா உசந்து, பளிச்சுனு, மத்தவங்க கண்ணுக்கு வசீகரிக்கற மாதிரி இருக்கேன் டேட்” என்று கத்தினான். நிச்சயம் அவன் குரல் பக்கத்திலிருந்தவளுக்கு கேட்டிருக்கலாம். மற்றபடி இவனை கவனிக்க அங்கே யாருண்டு. நடிகை விருஷாவின் திருமண கிசுகிசு உண்மையாகிய வருத்தத்தில் நண்பன் ராம்கி இருந்தானே.
ஹர்ஷாவை நோட்டமிட்டது துஷாரா மட்டுமே. அது கூட அவள் விளித்த ‘லாம்போஸ்ட்’ என்ற வார்த்தையால் அவன் தந்தையோடு உரையாட அவனை முறைத்தாள்.
‘தெரியாம சொன்னதை வச்சி ஓட்டறான்’ என்று முனங்கியவள் அதன் பின் அந்த பக்கம் திரும்பவில்லை. ஹர்ஷாவுமே சத்தத்தில் தந்தையிடம் விரைவாக பேசி அணைத்தான்.
சற்று நேரம் கடந்திருக்க, அண்ணாமலை கூட்டத்தை நகர்த்தி கையில் கட்லெட் எடுத்து வந்தார் மகளுக்காக.
வரிசையாக மனைவி நளினி மகளென்று நீட்டியவர் ‘காலையில் பார்த்த தம்பியாச்சே’ என்று புன்னகைக்க, “வாவ்… மார்னிங் கேக் இப்ப கட்லெட் தேங்க்யூ சார்” என்று எடுத்துவிட்டான்.
அண்ணாமலை மகளை காண, அவளோ இடுப்பில் கை வைத்து “அப்ப்ப்பா” என்று முறைத்தாள்.
அதன் பின்னே ஹர்ஷாவோ சார் பொண்ணுக்கு பிறந்த நாள் இந்த பக்கத்துல இருக்கற பொண்ணுக்கு பெர்த்டேனு சொன்னாங்களே.’ என்று விழித்தான்.
“டேய் எனக்கு… வெளிநாட்டுல இருந்து வந்த உனக்கு மட்டும் எப்படிடா எல்லாம் கிடைக்குது” என்று ராம்கி மோப்பம் பிடித்து கேட்டதும், “சும்மாயிருடா” என்று நண்பனை அடக்கி, அண்ணாமலை பக்கம் திரும்பி, “அய்யோ அங்கிள்… நீங்க உங்க வீட்டுக்கு வாங்கிட்டு வந்ததை நான் தப்பா நினைச்சி எடுத்துட்டேன். ஐ அம் ரியலி சாரி. மார்னிங் நீங்களா தந்ததை வச்சி இப்பவும் ஆட்டோமெடிக்கா தப்பா புரிஞ்சு கட்லட்டை எடுத்துட்டேன்.” என்று மன்னிப்பு கேட்டு கட்லட்டை திருப்பி தந்தான்.
“அய்யோ தம்பி பரவாயில்லை வச்சிக்குங்க. நீங்க ஊருக்கு புதுசுன்னு பார்த்தாலே தெரியுது. வெளிநாட்டுக்காரரா வேற போயிட்டிங்க. தமிழரோட விருந்தோம்பல்னு நினைச்சுக்கோங்க.” என்று கூறி ராம்கிக்கும் தந்தார்.
“அப்பாடி எனக்கு கட்லட் வந்துடுச்சு.” என்று ஆனந்தப்பட்டான் ராம்கி.
ஹர்ஷாவோ “தேங்க்யூ அங்கிள். தப்பா எடுத்துக்கலையே எனக்கு அதுபோதும்” என்று கூறியவனின் பார்வை இரு நொடி துஷாராவை தழுவி மறைந்தது.
துஷாரா தந்தையும் அவனும் பேசுவதை கேட்டு அமைதியாக இருந்தாள்.
“சரி தம்பி கிளம்பறேன். அம்மாடி பொண்ணை பார்த்துக்கோ. துஷாரா ஏதாவது தேவைன்னா மெஸேஜ் பண்ணு.” என்று மனைவி மகளிடமும் கூறினார்.
அவளுமே பதிலுக்கு தலையாட்டி முடித்தாள். போலீஸ் சீருடை என்பதால் யாரும் அண்ணாமலையை நகர கூறி எந்த கருத்தும், கத்தலும் செய்யவில்லை. மேலும் துஷாராவின் பக்கம் இருந்தவன் இந்த குடும்பத்தில் ஒருத்தனாக தான் மற்றவர்களின் பார்வைக்கு பட்டான்.
துஷாரா தந்தை சென்றதும், ஹர்ஷாவை பார்த்து முடிக்க, “மேனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே” என்று வாழ்த்து கூறி கையை நீட்டினான் ஹர்ஷா.
“தேங்க்ஸ்” என்று துஷாராவும் கையை கொடுக்க அங்கே இருவர் கைகளும் இணைந்து குலுங்கியது.
“துஷாரா?” என்று கேள்வியாக அவள் பெயரை உச்சரித்து சரிதானா? என்பது போல கேட்டான்.
“ம்ம்.” என்று கூறினாள் அவளும்.
“ஐ அம் ஹர்ஷவர்தன். ஷார்ட்டா ஹர்ஷா” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“ஓ.” என்று கூறி சிறு சிரிப்பை உதிர்த்தாள்.
“உங்கப்பா ரொம்ப நல்ல கேரக்டர்.” என்று நாயகன் ஹர்ஷா புகழ, மேடையில் பார்வையை விட்டு விலகாமல் “ஆமா… அன்பானவர், அக்கறையானவர், என் நலனுக்காக வாழறவர்” என பெருமையாக கூறினாள் துஷாரா.
“கியூட்” என்று தன்னை மறந்து துஷாராவை ரசித்து கூறி முடித்தான் ஹர்ஷா.
துஷாரா, “ஆஹ்” என்று திரும்பவும், “கியூட்… வெரி நைஸ் பெர்ஸன்.. உங்க… உங்க அப்பாவை சொன்னேன்” என்று மழுப்பினான்.
ஹர்ஷாவின் பேச்சு மீண்டும் சிறு சிரிப்பை ஏற்படுத்த, மனதார மகிழ்ந்தாள்.
நடுநடுவே “இது என்ன பாட்டு?” ,
“எந்த படத்துக்கு அவார்ட்?” ,
“இந்த நடிகை யாரு?”,
“இந்த மியூசிக் யாரோடுது”,
” செம லிரிக்ஸ்” என்று இயல்பாய் பேசினான்.
தன்னிடம் பேச்சை நீட்டிக்கும் முயற்சியாக துஷாரா, ஹர்ஷாவை தவறாக எண்ணவில்லை. அவனுக்கு இதெல்லாம் நிஜமாகவே தெரியாது என்று இந்த இடைப்பட்ட நேரத்தில் அறிந்திருந்தாள்.
ராம்கி நடிகைகளின் குத்து பாட்டிற்கும், குலுக்கல் ஆட்டத்திற்கும் கண்ணை தானம் செய்திருந்தான். அது போல நளினியுமே ‘அய்யோ என் புது க்ரஷ் அம்ரிஷ் அவரோட செல்ஃபி எடுக்க முடியலை. அச்சோ என்ன கலரு என்ன கலரு. டிவோர்ஸ் ஆனதும் சிங்கிளா இருப்பாரு பார்த்தா மேரேஜ் பண்ணிட்டான்.” என்று புது நடிகனின் வருகையும் பேச்சிலும் ஆச்சரியப்படுவதிலேயே இருந்தாள் நளினி.
வள்ளி மட்டும் தன்னிருப்பை அடிக்கடி காட்டும் விதமாக, “துஷாரா ஜாமூன் டி, நளினி இந்தா” என்று கொண்டு வந்த இனிப்பை கொடுக்க, இம்முறை துஷாராவே ஹர்ஷாவை விட்டுவிட்டு எப்படி சாப்பிட என்பதாய் தவித்தாள். ஆனால் அவள் மனதை வதைக்காமல், வள்ளியே “தம்பி இனிப்பு சாப்பிடுவிங்களா?” என்று கொடுக்க வாங்கினான். “அந்த தம்பிக்கும் கொடுங்க” என்றதும் தலையாட்டி ராம்கியை இடித்து கையில் அவன் பங்கை கொடுத்தான்.
“டேய்… எல்.கே.ஜி பையனுக்கு எதுக்கொடுத்தாலும் சாப்பிட வாங்கிப்பானாம். அது மாதிரி யார் எதக்கொடுத்தாலும் வாங்கிக்கற. சாப்பாட்டுல மயக்க மருந்தை கொடுத்திருக்க போறாங்க.” என்றதும் துஷாரா முறைக்க, ராம்கியோ பேசுவதை பேசிவிட்டு,
ஹர்ஷாவின் முதுக்குக்கு பின் மறைந்து, ஜாமூனை வாயில் போட்டான்.
ஹர்ஷா மற்றும் துஷாரா வாழ்க்கை எந்தப்பக்கம் பயணப்படுவது என்ற கோட்பாட்டையே யோசிக்காமல் அந்தநேரம் கழிந்தது.
நேரத்தை பிடித்து வைக்க முடியுமா? கலைநிகழ்ச்சியில் ‘பரிசு கொடுப்பது, பிரபலங்கள் பேசுவது, ஒருவரை ஒருவர் புகழ்வது, பெருமைப்படுத்துவது என்று ஆடலும் பாடலும் நடந்தது. இடைப்பட்ட நேரத்தில் முதல்வர் வந்தது கூட தெரியவில்லை.
மின்னலாய் கர்ப்பிணியான பெண் முதல்வர் சுரபி வந்து போனதும் பரிசை தந்தெல்லாம் விறுவிறு நிமிடமாய் கரைந்தது.
எல்லாம் எழுந்து வீட்டுக்கு விடைப்பெற நகர்ந்தனர்.
வள்ளியோ, “துஷாரா கடைசியா போகலாம். கூட்டத்துல இடிப்பட வேண்டாம்” என்று கட்டளையிட, “சரிம்மா” என்று காத்திருக்க, வெளியே செல்லும் வேகமெடுத்த ஹர்ஷா கால்களும் தரையோடு வேறூன்றியது.
“வாடா… டைம் ஆகுது.” என்று ராம்கி இழுக்க, “எந்த கப்பலை பிடிக்க போற?” என்று கூறி “பொறுமையா போகலாம்” என்றான் ஹர்ஷா.
“எனக்கு ஒன்பது மணி டிரெயின் டா. உனக்கு பத்து மணிக்கு பிளைட்டுக்கு போகணும்.” என்றதும் நேரத்தை பார்த்து “போலாம் டா உனக்கு நேரமானா நீ போ.” என்று கூறி பொறுமையாக நகர்ந்தான்.
வெளியே வரவே இருபது நிமிடம் தாண்டியது.
“மச்சி எனக்கு நேரமாகுது. வாடா” என்று இழுக்க, இங்கேயே சாப்பிடலாம் டா” என்று வரமறுத்தவனாய் நின்றான் ஹர்ஷா.
ஷர்ஷாவிற்கு கூடுதலாக துஷாராவோடு இருக்கும் ஆசையில் இருந்தான்.
ராம்கியோ “டேய் எனக்கு நேரமாகுது. நான் டிரெயினை விட்டேன், அதோட ஊருக்கு போக முடியாது. உன்னை வழியனுப்பி ஊருக்கு நான் போக இருந்தேன். நீ என்னடான்னா இங்கேயே சுத்தற” என்று அர்த்தமாய் பார்த்தான்.
நண்பன் துஷாராவை விழுங்குவதை கண்டு கொண்டானே.
“சரிடா… வெள்ளைக்காரியா பார்த்து போரடிக்கும். ரசித்து முடித்து பிளைட்டை பிடிச்சி கிளம்பு. நான் கேப் புக் பண்ணிட்டேன். இன்னும் லேட் பண்ணினேன் அவ்ளோ தான். நீ இங்கிருந்தே மெட்ரோல போ” என்று ராம்கி புறப்பட, கட்டிப்பிடித்து வழியனுப்பினான்.
ராம்கி சென்றதும் தனக்கும் இங்கே வேலையில்லை. ஏர்ப்போர்ட் செல்ல வேண்டும். ஆனால் நேரமுள்ளதால் துஷாராவை ரசிக்க அங்கேயே உலாத்தினான். அந்த நேரம் எவனோவொருவன் இடித்து செல்ல, “சாரி சாரி பாஸ்” என்று ஓடினான் இடித்தவன்.
”லேம்போஸ்ட் மாதிரி இருந்தா இடிக்க தான் தோன்றும்.’ என்று துஷாரா மனதில் புலம்பினாள்.
துஷாரா தந்தை அண்ணாமலை கண்ணில்பட்டு, “என்ன தம்பி நீங்க கிளம்பலையா?” என்று கேட்டார்.
”ஆமா அங்கிள் கிளம்பணும்.” என்று பேண்ட் பேக்கேட்டில் கையை நுழைத்து விட்டவன் திகைத்து பதட்டமாய் தடவினான்.
“என்ன தம்பி?” என்று ஹர்ஷா முகம் மாற கேட்டார்.
“என் பர்ஸ் மிஸ்ஸாகிடுச்சு அங்கிள்.” என்று தன்னை இடித்து ஓடியவனை பார்த்தான் ஹர்ஷா.
அவனோ மறைந்து மறைந்து ஓட, “திருடிட்டு ஓடறான் அங்கிள்” என்று வேகமாய் ஓட முயல நொடியில் வந்த கார் மோதி லேசாக தூக்கியெறியபட்டான் ஹர்ஷா.
“தம்பி தம்பி” என்று அண்ணாமலை வந்ததும் கூடவே துஷாரா பதட்டமாய் வருவதையும் பார்த்தவன் லேசான குறுஞ்சிரிப்பை உதிர்த்து இமை சொருக மயங்கினான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Interesting
Interesting😍
Lamp post ah eppdi saachchi puttengaley da 🫢
தென்றல் நீ தானே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 3)
அட.. இந்த ஹர்ஷா வேற இன்னும் கொஞ்ச நேரத்துல ப்ளைட்டுக்கு கிளம்பிடுவானே, இனி இவனை எப்படி துஷாராவோட சேர்த்து வைக்கப்போறாங்கன்னு நினைச்சேன். நாட் பேட்.. நீங்க இப்படி டூவீஸ்ட் கொடுப்பிங்கன்னு எதிர்பார்க்கவேயில்லை. இனி என்ன, எல்லாமே ஜோரா நடந்திடும் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super sis nice epi 👍👌😍 appo lamppost ku love start ayiducha super 😘
பார்த்த நொடியில் முதல்
பத்தட்டமாகும் துடிப்பு
பாவை பக்கம்
பார்வை செல்ல
பரிதவிக்கும் மனது…
பிறந்தநாள் வாழ்த்தில்
பற்றிக் கொண்ட கைகள்
பிரியும் நேரம்
பதற்றம்…..
பிரிக்க முடியாத சூழல்
பாவையை பார்த்து
புன்னகைத்து கொண்டே ….
Oh Surabhi madama enga puguthitinga
Wow super super. Surabhi entry excellent sis. Intresting
Ohhhhcm amma surabhi yaaa… semma semma….
Acho azhagana lamp post ah ipadi idichitangalae
Acho Harsha ku ena aachu