தீரனின் தென்றல் – 25
Thank you for reading this post, don't forget to subscribe!அபூர்வா மயங்கி விழும் முன்னர் ஆதீரன் கையில் தாங்கி இருந்தான் தன் குழந்தையை… பக்கத்தில் ஒரு மருத்துவமனை உள்ளது அங்கு கொண்டு செல்லலாம் என்று மதன் சொல்ல அவனையும் அழைத்து கொண்டு அபூர்வாவை தூக்கிக் கொண்டு தன் காரில் மருத்துவமனை சென்றான் ஆதீரன்.
பார்க்கில் இருந்தவர்களில் ஒரு பெண் ஓடிச் சென்று பொன்னியிடம் தகவல் சொல்ல சென்றார்.
மருத்துவமனையில் மருத்துவர் அபூர்வாவை பரிசோதித்துக் கொண்டு இருக்க வெளியே ஆதீரன் மிகுந்த பதட்டத்தோடு நின்றிருந்தான்.
“பாஸ்… பாப்பாக்கு ஒன்னும் இல்ல பயப்படாதீங்க…” என்று மதன் ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தான்.
பொன்னிக்கு விஷயம் தெரிந்து அவர் தென்றலிடம் கூற அவளும் பதட்டத்தோடு மதனுக்கு அழைத்தாள் தென்றல்.
“சார்… மதன் சார்… புவிக்கு என்னாச்சு? இப்போ எப்படி இருக்கா அவ?” என்று பதட்டத்தோடு கேட்க
“பயப்படாதீங்க தென்றல்… குழந்தைக்கு ஒன்னும் இல்ல… டாக்டர் என்ன னு பார்த்துட்டு இருக்காங்க” என்று மதன் ஆறுதலாக பேச
“சார் ப்ளீஸ் நான் ஹாஸ்பிடல் கிளம்பி வரேன் அதுவரை புவியை கொஞ்சம் பார்த்துக்கோங்க…” தென்றல் கூற
“இதெல்லாம் சொல்லனுமா தென்றல்… நான் பார்த்துக்கிறேன்…” என்று வைத்த மதன் கம்பெனி செக்கியூரிட்டி க்கு அழைத்து தென்றல் வருவதற்கு பாதுகாப்பாக கேப் பிடித்து தரச் சொல்லி உத்தரவிட்டான் மதன்.
“பாஸ்… தென்றல் வராங்களாம்… நீங்க இருந்தா…?” என்று மதன் தயங்கி இழுக்க
“ஓகே மதன் அவ வரும் போது அவ கண்ல படாம நான் இருந்துக்கிறேன் மதன்…” என்று ஆதீரன் கூறிக் கொண்டு இருக்க வெளியே வந்த மருத்துவரை நோக்கி
“டாக்டர் என்னாச்சு குழந்தைக்கு? இப்போ எப்படி இருக்கு?” என்று மதன் ஆதீரன் இருவரும் ஒரே நேரத்தில் கேட்டபடி அருகில் வர
“பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல.. குழந்தைக்கு ஏற்கனவே வீசிங் ப்ராப்ளம் இருந்திருக்கு.. அதிகமா ஓடி விளையாடினதால கொஞ்சம் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கு.
ஆமா, குழந்தைக்கு நீங்க என்ன வேணும்? வீசிங்க்கு ஏற்கனவே என்ன ட்ரீட்மெண்ட் பண்ணிருக்கீங்க.. சொன்னா ஃபர்தரா ட்ரீட்மெண்ட் பண்ண வசதியா இருக்கும்.” டாக்டர் கேட்க ஆதீரன் குழந்தைகளுக்கு வீசிங் ப்ராப்ளம் என்று சொன்னதிலேயே அதிர்ந்து நின்றிருந்தான்.
“டாக்டர்… இது எங்க ஆஃபிஸ் ல வொர்க் பண்ற பொண்ணோட குழந்தை தான்… அவங்க அம்மா இப்போ வந்திட்டு இருக்காங்க…” என்று மதன் தான் பதில் சொல்ல
“சரி அவங்க வந்த உடனே என்னை பார்க்க சொல்லுங்க” என்று சொல்லி விட்டு மருத்துவர் அகல குழந்தை இருந்த அறைக்குள் சென்றான் ஆதீரன்.
கண் மூடி படுத்திருந்த குழந்தையின் தலையை கண்ணீரோடு வருடிய ஆதீரன் சத்தமின்றி மனதோடு பேசிக் கொண்டு இருக்க
“பாஸ்… தென்றல் வந்திட்டாங்க…” என்று மதன் சொல்ல குழந்தை நெற்றியில் முத்தமிட்டு விட்டு வெளியே சென்றான் ஆதீரன்.
மதனுக்கு அழைத்து எந்த அறை என்று கேட்டுக் கொண்டு வந்தாள் தென்றல்.
குழந்தை கண் மூடி படுத்திருக்க மதன் அருகில் நின்றிருந்தான். உள்ளே வந்த தென்றல் “தங்கம்… புவிக்குட்டி…” என்றபடி தன் மகளை நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டு கண்ணீர் விட்டு கொண்டு நிற்க
“தென்றல் ப்ளீஸ் அழாதீங்க.. பாப்பா நல்லா இருக்கா…” மதன் சொல்ல அவனை கையெடுத்து கும்பிட்டு “நன்றி சார்” என்றிட பதறிப் போனான் மதன்.
“ஐயோ… என்ன தென்றல் இது? ப்ளீஸ் கையை இறக்குங்க… ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க? குமார் உங்க பிரதர் பண்ணிருந்தா இப்படி தான் பண்ணுவீங்களா? என்னையும் உங்க ப்ரதரா பாருங்க தென்றல்…” என்று மதன் சொல்ல லேசாய் புன்னகைத்தாள் தென்றல்.
“அப்பறம் தென்றல் டாக்டர் பாப்பாக்கு வீசிங் இருக்கு னு சொன்னாரு. என்னாச்சு? அதைப்பத்தி ஏதோ பேசனும் னு டாக்டர் நீங்க வந்த உடனே வந்து பார்க்க சொன்னாரு.” என்று மதன் சொல்ல
“ஆமா மதன் சார்… அதனால தான் சாதாரணமா சின்ன பசங்க ஆசை பட்டு கேட்குற ஐஸ்கிரீம் சாக்லேட் கூட நான் பொண்ணுக்கு வாங்கி தரது கூட இல்ல..” என்று வருந்தினாள் தென்றல்.
“சரி டாக்டர் உங்ககிட்ட பேசனும் னு சொன்னாரு. வாங்க போய் பார்த்திட்டு வந்திடலாம்..” என்று மதன் அழைக்க
“ஓகே சார்..” என்று தென்றல் கூற
“ஒரு நிமிஷம் தென்றல்… ப்ளீஸ் என்னை இனி சார் னு கூப்பிடாதீங்க… அண்ணா னு கூப்பிடுறீங்களா? உங்களுக்கு விருப்பம் இருந்தா…” என்று மதன் நிறுத்த சிறு புன்னகையோடு
“சரிங்க அண்ணா… ஆனா, நீங்க என்னை வாங்க போங்க னு கூப்பிட்டா எப்படி?” என்று தென்றல் இலகுவாக கூற
“சரி வாம்மா தங்கச்சி… டாக்டரை பார்த்திட்டு வந்திட்டா குழந்தையை கூட்டிட்டு வீட்டுக்கு போகலாம்…” என்று மதன் அழைத்துச் சென்றான் தென்றலை.
தென்றலும் மதனும் வெளியே சென்ற உடனே உள்ளே வந்த ஆதீரன் தன் குழந்தையின் பிஞ்சு விரலை பிடித்து தான் இத்தனை ஆண்டுகள் அவளை பிரிந்து இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு இருந்தான் மனதினுள்…
தென்றலும் மதனும் சென்று மருத்துவரை பார்க்க அவர் ஏற்கனவே குழந்தைக்கு கொடுத்து வந்த மருந்துகள் மற்றும் இனி பார்த்துக் கொள்ள வேண்டிய விதம் மாற்றி தர வேண்டிய மருந்துகள் என்று கூற அனைத்தையும் கவனித்துக் கொண்டாள் தென்றல்.
“சரி தென்றல்… குழந்தை தனியா இருப்பா.. அபூர்வாவை கூட்டிட்டு தேவையான மெடிசன்ஸ் வாங்கிட்டு நாம கிளம்பலாம்…” என்று மதன் சொல்லிக் கொண்டே அபூர்வா இருந்த அறை நோக்கி வர
“சரிங்க அண்ணா.. அண்ணா பில் எவ்வளவு ஆச்சு? நான் பே பண்ணிடுறேன்…” தென்றல் கேட்க மதன் லேசாய் முறைத்து விட்டு
“ஏன் தென்றல்? இதுவே இந்த இடத்துல குமார் ப்ரோ இருந்திருந்தா நீ இப்படி கேட்டிருக்க மாட்ட இல்லை?” உரிமையாக கோபித்துக் கொள்ள
“ஐயோ அண்ணா… அப்படி எதுவும் இல்லை… சரி விடுங்க” என்று குழந்தையை தூக்கி கொண்டு வாங்க வேண்டிய மருந்துகள் எல்லாம் வாங்கி கொண்டு தென்றலையும் அபூர்வாவையும் மதனே வீட்டிற்கு அழைத்துச் செல்ல அங்கே குமார் இவர்களுக்காக காத்திருந்தான்.
“என்னாச்சு தென்றல்? பாப்பா எப்படி இருக்கா?” என்றபடி அபூர்வாவை தன் கையில் வாங்கி கொண்டான் குமார்.
“அண்ணா… பாப்பா ஓடி விளையாடும் போது மூச்சு திணறி இருக்கு… வேற ஒன்னும் இல்ல… அம்மா எப்பவும் புவியை தனியா விடாதே னு சொன்னேன்ல தனியா விடவும் தான்…. குழந்தை அவளுக்கு என்ன தெரியும்? ஓடி விளையாடாம இருக்கவா முடியும்? நீ இனிமே கூட இருந்து பத்திரமா பார்த்துக்கோ…” என்று தென்றல் கூற
“சரி டி…” என்று இன்னும் பயம் தெளியாமல் மூக்கை உறிஞ்சி கொண்டு இருந்தார் பொன்னி. அம்மம்மா அழதே… என்று அபூர்வா பொன்னி கன்னத்தை துடைத்து விட ஆசையாக அணைத்துக் கொண்டார் குழந்தையை.
தன் மகளை தூரமிருந்து பார்த்து அவள் மயக்கத்தில் இருக்கும் போது அருகில் சென்று தன் நெஞ்சோடு அணைத்து தன் இதய துடிப்பு மூலம் தன் தவிப்பை உணர்த்தி யாரும் அறியாமல் தன் உதிரத்தின் பிறை நெற்றியில் முத்தமிட்டு வீடு வந்த ஆதீரன் அப்படியே ஹாலில் ஷோபாவில் அமர்ந்து கையை பக்கவாட்டில் நீட்டிக்கொண்டு தலையை பின்னால் சாய்த்து கண்ணை மூடினான் ஆதீரன்…
இரவில் கூட உறக்கம் இன்றி தவிப்பவன் அதிக உடல் அலைச்சல் மட்டுமே சில மணி நேரம் உறக்கத்தை தரும் ஆதீரனுக்கு. அதிசயமாக பகலிலேயே கண்கள் இழுத்து மூடிக் கொண்டு உறக்கத்தில் ஆழ்த்தியது ஆதீரனை…
சில நிமிடங்கள் என்றாலும் நல்ல உறக்கம்… கனவிற்கு இழுத்து சென்று இருந்தது ஆதீரனை…
பூரணி இறந்த பிறகு தனிமையில் எத்தனையோ முறை ஏக்கத்தில் தன் அன்னையை நினைத்து ஏங்கி அழுதுள்ளான். ஆனால் ஒரு முறை கூட கனவில் வந்து தன் முகத்தை காட்டியதே இல்லை பூரணி…
‘தன் தாய்க்கு தன் மீது அத்தனை கோபம் போல…’ என்று நினைத்துக் கொள்வான் ஆதீரன். ஆனால் இன்று எதிர்பாராமல் கிடைத்த பகல் நேர உறக்கத்தில் தன் முகத்தில் புரியாத ஆனந்தத்துடன் வந்தார் அன்னபூரணி. அதிலும்.. ஆதீரன் அருகில் அமர்ந்து தன் மடியில் தன் மகன் தலையை வைத்து கோதி விட்டார் பூரணி. அந்த சுகத்தில் ஆதீ நல்ல உறக்கத்திற்கு சென்றவன் அன்னையை இடையோடு கட்டிக் கொண்டு குழந்தை போல தேம்பி தேம்பி தன் மனதில் புதைந்த காயங்களை உளற துவங்கினான் ஆதீரன்.
திடீரென அன்னையின் தலை கோதல் நின்று போக நிமிர்ந்து பார்த்தான்… பூரணி அங்கு இல்லை… “அம்மா.. அம்மா” என்று கத்திகொண்டே சுற்றி முற்றி தேட எங்கும் தெரியவில்லை பூரணி… ஆனால் சற்று தூரத்தில் பிஞ்சு பாதம் தத்தி தத்தி நடை பயின்று வந்தாள் அபூர்வா… சட்டென்று தூக்கத்தில் இருந்து விழித்தான் ஆதீரன்.
‘டீ வேண்டுமா’ என்று கேட்க வந்த கமலம் பதறி போனார். “என்ன தம்பி என்ன ஆச்சு?” என்றிட
“அம்மா.. அம்மா..” என்று கண் விழித்த பிறகும் கனவில் வந்த தாயை தேட
“என்ன தம்பி கெட்ட கனவு எதாவது கண்டீங்களா?” கமலம் கேட்க
“அம்மா… அம்மா கனவுல வந்தாங்க கமலாம்மா… நாலு வருஷம்… நாலு வருஷமா என்னை கனவுல கூட தண்டிச்சிட்டு இருந்த அம்மா… திடீர்னு கனவுல வந்தாங்க…” என்று நடந்ததை கூற அவன் அருகில் அமர்ந்த கமலம் லேசாக புன்னகைத்து
“ஒன்னும் இல்ல தம்பி… உங்க அம்மா எங்கேயும் போகலை… உங்களை சுத்தி சுத்தி தான் அவங்க ஆத்மா இருக்கும். என்ன ஏதோ ஒரு கோபத்துல அவங்க இருப்பை காட்டாம இருந்திருப்பாங்க.. இப்போ கனவுல வந்திருக்காங்க ன்னா அவங்களுக்கு உங்க மேல இருந்த கோபம் போயிடுச்சு போல… அதுலயும் உங்க பொண்ணு உருவத்துல இனிமே தான் கூடவே இருப்பேன் னு தான் சொல்லாம சொல்லிருக்காங்க…
தம்பி… சீக்கிரம் தென்றலை சமாதானம் பண்ணி அந்த பொண்ணையும் உங்க குழந்தையையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க… ஆமா? தென்றலை பார்த்து பேச முயற்சி பண்ணீங்களா இல்லையா?” விளக்கமளித்து விட்டு கமலம் கேட்க
“நான் தென்றலை பார்த்தேன் ம்மா… ஆனா தென்றல் என்னை பார்க்கலை…” ஆதீரன் தலை குனிய
“இப்படி எத்தனை நாள் கண்ணாமூச்சி ஆடுவீங்க… என்னைக்கு இருந்தாலும் இந்த பிரச்சினையை நீங்க சமாளிச்சு தானே ஆகனும்…” கமலம் சொல்ல
“ஆமா ம்மா… சீக்கிரம் நான் இதை முடிக்க பார்க்கிறேன்” என்று எழுந்து சென்றான் ஆதீரன்.
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
Dheeran soon thermal will accept you. Intresting