அத்தியாயம்-6
தற்காலிகமாக ஃபோல்டிங் கட்டில் ஒன்றை வாங்கினார்கள்.
அதில் மெத்தையும் சேர்த்து, ஹர்ஷா உறங்க தயார்படுத்தினாள் துஷாரா.
அவ்வறையில் ஒரு டேபிள்மெட்டும் வைத்திருந்தார் அண்ணாமலை. ஹர்ஷா சாப்பிட கொள்ள சௌகரியமாக இருக்குமென்று.
வள்ளியோ வீட்டை தூய்மையாக வைத்தார். ஹாஸ்பிடல் செலவெல்லாம் ஹர்ஷாவின் தந்தை தாமோதரன் துஷாராவின் அக்கவுண்டில் போட்டார்.
அவளும் ஹர்ஷாவிடம் அவன் தந்தை போட்ட பணத்தை பற்றி கூறினாள்.
“இப்ப எதுக்கு அக்கவுண்ட்ஸ் காட்டணும். நான் கேட்கலையே” என்றான். யாருமில்லையென்ற கோணத்தில் பேசினான்.
வள்ளியோ ”பணம் விஷயத்துல நல்ல மனிதர்களோடு நட்பே சிதைந்துடுது தம்பி. அதனால அவ சொன்னா கேட்டுக்கோங்க.” என்று கூறி சென்றார்.
அவர் தலை மறைந்ததும், “இந்த ரூம்ல பேசினா எங்க ஹால் வரை நல்லாவே கேட்கும். உங்க இஷ்டத்துக்கு ஏதாவது பேசிடாதிங்க” என்றாள்.
“எனக்கு ஒரு போன் வேண்டும். உன்கூட பிரைவேட்டா சாட் பண்ண” என்றான்.
துஷாரா கையை கட்டி, அவனின் தாய் தந்தையோடு, நண்பனோடு பேசுவதற்கு போன் வேண்டும் என்று கேட்காமல், என்னோடு பேச வேண்டுமாமே?! என்ற ரீதியில் முறைத்தாள் “நான் உன்னை இம்பிரஸ் பண்ணிடுவேன்னு பயப்படறியா?” என்று கிசுகிசுப்பாய் பேசினான். கிட்டதட்ட சவாலிடும் பேச்சு.
”எந்த காலத்துக்கும் எங்கப்பாவோட நம்பிக்கையை நான் குழித்தோண்டி புதைக்க மாட்டேன். நீங்க வந்த வழியா திரும்பி தான் போகணும்” என்று அவளுமே சவாலாய் கூறி முடித்தாள்.
“பார்க்கலாம்.. போன் மட்டும் ப்ளீஸ். போரடிக்கு” என்று கண் சுருக்கி கெஞ்சினான்.
துஷாராவோ “எங்க அப்பா வந்ததும் அவரை கூட்டிட்டு போய் வாங்கறேன்” என்று கூறிவிட்டாள்.
அதன் பின் அவளது அறையில் தான் வாசமானாள்.
ஹர்ஷாவின் பேச்சும் செய்கையும், அவளை ஈர்க்கின்றது. அவனின் கருநீல கண்கள், இளஞ்சிவப்பு நிற பழுப்பு வண்ண முடிக்கற்றைகள் ஆஸ்திரேலியனாக காட்டியது. ஆனால் பேச்சும் உச்சரிப்பும் அமுதத்தமிழில் பேச, அதில் கிறங்கடிக்க வைத்தது.
அதுவும் கடைசியாக கண்கள் சுருக்கி கெஞ்சுவதை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
இப்படியொருவன் தன் பிறந்த நாளில் சந்தித்து, அவனாக காதல் அம்பை வீசுவதாக எந்நாளும் கனவு கண்டதில்லை. ஆனால் நிஜத்தில் அதெல்லாம் நடக்கின்றது.
அவன் கூறியது போல அவனுக்கும் தனக்கும் ஏதோ தொடர்பு உருவாகின்றதா? என்று சிந்திக்க, அண்ணாமலை “பாப்பா… என்னடா கூப்பிட கூப்பிட யோசனையில் இருக்க?” என்று தீண்டவும் திடுக்கிட்டு “ஒன்னுமில்லைப்பா.” என்று தலைகவிழ்ந்தாள்.
“பாப்பா.. ஏதோ போன் வாங்கணும்னு அந்த தம்பி சொல்லுறார். என்ன போன் ஏதுன்னு விவரம் கோட்டுக்கோ. பாவம் பொழுது போகாம தவிக்கறார். நம்ம டிவியை கொஞ்ச நாளைக்கு அங்க வைக்கலாமா?” என்று கேட்டார்.
“உங்க ஓய்ஃப் விட மாட்டாங்க அப்பா. டிவியை கொஞ்ச நேரம் மாத்தினா கூட ஓடோடி வந்துடுவாங்க. அதோட அவருக்கு தமிழ் படம் தமிழ்பாட்டு தெரியுமான்னு டவுட்டு தான்.
அன்னைக்கு கலை நிகழ்ச்சியிலயே யாரு ஹீரோ யாரு ஹீரோயின்னு கூட தெரியலை என்ன படம் என்ன பாட்டுனு கேட்டுட்டு இருந்தார்.” என்றாள்.
அதை கூறிய பின்னே, தன்னிடம் பேசுவதை அறிவார்களோ என்ற திருட்டுத்தனத்தில் “அவர் பிரெண்டுகிட்ட கேட்டுக்கேட்டு தொல்லைப் பண்ணிட்டு இருந்தாருப்பா. அவர் பிரெண்ட் பதில் செல்லி வாய் வலிக்குன்னு சொன்னது அப்ப காதுல விழுந்தது.” என்று கூறவும் அண்ணாமலை, மகளை பார்த்து “அப்ப போன் வாங்கினா பொழுது போகுமா?” என்று கேட்டார்.
“மேபீ அப்பா” என்றவள் இடது பக்கம் திரும்பி உதட்டை கடித்தாள். தந்தையிடம் அவன் உன்னிடம் பேச தான் போன் கேட்கின்றான் என்று சொல்லலாம் அல்லவா?! என்று மனசாட்சி இகழ, அமைதியானாள்.
“சரிடா… அம்மா கூட போய் வாங்கு. எனக்கு புளியந்தோப்பு குணாவை தேடி போகணும். அவன் கிடைச்சா உடனே அந்த தம்பியோட பாஸ்போர்ட் கிடைக்கும். முக்கியமா அது தான் தேவை.” என்று நகர்ந்தார்.
தந்தை சொன்னதும் அம்மாவை அழைத்து செல்ல கூப்பிட, “நளினியை அழைச்சிட்டு நீயே போடி. உங்கப்பா பிரண்டை துவையல் செய்ய சொல்லிருக்கார்.” என்றார்.
“எந்த பிரெண்டை மா?” என்று துஷாரா கேலியாக வினவ, “பிரண்டை டி. பிரெண்டை இல்லை. வர வர வாய் அதிகமாகுது. மருதமுத்து அண்ணாவிடம் உன் ஜாதகத்தை கொடுத்திருக்கு. அவருக்கு தெரிந்த பையன் ஜாதகம் மட்டும் பொருந்தட்டும் உன்னை கல்யாணம் செய்து துரத்தறேன்” என்று பதிலுக்கு மகளை வாறினார்.
இதே மற்ற நேரமென்றால் துஷாரா நகைச்சுவையாக எடுத்து கொண்டிருப்பாள். இன்றோ அன்னை பேசி கேட்க எரிச்சலாக உணர்ந்தாள் துஷாரா. இதில் இங்கு பேசினால் ஹர்ஷா அறை வரை கேட்குமே என்று அங்கு விரைந்தாள்.
அவள் நினைத்தது போல அன்னை பேசியதை கேட்டு சோகமாக அமர்ந்திருந்தான்.
அவளை கண்டதும் சோக கீதம் வாசிப்பவன் போல பார்வை வீசினான்.
“என்ன டி.. திடீர்னு ஓடிவந்த. என்னாச்சு தம்பி?” என்று கேட்டார் வள்ளி.
“ஒ…ஒன்னுமில்லை அம்மா. அப்பா போன் வாங்கி தர சொன்னார். என்ன போன் எந்த மாடல்னு கேட்க வந்தேன்.” என்று பேச்சை மாற்றினாள்.
“அதுக்காகவா இப்படி ஓடி வந்த? நான் இந்த தம்பி கீழே விழுந்துட்டாரு பயந்து வந்தேன். ஏன் தான் இந்த ஓட்டமோ? இப்படி போறயிடத்துல இருக்க முடியாது துஷாரா. மண்ணுல கால் படற விதமா நட. எப்ப பாரு ஓட்டமும் ஆட்டமும்” என்று முனங்கி சென்றார்.
ஹர்ஷாவின் சோக முகத்தை கண்டு, எந்த மாடல் வேண்டும்?” என்று கேட்டாள்.
“போன் எதுவும் வேண்டாம்.” என்று எங்கோ பார்த்து உரைத்தான். என்றான்.
அன்னை அடுப்படியில் இருப்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, “என் கூட சாட் பண்ணணும்னு சொன்ன. அப்ப வேண்டாமா?” என்று கேட்டாள்.
ஹர்ஷா முகம் மெதுமெதுவாய் அவளை ஏறிட்டது. “என்னை சமாதானம் செய்ய பேசற” என்று கூறினான்.
“ஏதோவொன்னு… வாங்கவா வேண்டாமா?” என்று அதட்டி கேட்டாள்.
“வாங்கு… என் அம்மாவிடம் பேசணும்.” என்று முகத்தை தூக்கி வைத்து பேசினான்.
கூடவே போனின் மாடலை கூறி இதை வாங்கு என்றுரைத்தான்.
“அம்மா இருக்காங்க ஏதாவது வேண்டும்னா கேளுங்க” என்று சென்றாள்.
அவள் சென்றதும் இமை மூடி உறங்கினான்.
அதென்னவோ உடலுக்கு உறக்கமும் தேவையாக இருக்க கொஞ்ச நேரத்தில் உறங்கினான்.
கண்விழித்த போது, ஏதோ வாசம் இழுத்தது.
மாத்திரையெல்லாம் ஹர்ஷாவுக்கு அருகே கைக்கு எட்டும் விதமாக இருந்தது. அதே அறையில் ரெஸ்ட் ரூம் இருப்பதால் தாங்கி தாங்கி ஒரு ஸ்டிக் மூலமாக நடந்து சென்று விடுவான். நடக்க ஓரளவு முடிந்தது. ஆனால் ஸ்ட்ரெயின் செய்ய கூடாது அல்லவா. அதனால் ரெஸ்ட் ரூம் செல்ல மட்டும் எழுந்து கொள்வான்.
மற்ற நேரம் பெட்டில் இருக்க முடிவெடுத்தான்.
ஹாலுக்கு நடக்கவும் முடியவில்லை அண்ணாமலை வந்தார்.
“என்ன தம்பி போரடிக்கா?” என்று கேட்க “அப்படியில்லை அங்கிள். கால்ல கொஞ்சம் பெயின் இருக்கு. ரொம்ப ஊன முடியலை” என்று கவலைக்கொண்டான்.
“அம்மாடி துஷாரா” என்று அழைக்க, ஆங் வந்துட்டேன்பா” என்று போனை எடுத்து வந்தாள்.
புது போன் தம்பி நீங்க சொன்ன மாடல்.” என்று கூறினார்.
ஏற்கனவே தாமோதரன் அண்ணாமலையியம் பேசியிருந்தார். அதன் காரணமாக பையனுக்கு தேவையானதை வாங்கி கொடுங்க கொஞ்சம் நல்லா பார்த்துக்கோங்க. சட்டுனு வரமுடியலை” என்று கூறியிருந்தார்.
ஒரு மாதத்திற்கு தேவையான உணவு இடம் தேவைக்கென்று பணத்தை போட்டியிருக்க, அதற்கெல்லாம் துஷாரா செலவு கணக்கை துல்லியமாக எழுதி காட்டினாள்.
ஹாஸ்பிடல் பில், போன் செலவு, லேப்-பில், ரிசப்ஷன் பில் என்று தெளிவாக காட்டியிருக்க, “ஏன் அங்கிள் நான் கணக்கு கேட்டேனா? உங்க பொண்ணு எது வாங்கிட்டு வந்தாலும் கணக்கு காட்டறாங்க” என்று குறைப்பட்டான்.
“நல்லதுக்கு தானே தம்பி.” என்றவர், போன் சிம் போட்டு கொடுக்க சொன்னார். துஷாரா அதில் மும்முரமாக, “அங்கிள் நான் இங்க சாப்பிட கணக்கு எழுதலை அண்ட் ரெண்ட் கூட போடலை” என்றான்.
அதெப்படி தம்பி நீங்க நம்மூருக்கு வந்த வெளிநாட்டுக்காரர்.
தமிழர் விருந்தோம்பல் தெரியும் தானே. நாங்க எப்படியும் சமைத்து சாப்பிட போறோம். கூட ஒரு கைப்பிடி. இதுக்கெல்லாம் கணக்கு பார்க்க கூடாது தம்பி. இந்த ரூம் கூட துஷாரா பிரெண்ட் ஒருத்தி வெளியூர்ல இருந்து, ஹாஸ்டல் பிடிக்கலைனு இங்க தங்க கேட்டுச்சு. அதுக்கு தான் ரெடி செய்தோம். ஹாஸ்டல்ல அடுத்த மாசம் வெக்கெட் பண்ண சொன்னதால சுத்தப்படுத்தி மட்டும் வச்சிருந்தோம். இப்ப உங்களுக்கு உபயோகமாகுது. மத்தபடி இதென்ன பங்களாவா? சின்ன இடம் இதுக்கு போய் வாடகை போட்டு, அதுவும் வெளிநாட்டு தம்பி நீங்க. இருக்கறவரை நல்லபடியா பார்த்துக்கிட்டாலே போதும்னு சொல்லிருக்கேன்.” என்றார்.
ஏனோ இப்படிப்பட்ட மனிதரின் மகளை மணக்க, தனக்குள் ஒரு அழகான அன்பு பெருகுகின்றது என்று கூற முடியாது. அதே போல் துஷாராவை காணவும் மனம் குடைந்தது.
அவளுக்கு தந்தையை கண்டு பெருமையுண்டாகியது.
“தம்பி பர்ஸ்ல அதிகம் பணம் வச்சியிருந்திங்களா? குணா ஏதோ ஏற்காடு போனதா அவன் கூட்டாளி சொன்னான்.
ஏற்காடு போலீஸிடம் தகவல் சொல்லிருக்கேன். அவனை பிடிச்சா விஷயத்தை சொல்வான்” என்றதும் “அங்கிள் அந்த குணா உடனே கிடைக்க மாட்டானா? நான் உடனே எங்க நாட்டுக்கு போக முடியாதா?” என்று கவலைமாக கேட்க துஷாரா அவனையே வெறித்தாள்.
“அதெப்படி தம்பி காலும் சரியாகலை. போதாதுக்கு பாஸ்போர்ட் இல்லையே. ஏன் தம்பி இங்க இந்த வீட்ல தங்க அசௌகரியமா இருக்கா என்ன?.” என்றார்.
அதன் பிறகே துஷாராவுக்கு ஹர்ஷாவின் பொருளாதாரமும், தங்கள் பொருளாதாரமும் கண்முன் தாராசில் நின்றது.
படிப்பு வசதி, என்ற இரண்டிலும் ஹர்ஷவர்தன் தரத்தின் எடை கூடியிருக்க துஷாராவுக்கு தன் வசதி வாய்ப்பு புரிந்தது.
அழகில் துஷாரா தமிழர்களின் மாநிறம் கொண்டவள், வசதியில் ஹர்ஷா பணத்தை பற்றி யோசிக்காதவள், தான் லோக்கல் சென்னை, அவனோ ஆஸ்திரேலியா சிட்டிசன். எப்படி ஏணி வைத்தாலும் எட்டாத இடத்தில் இருந்து தன் அடிமட்டத்தை காண வருந்தினாள்.
தன்னை ரசித்து விட்டு அப்படியே அவன் சென்றிருந்தால் கூட துஷாரா இந்தளவு வருத்தம் கொண்டிருக்க மாட்டாள். இப்படி இருவருக்குள்ளும், புதுவித பந்தம், சொல்லப்படாத உணர்வு ‘அதுயிது’ என்று ஜாலமாய் பேசி தனக்குள் எதையோ விதைக்க பார்க்கின்றான்.
விதைக்க பார்க்கின்றானா? விதைத்து விட்டானா? என்று மனசாட்சி கேட்க, ‘விதைக்க பார்க்கின்றான். நான் இப்பவும் எங்கப்பா கையை நீட்டற பையனை கல்யாணம் செய்வேன்’ என்று, மனதிற்குள் சவாலிட்டாள்.
ஓ… அப்படியா… உன் மனவலிமையை சோதிக்க வருகின்றேன் என்று வள்ளி அந்த புகைப்படத்தை எடுத்து வந்தார்.
“மருதமுத்து அண்ணா கொடுத்த போட்டோல, இந்த பையன் நல்லா தான் இருக்காங்க. எதுக்கும் துஷாராவிடம் கேட்டுக்கோங்க” என்றார்.
“என்ன போட்டோ அங்கிள்?” என்று ஹர்ஷா கேட்க, “நம்ம துஷாராவுக்கு வரன் பார்க்கறேன் தம்பி. அதை தான் வள்ளி பார்த்து சொல்லிட்டு போறா.” என்று கூறியவர், துஷாராவை பார்த்து ”நீ பார்த்தியா துஷாரா? மாப்பிள்ளை போட்டோவை?’ என்று கேட்டதற்கு, “இப்ப தானேப்பா செல்லறிங்க. மெதுவா பார்க்கலாம்” என்றவள் குரலில் ஹர்ஷாவுக்கு இதயம் ரணத்தை வார்த்தது.
-தொடரும்.
தென்றல் நீ தானே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 6)
அட ராமா..! அவங்களே இது காதல் தானா, இல்லையா ?
இந்த காதல் வேணுமா, வேண்டாமான்னு குழப்பத்துல இருக்கிறாஙடக. இந்த துஷாராவோட அம்மா என்னன்னா அடிக்கடி ஸ்பீட் ப்ரேக் போடறதோட, பீதியையும் கிளப்பி விடறாங்க… என்னடா இது ஆஸ்திரேலியா பையனுக்கு வந்த சோதனை ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Wow super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 renduperum oru mananilaiku vandhutanga edhu kaadhal ah maaruma parents k solluvaangala parpom 🧐
Omg. Good story. Intresting
Spr going interesting waiting for nxt epi 😍
Wow… இது காதலானு குழப்பம் தொடங்கிடுச்சு… தெளிய வைக்கவே இந்த மாப்பிள்ளை ஃபோட்டவை காட்டி இருக்காங்க அம்மா. சீக்கிரம் தெளிந்து கொள் துஷாரா
Ada ponga da nega love ah love illaya nu sollurathu kula Dushara ku marriage yae fix panniduvaga pola
So sad…..