Skip to content
Home » மகாலட்சுமி 76

மகாலட்சுமி 76

மகாவின் தோளில் கை வைத்தவுடன் மகா மகிழை திரும்பி முறைத்து பார்த்தால் மகிழ் மனதிற்குள் இந்த முறைப்புக்கு  ஒன்றும் குறைச்சல் இல்லை என்று எண்ணினான் என்ன உங்கள் பிரச்சனை என்று கத்தினால்…

கொஞ்சம் மெதுவா பேசு இப்போ டைம் என்னன்னு தெரியுமா என்று கேட்டான் அது கூட தெரியாமலா இங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்றால் இந்த நக்கலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்று முனகினான் மகிழ் நீங்கள் முணகியது  எனக்கு கேட்கிறது என்றால் கேட்கும் அளவிற்கு தான் முனங்கவே செய்தோம் என்றான்  இப்போது உங்களிடம் விவாதம் செய்ய நான் விரும்பவில்லை எதற்காக கூப்பிட்டீர்கள் அதை மட்டும் சொல்லுங்கள் என்றால்…

இப்பொழுது தூங்காமல் எதற்கு இப்படி வானத்தை வெறுக்க பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டான் நான் ஏதோ செய்து கொண்டு போகிறேன் உங்களுக்கு என்ன வந்தது உங்களுடைய வேலை என்னவோ அதை பார்த்துக் கொண்டு போக வேண்டியதுதானே நேரமாகிறது என்று தெரிகிறது தானே போய் படுத்து தூங்க வேண்டியது தானே காலை சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டும் அல்லவா என்று கத்தினால்….

இந்த நேரத்தில் எதற்கு இப்பொழுது எப்படி கத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டான் எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது அதனால் கத்திக் கொண்டிருக்கிறேன் உங்களுக்கு என்ன வந்தது  என்று கத்தினாள் இப்படியே கத்தி கொண்டு இருந்தால் இரண்டு அடித்தேன் பாரு பதிலுக்கு பதில் பேசாமல் போய் தூங்கு டி என்றான் மகா மகிழை முறைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றாள்…

அவள் வீட்டிற்குள் சென்றவுடன் மகிழும் வீட்டிற்குள் வந்து கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வந்து வரவேற்பு அறையில் உட்கார்ந்தான் மகா அமைதியாக வரவேற்பறையில் உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு உனக்கு என்ன பிரச்சனை தூங்காமல் உட்கார்ந்து இருக்கிறாய் என்று கேட்டான் எனக்கு எதுவும் பிரச்சனை இல்லை போதுமா போய் நீங்க தூங்குங்க உங்களுக்கு உங்க பிரச்சனை அதை போய் பாருங்க என்று கத்தினாள் ..

வந்து தூங்கி தொலைடி நீயும் தூங்காம மனுஷனையும் தூங்க விடமா கத்திகிட்டு அடுத்தவங்க தூக்கத்தை கெடுத்துட்டு இருக்க என்றான் நான் தான் சாரோட தூக்கத்தை கெடுத்தேனா நீங்க போய் உங்க ரூம்ல தூங்குங்க சாமி நான் உங்க தூக்கத்தை கெடுக்க மாட்டேன் நான் இன்னொரு அறையில் பபோய் படுத்துக் கொள்கிறேன் என்றால் மகா அவ்வாறு சொன்னவுடன் மகிழ் அவளை அடிக்க கை ஓங்கிக் கொண்டு வந்தான்….


மகிழ் தன்னை அடித்த கை ஓங்கியவுடன் மகா  கண்மூடினாள் ஐந்து நிமிடமாகியும் தன் மேல் அடிக்க கைப்படவில்லை என்றவுடன் லேசாக ஒற்றைக் கண்ணை திறந்து பார்த்தால் மகிழ் கைகட்டிக்கொண்டு நின்று அவளை பார்த்துக் கொண்டு இருந்தான் அவனது உதட்டில் லேசாக சிரிப்பும் இருந்தது தனது மகிழ் மாமாவை ரொம்ப நாட்களுக்குப் பிறகு இப்படி பார்ப்பதால் அவளுக்கு உள்ளம் குளிர்ந்தது ஆனால் லேசாக வலிக்க செய்தது ….


எப்பொழுதும் தனக்கு திருவிழா என்றால் துணி எடுத்து கொடுக்கும் தனது மாமா இப்பொழுது எடுத்துக் கொடுக்காமல் எழில் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தவுடன் அவளுக்கு வருத்தமாக இருந்தது அதை வாய் விட்டும் கேட்கவும் செய்தால் எழில் துணி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறான் ஏன் இப்பொழுது உனக்கு அதில் என்ன பிரச்சனை வீட்டில் உள்ள அனைவருக்கும் அவன் தான் இந்த வருடம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான் …

நான் வீட்டுக்குள் வரும்போதுதான் அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தான் நானும் பார்த்தேன் அதனால் என்ன என்றான் அவன் யாருக்கு வேண்டுமானாலும் எடுத்து தரட்டும் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை எனக்கு கணவனாக நீங்கள் தானே எடுத்து தர வேண்டும் என்றால் ஏன் அவன் உன்னுடைய நண்பன் தானே அவன் எடுத்துக் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லி விடுவாயா? இனி வேணி வீட்டில் உள்ள அனைவருக்குமே அவன் தான் எடுத்துக் கொடுத்தான் என்றான்…


அவன் எடுத்துக் கொடுத்ததை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை நீங்கள் ஏன் எடுத்து தரவில்லை என்று கேட்கிறேன் எனக்கு எங்கே துணி என்றால் மகிழ் மகாவை பார்த்து முறைத்து விட்டு லேசாக முனகினான் என்ன இருந்தாலும் உன் தங்கச்சிக்கு இருக்க சாமர்த்தியம் உனக்கு பத்தாது என்று விட்டு அமைதியாக அறைக்குள் சென்றான் அவன் முனகியதை காதில் கேட்டவுடன் ஆமாம் அவளுக்கு இருக்க சாமர்த்தியம் எனக்கு பத்தாது தான் அவளைப் போல் எனக்கு கத்தி ஆர்ப்பாட்டம் செய்து எனக்கு இதுதான் வேண்டும் என்று எனக்கு கேட்க தெரியவில்லை தான் போதுமா என்று கத்தினாள் …

மகிழுக்கு சிரிப்புதான் வந்தது அந்த பழக்கம் இருந்திருந்தால் நீ ஏன் டி என்னை வேண்டாம் என்று சொல்ல போகிறாய் என்று மனதில் எண்ணினான் அவன் சிரித்தவுடன் மகா மகிழைப் பார்த்து முறைத்துவிட்டு அவளது அறைக்குச் சென்று படுத்துக் கொண்டால் அவள் படுத்தவுடன் உறங்கியும் விட்டால் மகிழ் அவளையே பார்த்தான் அவனுக்கும் அசதியில் தூக்கம் வந்துவிட்டது தூங்கிவிட்டான் ….

காலை 3 மணி போல் மகிழ் எழுந்தான் அவன் எழுந்திருக்கும் பொழுது மகா எழுந்து இருந்தால் வீட்டை சுத்தம் செய்துவிட்டு டீ போட்டுக் கொண்டிருந்தால் மகிழ்  குளித்துவிட்டு வந்தான் அவன் வந்தவுடன் அவனது அருகில் டீ எடுத்துக் கொண்டு வந்து வைத்தால் டீயை வைத்துவிட்டு அமைதியாக மகிழையே பார்த்துக் கொண்டிருந்தாள் என்னை எதற்கு பார்த்துக் கொண்டிருக்கிறாய் வேற எதுவும் வேலை இல்லையா அதை போய் பாரு எனக்கு நேரமாகிறது ….


காலையிலேயே ஏதாச்சு பிரச்சனை செய்து கொண்டிருக்காதே என்றான் மகா மகிழை முறைத்துவிட்டு நான்தான் பிரச்சனை செய்கிறேன் இல்ல என்று கேட்டுவிட்டு அமைதியாக சமையல் அறைக்கு சென்று விட்டாள் மகாக்கு அழுகையாக வந்தது அதுவும் காலையிலே தான் பிரச்சனை செய்வதாக தன்னுடைய மாமா சொல்வது அவளுக்கு வருத்தம் அளித்தது. தான் தன்னுடைய உரிமையை கேட்பது இவனுக்கு பிரச்சனையாக தெரிகிறதா என்றும் எண்ணினால் ….




இனி நான் எனக்கு துணி எடுத்து தா என்று கணவன் என்ற முறையில் தனது மகிழ் மாமாவுடன் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது என்று எண்ணி புலம்பவே செய்தல் மகிழ் சமையலறைக்கு வரும் பொழுது தான் அவள் புலம்பி கொண்டிருந்தால் இந்த புலம்பலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை நேரடியாக நின்று எனக்கு இதுதான் வேண்டும் என்று கேட்க தெரியவில்லை வாய் மட்டும் இருக்கிறது என்று சொன்னான் …

ஆமாம் எனக்கு கேட்கத் தெரியவில்லை என்றால் இப்பொழுது அதற்கு என்ன பிரச்சனை என்று கத்திக்கொண்டே திரும்பினால் அவள் திரும்பி உடன் அவளது கையில் மகிழ் ஒரு கவரை வைத்தான் அதை திறந்து பார்த்துவிட்டு இதை நேற்று கொடுப்பதற்கு என்ன என்று கத்தினால் மகிழ் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தான் மகிழுக்கு இப்போது அவளது அணைப்பு தேவைப்பட்டது…

அதுவும் காலை வேளையில் அவளை இப்படி பார்ப்பதற்கு மகிழுக்கு என்னென்னவோ செய்தது ஆனால் அவள் அன்று பேசிய வார்த்தையால் அவனால் அவளிடம் நெருங்கவும் முடியவில்லை அப்படியே அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் தன்னுடைய மகிழ் மாமா தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை மகா உணர்ந்து விட்டு அவனது உதட்டோடு உதடு வைத்து முத்தம் வைத்தால்….

ஒரு சில நொடி தான் இருக்கும்  மகிழ் வேகமாக அவளை தள்ளி விட்டான் மகாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது நான் பேசிய வார்த்தை உன்னை மொத்தமாக கொல்கிறதா என்னை உனக்கு பிடிக்கவில்லையா நான் உன்னை விட்டு சென்று விட டா என்று கேட்டால் அழுது கொண்டே கேட்டால் வேகமாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் அழுத்தமாக கேட்டால் மகிழுக்கு வலித்தது அவளை தனது நெஞ்சில் சாய்த்துக் கொண்டு லூசு மாதிரி நீயே எதையாவது நினைத்துக் கொண்டு பேசாதே …

உன்னையும் வருத்திக்கொண்டு என்னையும் வருதாதே அவ்வளவுதான் சொல்வேன் என்று விட்டு அவளை விட்டு விலகினான் மகிழ் மகாவை விட்டு விலகி  நிற்பதற்கும் எழில் அவர்கள் வீட்டிற்குள் வருவதற்கும் சரியாக இருந்தது வரும் பொழுதே மகா மகா என்று சொல்லிக் கொண்டே தான் வந்தான் பிறகு மகிழ் லேசாக ஒதுங்கி நின்று மகாவின் புடவையை சரி செய்து விட்டான் …

மகிழ் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தான் மகாவும் கையில் மகிழ் கொடுத்து துணியோடு வெளியே வந்தால் மகா கையில் இருக்கும் துணியை எழில் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் சரி மகா கிளம்பிட்டாயா  போலாமா என்று கேட்டான்  நீ எங்கடா வர அவளையும் கூப்பிடுகிறாய் என்று கேட்டான் …

எங்கே வருகிறாய் என்றால் என்ன அர்த்தம் இன்று தானே திருவிழா அதற்குதான் என்றான் அதற்கு நீங்கள் இருவரும் இப்பொழுது எதற்கு வர வேண்டும் உன்னுடன் துணைக்கு தான் என்றான் நான் என்ன சின்ன பிள்ளையாக என்னுடன் துணைக்கு என்று கேட்டான் இல்லடா நான் ஏதாவது வேலை இருக்கும் இல்ல செய்வதற்கு என்றான் அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் ஊரிலும் நிறைய பேர் இருக்கிறார்கள்…


நீ வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆறு மணிக்கு மேல் வந்தால் போதும் என்று விட்டு மகாவையும் திரும்பிப் பார்த்து அனைவரையும் அழைத்துக் கொண்டு வா என்று சொல்லிவிட்டு கண் மூடி கண் திறந்து விட்டு அவனது அறைக்குள் சென்று மீண்டும் குளித்து விட்டு எழில் எடுத்துக் கொடுத்த உடையை அணிந்து கொண்டு வந்தான் அவன் வெளியில் வரும் பொழுது அவனது கையில் ஒரு துணியை வைத்தால் மகா….

நான் இதை மாலை கட்டிக் கொள்கிறேன் என்று மட்டும் மகாவிடம் சொல்லிவிட்டு எழில் கொடுத்த துணியை போட்டுக் கொண்டு கீழே இறங்கி விட்டான் என்ன டி அவன்  ஏற்கனவே குளித்துவிட்டு டிரஸ் போட்டிருந்தது போல் இருந்தது ஆனால் திரும்பவும் சென்று குளித்துவிட்டு டிரஸ் மாற்றிக் கொண்டு வருகிறான் என்று கேட்டான் ஒன்றுமில்லை நீ போ அதான்  காலையில் வந்தால் போதும் என்று சொல்லிவிட்டாரே நீ போய் அனைவரையும் எழுப்பி குளிக்க கிளம்ப சொல் என்று அவனை அனுப்பி வைத்தாள் …

தனது தோழி தன்னை துரத்தாது குறையாக அனுப்பி வைப்பதில் ஒரே குறியாக இருப்பதை உணர்ந்து விட்டு அவர்கள் இருவருக்குள் ஏதோ நடந்திருக்கிறது என்று எண்ணி விட்டு சரி என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாக கீழே சென்றான் இரண்டு அடி படிக்கட்டில் வைத்திருப்பான் மேலே வந்து நீ நான் எடுத்துக் கொடுத்த புடவையை கட்ட வேண்டும் என்று எந்த அவசியமில்லை உனது கணவன் எடுத்துக் கொடுத்த புடவையைக் கட்டிக் கொள் என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு அவளது நெற்றியிலும் முத்தமிட்டு கீழே இறங்கினான் ….

மகிழ் சொன்னது போல் எழில் வீட்டில் உள்ள அனைவரையும் காலை 6:00 மணி போல் கிளம்பி ரெடியாக அழைத்துக் கொண்டு வெளியே வருவதற்காக வரவேற்பரையில் அனைவரையும் நிற்க வைத்தான் அனைவரும் வந்துவிட்டார்கள் காவேரி தான் கத்தினார் இன்னும் என்னடா என்று கேட்டார் இன்னும் மகா மேலே இருந்து கீழே வராமல் இருந்தால் அதனால் தான் காவேரி கத்தினார்…

எழில் மூன்று மணிக்கு கீழே இறங்கி வந்து தனது அத்தையிடம் சொல்லும்போது சொல்லிவிட்டான் மகா என்னுடன் தான் வருவாள் அவளை வரவேண்டாம் என்று யாரும் சொல்லக்கூடாது அதேபோல அவள் வந்தால் நான் வரமாட்டேன் என்றும் யாரும் சொல்லக்கூடாது அவள் உங்களுடன் வர மாட்டாள் என்னுடன் தனியாக கூட அழைத்துக் கொண்டு வந்து கொள்கிறேன் ஆனால் அனைவரும் ஒன்றாக தான் போக வேண்டும் இல்லை என்றால் நான் இந்த திருவிழாவிற்கு வரமாட்டேன் என்று ஒரே வார்த்தையாக சொல்லி விட்டான் ….



அதனால் தான் இப்பொழுது மகா என்னும் கீழே இறங்கி வரவில்லை என்று காவேரி கத்தினார் காவேரி கத்தி முடிப்பதற்கும் மகா மொட்டை மாடியில் இருந்து படி இறங்கி வருவதற்கும் சரியாக இருந்தது நிலா தான் மாமா அக்கா வந்துவிட்டாள் என்று கத்தினாள் வீட்டில் உள்ள அனைவரும் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வரும் மகாவையே பார்த்துக்கொண்டிருந்தார்கள் மகா அனைவரையும் பார்த்துவிட்டு எழிலை பார்த்துக் கொண்டே கீழே இறங்கி வந்தால் …


அனைவரின் கண்ணும் மகாவின் மீது இருந்தது மகா தனது நண்பன் எழில் கொடுத்த புடவையை கட்டியிருக்கிறாளா இல்லை தனது காதல் கணவன் எடுத்துக் கொடுத்த புடவையை கட்டி இருக்கிறாளா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 76”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *