Skip to content
Home » தென்றல் நீ தானே-4

தென்றல் நீ தானே-4

அத்தியாயம்-4

  ஹர்ஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அண்ணாமலை பொறுப்பானவராய் உடன் வந்தார்.

  அவரோடு வள்ளியும் துஷாராவும் கூடவே வந்தார்கள்.

  நளினி அவள் தந்தையோடு சென்றிருந்தாள்.
துஷாராவுக்கு ஹார்ஷா தூக்கியெறியப்பட்டு, இமை மூடி கண்கள் சொருகும் நேரம் தன்னை கண்டு வீசிய சின்ன சிரிப்பு. அது ஏன்? இதையே மனதில் தோன்ற முகம் வெளிறினாள்.

   அண்ணாமலை கூட, ”நீயும்  அம்மாவும் வீட்டுக்கு போங்கடா. பிறந்த நாள் அதுவுமா இங்க எதுக்கு” என்றார்.

   வள்ளியோ “என்னங்க நீங்க அந்த தம்பி எங்க கூட தான் உட்கார்ந்து இருந்தது. என்ன உரிமையா கட்லெட் எடுத்து சாப்பிட்டுச்சு. கண்ணு விழிக்கட்டுமுங்க. துஷாராவை மட்டும் வீட்ல தனியா எதுக்கு விடணும். இங்கேயே இருக்கட்டும். நாளைக்கு காலேஜ் லீவு தானே” என்றார்.

அதன் பின் அவர் ஏன் விரட்ட போகின்றார்.
  
  மூவரும் மருத்துவமனையில் வாசம்கொள்ள, ஹர்ஷாவின் போனை தேடினார்கள். ஷர்ஷா தூக்கியெறியப்பட்ட போது போனும் இல்லை. பர்ஸும் இல்லை. அவனது முதுகுப் பையில் உடைகளும் வாசனை திரவியமும் இருந்தது. அதனால் அவன் நண்பன் ராம்கிக்கு அழைக்கவும் முடியவில்லை.

  தன்னுடன் பணிப்புரியும் போலீஸ் அதிகாரியிடம் அண்ணாமலையே  ‘நான் இந்த தம்பியை பார்த்துக்கறேன்’ என்றார்.

ஹர்ஷாவை பற்றி மற்ற விவரம் தெரிய மெனக்கெட்டார்கள். அப்பொழுது தானே அவனது வீட்டில் நிலவரத்தை தெரிவிக்க முடியும்.

   ஆனால் அதற்கான வழி தான் கிடைக்கவில்லை. முதலில் சிகிச்சையை மட்டும் கவனித்தார்கள்.

   உயிருக்கு ஆபத்தில்லை என்றதால் அண்ணாமலைக்கும் துஷாரா வள்ளிக்குயென மூவருக்கும் நிம்மதியானது.

  கண் திறக்கும் வரை கூடவேயிருக்க முடிவெடுத்து ரிஷப்ஷனிலிருந்த சேரில் ஓய்வெடுத்தார்கள்.

   உண்மையில் நெருங்கிய உறவுக்கார பையனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைப்பெறுவதாக இருந்தது.

  “அந்த தம்பியோட கூடயிருந்த பையனை தொடர்பு கொள்ள முடியலையாங்க” என்று வள்ளி கேட்டதும் தண்ணீர் அருந்திய அண்ணாமலை, “தெரியலைமா தகவல் தர்ற மாதிரி எந்த விலாசமும் போன் நம்பரும் அந்த பையில் இல்லை, இந்த தம்பி கண் விழிச்சா தான்” என்றவர் வாட்டர் பாட்டிலை மூடினார்

”அதிகாலையில் கேக் கொடுத்தப்ப ‘தேங்க்யூ அங்கிள்’னு அந்த பையன் எடுத்து சாப்பிட்டான். வெளிநாட்டு பையன் இல்லையா… எனக்கு நம்ம துஷாரா பிறந்த நாள் அதுவுமா விபத்து நிகழவும், மனசு ஒரு மாதிரி இருக்கு” என்று கவலை தோய்ந்த குரலில் கூறினார்.

  துஷாராவுக்குமே இன்றைய ஆனந்தம் எல்லாம், இவனது விபத்தில் மொத்தமாய் மாற்றிவிட்டதே.
   இப்படியாக மற்றவர்களுக்கு பயத்தை தந்து, அதிகாலை நான்கு மணிக்கு மெதுவாக இமை திறந்தான் ஹர்ஷவர்தன்.

  பக்கத்தில் அண்ணாமலை தூங்கி வழிவதை கண்டு, “அ.அங்கிள்” என்று அழைக்க, கதவு திறந்து துஷாரா எட்டி பார்த்து நுழைந்தாள்.

  “அப்பா கொஞ்ச நேரம் வரை முழிச்சிட்டு இருந்தார். இப்ப தான் கண் அசந்தார்.” என்று கூற, நர்ஸும் அதற்குள் வந்து பரிசோதனை செய்தார்.

  “இப்ப பரவாயில்லையா?” என்று கேட்க, தன்னை சுற்றி ஒருநிமிடம் பார்த்தவன், “எல்லாம் நல்லா தான் இருக்கேன்னு நினைக்கறேன். எதுக்கும் நர்ஸ் தான் சொல்லணும்” என்று கூறவும், நர்ஸோ “டாக்டர் வந்து சொல்வார் சார்” என்று அவனை ஆராய்ந்து முடித்து புறப்பட்டார். ஓரளவு எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரிகின்றதே‌.

  “உங்க பெயர் ஹர்ஷா என்றதை தாண்டி உங்களை பற்றி டீடெயில் தெரியலைன்னு அப்பாவே கூடயிருக்கார்.
  உங்க அட்ரஸ் போன் நம்பர், அம்மா அப்பா, பெயரெல்லாம் சொல்லுங்க” என்று போனை எடுத்தாள்.

  “என் போன் மிஸ்ஸாகிடுச்சா?” என்று கேட்டான் ஹர்ஷா.
   “ம்ம்.. தூக்கி வீசப்பட்ட இடத்துலே எங்கயோ மிஸ் ஆகியிருக்கலாம் கண்ணுல அகப்படலை.” என்றாள் துஷாரா.

  உடனடியாக ”என் அப்பா அம்மா இங்க இல்லைங்க. ஆஸ்திரேலியால இருக்காங்க. இங்க எனக்குன்னு யாருமில்லை. ராம்கி என் பிரெண்ட் கூட வந்தானே. அவன் இந்நேரம் மதுரைக்கு போற இரயில் ஏறி போயிட்டுயிருப்பான்.
  நான் போன் எடுக்கலைன்னதும் நான் ஆஸ்திரேலியா போனதும் மெஸேஜ் பண்ணுவேன்னு காத்திருப்பான்‌.” என்றான்.

  “இப்ப இங்க சென்னையில் அப்ப யாருமில்லையா?” என்று கேட்க உதடு பிதுங்கினான் ஹர்ஷா.

  அண்ணாமலை பேச்சு சத்தத்தில் எழுந்ததும் மீண்டும் நலன் விசாரிப்பும், யாராது இருக்கின்றனரா என்று கேட்டதும் துஷாராவுக்கு கொடுத்த அதே பதிலை கொடுத்தான்.

  டாக்டர் வரவும் “கால் மட்டும் சின்னதா பிராக்சர் மத்தபடி ஒன்னுமில்லை ஹர்ஷா” என்றார்.

“நான் ஆஸ்திரேலியா போகணுமே. என் பாஸ்போர்ட், பர்ஸ் எல்லாம் எவனோ திருடிட்டான். நான் எப்படி போகறது” என்று கேட்டதும், “சிசிடிவில லோக்கல் திருடன்னு தெரிந்துடுச்சு தம்பி அவனை தேடிப்பிடிச்சி பாஸ்போர்ட் வாங்கிடலாம்.” என்றார் அண்ணாமலை.
 
  டாக்டரோ மினிமம் இரண்டு வாரமாவது நீங்க கண்டிப்பா பெட்ரெஸ்ட் எடுக்கணும்.” என்றதும் அண்ணாமலையோ “அதுக்குள்ள பாஸ்போர்ட் பர்ஸை திருடியவனை பிடிச்சிடலாம் தம்பி.” என்றார்.

  “நான் அப்ப அதுவரை இங்கேயே தங்கணுமா?” என்று கேட்டான்.

  “அது உங்க சௌகரியம்” என்று டாக்டரும் புறப்பட்டார்.‌

  ஹாஸ்பிடல் செலவு எல்லாம் அண்ணாமலை பார்க்க, “அங்கிள் இந்த நம்பருக்கு கால் பண்ணி விவரம் சொல்லணும். பணமும் தேவைப்படுது” என்று கேட்க, ‘என்னோடதுல சார்ஜ் இல்லாம ஆஃப் ஆகிடுச்சு தம்பி. துஷாரா தம்பிக்கு உதவும்மா நான் போய் டீ காபி வாங்கிட்டு வர்றேன்.” என்று அவருமே கேன்டீன் சென்றார்.

  துஷாரா அவளின் போனிலிருந்து ஹர்ஷா சொல்ல சொல்ல ராம்கி நம்பரை அழைத்து விட்டு ஹர்ஷாவிடம் நீட்டினாள்.

  ஹர்ஷா அதன் பின் தனக்கு நடந்தவையை உரைத்தான். தன் தந்தை தாயிடம் தெரிவித்து, அதோடு பணத்தை அனுப்ப கூறினான்.‌ துஷாராவிடம் அவளது பேங்க் எண்ணை வாங்கினான்.‌

  “இல்லை அப்பாவிடம் கேளுங்க” என்று மறுத்ததற்கு, “ஏங்க இங்க இருக்கற வரை செலவு ஆகும்ல இப்ப உங்க அக்கவுண்ட்ல வரட்டும். நீங்க பணமா மாத்தி தாங்க.” என்றதும் தலையாட்டினாள்.

  ராம்கியோ, “டேய்… இதென்னடா உனக்கும் அந்த பிறந்த நாள் பொண்ணுக்கும் ஒரு ‘வேவ்லென்த்.’
   இதெல்லாம் ஒரு உறவுக்கான அடையாளம் டா.” என்றான்.‌
  துஷாரா அருகேயிருக்க, “மச்சி நான் அப்பறம் பேசறேன்.” என்று துண்டிக்க பார்க்க, “நானும் தான் உன்னோட வந்தேன். ஏன் அந்த கலைநிகழ்ச்சில, எத்தனை பேர் வந்தாங்க. அவங்க எல்லாரிடமும் சிங் ஆகாம, உனக்கு அவங்க அப்பா கேக் தந்தார். அந்த பொண்ணு உன் காலை தான் மிதிச்சுது. அந்த பொண்ணோட அம்மா ஜாமூன் தந்தாங்க. இப்ப பாரு குடும்பமா கூடயிருக்காங்க.” என்று அடுக்கி கொண்டே சென்றான்.

  “டேய் நிறுத்தறியா. துஷாரா இங்க தான் இருக்கா” என்றதும் ராம்கி  துண்டித்து விட்டான்.

   துஷாராவோ போனை வாங்க கையை நீட்டினாள்.

  ஹர்ஷாவோ, “அவன் உலறிட்டான். சாரி… எனக்கு உலற முடியாத சூழல். ஆனா எனக்கும் இந்த தாட்ஸ் தோனாம இல்லை.” என்று போனை கொடுத்துவிட்டான்.

  துஷாரா பதிலுக்கு மௌனமாய் வெளியேறினாள்.

  அதன் பின் அவன் பேசியது தவறா சரியா என்று சிந்தித்தான்.
  ராம்கி பேசவும் ‘இல்லைங்க அவன் பேசியதுக்கு மன்னிப்பு கேட்கறேன்‌ நான் அப்படியெல்லாம் நினைக்கலை’ என்று மறுக்க தோன்றவில்லை‌.

  அண்ணாமலை அருகேயிருந்தால் எப்படி பேச்சு அமைந்திருக்குமோ, அவர் இருப்பை காட்டி இருமல் செய்தோ, தம்பி என்று பேசி பேச்சை தடையிட்டு இருக்க வாய்ப்புண்டு. துஷாரா அப்படி இல்லாமல் அந்த அமைதியான அறையில் பேச்சை கேட்டு ஸ்தம்பித்து நின்றாளே.

  அவள் தாய் தந்தையிடம் உரைப்பாளா? அப்படி நடந்தால் அவரவர் வழி பார்த்து செல்ல வேண்டும்.’ என்று தனக்கு தானே கூறிக்கொண்டான்.

  அப்படியில்லாமல் அவள் தந்தையிடம் சொல்லாமல் போனால்? ஹர்ஷாவுக்குள் புன்னகை பூத்தது.

  வள்ளியும் அண்ணாமலையும் கேண்டீனில் காபி பருகினார்கள்.

  “வேலைக்கு வேற போகணும். இந்த தம்பியை அப்படியே விட்டுட்டு போகவும் மனசில்லை. நீ கூடயிருக்கியா வள்ளி.” என்றார்.

  “விளையாடாதிங்க வீட்ல போட்டது போட்டபடி இருக்கு. யாரையாவது பார்த்துக்க சொல்லிட்டு கிளம்பலாம். கண் திறக்கவும் கிளம்பலாமனு இருந்தேன்” என்றார்.

  “யாரைன்னு பக்கத்துல இருக்க சொல்ல?” என்றவருக்கு, “இன்னிக்கு துஷாராவுக்கு காலேஜ் லீவுல?” என்று யோசித்தார்.

“வயசு பையனா இருக்கான். அவளை எல்லாம் கூட ஒத்தாசைக்கு இருக்க வைக்க வேண்டாம். ஏற்கனவே அந்த தம்பி காலை இருட்டுல மிதிச்சுட்டா. சாரி கேட்க சொன்னா அழுத்தமா கொட்டுகாளி மாதிரி நின்றா. அவளை எல்லாம் துணைக்கு வைச்சா ஒழுங்கா நடந்துப்பாளா?” என்று எடுத்த எடுப்பிலேயே முட்டுக்கட்டை போட்டார்.

     “என்ன பேசற வள்ளி. உதவி தேவைப்படுற மனுஷாளுக்கு உதவாம நிற்பாளா. நான் சொன்னா என்‌ பொண்ணு கேட்பா.” என்று இரண்டு காபி வாங்கிவிட்டு ஹர்ஷா இருந்த சிகிச்சை அறைக்கு வந்தார்.

   அறைக்கு வெளியே துஷாரா துப்பட்டாவின் நுனியை சுண்டுவிரலால் சுருட்டினாள்.
   “துஷாரா காபி” என்று கொடுக்க வாங்கி பருகினாள்.
  அண்ணாமலை ஹர்ஷாவுக்கு காபி தர, “தேங்க்ஸ் அங்கிள்… அங்கிள்… உங்க பொண்ணு நம்பர்ல அப்பா பணத்தை போட்டுயிருக்கார் இப்ப என்னிடம் கார்டு இல்லை. அதனால அவங்களே பணம் எடுத்து கொடுக்கட்டும். அப்பறம் ஏதாவது உதவின்னா அவங்க நம்பர் தான் ராம்கியிடமும், அப்பா அம்மாவிடமும் தந்திருக்கேன். இப்ப பாஸ்போர்ட் மிஸ்ஸிங் என்று புகார் தர நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரணுமா அங்கிள்.” என்று கேட்டான் ஹர்ஷா.

   “ஆமா தம்பி. ஆனா இந்த நிலைமையில் நீங்க வரமுடியுமானு தெரியலை. நான் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு ஸ்டேஷனுக்கு போய் விவரம் எழுதி இங்க வர்றேன். உங்க கையெழுத்து வாங்கிக்கறேன். அதுவரை துஷாரா இங்க இருப்பா. இன்னிக்கு அவளுக்கு காலேஜ் லீவு. வள்ளி வீட்ல சமைச்சி எடுத்துட்டு வந்துடுவா.

  சிசிடிவில உங்க பர்ஸை திருடியவனை பார்த்தேன். அப்படியே விசாரணை செய்து தேடறேன். புளியந்தோப்பு குணா தான். அவன் கிடைச்சா உங்க பர்ஸ் பாஸ்போர்ட் எல்லாம் கிடைக்கும்.” என்றார்.

  “ஓகே.. ஓகே அங்கிள்” என்றான் குதூகலமாக.

  அவன்‌ மகிழ்ச்சி துஷாரா அறியாததா?! தந்தையிடம் எதுவும் சொல்லாமல் இருப்பதை அவன் அறிந்து குதூகலாமாக முகம் மாறுவதை.

“சரிங்க தம்பி ரெஸ்ட் எடுங்க பிரேக்பாஸ்ட் துஷாரா இங்க வாங்கி தந்துடுவா. அம்மாடி நீயும் இங்கயே சாப்பிட்டுடு” என்று புறப்பட, வள்ளியும் ‘வந்துடறேன் தம்பி” என்று கணவர் கூடவே சென்றார்.

 ஹர்ஷா “தேங்க்யூ.” என்றான் அழுத்தமாய். அதில் அத்தனை ஆனந்தம் கண்டு, “அப்பா உங்களை ரெஸ்ட் எடுக்க சொன்னார்.” என்று வெளியே செல்ல போனவளை, “நாம பேசிட்டு இருப்போமே.” என்று தூண்டில் போட்டான்.

   துஷாரா மெதுமெதுவாய் திரும்யி  ”என்னை பார்த்தா. எப்படி தெரியுது. உங்க பிரெண்ட் கண்ணு மண்ணு தெரியாம பேசியிருக்கார்’ இதுல நான் வேற துணைக்கு. உங்க எண்ணம் போற போக்கு எங்கப்பாவுக்கு தெரிந்தா, ஏன்டா பிள்ளையை இங்க தனியா விட்டுட்டு வந்தோம்னு கவலைப்படுவார். அதோட நல்ல நாள் அதுவுமா, எங்க அப்பா, உங்களுக்கு உதவலை என்றால் அதுக்கும் பீல் பண்ணுவார். ஏதோ நாலு நல்ல மனுஷங்களுக்கு உதவணுமென்ற நினைப்பு அப்பறம் துளியும் இல்லாமலே போயிடும். அதனால் இருக்கறவரை வாயை மூடி பேசுங்க” என்றவள் நகரப்போனாள்.

“இங்க தான் நீளமா உட்கார தனி சேரு இருக்கே. வெளியே தான் போகணுமா? அநியாயம் பண்ணாதீங்க. காலை மிதிச்சதுக்கு சாரியும் கேட்கலை.” என்று வாடியபடி கூறினான் ஹர்ஷா.

_தொடரும்
-பிரவீணா தங்கராஜ்
 

10 thoughts on “தென்றல் நீ தானே-4”

  1. Dharshini

    Super sis semma epi 👌😍❤️ ennumada kaala midhichadha sollitu eruka ava badhra kaaliya maara pora😂 unaku un vaaila dhan pa sani🧐 aana evanuku nu amaiyidhu paaru😂 parpom love set agudha ella appa kaiyila udhai kedaikudha nu😘

  2. உதவி செய்ய வந்தோம்
    உபத்திரம் செய்துவிடாதே
    உரிமையாக பேசுபவனிடம்
    உதறி பேசும் துஷா….

    கோபமாக பேசினாலும்
    கண்முன் இருந்தால் போதும்
    கண்ணில் சந்தோஷம் பொங்க….

    அவள் விலகிச் செல்ல
    அவளை பக்கம் வைத்து பார்க்க
    அவளிடம் சமரசம் போல சரசமாக
    மன்னிப்பு யாசிக்கிறான்….
    அவன் கவலை
    அவனுக்கு

  3. M. Sarathi Rio

    தென்றல் நீ தானே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 4)

    அடப்பாவி..! அவ காலை மிதிச்சதுக்கே சாரி கேட்கலை, சராி கேட்கலைன்னு புலம்புறானே, இப்ப எவனோ ஒரு கார்காரன் காலையே உடைச்சிருக்கானே… அதுக்கு என்ன பண்ணுவானாம்…? ஒருவேளை, அவன் கிட்டேயும் போய் சாரி கேட்க சொல்லுவானா என்ன..?
    அதுக்கு அந்த கார்காரன் தமிழ்லயே எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்புத்தான்னு சொல்லிட்டா… அப்ப என்ன பண்ணுவானாம்..? ஆனாலும், ரொம்பத்தான் அட்வான்டேஜ் எடுத்துக்கிறான் இந்த ஹர்ஷா.
    இடத்தை கொடுத்தா, மனசுல இடம் கொடுன்னு கேட்டிடிட்டிருக்கான், இவனெல்லாம் என்ன செஞ்சா தகும்..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  4. Dushara ippo unna ellam kaalu mattum mithichi iruku ah koodathu vai ah la mithichi irukanum nu nenachi irupa ah already kattu potu iruku ah kaal fracture aval ah tension panni vera athuvum puthu fracture vangidatha

  5. நல்லபடியா ஊரு போயி சேர வேண்டாமா தம்பி.. போலீஸ் கார் பொண்ணு…பாத்துக்கோ 😝😝😝😝

  6. Harsha🥰🥰🥰 super po. ooruku poga irundha unna accident aaga vachu hospital la Ava kooda iruka vachu Aduthu ava v2layum iruka vaika paakranga nama praveena akka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *